Wednesday, March 4, 2015

சிறையில் கைதிகள் தொலைபேசியில் பேச மாதம் ரூ.30க்கு அனுமதி திட்டம் துவக்கம்

வேலூர் : சிறையில் கைதிகள் தொலைபேசியில் பேச மாதம், 30 ரூபாய்க்கு அனுமதி கொடுக்கும் திட்டம் துவங்கியது.

வேலூர் மத்திய சிறையில், மொபைல் ஃபோனை முற்றிலும் ஒழிக்க சிறைத்துறை நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இதனால், சிறையில் பொது தொலைபேசியை, சிறைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பணம் செலுத்தி, கைதிகள் பேசிக் கொள்ளலாம்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மத்திய சிறையில் கைதிகளிடம் உள்ள, மொபைல் ஃபோன் கலாச்சாரத்தை ஒழிக்க, பொது தொலைபேசி திட்டம், நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. சிறையில், ஆறு இடங்களில், பொது தொலைபேசி உள்ளது. மாதம், 30 ரூபாய்க்கு இதில் பேசிக் கொள்ளலாம். இந்த ஃபோனில் பேச விரும்பும் கைதிகள், கன்ட்ரோல் ரூமில் கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.அதில், அவர்களுக்கு, மூன்று ஃபோன்களை தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்படும். அதில், ஒரு வக்கீல், இரண்டு உறவினர்களை சேர்க்கலாம். அவர்களுடைய எண்களை குறிப்பிட்டு, கைதி வழங்குவார்.அவர்களுடைய கைரேகை பதிவு செய்யப்படும். இதற்காக ஆரம்பத்தில், 80 ரூபாய் செலுத்த வேண்டும். இதில், 50 ரூபாய் டிபாஸிட்டாக வரவு வைக்கப்படும். மீதமுள்ள, 30 ரூபாய்க்கு ஃபோனில் பேசிக் கொள்ளலாம்.

மாதத்திற்கு, மூன்று முறை அரை மணி நேரம் மட்டும் இதற்கு அனுமதி வழங்கப்படும். அவர்கள் தொலைபேசி இருக்கும் இடத்திற்கு சென்று, அங்குள்ள ரேகை வைக்கும் இடத்தில் கை ரேகை பதிவு செய்து, பின்னர் தொலைபேசிக்கு மேலே உள்ள டிஸ்பிளேயில் அவர்கள் கொடுத்த, மூன்று ஃபோன் எண்கள் வெளியாகும்.அதில் அவர்கள், யாருடன் பேச விரும்புகின்றார்களோ, அந்த எண்ணை தேர்வு செய்தால், தானாகவே ஃபோன் டயல் ஆகும். அவர்கள், யாருடன் பேசுகிறார்கள் என்ற விவரம், எங்களுக்கு தெரிய வரும்.இந்த சேவை, கைதிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில், 102 கைதிகள், தொலைபேசியில் பேசினர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Issue circular on duties of doctors acting as witnesses: HC

Issue circular on duties of doctors acting as witnesses: HC The medical professionals appearing as expert witnesses must exercise a high deg...