Thursday, June 25, 2015

1,800 med seats may go to earlier batches: Parents

Janani Sampath1

Chennai:

Even as the first phase of medical counselling continued for the fifth day on Wednesday , worried parents of the current batch of students did the figures and that said their wards are likely to face more trouble .

They said their calculations show that more than 1,800 students from the previous batches have the required cut-off to get a medical seat this year, and the current batch of students would be left with only about one-fifth of the seats.

The parents approached the court and claimed that their wards stand little chance of securing a medical seat, as they will compete for only 400 seats. “We worked out the cut-offs by comparing the rank lists of this year and previous years. We found that out of the 4,111 students who have cut-offs between 198.25 and 195, a total of 1,808 are from previous batches. With only 2,257 seats available in the state quota, what chance do the cur rent year students have,“ asked Gopinath, a parent. While the selection commit tee had repeatedly maintained that only 548 students from the previous batches would qualify this year, the parents claim cames as something of a shocker even to the advocates of the cur rent batch that has approached court.

“We expected more than 1,000 seats would be bagged by candi dates of the previous batches That 1,808 seats will go to the pre vious batches is atrocious,“said an advocate familiar with the case. “This clearly rules the the current batch out of the competi tion.“ The reason for several previ ous batch students scoring a seat this year is due to the fact that the current batch had scored less centums due to a combination of factors including question papers and evaluation.

Meanwhile, the fifth day of the first phase of medical counselling saw the allotment of 660 seats in MBBS and BDS courses.The selection committee had invited 1038 candidates out of which 76 were absent and 962 turned up at the venue.

“We allotted 501 seats in government medical colleges, 139 in private medical colleges and 20 in government dental colleges.There are 301 students on the waiting list,“ said a Directorate of Medical Education official.

கருணைப் பணி நியமன வழக்கு : உயர்நீதிமன்றம் அபராதம்

மதுரை: கருணைப் பணி நியமனம் கோரி உரிய காலத்தில் விண்ணப்பிக்கவில்லை எனக்கூறி தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மனுதாரருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தது.புதுக்கோட்டை காந்திநகர் குமரேசன் தாக்கல் செய்த மனு: என் தந்தை பன்னீர்செல்வம். இவர் 2005 ல் அரசு ஊழியராக பணிபுரிந்தபோது இறந்தார். கருணைப் பணி கோரி 3 ஆண்டுகளுக்கு பின் அரசிடம் மனு செய்தேன்.

மனுவை நகராட்சி நிர்வாக தஞ்சாவூர் மண்டல இயக்குனர் 2013 ல் நிராகரித்தார். அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன்

உத்தரவு: மனுதாரர் தரப்பு ஆவணங்களை பார்க்கும்போது, தந்தை இறந்த 3 ஆண்டுகளுக்குள் பணி கோரி விண்ணப்பிக்கவில்லை. குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவர் இல்லையெனில் மற்றவர்கள் சிரமப்படுவர் என்பதற்காகவே கருணைப் பணி வழங்கப்படுகிறது. இவ்வழக்கில் மனுதாரரின் தாய் ஒரு பணியில் இருந்துள்ளார். அவர்களுக்கு பொருளாதார ரீதியாக சிரமம் இல்லை.

மனுதாரர் நேரடியாக விண்ணப்பிக்கவில்லை. எட்டு ஆண்டுகள் தாமதமாக, மனுதாரர் மேஜரான பின் கருணைப் பணி கோரப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பில் 2013 ல் நிராகரித்துள்ளனர். நீதிமன்றம் பணியாளர்களை தேர்வு செய்யும் ஏஜன்சி அல்ல என்பதை மனுதாரர் போன்ற நபர்கள் உணர வேண்டும். வாரிசு பணி நியமனம் அதற்குரிய விதிகளுக்குட்பட்டுத்தான் வழங்க முடியும். உரிய காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மனுவை தள்ளுபடி செய்கிறேன். 2000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன். தொகையை தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றார். அரசு வழக்கறிஞர் மகேஷ்ராஜா ஆஜரானார்.

ஒரு பதிலுக்கு 1 லட்சம் ரூபாய் கேட்ட பொ.ப.துறை அதிகாரி: ஆர் .டி.ஐ.,யில் தகவல் கேட்ட மனுதாரருக்கு தலை கிறுகிறுப்பு



கோவை: ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக தகவல் கேட்ட விண்ணப்பதாரரை, 92 ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டச் சொல்லி, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர், மிரள வைத்துள்ளார். 'ஒரு பதிலுக்கு, ஒரு லட்சம் ரூபாயா' என, விண்ணப்பதாரர், தலை கிறுகிறுத்து, அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்.

கோவையைச் சேர்ந்தவர் லோகநாதன்; வழக்கறிஞர். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான இவர், தமிழக ஆறுகளில் மணல் அள்ளுவது தொடர்பாக, பல்வேறு தகவல்களை வழங்குமாறு, பொதுப்பணித்துறை, அரசு சார்பு செயலரிடம் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த விவரங்களை, மனுதாரருக்கு வழங்குமாறு, நீர் வள ஆதாரத்துறை முதன்மை தலைமைப் பொறியாளருக்கு அறிவுறுத்தி, அந்த மனுவை அனுப்பி விட்டார் சார்பு செயலர். முதன்மை தலைமைப் பொறியாளர், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை மண்டல அலுவலகங்களின் பொதுத் தகவல் அலுவலர்களுக்கு, மனுவின் நகல்களை அனுப்பி, விவரங்களை அனுப்புமாறு உத்தரவிட்டிருந்தார்.

அங்குள்ள பொதுத் தகவல் அலுவலர்கள், தங்களுக்குக் கீழுள்ள பல்வேறு அலுவலகங்களுக்கும், மனுவின் விவரங்களைக் கேட்டு, கடிதம் அனுப்பினர். சுறுசுறுப்பா இருக்காங்களே
பல்வேறு அலுவலகங்களிலிருந்தும், சேகரித்த விவரங்களைத் தொகுத்து, மனுதாரருக்கு அனுப்பி வருகின்றனர். வழக்கறிஞரும், 'ஆஹா... அதிகாரிங்க, இவ்வளவு சுறுசுறுப்பா இருக்காங்களே' என, வியப்படைந்தார்.

ஆனால், சென்னை மண்டலத்தைச் சேர்ந்த, ஆரணியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் செந்தில்குமார், மேலிட அலுவலர்களுக்கு தகவல் அனுப்புவதற்குப் பதிலாக, 'தகவல்' என்ற பெயரில், மனுதாரருக்கு, நேரடியாக பதிலை அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார். மனுதாரர் கோரியுள்ள விவரங்கள், மாத வாரியாகவும், குவாரி வாரியாகவும் இருப்பதால், மொத்தம், 45,839 பக்கங்கள் வழங்க வேண்டி உள்ளன. எனவே, பக்கத்திற்கு, இரண்டு ரூபாய் வீதம், 91,678 ரூபாய்க்கு, 'செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஆரணியாறு வடிநில கோட்டம், சேப்பாக்கம், சென்னை - 5' என்ற முகவரிக்கு, 'டிடி' அனுப்புமாறு, பதில் அனுப்பியிருந்தார்.



வழக்கறிஞர் அதிர்ச்சி:



'டிடி' அனுப்பினால், போதிய கால இடைவெளியில் நகல்கள் எடுத்து வழங்கப்படும் என்றும் 'பெருந்தன்மையோடு' உறுதி அளித்துள்ளார். இதைப் பார்த்ததும், வழக்கறிஞருக்கு, தலை கிறுகிறுத்து, அதிர்ச்சி அடைந்துள்ளார்.மற்ற அலுவலகங்களில், விவரங்களைத் தொகுத்து, இரண்டு அல்லது மூன்று பக்கங்களில், பதில் அனுப்பிய நிலையில், இவர் மட்டும், 46 ஆயிரம் பக்கங்கள் என்றும், 92 ஆயிரம் ரூபாய் பணம் கட்டுங்கள் என்றும் கேட்டிருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே கேலிக் கூத்தாக்குவதாக அமைந்துஉள்ளது.

இது தொடர்பாக, மனுதாரர் லோகநாதன், துறையின் தலைமைப் பொறியாளருக்கு, மேல் முறையீட்டு மனுவை அனுப்பியுள்ளார்.

இது, மனுதாரரை, மறைமுகமாக மிரட்டும் செயல்; இவ்வளவு பணம் கேட்டால், தகவல் கேட்டவர் அடங்கிப் போய் விடுவார் என்ற எதிர்பார்ப்பில் அனுப்பப்பட்ட பதில். மேல் முறையீட்டு மனுவுக்கு, பதில் வராவிட்டால், மாநில தகவல் ஆணையத்திடம் முறையிடுவேன்.
லோகநாதன்,
மனுதாரர்,
கோவை

எம்.பி.பி.எஸ்.: இன்று கலந்தாய்வு நிறைவு: 2,173 மாணவர்கள் தேர்வு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 25) நிறைவடைகிறது.
2,173 பேர் தேர்வு: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த ஜூன் 19-ஆம் தேதி தொடங்கி கடந்த ஆறு நாள்களாக நடைபெற்று வருகிறது. சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, இதுவரை மொத்தம் 2,173 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 84 அரசு எம்.பி.பி.எஸ். காலியிடங்களை நிரப்ப கடைசி நாள் கலந்தாய்வு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
483 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்: கலந்தாய்வில் 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 597 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில், இதுவரை மொத்தம் 483 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 114 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் வியாழக்கிழமை நிரப்பப்படும்.
69 அரசு பி.டி.எஸ். இடங்கள்: சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்களில், கலந்தாய்வில் இதுவரை மொத்தம் 69 அரசு பி.டி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 16 அரசு பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்ப தொடர்ந்து வியாழக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகிறது.
962 மாணவர்கள் பங்கேற்பு: சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் புதன்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற கலந்தாய்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 196.50-இல் தொடங்கி கட்-ஆஃப் மதிப்பெண் 192.00 வரை எடுத்திருந்த
மொத்தம் 1,037 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வில் 961 மாணவர்கள் பங்கேற்றனர்; 76 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
காத்திருப்போர் பட்டியலில் 614 பேர்: கலந்தாய்வில் புதன்கிழமை பங்கேற்ற மாணவர்களில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 501 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர 139 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேர 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 301 பேர் காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டனர்.
காத்திருப்போர் பட்டியலில் இதுவரை மொத்தம் 614 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இன்று 359 மாணவர்களுக்கு அழைப்பு: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு கடைசி நாளான வியாழக்கிழமை (ஜூன் 25), தாழ்த்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட (அருந்ததி வகுப்பினர்), பழங்குடி வகுப்பைச் சேர்ந்த 359 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கட்-ஆஃப் மதிப்பெண் 192.00-இல் தொடங்கி கட்-ஆஃப் மதிப்பெண் 180.25 வரை எடுத்துள்ள மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு கட்-ஆஃப் என்ன?
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவடைய உள்ள நிலையில் முற்பட்ட வகுப்பினர் உள்பட நான்கு சமுதாயப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் வரையறுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஆறு நாள்களாக நடைபெற்று வரும் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முற்பட்ட வகுப்பினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.) ஆகியோருக்கு உரிய அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களைப் பொருத்தவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே 7 இடங்கள் உள்ளன.
இந்த நிலையில் முற்பட்ட வகுப்பினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.) உள்பட நான்கு பிரிவினருக்கு வரையறுக்கப்பட்ட முதல் கட்ட கலந்தாய்வு கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: ஓ.சி.-198; பி.சி.-197.25; பி.சி. (எம்)-195.75; எம்.பி.சி.-196.
தாழ்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட (அருந்ததியினர்), பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு வியாழக்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளதால், அது நிறைவடைந்த பிறகு கட்-ஆஃப் மதிப்பெண் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
520 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மொத்தம் 520 மாணவர்கள் தேர்வாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ்.
கலந்தாய்வில் பங்கேற்கும் பழைய பிளஸ் 2 மாணவர்கள் குறித்து தினமும் கணக்கிடப்படுகிறது.
சேர்க்கை கடிதம் எப்போது? உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர இதுவரை தேர்வு செய்யப்பட்ட எந்த மாணவருக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை. எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி சேர்க்கைக் கடிதம் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

HC quashes summons issued to former MKU V-C

The Madras High Court Bench here on Wednesday quashed the summons issued by a Judicial Magistrate here to former Vice-Chancellor of Madurai Kamaraj University Kalyani Mathivanan and 10 Syndicate members, following a private complaint lodged by a Dalit employee to prosecute them under the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act.

Allowing a joint petition filed by the former V-C and others to quash the summons and the private complaint, Justice M.M. Sundresh held that the magistrate had issued the summons in a mechanical fashion without applying his judicial mind and ascertaining whether the complainant, M. Parthasarathi, had made out a prima facie case.

The judge said that magistrates should not act as “mere spectators or post boxes” and issue summons in every other private complaint since issuance of summon to a person was a serious matter. The judicial officers were duty bound to examine the veracity of a complaint before exercising their powers to initiate process under Section 204 of the Code of Criminal Procedure.

He said that the complainant in the present case had joined the university as a sweeper/watchman about a decade ago and gradually got promoted to the post of Assistant. The Syndicate had lodged a criminal complaint against him on October 3, 2013 on a charge of pasting posters levelling false allegations against the university management.

A day later, he was transferred to a constituent college of the university at Aruppukottai in Virudhunagar district and asked to vacate the residential quarters allotted to him on the university campus. On October 14, 2013, he lodged a complaint with the then Superintendent of Police accusing Ms. Mathivanan of having insulted him in public on September 13.

Subsequently, on January 6, 2014, he had lodged a private complaint “improving the allegations” made in his police complaint and included the 10 Syndicate members apart from the Aruppukottai college principal as accused. But, no independent witness was examined by the complainant before the magistrate, the judge remarked.

“The magistrate had issued the summons without applying his judicial mind and ascertaining whether the complainant had made out a prima facie case”

Wednesday, June 24, 2015

எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை! (19)


பலே பாண்டியா படத்தில், ராதாவுக்கு இரண்டு வேடம்; கதாநாயகனான சிவாஜிக்கு மூன்று வேடம். சிவாஜி அமெரிக்கா செல்லவிருந்ததால், 20 நாட்களில், படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று மொத்தமாக கால்ஷீட் கேட்டார் இயக்குனர் பி.ஆர்.பந்தலு. ஒப்புக் கொண்டார் ராதா.
முதல்நாள் படப்பிடிப்பு; 'மேக் - அப்' போட்டு செட்டுக்குள் வந்துவிட்டார் சிவாஜி. ராதாவை, 'மேக் - அப்' ரூமிலிருந்து அழைத்து வர வேண்டும். உதவி இயக்குனர் சண்முகத்தை அழைத்து, 'அவரு ரொம்ப கோவக்காரரு; அடி வாங்காம அவரை அழைச்சுக்கிட்டு வந்துரு...' என்றனர்.
சண்முகம், ஏற்கனவே ராதாவைப் பற்றிக் கேள்விப்பட்ட செய்திகளும், அதே போலவே இருந்ததால் பயந்தபடி ராதாவின், 'மேக் - அப்' ரூமுக்குச் சென்றவர், வெளியிலிருந்தபடியே குரல் கொடுத்தார். அவரை உள்ளே அழைத்தார் கஜபதி.
உள்ளே நுழைந்த சண்முகத்தைப் பார்த்து,'வாங்க...என்ன வேணும்?' என்றார் ராதா.
'நான், அசிஸ்டென்ட் சண்முகம்; உங்கள அழைச்சுட்டு வரச் சொன்னாங்க...'என்றார் பயத்துடன் சண்முகம்.
'சரி... அத ஏன் பயந்து பயந்து சொல்றீங்க... பயப்படாதீங்க, நானும் மனுஷந்தான்...'
'எல்லாரும் உங்ககிட்ட அடிபடாம, உங்கள அழைச்சுட்டு வரச் சொன்னாங்க...' என்று சண்முகம் கூறியதும், ராதா விழுந்து விழுந்து சிரித்து, 'அது சும்மா, ஒரு தோற்றம்; நான் ஒண்ணும் ரவுடி இல்லையே... கெட்டவங்களுக்கு தான் கெட்டவன். ஆனா, இங்க வந்து முரட்டுத்தனம் செய்தா சம்பளம் வராதே...' என்றார்.
'சரிதாண்ணே...'
'என்னோட நாடகம் பாத்திருக்கீங்களா?'
'சின்ன வயசுல பாத்துருக்கேன்; இப்ப, முன்னை விட கொஞ்சம் இளைச்சுட்டீங்க...'
'அப்படியா! வயசாவுதுல்ல... வாங்க செட்டுக்குப் போகலாம்...'
சண்முகம், ராதாவுடன் சகஜமாகப் பேசியபடி வருவதைப் பார்த்து, எல்லாருக்கும் ஆச்சரியம்.

பேப்பரில் உள்ள டயலாக்கை மனதில் வாங்கி, அதில் உள்ள பொருள் மாறாமல், தன் பாணியில் பேசுவது ராதாவின் ஸ்டைல்! ஷாட்டில் அப்படிப் பேசும் போது, கூடுதலாக ஒன்றிரண்டு டயலாக்குகளைக் கலந்து விடுவார். எல்லாம் நாடக மேடை தந்த அனுபவம். ஆனால், உடன் நடிப்பவர் தான், அந்தச் சமயத்தில் என்ன பேசுவதென்று தெரியாமல் திணறிப் போவார்.
'இப்படி டயலாக்கையெல்லாம் சொந்தமாக பேசுனா, நான் எங்கப் போவேன்...' என்று, சிவாஜியே சில சமயங்களில் கமென்ட் அடித்ததுண்டு.
உடன் நடிப்பவர்கள் பேசும் போது, ராதா சும்மா இருக்க மாட்டார். தன் உடலசைவால் நடித்துக் கொண்டிருப்பார் அல்லது முகத்தில் விதவிதமான சேட்டைகளைக் காட்டுவார். இதனால், காட்சியில் ராதாவுக்கு டயலாக் இல்லாத போதும், தியேட்டரில் அவரையே கவனித்துக் கொண்டிருப்பர் மக்கள். ஆடியன்சை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய திறன் ராதாவுக்கு அளவுக்கு அதிகமாகவே இருந்தது.
இதனால், உடன் நடிப்பவர்களுடைய நடிப்பு எடுபடாமல் போனது. எனவே, ராதாவுடன் நடிப்பதென்பது, ஒவ்வொருவருக்கும் சவாலாகவே இருந்தது. இரண்டு அல்லது மூன்று டோன்களில் குரலை உயர்த்தி, தாழ்த்தி அவர் பேசும் ஸ்டைலில், எந்தக் காட்சியுமே கலகலப்பாக மாறி விடும்.
பல சமயங்களில் ராதா பேசும் எதிர்பாராத, 'பஞ்ச்' வசனங்களில், உடன் நடிப்பவர் சிரித்து விடுவர். காட்சியை மீண்டும் எடுக்க வேண்டியதாகி விடும்.

பலே பாண்டியா படத்தில் நல்லவனாக நடித்த எம்.ஆர்.ராதாவிற்கு, மொட்டை, 'கெட் - அப்!' முடியை மறைக்கும்படியாக, தலையில் ஒட்டவேண்டியதெல்லாம் ஒட்டி விட்டார் ஒப்பனையாளர் கஜபதி. இருந்தாலும், 'மேக் - அப்'பில் திருப்தி இல்லை. கிருதாவின் மேல் ஒட்டியிருப்பது எல்லாம் நன்றாகவே தெரிந்தது. கேமரா முன் ராதா சும்மா இருக்க மாட்டாரே... குதிப்பார், துள்ளுவார் அதற்கெல்லாம் தாங்காமல், அந்த ஒப்பனை உறிந்துவிடும் போல இருந்தது. 'அண்ணே எனக்குத் திருப்தியில்லண்ணே...' என்றார் கஜபதி.
புரொடக் ஷன் மேனேஜரை அழைத்து, 20 முழம் பூ வாங்கி வரச் சொன்னார் ராதா. பூ வந்தது; அதை, தன் மொட்டைத் தலையில் சுற்றினார். காதருகில் இரண்டு துண்டுகளை தொங்க விட்டுக் கொண்டார். ராதாவின் இந்த யோசனையால், அந்த கதாபாத்திரத்துக்கே தனி, 'லுக்' கிடைத்தது. ராதாவை பார்த்ததும், செட்டில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். தியேட்டரிலும் அதையே செய்தனர் ரசிகர்கள்.
நீயே உனக்கு என்றும் நிகரானவன்...
மாமா... மாப்ளே...
- என, இப்பாடலை செட்டில் கேட்டதும், ஆச்சரியமானார் ராதா. அது, அவரது குரல் போலவே இருந்தது.
'அட... யாருப்பா இது! நான் பாடின மாதிரியே இருக்குது...' என ஆச்சரியமாகக் கேட்டார். விவரம் கூறியதும், அவரை அழைத்து வரச் சொன்னார் ராதா. ஒல்லியாக, சிவப்பாக இருக்கும் எம்.ராஜூ, எம்.எஸ்.விஸ்வநாதன் குழுவில் இருந்தார். அவரை அழைத்துச் சென்று ராதாவின் முன் நிறுத்தினர்.
'பாடினது நீங்களா?' என, ஆச்சரியமாக கேட்டார் ராதா.
'ஆமாண்ணே...' என்றார் ராஜூ மென்மையான குரலில்!
'அதிசயமா இருக்கு; பேசறப்போ இவ்வளவு மெதுவா பேசறீங்க... ஆனா, என் குரல்லயே பாடியிருக்கீங்களே... உங்கள எப்படிப் பாராட்டறதுன்னே தெரியல. நான், உங்களை மறக்கவே மாட்டேன் தம்பி. யாருப்பா அங்க... தம்பிக்கு காபி கொடுங்க...' என, உபசரித்து அனுப்பினார் ராதா.
அப்பாடலில், இரண்டு, மூன்று ஆலாபனை வரும். அதற்காக, பலமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த சிவாஜி, 'அண்ணே... நீங்க மாட்டிக்கிட்டீங்க....' என்று ராதாவை கலாட்டா செய்தார். உண்மையில் அவ்வளவு பெரிய ஆலாபனைக்கு உதடு அசைப்பதெல்லாம், ராதாவுக்கு கடினமான காரியமாகத் தான் தோன்றியது.
நேராக இயக்குனரிடம் வந்து, 'இங்க பாரு பந்துலு... கணேசன் (சிவாஜி) மாதிரி எல்லாம் நம்மளால முடியாது; கேமராவை வச்சுக்கோ... நான் பாட்டுக்கு, 'ஆக்ட்' செய்றேன்; எங்க என் உதட்டசைவு சரியா வருதோ அந்த இடத்துல கேமராவுக்கு முகத்தைக் காட்டுவேன். மத்த இடத்துல குனிஞ்சுக்கிட்டு தான் இருப்பேன். வேற வழியில்லப்பா... நீ பாட்டுக்கு, 'டைட் குளோஸ் அப்'பெல்லாம் வைச்சிடாதே. அப்பப்ப, 'கட்' சொல்லிடாதே சரியா...' என்று சொல்லி, ஷாட்டுக்குச் சென்றார் ராதா.
பாடல் படப்பிடிப்பு ஆரம்பமானது. பாதி பாடல் வரைக்கும் எல்லாம் ஒழுங்காகப் போனது. ஆலாபனைக் காட்சிகள் வரும் போது, தன் உதட்டசைவுகளை அட்ஜஸ்ட் செய்ய, உட்கார்ந்திருக்கும் சோபாவிலிருந்து குதியோ குதியென்று குதிக்க ஆரம்பித்தார் ராதா. ஏகப்பட்ட சேட்டைகள் செய்தார். செட்டில் இயக்குனர், கேமராமேன் மற்றும் லைட்பாய் என, அனைவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. சில ரீடேக்குகள் ஆகத்தான் செய்தது.
ஒரு கட்டத்தில் ராதா திடீரென பெரிய பாடகர் போல காதருகே தன் இடது கையை வைத்து, வலது கையை நீட்டி, 'ஆக் ஷன்' கொடுப்பதை பாடலில் காணலாம். ஆனால், அது ஆக் ஷன் அல்ல; நடந்த விஷயமே வேறு.
ஏகத்துக்கும் குதித்ததில், ராதாவின், 'விக்' லூசாகியிருந்தது. அந்த ஷாட் முடியப் போகும் நேரம் அது. 'விக்' கழண்டு விட்டால், இன்னொரு முறை நடிக்க வேண்டி வருமே... அதனால், அச்சமயத்தில் பெரிய பாடகர் போல ஆக் ஷன் செய்து, விக்கை காப்பாற்றிக் கொண்டார் ராதா.
அந்த, 20 நாட்களும், பலே பாண்டியா பட ஷூட்டிங் ஒரு திருவிழா போல நடைபெற்றது. சில நாட்களில் காலை, 7:00 மணிக்கு ஆரம்பித்து, இரவு, 1:00 மணி வரை கூட நீண்டது.
கடைசி நாள் ஷூட்டிங் முடிந்து கிளம்பும் போது, 'ரொம்ப சந்தோஷமாக போறேன்; அடிக்கடி கூப்பிடுங்க என்னை...' என்று சொல்லிக் கிளம்பினார் ராதா.

படித்தால் மட்டும் போதுமா படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்... வெளியூருக்குச் சென்றிருந்த ராதா, காலையில் வர வேண்டிய நேரத்திற்கு வீட்டுக்கு வரவில்லை. ராதாவுக்காக ஒப்பனையாளர் கஜபதி வீட்டில் காத்திருந்தார். நேரம் கடந்து கொண்டே போனது.
பட கம்பெனிக்கு போன் செய்த கஜபதி, 'ஊருக்குப் போன அண்ணன் இன்னும் வரல; ஷூட்டிங் கேன்சல்...' என்றார்.
ஆனால், ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சதர்ன் ஸ்டுடியோவில் ராதா தூங்கிக் கொண்டிருப்பதாக கூறினர். விவரமறிந்த கஜபதி அங்கு விரைந்தார்.
'வீட்டுக்குப் போயிட்டு வந்தா, லேட் ஆகும்ன்னு நேர இங்கயே வந்துட்டேன்...' என்றார் ராதா.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

- முகில்

அடிக்கடி வாடகை வீடு மாறுவோருக்கும் பாஸ்போர்ட்

புனே : அடிக்கடி வாடகை வீடு மாறுபவரும், எளிதாக பாஸ்போர்ட் பெறும் புதிய வசதியை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, புனே பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஓராண்டுக்கும் மேற்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம் வைத்திருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது.ஆனால், புனே, பெங்களூரு போன்ற நகரங்களில் வசிக்கும் தொழில்நுட்ப துறையினர், பணி மாறுதல் காரணமாக, அடிக்கடி வீடு மாறுவர். இதனால், பாஸ்போர்ட் பெற முடியாமல் தவித்தனர். வாடகை ஒப்பந்த காலத்தை, ஓராண்டில் இருந்து குறைக்கும்படி வந்த கோரிக்கைகளை அடுத்து, காலக்கெடு குறைக்கப்பட்டு உள்ளது.
புதிய விதியின்படி, ஓராண்டிற்கும் குறைவான வாடகை ஒப்பந்த பத்திரம் வைத்திருப்போரும், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம். இந்த ஒப்பந்த பத்திரம், பதிவு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். நோட்டரியிடம் கையெழுத்து பெறப்பட்ட வாடகை ஒப்பந்தம் செல்லாது. இவ்வாறு, அவர் கூறினார்.

NEWS TODAY 22.08.2026