Wednesday, March 4, 2015

சிறையில் கைதிகள் தொலைபேசியில் பேச மாதம் ரூ.30க்கு அனுமதி திட்டம் துவக்கம்

வேலூர் : சிறையில் கைதிகள் தொலைபேசியில் பேச மாதம், 30 ரூபாய்க்கு அனுமதி கொடுக்கும் திட்டம் துவங்கியது.

வேலூர் மத்திய சிறையில், மொபைல் ஃபோனை முற்றிலும் ஒழிக்க சிறைத்துறை நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இதனால், சிறையில் பொது தொலைபேசியை, சிறைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பணம் செலுத்தி, கைதிகள் பேசிக் கொள்ளலாம்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மத்திய சிறையில் கைதிகளிடம் உள்ள, மொபைல் ஃபோன் கலாச்சாரத்தை ஒழிக்க, பொது தொலைபேசி திட்டம், நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. சிறையில், ஆறு இடங்களில், பொது தொலைபேசி உள்ளது. மாதம், 30 ரூபாய்க்கு இதில் பேசிக் கொள்ளலாம். இந்த ஃபோனில் பேச விரும்பும் கைதிகள், கன்ட்ரோல் ரூமில் கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.அதில், அவர்களுக்கு, மூன்று ஃபோன்களை தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்படும். அதில், ஒரு வக்கீல், இரண்டு உறவினர்களை சேர்க்கலாம். அவர்களுடைய எண்களை குறிப்பிட்டு, கைதி வழங்குவார்.அவர்களுடைய கைரேகை பதிவு செய்யப்படும். இதற்காக ஆரம்பத்தில், 80 ரூபாய் செலுத்த வேண்டும். இதில், 50 ரூபாய் டிபாஸிட்டாக வரவு வைக்கப்படும். மீதமுள்ள, 30 ரூபாய்க்கு ஃபோனில் பேசிக் கொள்ளலாம்.

மாதத்திற்கு, மூன்று முறை அரை மணி நேரம் மட்டும் இதற்கு அனுமதி வழங்கப்படும். அவர்கள் தொலைபேசி இருக்கும் இடத்திற்கு சென்று, அங்குள்ள ரேகை வைக்கும் இடத்தில் கை ரேகை பதிவு செய்து, பின்னர் தொலைபேசிக்கு மேலே உள்ள டிஸ்பிளேயில் அவர்கள் கொடுத்த, மூன்று ஃபோன் எண்கள் வெளியாகும்.அதில் அவர்கள், யாருடன் பேச விரும்புகின்றார்களோ, அந்த எண்ணை தேர்வு செய்தால், தானாகவே ஃபோன் டயல் ஆகும். அவர்கள், யாருடன் பேசுகிறார்கள் என்ற விவரம், எங்களுக்கு தெரிய வரும்.இந்த சேவை, கைதிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில், 102 கைதிகள், தொலைபேசியில் பேசினர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tuesday, March 3, 2015

பலவிதமாக பயன்படும் பாதம்- ஆங்கிலம் அறிவோமே 47

Return to frontpage
ஒரு வாசகர் ‘contemporary என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்கிறார். சம காலத்தில் வாழ்ந்த அல்லது வாழ்கிற என்பதை இந்த வார்த்தையால் குறிப்பிடுவோம். ஜவஹர்லால் நேருவும் மகாத்மா காந்தியும் contemporaries. ஜவஹர்லால் நேருவும் ராகுல் காந்தியும் contemporaries அல்ல.

Contemporary என்பதற்கு நவீன, சமீபத்திய என்றும் அர்த்தம் உண்டு. This is a contemporary artwork.

ஆக contemporary என்பதற்கு இணையான வார்த்தைகளாக co-existent, modern, recent, concurrent ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பலவித பயன்பாடு

Foot என்றால் பாதம் மட்டுமல்ல. 12 அங்குலங்கள் மட்டுமல்ல. ஆங்கிலத்தில் பலவிதங்களில் பயன்படுகிறது இந்த வார்த்தை.

Put your foot down என்றால் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது எனும்போது அதை நடக்கவிடாமல் உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துவது என்று பொருள். She wanted to marry Girish but her father put his foot down.

Getting caught on the wrong foot என்றால் எதிர்பாராமல் ஒன்று நடைபெறு வதால் ஏற்படும் வியப்பைக் குறிக்கிறது.

Get off on the wrong foot என்றால் ஒரு சூழலையோ, உறவையோ தவறாகத் தொடங்குவது என்ற அர்த்தம். Every evening I return home, we seem to get off on the wrong foot. We fight.

Put your best foot forward என்றால் கடும் உழைப்பை அளித்து வெற்றி பெற முயல்வதைக் குறிக்கிறது.

My foot என்பது திட்டு வார்த்தை. “நான் எது சொன்னாலும் நீங்க கேட்பீங்களே’’ என்று யாராவது கூறும்போது நீங்கள் “My foot’’ என்று கூறினால் “அதுக்கு வேற ஆளப் பாருங்க’’ என்று உஷ்ணமான அர்த்தம்.

CONJUNCTIONS

“Conjuctions-ஆல் என்ன பயன்?’’ என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். கூடவே அவர் கருத்துக்கு ஆதரவாக ஒரு வாக்கியத்தையும் அளித்திருக்கிறார்.

“Murali took a bag. He went to bus stand.”இப்படி இரண்டு வாக்கியங்கள் அமைப்பதற்குப் பதிலாக Murali took a bag and went to bus stand என்பதில் என்ன பெரிய வசதி ? என்கிறார்.

NOUNகளைத் தவிர்ப்பதற்காக PRONOUN என்பது போல் இங்கு PRONOUN-ஐயும் தவிர்க்க CONJUNCTION உதவுகிறதே!

FANBOYS

முதலில் CONJUNCTION என்றால் என்ன என்று பார்ப்போம். CONJUNCTIONS என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சொன்னால் இதை விளங்கிக் கொள்வது மேலும் எளிதாக இருக்கும்.

AND, BUT, THAT, WHERE, NOR, BECAUSE போன்றவை CONJUNCTIONS.

முக்கியமான CONJUNCTIONS- ஐ நினைவுகொள்ள FANBOYS என்ற வார்த்தையை நினைவில் கொள்ளலாம்.

அதாவது for, and, nor, but, or, yet, so போன்ற CONJUNCTIONS-ன் முதல் எழுத்துகளை இணைத்தால் FANBOYS.

CONJUNCTIONS என்பவை வாக்கியங்களை இணைக்கும் வார்த்தைகள். சில சமயம் இரண்டு வார்த்தைகளை இணைப்பதாகவும் இருக்கும்.

வாசகர் குறிப்பிட்ட Murali took a bag and went to bus stand என்பதில் and எனும் CONJUNCTION இரண்டு வாக்கியங்களை இணைக்கிறது.

Rama and Lakshmana are brothers என்பதில் உள்ள and இரண்டு வார்த்தைகளை மட்டுமே இணைக்கிறது. Five and five make ten என்பதிலும்தான்.

சில conjunctions இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Either or. அதாவது இரண்டில் ஒன்று. Give me either coffee or tea. Anything is OK.

Neither nor அதாவது இரண்டுமே வேண்டாம். I want neither coffee nor tea. I don’t feel like having anything.

Both - and அதாவது இரண்டுமே. Give me both biscuits and fruits. I am very hungry.

Not only But also, அதுமட்டுமல்ல, இதுவும். I want my son to be not only educated but also disciplined.

Whether or அதுவோ, இதுவோ. I don’t care whether you are happy or not.

இப்படி ஜோடியாகப் பயன்படுத்தப்படும் conjunctionsஐ, correlatives என்பார்கள்.

HABIT - CUSTOM

Habit என்பது தனி நபர் தொடர்பானது. Custom என்பது சமூகம் அல்லது நாடு தொடர்பானது. எனவே Getting up at 6.00 a.m. is my custom என்று சொல்லக் கூடாது. அது Habit தான். Drinking coffee is an Indian custom என்று சொல்லலாம்.

Habit என்பது சமீபக் காலத்தில்கூட உருவாகியிருக்கலாம். ஆனால் Custom என்பது தொன்று தொட்டு வருவதாக இருக்க வேண்டும். நீதிபதிகள்கூடத் தீர்ப்பளிக்கும்போது சட்டத்தோடு Custom என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதுண்டு.

It is customary என்றால் தொடர்ந்து நடக்கக்கூடிய ஒன்று என்று பொருள். Customer என்பதற்குக்கூட இந்த அடிப்படை உண்டு. Customer என்றால் வாடிக்கையாளர் அதாவது தொடர்ந்து நம்மிடம் தொடர்பு கொண்டிருப்பவர்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

ஆதார் இலவச விண்ணப்ப படிவம் ரூ.50-க்கு விற்பனை: சேலத்தில் நூதன மோசடி

சேலம் மாவட்டத்தில் அரசின் இலவச ஆதார் விண்ணப்பத்தின் நகலை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யும் கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 34 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மத்திய, மாநில அரசின் பல்வேறு சலுகை, நிதி உதவி, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவை பெறுவதற்கு முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை விளங்கி வருகிறது. ஆதார் அட்டை வழங்குவதற்காக பள்ளிகளில் முகாம் அமைத்து வழங்கும் பணி நடந்தது. 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆதார் அட்டை பெற்ற நிலையில், மீதியுள்ளவர்கள் ஆதார் அட்டை பெறவில்லை.

இந்நிலையில், ஆதார் அட்டை உள்ளவர்கள் மட்டுமே காஸ் சிலிண்டருக்கான மானியம் பெற முடியும் என்று மத்திய அரசு திடீரென அறிவிப்பு வெளியிட்டது. பின், நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஆதார் அட்டை காஸ் சிலிண்டர் மானியம் பெற தேவையில்லை என அறிவித்தது. இருப்பினும், பல காஸ் சிலிண்டர் நிறுவனங்கள் ஆதார் அட்டையை நுகர்வோர்களிடம் கேட்டு வற்புறுத்தி வருகின்றன.

மேலும், அரசின் முக்கிய அடையாள ஆவணங்களில் ஆதார் அட்டை பிரதானமாக உள்ளதால், பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 11 தாலுக்கா அலுவலகம், நான்கு நகராட்சி அலுவலகம், மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் என மொத்தம் 20 இடங்களில் ஆதார் அடையாள அட்டை புகைப் படம் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஆதார் அடையாள அட்டை எடுத்தவர்களின் குடும்பத்தில் விடுபட்டவர்களுக்கும், கடந்த 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கும், வார்டு விட்டு வார்டு, தொகுதி விட்டு தொகுதி இடம் பெயர்ந்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடந்து வருகிறது.

புதியதாக ஆதார் அடையாள அட்டை வேண்டுவோருக்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்களுக்கும் புதியதாக விண்ணப்ப படிவம் இலவசமாக அளிக்கிறது. தற்போது, அரசின் இலவச விண்ணப்ப படிவங்கள் குறைந்த அளவே வந்துள்ளன.

வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கூடுதல் விண்ணப்பம் வந்த பின்னரே, புதியதாக ஆதார் அடையாள அட்டை எடுப்பவர்களுக்கான பணி தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

குறைந்தளவு ஆதார் அடையாள அட்டைக்கான விண்ணப்ப படிவம் வந்துள்ள நிலையில், அவற்றை நகல் எடுத்து மக்களை ஏமாற்றி ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்கின்றனர். அரசு இலவசமாக அளிக்கக் கூடிய ஆதார் அடையாள அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தை மட்டுமே ஆதார் புகைப்பட மையங்களில் எடுத்துக் கொள்கின்றனர். விண்ணப்பத்தை நகலை எடுத்துக் கொண்டு வருபவர்களை திரும்ப அனுப்பி விடுகின்றனர்.

சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்தில் ஆதார் விண்ணப்ப படிவத்தின் நகல் கன ஜோராக விற்பனை நடக்கிறது. அந்த பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடைகளிலும், சிலரும் விண்ணப்ப படிவ நகலை, மக்களிடையே ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்.

ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் மையம் ஆண்டு முழுவதும் இயங்கும் என்பதையும் புதியதாக ஆதார் அடையாள அட்டை எடுக்க வேண்டியவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்ற அரசின் விழிப்புணர்வு விளக்கத்தை மக்களிடம் தெளிவாக எடுத்து கூறதாததாலே, இதுபோன்ற மோசடி கும்பல் நூதன முறையில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். எனவே, ஆதார் விண்ணப்ப நகலை விற்பவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Senior citizens to travel free on state transport buses

DEHRADUN: The state cabinet on Monday gave a green signal to the proposal to allow senior citizens -- 65 years old and above -- to travel free-of-cost in all State Transport Corporation Limited (STCL) buses within the state and outside. The move is expected to benefit over 20 lakh elderly people in the hill state.

The decision was taken at a cabinet meeting chaired by chief minister Harish Rawat ahead of the Uttarakhand assembly's crucial Budget session which commences on March 11.

According to sources, as part of the free travel sop, senior citizens would be able to travel not just in ordinary buses but also deluxe and luxury coaches of the Uttarakhand Transport Corporation Limited. "The state government would soon be undertaking an exercise to make ID cards of all bonafide senior citizens so that they can avail of this scheme," said a senior official in the transport department.

Incidentally, the state cabinet gave its nod to the proposal two weeks after the CM received a memorandum from senior citizen associations urging the government to allow them this facility.

Meanwhile, the cabinet also gave its go-ahead to the decision to constitute a three-member high-level committee headed by chief secretary N Ravi Shankar to thresh out the new excise policy which has been at the centre of controversy over reports that local players may be edged out. Sources told TOI that the committee will chalk out the modalities of the excise policy within a month's time after considering all aspects of the issue. "The objective of the exercise will be to help fetch more revenue for the state, but we will ensure that private parties from Uttarakhand also get equal opportunities in the process", said a senior officer in the know of developments

Farmer loses bag containing Rs 1.80 lakh in Chennai, fertilizer dealer returns it

CHENNAI: It might be just a coincidence. But a fertilizer dealer at Tambaram here made a farmer's day in a big way!

A 70-year-old farmer from Sriperumbudur who came to Chennai to attend his granddaughter's engagement lost a bag containing Rs 1.80 lakh in cash on Monday morning. However, he got the bag and the money back in a few hours thanks to an honest fertilizer dealer in Tambaram.

Police said the farmer, identified as Santhanam, lost his bag and money while he was going to a marriage hall in Tambaram where his granddaughter's engagement was taking place.

To his pleasant surprise, Santhanam received a call from a fertilizer and pesticides dealer, Ram Babu, who told him that he had found a bag containing money and asked him to meet him at the Tambaram police station to collect it.

Babu found the bag lying on the road when he reached the bus stop to see his grandchildren off to school. He opened the bag and found cash in it. There was an invitation card in the bag where Santhanam's celephone number was written. He made a call to the number and contacted Santhanam.

Babu handed over the bag and money to Santhanam in the presence of Tambaram police inspector.

Questions on cricket stump board exam candidates

NEW DELHI: It wasn't an easy beginning for those writing the CBSE Class XII board exams on Monday. Lengthy and confusing comprehension passages and tricky value-based questions gave students jitters and many could not complete the otherwise average English (core) paper.

Students said the paper was made difficult primarily by questions related to cricket and pilgrimage. "The paper was difficult and the passages lengthy and confusing. I could not complete it as I took a long time to read the passages," Chestha Chanan of Army Public School, Dhaula Kuan, said.

Not just students, even teachers found the paper, which saw significant changes this year, difficult. "This being the first paper, students were anxious," Ramjas School, RK Puram, English HoD, Meera Bhardwaj said. One question on privileges enjoyed by cricketers left many surprised.

Mahua Mallick, an English teacher at Ahlcon International, Mayur Vihar, said, "Students found the passage on 'pilgrimage' difficult. There were questions like 'How can a pilgrim keep his body healthy' and 'How do we satisfy our ego'. Only those who read regularly could answer."

"The rest of the paper was easy and had direct questions," said Nilesh Rastogi, a student from Ahlcon International.

Monday, March 2, 2015

ஜனநாயகத்தின் நாற்றுகளை 'உற்பத்தி' செய்யும் அரசுப் பள்ளிகள்

கோப்புப் படம்

'தி இந்து' தமிழ் இணையதளத்தில் பிப்ரவரி 27-ல் வெளியான மாணவர்களை அரசுப் பள்ளிகள் "உற்பத்தி" செய்வது எப்படி? என்ற கட்டுரையை வாசித்தேன்.

ஒட்டுமொத்த சமூக அமைப்பின் யதார்த்தமான சமூக, அரசியல், பொருளாதார அவலங்கள் அனைத்தையும் சமூக அமைப்பின் ஒரு சிறு நிறுவனமான அரசுப் பள்ளியின் கல்வி முறையின் விளைபொருள் என்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

"இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக உள்ளனர், தற்போது மாணவர்களும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. வேலூரில் 10-ம் வகுப்பு மாணவன், ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழலை உருவாக்கியது, நமது கல்வி முறையின் மிகப்பெரிய தோல்வி என்பதை நவீன மெக்காலேக்கள் உணர்வார்களா?" என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

எந்த மெக்காலேவின் ஆய்வை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பைக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார் என்பதுஆய்வுக்குரியது. ஒரு சமூகக் குற்றம் நடப்பதற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினரே காரணம் என்றும், அரசுப் பள்ளியின் கல்விச் சூழல் மட்டுமே காரணம் என்றும் கருத்தை உருவாக்கும் வகையில் குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல.

ஓர் அரசுப் பள்ளி மாணவன், ஒரு மாணவியைக் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழல் உருவாக அரசுப் பள்ளியின் கல்வி முறையும், அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் மட்டுமே காரணம் என்று குற்றம் சுமத்துவது நியாயமற்றது. இப்படிப் பேசுவதைக் கூட, பணக்கார வர்க்கக் கல்வியாளர்கள் பின்பற்றிவரும் நவீனத் தீண்டாமைக் கொள்கை என்றுதான் குறிப்பிட வேண்டும்.

அரசுப் பள்ளிப் பெற்றோர்கள் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க முடியாதவர்கள் என்ற துணிவில் இந்தக் கருத்தைக் கட்டுரையாளர் கூறியிருக்கிறார் என்றும் கருதத் தோன்றுகிறது. ஒட்டு மொத்த சமூகத்தின் அவலங்களையும், கல்வியின் அவலங்களையும் ஏழைகள் மீதும் ஏழைகளின் பள்ளிகளின் மீதும் மட்டுமே சுமத்துவது நியாயமற்ற செயலாகவே கருத முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவர், தனது ஆசிரியை ஒருவரை வகுப்பறையில் கத்தியால் குத்திக் கொன்றார். இந்தச் சூழல் உருவானதற்கு ஆங்கிலோ இந்தியக் கல்வி முறை மாணவர்களை இப்படி "உற்பத்தி" செய்கிறது என்றும், இதற்கு மாணவர்களின் பெற்றோர்களும் காரணம் என்றும் யாராவது குற்றம் சாட்டினார்களா? குற்றங்களைப் பற்றிப் பேசுவதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஓர் அணுகுமுறை, ஆங்கிலோ இந்தியப் பள்ளி மாணவர்களுக்கு ஓர் அணுகுமுறை என்ற பாகுபாடு உருவாக்கப்படுவது கல்வியில் ஜனநாயகத் தன்மைகளை அழித்துவிடும்.

"ஒரு மாணவன் வருடம் முழுவதும் என்ன கற்றுக்கொண்டான்? அதை எப்படி தேர்வில் எழுதினான் என்பெதெல்லாம் தாண்டி, அன்றைய தேர்வுக்கு யார் அறைக் கண்காணிப்பாளராக வந்தார்கள், எப்படி தாராளமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் தேர்ச்சி நிர்ணயிக்கப்படுறது" என்று கட்டுரையாளர் கூறியுள்ள குற்றச்சாட்டு தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். கண்காணிப்பாளருக்குக் கப்பம் கட்ட அரசுப் பள்ளிகளுக்கு என்ன வாய்ப்பு இருக்கப்போகிறது? கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போலக் குடிகாரப் பெற்றோர்களின் பிள்ளைகளல்லவா அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள்? கண்காணிப்பாளர்களுக்கு கப்பம் கட்ட வாய்ப்புள்ள தனியார் பள்ளிகளில்தானே இப்படியெல்லாம் மாணவர்களின் தேர்ச்சியை நிர்ணயிக்க முடியும்.

பெரும்பாலான தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பாடங்கள் ஒன்பதாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்கள் பதினோராம் வகுப்பிலும் கற்பிக்கப்படுகின்றன. இந்த முறைகேட்டின் மூலமே தனியார் பள்ளி மாணவர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்களைவிட அதிக தேர்ச்சி விகிதமும் மதிப்பெண் விகிதமும் பெறுகின்றனர். இதனால் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் உயர் கல்விச் சேர்க்கை வாய்ப்புகள் பறிபோகின்றன. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த ஒரு விழுக்காட்டினர்கூட இடம் பெற முடிவதில்லை. இந்தச் சமூக அநீதிக்குக் காரணமான தனியார் பள்ளிகளின் முறைகேட்டைத் தடுக்க பதினோராம் வகுப்பிலும் அரசு பொதுத்தேர்வு முறையைக் கொண்டுவரவேண்டும். மேலும் தவறு செய்யும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படவேண்டும் என்று இதுவரை எத்தனைபேர் கேட்டிருக்கிறார்கள்?

கேட்கும் தகுதியுடைய பெற்றோர்களின் குழந்தைகள் அனைவரும் எப்படியாவது மதிப்பெண் பெற்றால் போதும் என்ற ஒரே குறிக்கோளில் தனியார் பள்ளிகளில் கேட்ட அளவுக்குக் கட்டணம் செலுத்திப் படித்துவருகிறார்கள். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்கவைக்கும் ஏழைப் பெற்றோர்களோ இதையெல்லாம் கேள்வி கேட்பதற்கு இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை நிலை.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் குற்றவாளிகளாக உருவாக்கப்படுகிறார்களா? அரசுப் பள்ளிக் கல்வி முறைதான் நாட்டில் பெண்களைப் பலாத்காரம் செய்து கொலை செய்பவர்களை "உற்பத்தி" செய்கிறதா?

அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் படிக்காமல் தேர்வில் காப்பி அடித்து மதிப்பெண் வாங்கினார்களா? அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் மாணவர்களைத் தேர்வில் பார்த்து எழுதவைத்துதான் மதிப்பெண் வாங்க வைக்கிறார்களா? என்று கேள்வி கேட்கும் வகையில் ஒட்டு மொத்தமாக அனைவர்மீதும் தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பது நியாயமற்றது.

அனைத்துக் குழந்தைகளும் உயிர் வாழ்வதற்கும், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முன்னேறுவதற்கும் சமவய்ப்புகளையும் சமஉரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் கல்வி முறை ஒன்றே நமது ஒரே குறிக்கோளாக இருக்க முடியம். மேலும் ஓர் உண்மையான மக்களாட்சி அமைப்பை உருவாக்குவதற்கான அடிப்படைக் கடமையும் கூட இதுவாகத்தான் இருக்க முடியும். இந்த உயரிய நோக்கத்தை அடைவதற்கு நாம் அரசுப் பள்ளிகளைக் காப்பதையும் மேம்படுத்துவதையும் முதன்மை இலக்காகக் கொள்ளவேண்டும். அரசுப் பள்ளிகளின் மதிப்பைத் தாழ்த்தும் படியான வகையில் நியாயமற்ற கருத்துகளைப் பொத்தாம் பொதுவாக கூறிவருவது ஆபத்தானது.

அரசுப் பள்ளிகள் மூலம்தான் தமிழகத்தில் இதுவரையில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் கட்டணமில்லாமல் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கல்விக் கூடங்களுக்குள் காலடிவைத்த முதல் தலைமுறையினர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி, சந்திராயன் திட்ட இயக்குனர் போன்ற சிகரங்களைத் தொட்ட தமிழர்கள் பலர் அரசுப் பள்ளியில் தாய்மொழிவழியில் படித்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஏழைகளின் அறிவுக்கூடமாய் விளங்கும் அரசுப் பள்ளிகளில் பல குறைகள் இருக்கலாம். அவை களையப்படவேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. கல்வி அமைப்பில் மாற்றம் வேண்டும் என்பதையும் யாரும் மறுக்கவில்லை.

எனவே, இருக்கின்ற குறைகளைக் களைய உதவுவதே ஆக்கபூர்வமான பணியாக இருக்க முடியும். அரசுப் பள்ளிகள் மீது அவநம்பிக்கைச் சேற்றை இறைப்பதால் எதிர் விளைவுகளே ஏற்படும். அரசுப் பள்ளிகள் ஜனநாயகப் பயிர்களை வளர்த்தெடுக்கும் நாற்றங்கால்கள் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவோம்.

அரசுப் பள்ளியில் இரண்டு மகன்களைப் படிக்க வைக்கும் ஒரு தந்தை என்ற உரிமை காரணமாகவும், அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் என்ற பொறுப்புணர்வினாலும் இந்த வேண்டுதலை அனைவருக்கும் முன்வைக்கிறேன்.

சு.மூர்த்தி, கட்டுரையாளர் - ஒருங்கிணைப்பாளர். கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, திருப்பூர் மாவட்டம். தொடர்புக்கு- moorthy.teach@gmail.com

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...