Friday, April 1, 2016

ஜி மெயிலை காலி செய்யப் போகிறதா வாட்ஸ்-அப்?


VIKATAN NEWS

கவல் தொடர்புக்கு புறாவில் தொடங்கி கடிதம், தந்தி, தற்போது  இ-மெயில் எனும் நவீன முறைக்கு வந்திருக்கும் மனிதனின் தொலைத்தொடர்பு சாதனங்கள்,  மேலும் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கின்றன. அதற்குச் சான்றாக ஆப்பிளின் ஐ-ஓ.எஸ் சில் வெளியாகியிருக்கும் வாட்ஸ்-அப் அப்டேட்கள், ஜி-மெயிலையே தேவை இல்லாத ஒன்றாக மாற்றும் வகையில் அமைந்திருக்கின்றன.

இன்று ஒவ்வொரு இளைஞர்களையும் அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரு மொபைல் ஆப் வாட்ஸ்-அப். மெயில், ஃபேஸ்புக் உரையாடல்களை இன்னும் எளிமையாக்கியதில் இதற்கு பெரும் பங்குண்டு. டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ,சிறிய வீடியோ என சிலவற்றை மட்டுமே அனுப்பப் பயன்பட்ட வாட்ஸ்-அப்,  ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிறகு பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருகிறது. அதுவும் சமீபத்தில் ஐ-ஓ.எஸ்சில் ஏற்படுத்தப்பட்ட அப்டேட்கள் இதன் தரத்தைப் பலமடங்கு உயர்த்தியுள்ளன.

வீடியோ ஓடையில் ஜூம் செய்வது, அதிக பேக் கிரவுண்ட் ஆப்ஷன்கள் மற்றும் பி.டி.எஃப் பைல்களையும் டாக்குமன்ட் பைல்களையும் அனுப்பும் வசதி என நிறைய அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளன. கூகுள் டாக்குமென்ட், ஐ கிளவுட் மற்றும் டிராப் பாக்ஸ் போன்ற ஆப்களின் உதவியோடு பி.டி.எஃப் பைல்களையும் டாக்குமன்ட் பைல்களையும் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பைல்களை அனுப்பவே ஜி-மெயில் போன்ற இன்டெர்நெட் மெயில் சர்வீஸ்கள் உபயோகப்பட்டுவந்த நிலையில்,  வாட்ஸ்-அப்பிலேயே இந்த வசதி வந்திருப்பது, நமது தொடர்பு முறையை மேலும் எளிதாக்கிவிடும்.
இனிமேல் லாக்-இன் செய்து மெயில் கம்போஸ் செய்யத் தேவையில்லை. வழக்கமாக நாம் எந்நேரமும் சேட் செய்து கொண்டிருக்கும் வாட்ஸ்-அப்பிலேயே அனைத்தையும் முடித்துவிடலாம். குரூப் மெயில் அனுப்ப நினைத்தால்,குரூப் சேட்டில் அந்த மெசேஜை அனுப்பிவிடலாம். அதுமட்டுமின்றி மிகப்பெரிய பைல்களை ஐ-கிளவுடில் சேவ் செய்துகொள்ளவும் முடியும் என்பதால், டேடா ரிசீவிங்கும் இதில் எளிதே. குறைந்த நேரத்தில் எளிதில் அனுப்ப முடியும் என்பதால், இதை அனைவரும் விரும்புவர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லேப் டாப்களிலும் வாட்ஸ்-அப் வலம் வருவதால் மொபைல் மட்டுமின்றி அனைத்து தளங்களிலும் இதன் பயன்பாடு எளிதே.

ஃபேஸ்புக் வந்த பிறகு ஆர்குட், ஜி-மெயிலின் வருகைக்குப் பிறகு ஹாட் மெயில் போன்றவையெல்லாம் காணாமல் போன வரலாறு நாம் அறிந்ததே. எந்த வேலையையுமே மனிதன் எளிதாக செய்ய நினைப்பதால் தான் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போகிறது. தந்தி சேவைக்கு இந்தியாவில் மூடுவிழா கண்டதுபோல வாட்ஸ்- அப்பின் இந்த முன்னேற்றங்களால் ஜி-மெயில் போன்ற இ-மெயில் தளங்களுக்கும் மூடுவிழா காணும் நாள் விரைவில் வந்துவிடும் என்று கணிக்கின்றனர் வல்லுநர்கள்.
கூகுளின் சி.இ.ஓ வான நம்ம ஊரு சுந்தர் பிச்சை இதை எப்படி டீல் பண்ணப் போறாரோ?

மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

Making students repeat all exams for failing in one paper unreasonable: Kerala HC


Making students repeat all exams for failing in one paper unreasonable: Kerala HC
TIMES OF INDIA

KOCHI: Making students who fail in one theory or practical exam to reappear for all the examinations once again is unreasonable and arbitrary, the Kerala high court said on Thursday. Such practice would only result in unfairness to the extreme and doesn't help in achieving higher quality, the court said.
Medical and engineering students having to give up their hopes of obtaining a graduation, or losing multiple years in pursuit of the dream, has become a common scene across the state owing to the insistence of universities that students should reappear for all the examinations if they fail in one of the exams.
The practice was sharply criticized by Justice V Chitambaresh after considering a total of 11 petitions filed by post-graduate medical students, Geethu S and others, questioning the insistence of Kerala University of Health Sciences (KUHS). The students had challenged a clause in KUHS Regulations that stipulated that the students must write all the examinations once again if they fail in one of the examinations or practicals.

Through the petitions, the students had also pointed out that while KUHS Regulations requires a student to achieve a minimum of 50 per cent marks in total and a separate minimum of 40 per cent in each examination, Medical Council of India (MCI) Regulations require them to achieve 50 per cent marks in total and doesn't specify a separate minimum for each paper. Thus, KUHS Regulations is contrary to MCI Regulations, the petitioners had contended.

The court said in the judgment, "Repetitive undertaking of examinations after having secured the minimum prescribed does not scale up the standard and can only be termed as oppressive from the point of view of the student. The repetitive appearance in examinations under the KUHS Regulations has no rationale nexus with the object sought to be achieved and is obviously violative of Article 14 of the Constitution of India (equality before law)."

"The mental anguish which a student has to face in the event of his losing a theory or practical by marginal marks necessitating reappearance for all the papers in theory and practical in order to secure a pass is unimaginable. It is possible that a candidate who has passed in the first attempt may fail in the same examination in the second attempt and the vicious circle of pass and fail will only result in unfairness to the extreme. Clause 3.16 of the KUHS Regulations to the extent it insists that 'a candidate who fails in one subject either theory/practical shall have to appear for all the papers including theory and practical' is unreasonable and arbitrary," the court further said.

Disposing the petitions, by ruling that KUHS Regulations is not valid as it was not notified in the gazette when the university statue (KUHS First Statutes, 2013) came into being, the court directed MCI to clarify whether the students should simultaneously pass in all papers and asked MCI to advise the university within four months so that it can be incorporated into the KUHS Regulations.

Thursday, March 31, 2016

பிஹாரில் நாளை முதல் மதுவிலக்கு: மது அருந்துவோருக்கும் 10 வருட தண்டணை

ஆர்.ஷபிமுன்னா

THE HINDU TAMIL

பிஹாரில் நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முதற்கட்டமாக பகுதியளவு மதுவிலக்கு அமலுக்கு வருகிறது. இதற்காக அதன் மீது கடுமையான சட்டங்கள் இம் மாநில சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளன. இச் சட்டத்தின்படி பொது இடங்களில் மது அருந்துவோருக்கு 10 வருடம் வரையும், வீடுகளில் அருந்தி விட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்போருக்கு 5 வருடங்கள் வரையும் சிறைதண்டனை விதிக்கப்படும்.

நிதிஷ்குமார் முதல் அமைச்சராக இருக்கும் பிஹார் மாநில சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு அமல்படுத்தும் சட்ட மசோதா 2016 நிறைவேற்றப்பட்டது. அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா பிஹார் மாநிலம் முழுவதிலும் ஒருபகுதி மதுவிலக்கு அமல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஏப்ரல் 1 முதல் உள்நாட்டு மதுபான வகைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அயல்நாட்டு மதுபானங்கள் அரசு கடைகளில் மட்டுமே கிடைக்கும் என்றும் பிஹார் அரசு தெரிவித்துள்ளது.

இந்த சட்டம், காவல்துறை அராஜகத்திற்கு வழி வகுக்கும் என எதிர்கட்சியான பாரதிய ஜனதாவில் சில உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். எனினும், மற்ற அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆராவரத்துடன் அளித்த ஆதரவிற்கு பின் அமைதியாகி விட்டனர்.

இதன் மீது சட்டப்பேரவையில் நீண்ட உரையாற்றிய முதல் அமைச்சர் நிதிஷ்குமார், மதுவால் அதிகமாக பாதிக்கப்படும் ஏழை குடும்பங்களை காப்பது தம் அரசின் தலயாய கடமை எனக் குறிப்பிட்டார். கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களுக்கு மரணதண்டனை அளிக்கும் சட்டத்தில் அதை அருந்தி பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு நிவாரண நிதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதில், நிரந்தர உடல் பாதிப்பு அடைவோருக்கும் உதவித்தொகை அளிப்பதுடன் போதை தடுப்பு மறுவாழ்வு மையங்களும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக, அரசு மருத்துவர்களுக்கு பெங்களூரில் உள்ள ‘நிம்ஹான்ஸ்’ மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 47-ன்படி மதுவிலக்கை அமல்படுத்துவது ஒரு மாநில அரசின் கடமையாகும் எனவும் நிதிஷ் தெரிவித்தார். இறுதியில் அவர், ‘மது குடிக்க மாட்டோம், மற்றவர்களை குடிக்க வைக்கவும் மாட்டோம்’ என அறிவித்தார்.

பிஹாரின் மதுவிலக்கு சட்டத்தின்படி, கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை அளிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்தி சிக்குவோருக்கு 5 முதல் 10 வருடம் வரையும், தமது வீடுகளில் குடித்து விட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்போருக்கு ஐந்து வருடம் வரையும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மது கடத்தலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் 7 வருடம் சிறையில் தள்ளப்படுவர்.

மருந்து உபயோகத்திற்கு எனும் பெயரில் மது விற்பனை செய்வோருக்கு 7 வருடம் வரையும், சிறைத்தண்டனை உண்டு. ஹோமியோபதி மருந்துகள் தயாரிப்பாளர்களுக்கும் 100 மில்லிக்கும் அதிகமாக மது விற்பனை கிடையாது எனவும், இவற்றை தீவிரமாகக் கண்காணிக்க கூடுதலான சோதனை சாவடிகள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்துடன், மதுவின் மீதான சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, பிஹாரின் பகுதி விலக்கு அமலில் வெளிநாட்டு மதுவகைகள் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும். இதுவும் தனியார் விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது, பிஹார் அரசின் மதுகடைகளில் மட்டும் கிடைக்கும். இதுவும் வரும் காலங்களில் தடை செய்யப்பட்டு முழுமையான மதுவிலகு அமல்படுத்தப்படும்.

எம்ஜிஆர் 100 | 32 - எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!

எம்ஜிஆர் 100 | 32 - எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
எம்.ஜி.ஆர். எதிலும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர். நெருக்கடியான கட்டங்கள் ஏற்படும்போது தனக்கு நம்பிக்கையானவர்களின் துணை கொண்டு அதை எளிதாகக் கடந்து விடுவார். அதுபோன்ற சமயங்களில் அவருக்கு தோள்கொடுக்க ராஜவிசுவாசிகள் இருப்பார்கள் என்று வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருமுறை குறிப்பிட்டார். அப்படிப்பட்ட ராஜவிசுவாசிகளில் முக்கியமானவர் ஆர்.எம். வீரப்பன்.

1953-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் நிர்வாகியாக ஆர்.எம்.வீரப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார். விரைவிலேயே அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போனது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் முதல் நாடகம் ‘இடிந்த கோயில்’. திமுக சார்பில் நடந்த கல்லக்குடி போராட்ட நிதிக்காக, 1953-ம் ஆண்டு அக்டோபர் முதல் வாரம் இடிந்த கோயில் நாடகம் திருச்சியில் அரங்கேறி மக்களின் வரவேற்பை பெற்றது.

அப்போதைய சூழலில் திமுக மீது நாத்திகக் கட்சி என்ற முத்திரை பலமாக விழுந்திருந்தது. அந்த நேரத்தில் ‘இடிந்த கோயில்’ என்ற பெயரில் நாடகம் போட்டால் கடவுள் மறுப்பு நாடகம் என்று மக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் என்றும் நாடகத்தின் கருத்துக்கள் இன்னும் அதிக மக்களை அடைய நாடகத்தின் பெயரை ‘இன்பக் கனவு’ என மாற்றலாம் என்றும் எம்.ஜி.ஆருக்கு யோசனை சொன்னார் வீரப்பன். அது நியாயமாக இருக்கவே, ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

அந்தக் காலத்திலேயே மேடை நாடகத்தில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். கையாண்டார். நாடகத்தில் கனவுக் காட்சி வரும். சாட்டின் படுதா ஒன்றின் மீது சிவப்பு, பச்சை வண்ணங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சி அந்தப் படுதாவை லேசாக ஆட்டும்போது அலை அலையாக வண்ணக் கலவையில் தோன்றும் கனவுக் காட்சி கைதட்டல் பெறும்.

அந்தச் சமயத்தில் ‘மலைக்கள்ளன்’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் ஆனார். படத்துக்கு திரைக்கதை வசனம் எழுத கருணாநிதியை ஏற்பாடு செய்தார். படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். நாடக மன்ற நிர்வாகியாக இருந்த வீரப்பன், அவரது படங்கள் தொடர்பான வேலைகளையும் கவனித்துக் கொண்டார்.

குலேபகாவலி, மதுரைவீரன் போன்ற வெற்றிப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். திரையுலகில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக்க முடிவு செய்தார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும் பங்குதாரர்கள். பின்னர், சிறிது காலம் கழித்து அந்நிறுவனம் ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமாக மாற்றப்பட்டது. அதில் ஆர்.எம்.வீரப்பனையும் பங்குதாரராக சேர்த்ததுடன் அவரை நிர்வாக இயக்குநராகவும் நியமித்தார் எம்.ஜி.ஆர்.!

‘நாடோடி மன்னன்’ படம் வளர்ந்தது. படத்துக்கான தயாரிப்பு செலவுகள் எகிறிக் கொண்டே இருந்தன. செலவு களை சமாளிக்க ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கடன் கேட்க முடிவு செய் தார் வீரப்பன். அப்போது, ஏவி.எம். நிறுவனத்தின் ஆடிட்டர் சீனிவாசன், ‘‘கடன் தருவோம். ஆனால், எம்.ஜி.ஆர். கையெழுத்து போட வேண்டும்’’ என்று கூறிவிட்டார். கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடக் கூடாது, ஏதும் சிக்கல்கள் வந்தால் அவர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் வீரப்பன்.

கடன் பெறுவதற்காக, படத்தின் இலங்கை ஏரியா விநியோக ஒப்பந்தத்தை ஈடாக காண்பித்திருந்தனர். அதில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டிருந்தார். ‘‘விநியோக உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும்போது கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடவேண்டும்’’ என்று ஆடிட்டரும் பிடிவாதமாக இருந்தார். நாட்கள் ஓடின. பணம் இல்லையென்றால் படப்பிடிப்பு நடத்த ஃபிலிம் வாங்க முடியாத நிலை.

திடீரென யோசனை தோன்ற மீண்டும் சீனிவாசனிடம் சென்றார் வீரப்பன். ‘‘இலங்கை விநியோக ஒப்பந்தம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் போடப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பிறகு ‘எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று ஆனபிறகு, அதன் நிர்வாக இயக்குநர் நான்தான். என் பெயரில்தான் கடிதத் தொடர்புகள் நடக்கிறது. எனவே கடன் பத்திரத்தில் நான் கையெழுத்திட்டால் போதும்.’’ என்று கூறி ஆதாரங்களை காட்டினார் வீரப்பன்.

சட்டபூர்வமாக அவரது வாதத்தை மறுக்க முடியாத நிலையில், கடன் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரை கையெழுத்து போடவிடாமல் கடன் பெற்றுவிட்டார் வீரப்பன்.

‘எம்.ஜி.ஆர். படங்கள் நகரங்களில் ஓடாது. கிராமங்களில்தான் ஓடும்’ என்ற தவறான கருத்து இருந்தது. இதை மாற்ற வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1961-ல் எம்.ஜி.ஆர் நடித்த ‘திருடாதே’ படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அந்நிறுவனம் பெற்றது. அப்போதெல்லாம், சென்னையில் எம்.ஜி.ஆர். படங்களுக்கு முதல்தர திரையரங்குகள் கிடைக்காது.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகியாக இருந்த வீரப்பன் துணிந்து முடிவு எடுத்தார். அண்ணா சாலையில் பழைய படங்களை வெளியிட்டு வந்த பிளாசா, மற்றும் பாரத், மகாலட்சுமி ஆகிய பழைய திரையரங்குகளில் ‘திருடாதே’ படம் திரையிடப்பட்டது. புதிய விளம்பர உத்திகளையும் வீரப்பன் வகுத்தார். மூன்று தியேட்டர்களிலும் படம் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி பெற்றது. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படங்களை திரையிடுவதில் சென்னையின் முக்கிய தியேட்டர் அதிபர்கள் ஆர்வம் காட்டினர். ‘திருடாதே’ படம் பட்டி தொட்டிகளிலும் ஓடி வசூலை வாரிக்குவித்தது. ராஜா ராணிக் கதைகளுக்குத்தான் எம்.ஜி.ஆர். பொருத்தமானவர் என்ற கருத்தையும் ‘திருடாதே’ தகர்த்தது.

எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் பட நிறுவத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த முதல் வெற்றிப்படம் ‘தெய்வத்தாய்.’ அதிலிருந்து ‘இதயக்கனி’ வரை சத்யா மூவீஸின் 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

எம்.ஜி.ஆரிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வீரப்பன், அவருக்கே சம்பளம் கொடுப்பவராக மாறினார். சமயங்களில் வீரப்பனை எம்.ஜி.ஆர். ‘‘என்ன முதலாளி?’’ என்று ஜாலியாக அழைப்பது வழக்கம்.

முதல்வராகி தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட பிறகும், கடைசி வரை தனது ‘கணக்குப் பிள்ளை’யான ஆர்.எம். வீரப்பனுக்கு மாத சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பதை எம்.ஜி.ஆர். நிறுத்தவேயில்லை.

- தொடரும்...

‘இதயக்கனி’ படத்துக்கு மற்ற எம்.ஜி.ஆர். படங்களுக்கு இல்லாத சிறப்பு உண்டு. ரஷ்யாவில் நடைபெற்ற தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ‘இதயக்கனி’ தேர்வு செய்யப்பட்டது. வெளிநாட்டு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்.படம் என்ற பெருமையைப் பெற்றது ‘இதயக்கனி’.

படங்கள் உதவி: ஞானம்

எம்ஜிஆர் 100 | 33 - குண்டு பாய்ந்ததால் பாதிக்கப்பட்ட குரல்வளம்!

எம்ஜிஆர் 100 | 33 - குண்டு பாய்ந்ததால் பாதிக்கப்பட்ட குரல்வளம்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

மீனவ நண்பன்’ படத்தில் குமரனாக எம்.ஜி.ஆர்.! படத்திலும் எம்.ஜி.ஆர். பெயர் குமரன்தான்.

M.G.R. உழைப்புக்கு அஞ்சாதவர். எடுத்துக் கொண்ட காரியத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும் தயங்காதவர். சினிமா ஆனாலும் சரி, அரசியல் என்றாலும் சரி, தன் முழு உழைப்பையும் திறனையும் அவர் வெளிப்படுத்துவார்.

1967-ம் ஆண்டுக்கு முன் வந்த படங் களில் எம்.ஜி.ஆரின் குரல் கணீ ரென வெண்கல மணி போல ஒலிக் கும். துப்பாக்கிச் சூடு சம்பவத் துக்கு பின் தொண்டையில் குண்டு பாய்ந்ததால் அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டது. படங்களில் வேறு யாரையா வது ‘டப்பிங்’ கொடுக்கச் செய்யலாம் என்ற யோசனை களை எம்.ஜி.ஆர். நிராகரித்து விட்டார். சொந்தக் குரலில் பேசி நடிக்கவே அவர் விரும்பினார். அவர் குரல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர்.

‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் இரண்டு, மூன்று முறை ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஒரு காட்சி முடிந்ததும் அதற்கான வசனங் களை எம்.ஜி.ஆர். மீண்டும் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களை எடிட்டிங்கின்போது காட்சிகளோடு ஒருங்கிணைப்பது மிகவும் கடினம். எம்.ஜி.ஆர். தனக்கே உரிய தொழில் நுட்ப சாதுர்யத்தோடு பலமுறை பதிவு செய்யப்பட்ட வசனங்களில் எந் தெந்த வார்த்தைகள் சரியாக ஒலிக் கிறதோ அவற்றை அங்கிருந்து ஒரு வார்த்தை, இங்கிருந்து ஒரு வார்த்தை என்று எடுத்து ஒன்று சேர்த்து காட்சிகளோடு ஒருங் கிணைத்து தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமாக எடிட் செய்தார்.

பாதிக்கப்பட்ட பேச்சு திறனை மீண்டும் பெற எம்.ஜி.ஆர். விடாமுயற்சியுடன் செயல்பட்டார். ‘ஸ்பீச் தெரபிஸ்ட்’ எனப்படும் பேச்சு பயிற்சி அளிக்கும் நிபுணர்களை வரவழைத்து பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆலோசனையின்படி, நள் ளிரவில் உதவியாளர்களுடன் கடற்கரை சென்று தண்ணீர் படும்படி அமர்ந்து உரக்கப் பேசி பயிற்சி மேற்கொண்டார்.

‘‘நானும் சாமி என்பவரும் எம்.ஜி.ஆரு டன் நள்ளிரவில் கடற்கரைக்குச் செல் வோம். அலை வந்து மோதும் இடத்தில் அவர் அமர்ந்துகொள்ள நாங்கள் அவரை பிடித்துக் கொள்வோம். அவர் உரக்க பேசி பயிற்சி மேற்கொள்வார்’’ என்று நெகிழ்கிறார் எம்.ஜி.ஆரின் மெய்க்காவலர் கே.பி.ராமகிருஷ்ணன். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்ட பயிற்சி களால் பெரும் அளவில் பேச்சுத் திறனை எம்.ஜி.ஆர். மீண்டும் பெற்றார். தொண்டையில் குண்டு பாய்ந்ததால் பழைய குரலில் பேச முடியாமல் கட்டைத் தொண்டையில் ஒலித்த எம்.ஜி.ஆரின் குரலும் கம்பீரமாகவே இருந்தது.

‘உரிமைக்குரல்’ படத்தின் வெற்றிக் குப் பின் எம்.ஜி.ஆரும்ஸ்ரீதரும் இணைந்த மற்றொரு வெற்றிப் படம் ‘மீனவ நண்பன்.’ இந்தப் படத்தை கரு.சடையப்ப செட்டியார் தயாரித்தார். இயக்கம்ஸ்ரீதர். படத்தில் கிளை மாக்ஸ் காட்சி எடுக்கப்படாத நிலையில், பெங்களூரில் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தபோது தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக சென்னை திரும்பிவிட்டார். தேர்தல் வியூகங்கள் வகுப்பதிலும் பிரச்சாரத் திலும் அவர் தீவிரமாகிவிட்டதால் ‘மீனவ நண்பன்’ கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்படவில்லை. தேர்தலில் ஆட்சி யைப் பிடித்து எம்.ஜி.ஆர். முதல்வராகி விட்டால், படத்தின் கதி என்ன? என்றுஸ்ரீதரும் படக் குழுவினரும் கவலையோடு இருந்தனர்.

1977-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். தமிழகம் முழு வதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்பதற்கான நாளும் குறிக் கப்பட்டு விட்டது. அதற்கு பத்து நாட்களுக்கு முன் இயக்குநர்ஸ்ரீதரை எம்.ஜி.ஆர். அழைத்தார்.

‘‘மீனவ நண்பன் படத்தை முடிக்க இன்னும் எத்தனை நாள் தேவைப்படும்?’’ என்றுஸ்ரீதரிடம் எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரண்டு நாட்கள் ஒதுக்கினால் போதும். முடித்து விடலாம்’’ என்றுஸ்ரீதர் பதிலளித்ததும் உடனே, படப்பிடிப்புக்கு தேதி கொடுத்து ஏற்பாடு செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

சொன்னபடி, குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். எடுக்க வேண்டிய காட்சி குறித்துஸ்ரீதருடன் ஆலோசித்தார்.

கிளைமாக்ஸில் புயல் வீசும் கொந்தளிக்கும் கடலில் மோட்டார் படகில் வில்லன் நம்பியாரை விரட்டிச் சென்று பிடித்து, படகில் கொட்டும் மழையில் அவருடன் எம்.ஜி.ஆர். சண்டையிட வேண்டும். அவர் நடிக்கத் தயாரானபோது,ஸ்ரீதர் குறுக்கிட்டு, ‘‘அண்ணே, மழை மட்டும் இப்ப வேண்டாம். படகு சேஸ், சண்டை மட்டும் எடுக்கலாம். தேவைப்பட்டால் புயல், இடி, மின்னலுடன் நிறுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.

‘‘ஏன்?’’, காட்சியில் திடீர் மாற்றம் குறித்து புரியாமல் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘இன்னும் ஒரு வாரத்தில் முதல்வ ராக பதவியேற்கப் போகிறீர்கள். இந்த நேரத்தில் தண்ணீரில் நீண்ட நேரம் நனைந்து சளி, காய்ச்சல் வந்து விட்டால் என்னாவது?’’ என்று தனது கவலையை பதிலாக்கினார்ஸ்ரீதர்.

எதையும் முழு அர்ப்பணிப்போடு செய்யும் எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘எனக்கு ஒன்றும் ஆகாது. மழையும் இருக்கட்டும். அப்போதுதான் இயல்பாக இருக்கும். காட்சிக்கு எஃபெக்ட்டும் கூடும்’’ என்று சொல்லிவிட்டு, மழையில் நனைந்தபடியே நம்பியாருடன் சண்டை போடும் காட்சியில் நடித்து முடித் தார்.

சில நாட்களில் தமிழகத்தின் முதல் வராக பொறுப்பேற்கப் போகிறவர், எனக்கு பதிலாக ‘டூப்’ போட்டு எடுத் துக் கொள்ளுங்கள் என்று சொல்லி யிருக்கலாம். இயக்குநரே வேண்டாம் என்று சொல்லியும் மழையில் நனைந்த படி நடித்துக் கொடுத்துவிட்டுச் சென் றார் என்றால், எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வெற்றியின் விளைச்சலுக்கு அவர் பாய்ச்சிய உழைப்பின் வியர்வை பிரமிக்கச் செய்யும்.

தோட்டாவுக்கு டாட்டா காட்டிய தேக்குமர தேகம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு அவர் சொன்னது போலவே, மழையில் நனைந்ததால் சளியோ, காய்ச்சலோ வரவில்லை.

படங்கள் உதவி : ஞானம்

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் 1959-ம் ஆண்டு திருவண்ணாமலை கிருஷ்ணா திரையரங்கில் மறுவெளியீடு செய்யப்பட்டது. டிஜிட்டல், சினிமாஸ்கோப் போன்ற நவீன உத்திகள் இல்லாமல் தினசரி மூன்று காட்சிகளாக மறுவெளியீட்டில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘நாடோடி மன்னன்.’

- தொடரும்...

Wednesday, March 30, 2016

NGGOA takes exception to DoPT order on purchase of air tickets

NGGOA takes exception to DoPT order on purchase of air tickets

Port Blair
16 Mar 2016

The Department of Personnel & Training recently has issued a series of orders making it compulsory for the government employees to purchase air tickets from concerned Airlines or a few approved travel agents while availing LTC. In this regard, the General Secretary of the Non-Gazetted Govt. Officers’ Association in a letter addressed to the Secretary, Department of Personnel & Training, Ministry of Personnel Public Grievances & Pension, Govt. of India has brought to the notice that around 24 thousand government employees & workers under Andaman and Nicobar Administration posted at various department/offices located in these islands are put to untold difficulties due to such orders. Expressing concern, Shri T.S.Sreekumar informed about the remoteness of these islands and poor internet connectivity which makes the booking of tickets online, more difficult and challenging especially for those who are posted in outer islands away from Port Blair. Many of the employees & workers posted outside at far-flung islands are required to come to Port Blair in advance to book their tickets by availing leave and spending money. The General Secretary has requested the Secretary, DoPT for an urgent intervention, in reviewing the existing instructions on purchase of air tickets for government employees serving in Andaman and Nicobar Islands, as a special case, considering the remoteness and poor internet connectivity in these islands.

A copy of the said letter sent to the Chief Secretary, A & N Administration by the General Secretary with the request to take up the matter with the DoPT, Govt. of India. In another copy sent to the Director of Accounts & Budget, the Association has requested him to continue the previous practice of passing LTC/AFSP bills purchased from private travel agents until a decision had been taken on the said issue by Govt. of India.

NTRUHS convocations tomorrow

NTRUHS convocations tomorrow

NEWS TODAY 08.06.2026