Saturday, June 20, 2015

சி.ஏ., முடித்த 412 பேருக்கு பட்டம்: ஐ.சி.ஏ..ஐ., வழங்கியது

சென்னை : தென் மண்டல 'இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ்' என்ற ஐ.சி.ஏ.ஐ., கல்வி நிறுவனத்தில் படித்த, 412 பேருக்கு, பட்டங்கள் வழங்கப்பட்டன.ஐ.சி.ஏ.ஐ., நிறுவனத்தின் தென்மண்டல கல்வி நிறுவனம், சென்னையில் செயல்படுகிறது. இந்த மண்டலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் மாணவர்கள், சி.ஏ., படிக்கின்றனர்.இந்த கல்வி ஆண்டில், சி.ஏ., முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா, சென்னை ஐ.டி.சி., கிரான்ட் சோழா ஓட்டலில், நேற்று நடந்தது.இதில், சி.ஏ., முடித்த, 412 பேருக்கு, முன்னாள் எம்.பி., ரக்மான்கான் பட்டங்கள் வழங்கினார். ஐ.சி.ஏ.ஐ., துணைத் தலைவர் தேவராஜ ரெட்டி, ஐ.சி.ஏ.ஐ., கல்வி வாரிய தலைவர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், அகில இந்திய அளவில் முதல், 50 இடங்களுக்குள், 'ரேங்க்' பெற்ற ஏழு பேருக்கு, 'ரேங்க்' சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தியர்களுக்கு விசா சலுகை தொடரும்:ஹாங்காங் முடிவு


பீஜிங்:இந்தியர்கள் விசா இல்லாமல் ஹாங்காங் வருவதற்கான சலுகையை தொடர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.இந்தியர்கள் ஹாங்காங்கில் விசா இல்லாமல் சென்று 14 நாட்கள் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.இந்த சலுகையை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து ஹாங்காங்கில் அடைக்கலம் புகுவோரின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது.இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான நேரம், செலவு ஆகியவற்றை கருதி

இந்தியர்களுக்கான விசா சலுகையை ரத்து செய்ய ஹாங்காங் அரசு முடிவு செய்தது.

இதை அமல்படுத்தினால் இந்திய தொழில் துறையினர் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவர் என ஹாங்காங் அரசுக்கு இந்திய துாதரகமும் தொழில் கூட்டமைப்பும் எடுத்துக் கூறின. மேலும் ஹாங்காங்கின் சுற்றுலா வருவாயும் பாதிக்கப்படும் என வலியுறுத்தப்பட்டது.




இதைத் தொடர்ந்து விசா சலுகையை ரத்து செய்யும் திட்டம் கைவிடப்பட்டதாக ஹாங்காங் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஹாங்காங்கில் இருந்து வருவோர் விசா இருந்தால் தான் இந்தியாவிற்குள் நுழைய முடியும்.பிரதமர் மோடி தனது சீன பயணத்தின்போது ''சீன சுற்றுலா பயணிகளுக்கு 'இ-விசா' வசதி அறிமுகப்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார். இதையடுத்து சீனாவின் அங்கமான ஹாங்காங்கிற்கும் 'இ-விசா' வசதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

'சம்பளம் வழங்க மறுப்பதுபட்டினியால் இறக்க விடுவதற்கு சமம்'


மதுரை:மதுரை மாவட்ட கூட்டுறவு விவசாய சேவைகள் சங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால், தனி அலுவலருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மனுதாக்கல்:மதுரை, செல்லுார் புருஷோத்தமன் உள்ளிட்ட, 10 பேர் தாக்கல் செய்த மனு:

மதுரை, கூடல் நகரிலுள்ள, மாவட்ட கூட்டுறவு விவசாய சேவைகள் சங்கத்தில், 29 ஆண்டுகளாக பணிபுரிகிறோம். 2008 செப்., முதல், 2011 ஜூலை வரை, சங்க நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை. ஆனால், தனி அலுவலர், அவருக்குரிய சம்பளத்தை பெற்றுக் கொள்கிறார். எங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவித்தனர்.

ஏற்க முடியாது:இம்மனு, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் துறை கருத்துக்களை கேட்ட பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்கள், சங்கத்தின் ஊழியர்கள், வருகைப்பதிவேட்டில் தினமும் கையெழுத்திட்டுள்ளனர். சங்கத்தை நிர்வகிப்பவர் தனி அலுவலர்.பணி நடக்கவில்லை; இதனால், சம்பளம் வழங்கவில்லை என அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. அதிகாரிகள் கடமைமனுதாரர்கள், நிரந்தர ஊழியர்கள். அவர்களை நியமித்த பின், அவர்களுக்கு தகுந்த பணியை ஒதுக்கி, சம்பளம் வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமை.பணி நடைபெறாத சூழ்நிலையில், பணி நீக்கம் செய்திருக்கலாம்; மனுதாரர்கள், வேறு பணிக்கு சென்றிருப்பர்.

தொழிலாளர்களுக்கு சம்பளம் மறுப்பது, அவர்களை பட்டினியால் இறக்க விடுவதற்கு சமம். பொருளாதார ரீதியான மரணத்தை ஊக்குவிப்பது போலாகும். தனி அலுவலர் தான், சங்கத்தின் நஷ்டத்திற்கு காரணம். தனி அலுவலருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.இதை, தலைமை நீதிபதியின் நேபாள பூகம்ப நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும்.

மனுதாரர்கள், கடைசியாக பெற்ற சம்பளத்தின் அடிப்படையில், மீதி நிலுவைத் தொகையை, ஒரு மாதத்தில், தனி அலுவலர் வழங்க வேண்டும்; தாமதித்தால், வட்டியுடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பு வரும் வரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி உறுதியளித்தார்.
தொடர்ந்து கலந்தாய்வு: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை.
இதே அரங்கில் சனிக்கிழமை (ஜூன் 20) முதல் தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி வரை அனைத்துப் பிரிவு உள்பட பிற சமுதாயப் பிரிவு மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அரசு தலைமை வழக்குரைஞர் உத்தரவாதம்: கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தொடுத்துள்ள வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட மாட்டாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி உத்தரவாதம் அளித்தார்.
பழைய மாணவர்களுக்கு எதிர்ப்பு: சென்னை, நந்தனத்தைச் சேர்ந்த டாக்டர் நல்லி ஆர்.கோபிநாத் உள்பட 60-க்கும் மேற்பட்ட இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர் கபிலன் ஆகியோர் சென்ற ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எதிராகத் தொடுத்த வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது.
கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்- இயற்பியல்- வேதியியல் ஆகிய முக்கியப் பாடத் தேர்வுகள் எளிதாக இருந்ததாகவும், இந்த ஆண்டு இந்த முக்கியப் பாடத் தேர்வுகள் கடினமாக இருந்ததாகவும் வழக்கு தொடுத்தவர்களின் சார்பில் வாதிடப்பட்டது.
இதனால் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களின் எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்து விட்டது. எனவே கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
548 பழைய மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு: இந்த வழக்கில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, ""எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) மொத்தம் 31,525 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்; இவர்களில் 4,679 பேர் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த பழைய மாணவர்கள்; கட்-ஆஃப் மதிப்பெண்- சமுதாய ரேங்க் அடிப்படையில், பழைய பிளஸ் 2 மாணவர்களில் 548 மாணவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து நடைபெற உள்ள கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
அடிப்படை ஆதாரமற்றது: எனவே மனுதாரர்கள் கூறுவது போல மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களில் (2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள்), 50 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களில் (1,000-த்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள்) பழைய மாணவர்கள் சேரக் கூடும் என்பது அடிப்படை ஆதாரமற்றது. மேலும், கடந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தம் சுதந்திரமாக நடைபெற்றது என்று கூறுவதையும் ஏற்க முடியாது. அதை நிரூபிக்க அவர்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை'' என்றார்.
கலந்தாய்வு நடத்தத் தடை இல்லை: அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். கலந்தாய்வை தொடர்ந்து நடத்தத் தடை இல்லை என்றும் இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை சேர்க்கைக் கடிதத்தை அளிக்கக் கூடாது என்றும் கூறினர்.
மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது என்று அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜுன் 22) ஒத்திவைத்து
உத்தரவிட்டனர்.

Married women too entitled to job on compassionate grounds: HC

The Madras High Court Bench here has reiterated that daughters of government employees, who die in harness, cannot be denied job on compassionate grounds just because they were married when no such stipulation was imposed on sons of such employees.

Allowing a writ petition filed by a woman, Justice S. Vaidyanathan quashed an order passed by a Tangedco Superintending Engineer in Sivaganga on March 9 denying compassionate employment to the petitioner since she was married. The judge said that the court had, in a catena of decisions delivered since 2008, categorically held that there could be not any discrimination between sons and daughters on the basis of their marital status when it comes to providing employment to them on compassionate grounds.

Some of the judgments had also stated that such discrimination in providing employment goes against the provisions of the Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007 which imposes equal responsibility on both sons and daughters with respect to taking care of their parents.

Hence, the judge directed the SE to reconsider his decision within three weeks since the petitioner, A. Rohini, belonged to a downtrodden community and also happened to be the only child of a woman Inspector of Assessment who died on February 23.

Friday, June 19, 2015

SC directs CBSE to declare AIPMT exam results by August 16

The Supreme Court on Friday refused to accede to the Central Board of Secondary Examination (CBSE)'s demand to grant them four months time to conduct the AIPMT entrance exam and directed the latter to conduct the test and declare results by August 16.

"They have allowed CBSE an extension, but the overall extension, including declaration of results is August 16. This includes holding of exams and declaration of results. The CBSE had wanted four months, but that has been disallowed by the Court as the honourable Court has made an observation that they are aware of the new academic session to commence at the right time," the petitioner advocate, Pushp Gupta told mediapersons.

"There is a particular limit for the academic session to begin, they gave three dates for the round of counselling to be done so that the academic session for 2015-16 for the MBBS and BDS students is notdelayed to a stage wherein they are squeezed with less time do their course," she added.

The Supreme Court on June 15 had set aside the AIPMT entrance exam and directed the CBSE to re-conduct the exam in four weeks.

However, CBSE had asked the Supreme Court for more time to reschedule the exam, saying that it was not possible to do so in four weeks as it is in process of conducting seven other exams.

The ruling comes after petitioners sought the re-conducting of the AIPMT following the leak of the question paper and the circulation of answers at examination centres across 10 states. (ANI)

Govt Looks to Rein In Two Deemed Varsities

BENGALURU: The Department of Medical Education is trying to get deemed medical universities surrender 25 per cent of their undergraduate medical seats to the government. This is planned to be distributed to students under the Common Entrance Test quota.

However, the universities have refused to surrender the seats even after a series of meetings. Now the Department has decided to take legal opinion on what action it can take to get the seats.

Department sources said the state government cannot ask for seats from all deemed medical universities but only those that have obtained a No Objection Certificate (NoC) from the State.

“Out of 10 deemed medical universities, two have got NoC from the state and it is mandatory for them to provide seats. But even they are refusing to give the seats,” said an official source from the department. “Following this reaction from the universities, the minister has sent the file for legal opinion on what can be done further,” the source added.

When contacted, Medical Education Minister Dr Sharan Prakash Patil confirmed the development and told Express, “Two deemed medical universities have got NoC from the state government while getting the deemed status. One is K S Hegde Medical Academy, Mangaluru, and the other is Yenepoya Medical University, Mangaluru. As per the norms, those who have got the NoC from the state have to provide 25 per cent of their seats to CET.”

“I have convened meetings with the authorities of the two universities and also written to them. But, they are refusing to provide seats. So, I have written to the Legal Department for opinion on further actions,” said Patil.

The minister said that the then BJP government gave an exemption to the two universities from giving up seats. “The BJP government had given them exemption from providing seats, even though they have got the NoC from us. But, I have withdrawn that exemption and they have to give us seats,” added Patil.

No Action on Other Deemed Varsities

Patil said that he cannot initiate action against the other deemed medical universities which have not got an NoC from the state.

“There are some universities which are giving seats to CET quota every year on their own. But there are some which are not willing to do so despite having got the NoC from us. In the case of those varsities who have not been issued NoC, we are helpless,” he said.

“The universities which have not taken NoC are saying they do not come under us and are under the Ministry of Human Resource Development. However, if their seat strength is increased for that particular year, they have to give 25 per cent out of the increased number of seats to the government,” Patil said.

NEWS TODAY 20.08.2026