Thursday, April 14, 2016

ஏற்க முடியவில்லை!

ஏற்க முடியவில்லை!
By ஆசிரியர்
First Published : 13 April 2016 01:54 AM IST

எம்பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு (என்.இ.இ.டி.) நடத்துவதற்கு, 2013-இல் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான மூன்று பேர் அமர்வு விதித்திருந்த தடையை இப்போது உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. இந்தப் பிரச்னையை தொடக்கத்திலிருந்து மறுவிசாரணை செய்யவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனில் தவே உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆணை பிறப்பித்திருக்கிறது.
 அதாவது, மறுவிசாரணை நடந்து தீர்ப்பு வரும்வரை தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொது நுழைவுத் தேர்வு நடத்தும் அதிகாரம் இந்திய மருத்துவக் குழுமத்துக்கு (எம்.சி.ஐ.) கிடையாது என்று ஏற்கெனவே 2013-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை இதன்மூலம் இப்போது உச்சநீதிமன்றம் விலக்கிக்கொண்டுள்ளது.
 மருத்துவத்துக்கான பொது நுழைவுத் தேர்வைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட பல மாநில முதல்வர்கள் எதிர்த்தனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இந்நிலையில், மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் குழுமம் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவத்துக்கான பொதுநுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளது. இதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள முதன்மைக் காரணம்: தனியார் கல்லூரிகளில் பெரும் பணத்தை நன்கொடையாகச் செலுத்தி, தகுதியில்லாத மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதால், மருத்துவத் துறை பாதிக்கப்படுகிறது என்பதுதான்.
 நீதிமன்றத்தின் கருத்து உண்மையே. அதேவேளையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடுவதுபோல, ஏழைகளும், கிராமப்புற மாணவர்களும் வாய்ப்புகள் கிடைக்காமல் பின்தள்ளப்படுவார்கள் என்பதும் உண்மை என்பதால், இந்தப் பிரச்னையில் தெளிவான முடிவு எட்டப்படாமல் இருக்கிறது.
 இந்தியாவில் எம்.சி.ஐ. அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் 381 உள்ளன. இவற்றில் 188 தனியார் கல்லூரிகள். இக்கல்லூரிகள் பெரும்பாலும் 50% இடங்களைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்கின்றன. அந்த வகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் சுமார் 20,000 மாணவர்களைத் தங்கள் விருப்பம்போல சேர்த்துக்கொள்கின்றன. குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
 மேலும் சில கல்லூரிகள், உதாரணமாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி போன்றவை மத்திய தொகுப்புக்கு இடம் தர மறுத்தல் அல்லது குறைவான இடங்களையே ஒதுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதோடு, மாணவர் சேர்க்கையில் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ளும் போக்கும் நடைமுறையில் காணப்பட்டது.
 தமிழகத்தில் உள்ள 39 மருத்துவக் கல்லூரிகளில் 20 தனியார் மருத்துவக் கல்லூரிகள். இந்தக் கல்லூரிகளில் அதிக மதிப்பெண் பெற்று, "கட்-ஆஃப்' 197 வரை பெறும் மாணவர்கள், தனியார் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் சேர்க்கப்படுகிறார்கள் என்றாலும், இந்தக் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டிலும் மாணவர்களைச் சேர்த்து வருகின்றன. இவை நன்கொடை இல்லாமல் நடப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. நன்கொடை தரும் வசதி படைத்தவர்கள் மருத்துவர்களாகி, மருத்துவமனை நடத்துபவர்களாகவும் மாறும்போது, மருத்துவம் முழுக்க முழுக்க வணிகமாகிவிடுகிறது.
 இருப்பினும், தேசிய மருத்துவக் கல்விக்கான தேசிய பொதுத் தேர்வு நடத்தப்படுமேயானால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது மிகமிக உறுதி. ஏனென்றால், மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேசிய பாடநூல் திட்டத்தின்படியே வினாக்களைத் தொகுப்பார்கள். தற்போது சமச்சீர் கல்வி முறையில், சற்று எளிமைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்களால் சரியாக விடை எழுத முடியாது.
 சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும்கூட தமிழகத்திலிருந்து அதிகளவு வெற்றி பெறுவதில்லை. இந்நிலையில், தமிழகத்தில் அரசு மேனிலைப் பள்ளி மற்றும் தனியார் மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களால் இந்தப் பொது நுழைவுத் தேர்வில் எந்த அளவுக்கு வெற்றிபெற முடியும் எனத் தெரியவில்லை.
 அதிக மதிப்பெண் பெற்று, "கட்-ஆஃப்' 198 பெற்ற மாணவர்கள் கலந்தாய்வின் மூலம் தமிழ்நாட்டின் அரசுக் கல்லூரிகளில் இடம் பெற்று எம்.பி.பி.எஸ். படிப்பைத் தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம்பெறுவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவது மிகமிக அரிதாகவே இருக்கும்.
 மருத்துவக் கல்வி பயில கடும் போட்டி நிலவுகிறது. 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் முன்பாக நடத்தப்பட்ட மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் 6.58 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அந்த அளவுக்குப் போட்டி உள்ளது. இந்தப் போட்டியில் தமிழக மாணவர்கள், குறிப்பாக சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் எத்தனைப் பேர் பொது நுழைவுத் தேர்வு எழுதுகிறார்கள், எத்தனை பேர் வெற்றி பெறுகிறார்கள் என்பதைக் கணக்கிட்டால், தமிழகத்தின் பாடத்திட்டம் செழுமையானதுதானா, மாற்றம் தேவைப்படுகிறதா என்பதைத் தீர்மானிக்க உதவும்.
 மருத்துவம் மட்டுமன்றி பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதத் தகுதி மதிப்பெண் 75% (எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு 65%) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றவர்களை வரிசைப்படுத்துவதில் (ரேங்கிங்) பள்ளித்தேர்வு மதிப்பெண்களுக்காக கொடுக்கப்பட்டுவந்த 40% "வெயிட்டேஜ்' கிடையாது என்றும் அறிவித்துவிட்டார்கள்.
 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு என்ற பெயரில் பணம் வாங்கிச் சேர்க்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது மகிழ்ச்சியே என்றாலும், மருத்துவம், பொறியியல் இரண்டிலுமே அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் அதிக இடங்களைப் பெறும் வாய்ப்பில்லை என்பதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அலட்சியத்தால் விளைந்த அசம்பாவிதம்!

அலட்சியத்தால் விளைந்த அசம்பாவிதம்!

THE HINDU
பாதுகாப்பு விஷயத்தில் அசட்டையாக இருப்பதிலும், அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குப் பொறுப்பேற்க மறுப்பதிலும் புகழ்பெற்று விளங்குபவர்கள் இந்தியர்கள். அப்படிப்பட்டவர்களையே உலுக்கி எடுத்துவிட்டது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புட்டிங்கல் தேவி கோயிலில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை நடந்த வெடிவிபத்து. வாண வேடிக்கை நிகழ்ச்சியின்போது, வானை நோக்கிச் செல்ல வேண்டிய வெடி ஒன்று தரையிலேயே வெடித்துச் சிதறியிருக்கிறது. அதன் தீப்பொறிகள், வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் விழுந்ததால் அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறின. இந்தக் கொடூர விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

அலட்சியமும், அடுத்தவர்களின் பாதுகாப்பைப் பற்றிய அக்கறையின்மையும்தான் இந்த விபத்துக்கு முக்கியக் காரணங்களாக இருந்திருக்கின்றன. வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்திருந்தும், அதை மீறி வாண வேடிக்கை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செயல் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மாவட்ட நிர்வாகமே அனுமதி மறுத்திருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பில் இருந்த காவல் துறை என்ன செய்துகொண்டிருந்தது என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இரவு 10 மணிக்கு மேல் வெடி வெடிக்கக் கூடாது என்று விதிமுறை இருந்தும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிகாலை 3.30 மணி வரை வாண வேடிக்கை நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

கேரளாவில் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், இந்தச் சம்பவத்தை வைத்து ஆதாயம் தேட அரசியல் கட்சிகள் முயலக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக, புட்டிங்கல் கோயில் நிர்வாகத்தினர், வாண வேடிக்கை நிகழ்ச்சியை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பான நீதி விசாரணைக்கும் கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது ஏற்படும் விபத்துகள் தொடர்பாக ஆராய, கேரள மாநிலத்தின் வருவாய்த் துறையும், பேரிடர் மேலாண்மைத் துறையும் இணைந்து ஒரு ஆய்வு நிறுவனத்தை நடத்திவருகின்றன. இதன் மூலம், விழா ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளையும் உருவாக்கியிருக்கிறது கேரள அரசு. ஆனால், இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதுதான் சோகம்.

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை, தொலைதூரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வது போன்ற விஷயங்களில் ஒருபோதும் சமரசம் கூடாது. கொல்லத்தில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு எடுத்திருக்கும் உடனடி நிவாரண நடவடிக்கைகள், சம்பவ இடத்துக்கு உடனடியாகப் பாதுகாப்புப் படைகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் விரைந்தது போன்றவை இதுபோன்ற அசம்பாவிதங்களின்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கின்றன.

கேரளாவில் திருச்சூர் பூரம் உட்பட 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கும் நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாதவண்ணம் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அம்மாநில அரசுக்கு இருக்கிறது. அண்டை மாநிலத்தில் நடந்திருக்கும் இந்த விபத்து, நமக்கும் ஒரு பாடம் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், அரசியல் நிகழ்ச்சிகள், மத வழிபாட்டு நிகழ்ச்சிகளின்போது பாதுகாப்பு விஷயங்களில் உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டிய பொறுப்பு எல்லா அரசுக்கும் இருக்கிறது. ஏனெனில், மனித உயிர்கள் விலைமதிக்க முடியாதவை!

HC criticises litigant for levelling corruption charges without any basis


HC criticises litigant for levelling corruption charges without any basis

SPECIAL CORRESPONDENT

THE HINDU

The Madras High Court Bench here has criticised a litigant for having filed a case accusing the president of A. Kokkulam Panchayat in Thirumangalam Panchayat Union near here of having extended the lease of shopkeepers at Chekkanoorani bus stand near here for extraneous considerations though, in fact, the shops had been leased out only after calling for public tenders.

Dismissing the writ petition filed by K.P.R. Anandhan, who wanted to take one of the shops on lease but did not participate in the tender process, a Division Bench of Justices V. Ramasubramanian and N. Kirubakaran agreed with Senior Counsel R. Venkataraman, appearing for the panchayat, that the petitioner had no legal right to question the allotment of shops without having participated in the tender.

Legal right

“Legal Right means an entitlement arising out of legal rules. Legal right is an advantage or benefit conferred upon a person by the rule of law. The expression ‘Person Aggrieved’ does not include a person, who suffers from psychological or an imaginary injury. A person aggrieved must, therefore, necessarily be one whose right or interest has been adversely affected or jeopardized,” the judgement read.

Stating that the petitioner had initially filed a public interest litigation petition in 2014 seeking a direction to the Panchayat to conduct public auction in accordance with Tamil Nadu Panchayat (Procedure for conducting Public Auction of Lease and Sales in Panchayat) Rules, 2001, the judges said that petition was withdrawn after the court felt that it projected only private interest.

Further, pointing out that the present writ petition was filed within two days after the dismissal of the PIL petition and the petitioner enjoyed interim orders in the present case for long, the Division Bench said: “Though we could have imposed on the petitioner exemplary costs for filing such a frivolous writ petition, yet, taking lenient view, there will be no order as to costs.”

ஆன்லைனில்' பணம் செலுத்த அண்ணா பல்கலை வசதி

ஆன்லைனில்' பணம் செலுத்த அண்ணா பல்கலை வசதி

DINAMALAR 14.4.2016

சென்னை, இன்ஜி., மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை, நாளை முதல், 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம்; இதற்கான அறிவிக்கையை, இன்று அண்ணா பல்கலை வெளியிடுகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் மூலம் பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அண்ணா பல்கலை, இன்று வெளியிடுகிறது.இதுகுறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் அளித்த பேட்டி:அண்ணா பல்கலையின் இணையதளத்தில், https:/www.annauniv.edu/, TNEA 2016 என்ற தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் பணிக்கான, 'லிங்க்' இணைக்கப்படுகிறது. இதில், மாணவர்கள், தங்கள் பெயர், படிப்பு உள்ளிட்ட விவரங்களை, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். தற்போது, பிளஸ் 2 தேர்வு முடிவு வராத நிலையிலும், மற்ற விவரங்களை நிரப்பி விடலாம்.
தேர்வு முடிவு வந்ததும், 'ஆன்லைனில் விண்ணப்பங்களை, 'எடிட்' செய்ய முடியும். மதிப்பெண் விவரங்களை, தேர்வுத் துறை மூலம் அண்ணா பல்கலை நேரடியாக பெற்று, மாணவர்களின் மதிப்பெண்களை இணைத்து விடும்.
இந்த விண்ணப்ப பதிவை, தனியார் இணைய மையங்கள், தங்கள் சொந்த கணினி மற்றும் அரசின், இ - சேவை மையங்கள் மூலமும் மேற்கொள்ளலாம். இதேபோல், விண்ணப்ப கட்டணத்தை, டி.டி.,யாகவும் எடுக்கலாம். அதற்கு பதில், 'ஆன்லைனில் நெட் பேங்கிங்' முறையிலும் பணம் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
: காணாமல் போன காளை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு உரிமையாளரின் ஆச்சரிய அறிவிப்பு

DAILY THANTHI 14.4.2016

வாரணாசி,

உத்தரபிரதேசத்தின் வாரணாசி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் 3 வயதான காளை ஒன்றை வளர்த்து வந்தார். கம்பீரமாக காட்சியளித்த அந்த களைக்கு ‘பாட்ஷா’ என பெயரிட்டு அவர் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்.

மேலும் அதன் கழுத்தில் கயிறு எதுவும் கட்டாமல் தனது குடும்ப உறுப்பினர் போல சுதந்திரமாக நடமாட விட்டிருந்தார். இதனால் அதுவும் அந்த பகுதியில் சுதந்திரமாக சுற்றி வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் ‘பாட்ஷா’ திடீரென காணாமல் போய்விட்டது. இது மனோஜ் குமாருக்கு கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. எனவே இது குறித்து சார்நாத் போலீசில் புகார் செய்தார்.

அத்தோடு நில்லாமல், தனது செல்ல ‘பாட்ஷா’வை பற்றிய துப்பு கொடுப்போருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என விளம்பரமும் செய்துள்ளார். அதன்படி காளையின் நிறம், அளவு, தோற்றம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய சுவரொட்டிகளை வாரணாசி பகுதி முழுவதும் ஒட்டி வைத்துள்ளார்.

மனோஜ் குமாரின் இந்த அறிவிப்பு வாரணாசி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
[07:07, 4/14/2016] +91 98406 53153: ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகம்

DINAMANI 14.4.2016

ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டத்தை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) அறிமுகப்படுத்தியுள்ளது.
 ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு வகைகளை மட்டுமே வாங்கி உண்ண வேண்டிய நிர்பந்தத்திலிருந்து பயணிகளை விடுவிக்கும் நோக்கில், அவர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை இணைய வழியில் கேட்டு பெறும் வசதியை ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது.
 இந்த நிலையில், ரயில் பயணிகளுக்கு உள்ளூர்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை வழங்குவது குறித்து ஆராயப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கடந்த பிப்ரவரி மாதம், தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
 அதன்படி தற்போது, ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டம், மகாராஷ்டிர மாநிலம், கொங்கண் பகுதியில் உள்ள குதால் மற்றும் சாவந்த்வாடி ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 இந்தத் திட்டம் குறித்து ஐஆர்சிடிசியின் நிர்வாக இயக்குநர் கூறியபோது, "சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விரிவுப்படுத்த எண்ணியுள்ளோம். இந்தத் திட்டத்தில் திறம்படப் பணியாற்றத் தேவையான மகளிர் சுய உதவிக் குழுக்களின் விவரங்களைப் பெற, நபார்டு வங்கியுடன் இணைந்து செயலாற்ற உள்ளோம்' என்றார்.

ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகம்

ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகம்

DINAMANI 14.4.2016

ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டத்தை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) அறிமுகப்படுத்தியுள்ளது.
 ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு வகைகளை மட்டுமே வாங்கி உண்ண வேண்டிய நிர்பந்தத்திலிருந்து பயணிகளை விடுவிக்கும் நோக்கில், அவர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை இணைய வழியில் கேட்டு பெறும் வசதியை ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது.
 இந்த நிலையில், ரயில் பயணிகளுக்கு உள்ளூர்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை வழங்குவது குறித்து ஆராயப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கடந்த பிப்ரவரி மாதம், தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
 அதன்படி தற்போது, ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டம், மகாராஷ்டிர மாநிலம், கொங்கண் பகுதியில் உள்ள குதால் மற்றும் சாவந்த்வாடி ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 இந்தத் திட்டம் குறித்து ஐஆர்சிடிசியின் நிர்வாக இயக்குநர் கூறியபோது, "சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விரிவுப்படுத்த எண்ணியுள்ளோம். இந்தத் திட்டத்தில் திறம்படப் பணியாற்றத் தேவையான மகளிர் சுய உதவிக் குழுக்களின் விவரங்களைப் பெற, நபார்டு வங்கியுடன் இணைந்து செயலாற்ற உள்ளோம்' என்றார்.

அனுமதிக்கக் கூடாது!

அனுமதிக்கக் கூடாது!
By ஆசிரியர்

DINAMANI
மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் 344 கூட்டு மருந்து, மாத்திரைகளுக்கு விதித்த தடைக்கு, மருந்து உற்பத்தியாளர்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து தடையுத்தரவு பெற்று வருகின்றனர்.கடந்த மார்ச் 10-ஆம் தேதி மத்திய அரசு 344 கூட்டு மருந்துகளுக்கு விதித்தத் தடையை எதிர்த்து மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடுத்த வழக்கில், தில்லி உயர்நீதிமன்றம் அரசின் ஆணைக்கு மார்ச் 14-ஆம் தேதி தடை விதித்தது. அதன்பிறகு, மார்ச் 28-ஆம் தேதிவரை விதிக்கப்பட்ட தடை ஏப்ரல் 4-ஆம் தேதிக்கும், பிறகு 6-ஆம் தேதிக்கும், இப்போது ஏப்ரல் 18-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளில் இதுபோன்ற கூட்டு மருந்துகள் தடை செய்யப்பட்டவை. அங்கே தடை செய்யப்பட்ட மருந்துகளை, அதே பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்கின்றன. "தேவைதான் இந்தத் தடை' என்கிற 19.03.2016 தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டிருந்ததுபோல, இந்தியாவில் தேவைப்படாத நோய்க்கும் சேர்த்து மருந்து தரப்படும் நிலை காணப்படுகிறது. நாம் நமது முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, தடை செய்யப்பட்டிருக்கும் மருந்துத் தயாரிக்கும் நிறுவனங்களில் அதிகம் பாதிக்கப்படுபவை, பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள்தான்.
 மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும், மருந்து மொத்த விற்பனையாளர்களும் அரசு ஆணையின் மீதான தடையைத் தொடர்ந்து நீட்டித்து வருவதற்குக் காரணம், அவர்கள் தயாரித்து வைத்திருக்கும், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் கூட்டு மருந்துகள் அனைத்தையும் விற்றுவிடுவதற்காகத்தான். இந்தத் திடீர் தடையின் மூலம் இந்திய மருந்து வர்த்தகத்திற்கு சுமார் ரூ.3,800 கோடி பாதிப்பு ஏற்படும் என்பது அவர்களே வெளியிட்டிருக்கும் அறிக்கை.
 மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் தெரிவிக்கும்படியும், அதனடிப்படையில் ஏப்ரல் 18-ஆம் தேதி விசாரணை நடத்தலாம் என்றும், ஏப்ரல் 6-ஆம் தேதி விசாரணையின்போது உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. வழக்குத் தொடுத்திருக்கும் அத்தனை பேருடைய பொதுவான கோரிக்கைகள் எவையெல்லாம் என்பதைப் பட்டியலிடும்படியும், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் லாப-நஷ்டங்கள் இந்தப் பிரச்னையில் ஒரு காரணமாகாது என்றும் கூறியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
 தடை விதிக்கப்பட்ட 344 மருந்துகளும் எந்தவித அறிவுபூர்வமான அடிப்படை இல்லாத கூட்டு மருந்துகள் என்பதால் அவை பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் என்கிறது மத்திய சுகாதார ஒழுங்காற்று ஆணையம். மருந்து தயாரிப்பு நிறுவனங்களோ, தடை விதிக்கும்போது முறையான வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றும் தங்களது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றன. இதுதான் இந்தப் பிரச்னையின் பின்னணி.
 சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிந்தோ தெரியாமலோ முறையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், தடை செய்யப்பட்டுள்ள ஜலதோஷத்திற்கான மாத்திரைகள், இருமல் மருந்துகள் உள்ளிட்ட 1600 இலச்சினை மருந்துகளையும் தடை செய்யப்பட்டதன் காரணம் தவறு என்று எந்த மருந்துத் தயாரிப்பாளரும் தங்கள் நியாயத்தை முன்வைத்து விவாதிக்கத் தயாராக இல்லை.
 ஒழுங்காற்று ஆணையத்தின் தடைக்கு அடிப்படைக் காரணம், நிபுணர் குழு அறிக்கையின்படி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் பல கூட்டு மருந்துகள் விதவிதமான வியாபாரப் பெயர்களில் மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்பதுதான். குறிப்பிட்ட அளவுக் கலவை அல்லது "ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன்' என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலக்கூறு மருந்துகளை இணைத்து புதிய வியாபாரப் பெயருடன் தயாரிக்கப்படுபவை. உதாரணத்துக்கு, தேவையே இல்லாமல் கக்குவான் இருமல் உள்ள நோயாளிக்கு, நுரையீரலிலிருந்து சளியை அகற்றும் அல்லது ஒவ்வாமைக்கான மருந்தையும் சேர்த்து கூட்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவையெல்லாம், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பவை என்பதுதான் சுகாதார ஒழுங்காற்று ஆணையத்தின் குற்றச்சாட்டு.
 இதுபோன்ற கூட்டு மருந்துகளை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பாக, பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் ஆண்டு தோறும் இந்தியாவில் ரூ.3,800 கோடிக்கு விற்பனை செய்கின்றன. தேவையில்லாத இதுபோன்ற மருந்துகளை இத்தனை காலம் விற்பனை செய்ய முந்தைய அரசுகள் எப்படி அனுமதித்தன என்பது புரியவில்லை.
 அமெரிக்காவில் மருந்து ஒழுங்காற்று ஆணையம், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை போன்றவை உலகின் எந்த நாட்டு மருந்தானாலும் அந்த நாட்டுக்கே போய், தயாரிப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் குறித்து தீர விசாரித்த பிறகுதான் அந்த மருந்துகளை அமெரிக்கச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கின்றன. பல இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், நாம் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் தயாரித்து நம்மவர்களுக்கு விற்பதற்குக் கடையைத் திறந்து வைத்திருக்கிறோம்.
 சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் இந்தியாவின் ஆரோக்கியத்தைச் சந்தைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. நியாயமான வழிகளில், தரமான மருந்துகளைத் தயாரித்து 127 கோடி மக்கள்தொகையுள்ள இந்தியாவில் வியாபாரம் செய்து சம்பாதித்துக் கொள்ளட்டும். ஆனால், நம்மை ஏமாற்றித் தரமில்லாத மருந்துகளை விற்று அவர்கள் லாபமடைவதை அனுமதிக்கக் கூடாது!

NEWS TODAY 25.12.2025