Tuesday, February 24, 2015

ரயில் பயணத்தில் சில கசப்பான அனுபவங்கள்

Dinamani

அந்த விரைவு ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் வயதான தம்பதி இருவரும் தங்கள் இருக்கைகளைத் தேடிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் பார்வை மங்கல் என்பது பார்த்தாலே தெரிந்தது.

இருக்கைகள் எதுவும் காலியாக இல்லாததால் அவர்கள் குழம்பினர். அந்தப் பெட்டியிலேயே முன்னும் பின்னும் பலமுறை அவர்கள் அலைபாய்ந்ததைக் காணச் சங்கடமாக இருந்தது.

அவர்களின் பரிதாப நிலையைக் கண்ட இளைஞர் ஒருவர் அவர்களது முன்பதிவுப் பயணச்சீட்டை வாங்கிப் பார்த்தார். அதில் குறிப்பிட்டிருந்த இருக்கைகளில் வேறு யாரோ இருவர் அமர்ந்து, ஓரக் கண்ணால் பார்த்தபடி பத்திரிகை படிப்பது போல நடித்துக் கொண்டிருந்தனர்.

விசாரித்ததில் அவர்கள் இருவரும் முன்பதிவு செய்யாத பயணிகள் என்பது தெரியவந்தது. இளைஞரின் தலையீட்டால் அவர்கள் முனகிக்கொண்டே அங்கிருந்து எழுந்து சென்றனர். முதிய தம்பதிக்கும் அவர்களது இருக்கைகள் கிடைத்தன.

தனக்குச் சொந்தமில்லாத இருக்கைக்கே இவ்வாறு திருட்டுத்தனமாகச் செயல்படும் இவர்களும் ஒருவகையில் திருடர்களே.

இன்னொரு சம்பவமும் ரயிலில் காண நேர்ந்ததுதான். இரவு நேரம். பயண வழியில் உள்ள ஒரு நிலையத்தில் ரயில் நின்றபோது நடுத்தர வயதுள்ள நபர் ஒருவர் ஏறினார்.அவர் தனது முன்பதிவு செய்யப்பட்ட படுக்கையைத் தேடினார்.

ஆனால், அவர் தேடிய படுக்கையில் ஆனந்தமாக ஒருவர் படுத்துக் கொண்டிருந்தார். இவருக்கு அவரை எழுப்பத் தயக்கம். அவரோ இவரைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

பயணச்சீட்டு பரிசோதகர் வந்து ஆய்வு செய்தபோதுதான், அவரது பயணச்சீட்டு காத்திருப்புப் பட்டியலில் இருப்பது தெரியவந்தது. ஆனாலும் எந்த சங்கோஜமும் இன்றி அவர் தனக்கு உரிமையில்லாத படுக்கையில் படுத்து வந்திருக்கிறார்.

பரிசோதகர் அவரை எச்சரித்து அடுத்த ரயில்நிலையத்தில் பொதுப்பெட்டிக்கு மாறச் செய்தது தனி கதை. ஆனால், முன்பதிவு செய்த பயணி ஒருவரை அரை மணிநேரம் சிரமத்துக்கு உள்ளாக்கிய அவருக்கு என்ன தண்டனை?

இதேபோன்ற இன்னொரு நிகழ்வில் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சத்தை ரயிலில் காண நேர்ந்தது. ரயில் கிளம்புவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இரண்டாம் வகுப்பு படுக்கை முன்பதிவு பெட்டியில் இரு குழந்தைகளுடனும் நான்கைந்து பெட்டிகளுடனும் ஏறிய அந்தப் பெண்மணி, காலியாக இருந்த இருக்கையை ஆக்கிரமித்தார்.

பயணச்சீட்டை ஆய்வு செய்ய பரிசோதகர் வந்தபோது, அவர் முன்பதிவு செய்யாத பயணச்சீட்டைக் காட்டி, தனது தந்தை உயர்பதவியில் இருப்பதாகவும் தனக்கு உறுதியான

படுக்கை வசதியை வழங்காவிட்டால் அவரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரித்தார்.

பெண்மணியின் மிரட்டலால் அரண்டுபோன பயணச்சீட்டுப் பரிசோதகர், அவருக்கு உறுதியான படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்ய பட்ட பாட்டைக் காணவே சங்கடமாக இருந்தது.

அந்தப் பெட்டியில் வேறு ஒரு குழந்தைக்கு பதிவு செய்யப்பட்ட படுக்கையை பரிசோதகரே கெஞ்சிக் கூத்தாடி, அந்தப் பெண்மணிக்கு ஏற்பாடு செய்து தந்தார்.

முந்தைய இரு நிகழ்வுகளிலேனும் அடுத்தவர் இருக்கைக்கு ஆசைப்பட்டவர்களிடம் குற்ற உணர்வு இருந்தது. ஆனால், மூன்றாவது நிகழ்வில் கண்ட பெண்மணியிடம் பிறரது படுக்கை வசதியை அபகரிப்பது குறித்த கவலையே இல்லை.

ஏதோ இந்த மூன்று நிகழ்வுகளில் மட்டும்தான் அடுத்தவர் இருக்கைக்கு ஆசைப்படும் ஆசாமிகள் இருந்ததாக நினைத்து விடாதீர்கள்.

யாரும் அமராத இருக்கைகளை பெரும்பாலான மனிதர்கள் சொந்தம் கொண்டாட முற்படுவது பொதுவான காட்சியே. இது ஒருவகையில் நமது குடிமைப் பண்பின் சீரழிவைத் தான் வெளிப்படுத்துகிறது.

யாரும் உரிமை கோராத இருக்கையோ, இடமோ, பொருளோ எதுவாயினும் அதற்கு ஆசைப்படுவது நமது பொதுவான இயல்பாகிவிட்டது.

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கும் சாமானியர்கள் முதல், கல்லூரியின் சுற்றுச்சுவரை எல்லை தாண்டிக் கட்டும் செல்வந்தர் வரை பலருக்கும் இருக்கும் வியாதி இதுதான்.

நாட்டில் நடைபெறும் பல ஊழல்களுக்கும் இதே மனநிலைதான் காரணம் என்று சொல்லித் தெரிய வேண்டிதில்லை. மத்திய அமைச்சராக இருந்த ஒருவர், போலி தொலைபேசி நிலையமே நடத்தியிருக்கிறார்.

மற்றொரு மத்திய முன்னாள் அமைச்சர் தனது பதவிக் காலத்தில் கண்ணுக்குப் புலனாகாத மின்காந்த அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் ஊழல் செய்ததில் உலக சாதனை படைத்தார்.

ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்றார் மகான் புத்தர். நாமோ அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுகிறோம். யாரும் பார்க்கவில்லை என்றால் அடுத்தவர் பொருளைத் தனதாக்க யாரும் வெட்கப்படுவதில்லை.

அடுத்தவர் பொருளை விரும்புபவனுக்கு கேடே விளையும் என்கிறார் திருவள்ளுவர் (குறள்: 180).

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என்று எச்சரிப்பதற்காக "வெஃகாமை' என்ற தனி அதிகாரத்தையே (18) அவர் எழுதி இருக்கிறார். நாமோ அவருக்குச் சிலை அமைப்பதே போதும் என்றிருக்கிறோம்.

ரயில் பயண அனுபவங்கள், நமது குடிமைப் பண்பின் சில சோற்றுப் பதங்கள் மட்டுமே. சிறு தவறுகளிலிருந்தே மாபெரும் குற்றங்கள் ஆரம்பமாகின்றன என்பதை நாம் உணராத வரை, நமது குடிமைப் பண்பில் சீரழிவுகள் தொடரும்.

முன்பெல்லாம் கடவுள் நமது ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற இறையச்சமே தவறு செய்வதைத் தடுத்தது. இப்போது இறையச்சமும் இல்லாது போய்விட்டது; குடிமைப் பண்பும் காணாது போய்விட்டது.

இந்த நிலை மாற நாம் என்ன செய்யப் போகிறோம்? நமது குழந்தைகளுக்கு நாம் எத்தகைய சமுதாயத்தை வழங்கிச் செல்லப் போகிறோம்?

உறுதியானது ’சிங்கம் 3’!



ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து கமர்ஷியல் ஹிட்டான படம் ‘சிங்கம்’. இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட்டடித்த வேளையில் தற்போது மூன்றாம் பாகம் எடுக்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

முதல் பாகத்திலும், இரண்டாம் பாகத்திலும் அனுஷ்காவே ஜோடியாக நடித்ததால் இந்த படத்திலும் அவர்தான் ஹீரோயின் என்பது யாவரும் அறிந்ததே.

மேலும் முதல் இரண்டு பாகத்திலும் , 2ம் பாகத்திலும் இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார்.

தற்போது ‘ஹைக்கூ’ மற்றும் ‘24’ படங்களில் பிசியாக நடித்து வரும் சூர்யா இப்படங்களுக்கு பிறகு ‘சிங்கம் 3’ படத்தி நடிக்க இருக்கிறார். மேலும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

NGO launches common entrance test

Return to frontpage

A non-profit organisation called Era Foundation has launched a common entrance test this year in order to make entrance tests more transparent and the admission process to deemed universities easier.

Saveetha University is one of the first in Tamil Nadu to utilise this common entrance test – called UniGAUGE – for admissions to undergraduate and postgraduate dental, and medical and engineering courses.

Mythili Bhaskaran, Vice Chancellor, Saveetha University, told the press on Saturday that the varsity decided to make the switch to improve the admission process. .

Further details on the UniGAUGE tests are available athttps://www.erafoundation- india.org/.

பென்ஷன் வாங்குபவர்கள் நேரில் வந்தாக வேண்டும் என்று துன்புறுத்த கூடாது.

புதுடெல்லி: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் உயிர்ச்சான்று சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற முடியும் என்ற நடைமுறை உள்ளது. பென்ஷன் பேமன்ட் ஆர்டர் (பீபீஓ) அல்லது ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகத்துடன் நேரில் வர இயலாதவர்கள் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் கையெழுத்துடன் உயிர் சான்றிதழ் வழங்கலாம். இதை அரசு பதிவு பெற்ற மருத்துவ அலுவலரின் மருத்துவ சான்றிதழுடன் இணைத்து தபால் மூலமாக அனுப்பலாம். இந்த நடைமுறையின்படி ஓய்வூதியதாரர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் மட்டுமே அஞ்சல் மூலமாக அனுப்ப அனுமதிக்கப்படுகின்றனர். 4வது ஆண்டு அவர்கள் நேரில் ஆஜராகி உயிர்ச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், சில வங்கிகள் ஓய்வூதியர்களை பென்ஷன் பேமன்ட் ஆர்டர் உடன் நேரில் வர கட்டாயப்படுத்துவதாகவும், தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. எனவே, இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் ஓய்வூதியர் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஓய்வூதியம் தொடர்பாக ஏற்கெனவே உள்ள விதிமுறை களை வங்கிகள் பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் அரசு அலுவலர் கையெழுத்து பெற்ற உயிர்ச்சான்றிதழும், ஆதாரை அடிப்படையாக கொண்ட உயிர்சான்றிதழும் சமர்ப்பிக்கும் பட்சத்தில், பென்ஷன் வாங்குபவர்கள் நேரில் வந்தாக வேண்டும் என்று துன்புறுத்த கூடாது. வழக்கமான நடைமுறைக்கு மாற்றாக டிஜிட்டல் பைல் சர்டிபிகேட் சேவை இருப்பதை வங்கிகள் நினைவில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரிவான சுற்றறிக்கை ஒன்று அனைத்து வங்கிகளுக்கு அனுப்பியுள்ளோம்’ என்றார்.

வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு: மாதம் இரு சனிக்கிழமை விடுமுறை

புதுடில்லி:ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட, தொடர் வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது.

முழுநேரம் இயங்கும்:

புதிய ஒப்பந்தப்படி, மாதத்தில் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை. முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில், வங்கிகள் முழுநேரம் இயங்கும்.புதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நவம்பர் மாதம் முதல், தொடர் போராட்டங்களை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்தது.இந்திய வங்கிகள் சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், ஜனவரி மாதம் அறிவித்த தொடர் போராட்டத்தை, ஊழியர்கள் கூட்டமைப்பு ஒத்தி வைத்தது. அதன்பின், இரு தரப்புக்கும் நடந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்படாததால், மீண்டும் தொடர் போராட்டத்தை, ஊழியர்கள் அறிவித்தனர்.

ஒப்பந்தம்:

மும்பையில் நேற்று மீண்டும் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில், ஊதிய உடன்பாடு எட்டப்பட்டது. வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, 15 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம், வங்கிகளுக்கு ஆண்டுக்கு, 4,725 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதுவரை, வங்கிகள் சனிக்கிழமை, அரை நாள் இயங்கி வந்தன.இம்முறையில் மாற்றம்ஏற்பட்டுள்ளது. மாதத்தில், முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகள், முழு நேரம் இயங்குவது; இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவிடப்படுகிறது:

வங்கி அதிகாரிகள் சங்க துணை பொதுச்செயலர் சீனிவாசன்கூறுகையில், ஊதிய உயர்வு ஒப்பந்தம் மற்றும் பிற கோரிக்கைகள் தொடர்பாக, இந்திய வங்கிகள் சங்கத்துடன், 11 சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன. நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த, வேலை நிறுத்தம் கைவிடப்படுகிறது.என்றார்.

Monday, February 23, 2015

LAND OF MUNIYANDI HOTELS GERAS UP FOR FESTIVITIES

clip


clip

கடனிலே பிறந்து கடனிலே வளர்ந்து.

Dinamani

By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 23 February 2015 01:30 AM IST

"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்...' என்பது பழம் பாடல். இன்று சூடு சுரணை உள்ளவர்கள் மட்டுமே அவ்வாறு கலங்குவதுண்டு. ராமாயணக் கதையில் ராவணன் வில்லன். கெட்ட நடத்தை இருப்பினும் ராவணன் பக்திமான் என்பதால் வாங்கிய கடனைத் திருப்பித் தர வேண்டும் என்று எண்ணக் கூடியவன் போலும்!

இன்று வங்கிகளில் வாராக் கடன் கோடி கோடியாக "லபக்' செய்தவர்கள் பெரிய பெரிய தொழில் முதலைகள். அவர்கள் வட்டியும் செலுத்துவதில்லை. அசலோடு வட்டியையும் "லபக்' செய்த இவர்களன்றோ வில்லாதி வில்லர்கள்!

அதேசமயம், பெரும்பாலான விவசாயிகள் வாங்கிய கடனை மறுப்பதில்லை. வங்கியிலிருந்து ஒரு கடிதம் வந்தாலே போதும், நகையையோ சொத்தையோ விற்றுக் கடனைக் கட்டிவிடும் பண்புள்ள ஏழை மக்கள் நமது கதாநாயகர்கள்.

அரசியல் தொடர்புள்ள பணக்கார விவசாயிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் போன்றவர்களுக்கு விவசாயம் பொழுதுபோக்கு. விவசாயத்தில் முதலீடு செய்யும் வசதியும் உண்டு. விவசாய முகமூடி அணிந்துள்ள இவர்களின் நிஜ வருமானம் லேவாதேவியிலிருந்து வருகிறது.

இப்போது "லேவாதேவி' என்ற இந்திய மொழிச் சொல் வழக்கொழிந்து "பைனான்சியர்' என்ற ஆங்கிலச் சொல் ஆதிக்கம் பெற்றுள்ளது. இத்தொழிலில் சாதி, மத, இன, பேதம் இல்லை.

நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் சேட்டுகளும் லேவாதேவி செய்தது அந்தக் காலம். வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் செழித்தோங்கி வரும் தொழில் "பைனான்ஸ்'.

ஏதோ ஒரு தொழிலைக் காட்டி வங்கியிலிருந்து கடன் வாங்கி அதிக வட்டிக்கு விடும் புதிய போக்கு பலர் கவனத்திற்கு வரவில்லை. பழைய போக்கு பற்றிச் சொல்வதானால் பழைய சினிமாவில் வரும் காட்சிகளை நினைவு கூரலாம்.

அன்று ஏழைகளுக்கு லேவாதேவி செய்தவர்கள் சேட்டுகள். மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்குப் பட்டாணியர்கள் உதவுவதுண்டு. பட்டாணியர்கள் பஞ்சாபி உடையில் தலையில் ஒரு டர்பனுடன் "காபூலிவாலா' போல் இருப்பார்கள்.

முதல் தேதி வந்ததும் இந்தப் பட்டாணியர்கள் வீட்டுக்கே வந்துவிடுவார்கள். கடன் வாங்கிய கதாநாயகர்கள் ஓடி ஒளியும் காட்சிகளை பழைய சினிமாவில் நகைச்சுவைக்காக சேர்த்திருப்பார்கள். இப்போது அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

தமிழர்கள் இப்போது இந்தத் தொழிலில் வல்லவர்கள் ஆகிவிட்டார்கள். ஓர் ஏழைக்குக் கடன் தரும்போது மிக மிக அன்புடன் பேசுவார்கள். "அவசரமே இல்லை. மெல்லத் தரலாம்' என்று கனிவுடன் பேசுவார்கள்.

"இவர் ரொம்ப நல்லவர்' என்று தவறாகப் புரிந்து கொண்டு அந்த ஏமாளி வட்டி கூட கட்ட மாட்டார். இரண்டு வட்டி, மூணு வட்டி, நாலு வட்டி என்றெல்லாம் கூறி பணம் வழங்கப்படுகிறது.

இரண்டு வட்டி என்றால் ரூ.100க்கு ரூ.24 வட்டி. மூணு வட்டி என்றால் ரூ.100க்கு ரூ.36. நாலு வட்டி என்றால் ரூ.48. ஆண்டுகள் உருண்டோடும். முன்பு அன்பாகப் பேசியவர் அடியாட்களுடன் வருவார். ஒரு நாள் அவகாசம் தருவார். வட்டிக்கு வட்டி போட்டுக் குட்டி போட்ட பணம் அசலை விட மூன்று பங்கு உயர்ந்து இருக்கும். அந்தப் பணத்தைத் திருப்பி அடைப்பது கற்பனைக்கு எட்டாத விஷயம்.

கடன் வாங்கிய ஏழைப் பிணையம் வைத்த பத்திர அடிப்படையில் சொத்தை அவர் பெயருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு நடையைக் கட்ட வேண்டியதுதான்.

நாலு வட்டிக்கு மேல், குறுகிய காலத்திற்குள் வாங்கிய கடனைத் திருப்ப ஐந்து வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என்றெல்லாம் உண்டு. இது பெரும்பாலும் பெரிய வியாபார உடன்பாடு. 24 மணி நேரத்தில் செட்டில் ஆகிவிடும்.

கப்பல், விமானம், ரயில், லாரியில் சரக்கு வந்திருக்கும். வங்கியில் பணம் கட்டி டெலிவரி எடுக்க வேண்டியிருக்கும். வந்த சரக்கை வினியோகித்தால், லட்சக்கணக்கில் பண வரவு சில மணி நேரத்தில் கிடைக்கும் சூழ்நிலையில் மீட்டர் வட்டிக்குப் பணம் வாங்கத் தயங்க மாட்டார்கள்.

சில ஆயிரங்கள், லட்சங்கள் வட்டி கட்டினாலும் பல லட்சம், கோடி வருமானம். வெறுங்கையை முழம் போட்டு சம்பாதிக்கும் சாமர்த்தியசாலிகள் நாட்டில் உண்டு.

எனினும் கடனை முதலாக மாற்ற இயலாத பல கோடி சராசரி விவசாயிகளே நமது கதாநாயகர்கள். ஒரு சராசரி விவசாயி கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே மடியும் அவன் வாரிசுக்கு வழங்கும் சொத்தும் கடன்தான். பிறவிக் கடன் மறுபிறவியிலும் உண்டு.

இதை நிரூபிக்கும் வகையில் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயக் கடன் பற்றிய புள்ளிவிவரங்களை தேசிய மாதிரி ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்த வெளியீடு வரும். 2002-03-க்குப் பின் இப்போது 2013-14-இல் வெளிவந்துள்ளது.

விவசாயத்தில் வளர்ச்சி உண்டு என்றால் கடன் சுமையிலும் வளர்ச்சி. ஒப்பிட்டால் பத்தாண்டுக்கு முன்பு 48.6 சதவீதம் விவசாயிகள் கடன் சுமையில் இருந்த நிலை

இப்போது 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. விவசாயம் வளர்ந்த அளவில் விவசாயிகளின் பொருளாதாரம் வளரவில்லை என்பதை மேற்படி புள்ளிவிவரம் காட்டுகிறது.

மாநில வாரியாகக் கணக்கெடுத்தபோது, தெற்கு மாநிலங்கள் கடன் சுமையில் உயர்ந்தும், பழங்குடி - மலைப் பகுதி மாநிலங்கள் கடன் சுமையில் குறைந்தும், இதர வட மாநிலங்களில் கடன் சுமை சராசரி 50 சதவீதத்தை ஒட்டியும் உள்ளது.

கடன் சுமையில் முதலிடம் வகிப்பது ஆந்திரம் 92.9%, தெலங்கானா 89.1%, தமிழ்நாடு 82.5%, கேரளம் 77.7%, கர்நாடகம் 77.3%, அஸ்ஸாம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் கடன் சுமை மிகக் குறைவு. அகில இந்திய விவசாயக் கடன் சராசரியாக ரூ.12,585. விவசாய வருமானம் ரூ.11,628.

இந்த தேசிய மாதிரி அறிக்கையில் கடன் சுமை பற்றிய புள்ளிவிவரம் குறைந்த மதிப்பீடு என்று கூறும் உணவுப் பொருளாதார நிபுணர் தேவீந்தர் சர்மா, இந்திய விவசாயிகளில் 80 சதவீதம் பேர் கடன் சுமையில் தத்தளிப்பதாகக் கூறுகிறார்.

நடுத்தரம் மற்றும் மேல்தட்டு விவசாயிகளின் வரவு-செலவு மேற்படி ஆய்வு அறிக்கையில் இடம் பெறவில்லை என்று கூறும் தேவீந்தர் சர்மா, 5 ஏக்கரிலிருந்து 25 ஏக்கர்

வரை நிலம் வைத்துள்ளோரையும் மாதிரி ஆய்வில் சேர்த்திருந்தால் தேசிய சராசரி 80 சதவீதம் விவசாயிகள் கடன் சுமையில் உள்ளது வெளிச்சமாகும் என்கிறார்.

அதிக நிலம் உள்ளவர்கள் சொத்தைப் பிணையம் வைக்கும்போது, அதிக அளவில் கடன் பெற்று, பின் கடனை அடைக்க முடியாமல் திணறுகின்றனர். சிறு - குறு விவசாயிகளைவிட நடுத்தர விவசாயிகள்தாம் அதிக அளவில் சொத்தையும் இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சரி, கடன் பற்றிய புள்ளிவிவரத்திற்கு ஆதாரம் எது? முதலில் தேசிய வங்கிகளில் வாராக் கடன் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவசாயிகள் 43 சதவீதம். கூட்டுறவு வங்கி 15 சதவீதம். அரசு 2 சதவீதம். இவை அமைப்பு ரீதியானவை. மீதி 40 சதவீதம் அமைப்பு ரீதியற்ற தனிப்பட்ட பைனான்சியர்களிடம் பெற்றுள்ள கடன்.

விவசாய வருமானம் பற்றிய புள்ளிவிவரமும் ஒப்புக்கொள்ளக் கூடியதல்ல. ஆண்டுக்கு 7 சதவீதம் பணவீக்கம் நிலவுவதைக் கருத்தில் கொண்டால் விவசாயிகளின் நிஜ வருமானம் ரூ.11,628 அல்ல. ரூ.7,000 அல்லது ரூ.8,000.

குறைவான கொள்முதல் விலையும், கூடுதலான நுகர்வோர் விலையும், தாறுமாறான மருத்துவச் செலவு ஏற்றமும் விவசாயிகளைத் தத்தளிக்க வைத்துள்ளன.

விவசாயக் கடன் விஷயத்தில் அமைப்பு ரீதியாக வட்டிக்கு கடன் வசதி மட்டும் ஏற்றம் தராது. ஒட்டுமொத்த விவசாய மதிப்பு உயர வேண்டும். விவசாய முதலீட்டுச்

செலவில் வட்டியும் இடம்பெற்றுக் கூடுதல் கொள்முதல் விலை கொண்டு விவசாயி லாபம் பெற வழி காண வேண்டும். விவசாய மானியங்களின் மதிப்பைக் கொள்முதல் விலையுடன் இணைக்க வேண்டும்.

அதாவது, உர முதலாளிக்கும், குழாய் முதலாளிக்கும், டிராக்டர் முதலாளிக்கும் வழங்கும் மானியங்கள் நிறுத்தப்பட்டு, அவற்றைக் கொள்முதல் விலையுடன் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

கடந்த ஏழு ஆண்டுகளாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு வழங்கப்பட்ட பணத்தைவிட விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் குறைவாயுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் மகாத்மா காந்தி குளத்து வேலைத் திட்டத்திற்கு 34,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. விவசாயத்திற்கு 31,000 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது.

இன்றளவும் விவசாயமே 56 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

தேசத்தின் மொத்த வருமான மதிப்பில் விவசாயத்தின் பங்கு 18 சதவீதம் என்பது, விவசாயத்தில் உள்ள முதலீட்டுப் பற்றாக்குறையையும் அரசின் பங்கு எவ்வளவு குறைவு என்பதையும் உணரலாம். சரியானபடி விவசாய மூலதனம் உயரவில்லை. விவசாயிகளின் லாபம் பன்னாட்டு விதை நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. நல்ல தரமான விதை உற்பத்தியில் அரசின் பங்கு அற்றுவிட்டது.

கோடி கோடியாக ஊரக வேலைவாய்ப்புக்கு வழங்கிய பின்னரும் விவசாயிகளின் கடன் சுமை குறையவில்லையே! யாருக்கு வழங்க வேண்டும் என்று திட்டமிட்ட பணம் யார் யாருக்கோ போய்விட்டது.

இதனால் ஏழை விவசாயிகள், "என்று தணியும் எங்கள் துயர், என்று மடியும் எங்கள் கடன்' என்று கதறுவது கேட்க வேண்டியவர்களின் காதுகளில் கேட்கட்டும்!

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

NEWS TODAY 20.08.2026