Sunday, May 1, 2016

மருத்துவ நுழைவுத் தேர்வும், பறிபோகும் மாநில உரிமைகளும்! Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/medical-entrance-exam-state-s-rights-252527.html

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வுதான் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 28 ம் தேதியன்று தீர்ப்பளித்து விட்டது. இந்தாண்டு முதலே இது நடைமுறைக்கும் வருகிறது. இதன்படி மே 1 ம் தேதியும், ஜூலை 24 தேதியும் தேர்வுகள் நடக்க வேண்டும். நுழைவுத் தேர்வை கேட்ட மாநிலங்களில் மே 1 ம் தேதியும், தேர்வு வேண்டாம் என்று கூறிய மாநிலங்களின் வசதிக்காக ஜூலை 24 ம் தேதியும் தேர்வு நடக்கிறது. மருத்துவக் கல்வியின் தரம் மிகவும் குறைந்து விட்டதென்று கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த போதுதான் இந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஏற்கனவே 2013 ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த நுழைவுத் தேர்வு சட்டப்படி செல்லாதென்று கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்தாண்டு ஏப்ரலில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த உத்திரவை திரும்பப் பெற்றுக் கொண்டு நுழைவுத் தேர்வுக்கு அனுமதி வழங்கியது. தற்போது மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) சிபிஎஸ்ஈ ஆகியவையும், மற்றும் பல மாநிலங்களும் நுழைவுத் தேர்வை ஆதரித்தன. தமிழகம், கேரளம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் நுழைவுத் தேர்வை எதிர்த்தன. ஆனால் எதிர்ப்புகள் புறந்தள்ளப்பட்டு தற்போது இந்தியா முழுமைக்கும் எந்த மருத்துவக் கல்லூரியில் சேருவதாக இருந்தாலும், அதாவது மாநில அரசுகள், மத்திய அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ராணுவம் நடத்தும் எந்த மருத்துவக் கல்லூரியில் சேர்வதானாலும் இந்த நுழைவுத் தேர்வுதான் ஒரே தேர்வாகும். இதனால் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த 90 விதமான தேர்வுகள் செல்லாதவையாகின்றன. இந்த உத்திரவால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழகம்தான். காரணம் 2006 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு தொழிற்கல்வி சேர்க்கை முறைப்படுத்துதல் சட்டத்தின்படி தமிழகத்தில் 2007 ம் ஆண்டு முதல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கை ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நடக்கிறது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதால், நேற்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்தை கட்டுப்படுத்தாது என்று திமுக வும், சில சட்ட நிபுணர்களும் கூறுகின்றனர். ஆனால் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதற்குமான தீர்ப்பு என்பதால் தமிழகம் இதிலிருந்து தப்ப முடியாதென்று வேறு சிலர் வாதிடுகின்றனர். இதனிடையே தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் வெள்ளிக் கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்தாண்டு தங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளன. மே 1 ம் தேதி தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமையில் அப்பட்டமாக தலையிடுவதாகும் என்று கூறுகிறார் சமூக சமுத்துவத்துக்கான மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜி.ரவீந்திரநாத். "இது மாநில உரிமைகளில் தலையிடுவதாகும். மத்திய அரசு கட்டுப் பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளட்டும். கல்வியும், சுகாதாரமும் பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்கள். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள சட்டத்திற்கு மாற்றாக வந்துள்ள இந்த தீர்ப்பு அப்பட்டமாக மாநில உரிமைகளில் தலையிடுவது மட்டுமல்ல, இது நிச்சயமாக அதீதமான நீதி மன்ற தலையீடு (judicial over reach). அதே சமயம் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை வெறும் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் நடைபெற முடியாது. நுழைவுத் தேர்வுகள் அவசியம்தான். அது மாநில அரசால் நடத்தப் பட வேண்டும்,'' என்கிறார் ரவீந்திரநாத். தமிழ் நாட்டில் மே மாதம் அமையவிருக்கும் புதிய அரசுக்கு எடுத்த எடுப்பிலேயே பெரியதோர் தலைவலி காத்திருப்பது கண்கூடாகவே தெரிகின்றது. இதனிடையே 12 ஐந்தாவது திட்டத்துக்கான சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் கொள்கை வகுப்பிற்காக உருவாக்கப் பட்டிருக்கும் 31 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு இந்திய மருத்துவ கவுன்சிலில் (என்சிஐ) நிலவும் பூதாகரமான ஊழல்தான் இந்தியாவில் மருத்துவ சேவைகளும், மருத்துவ கல்வியும் படு மோசமாக இருப்பதற்கு காரணமென்று சமீபத்தில் தெரிவித்துள்ளது. 1. மருத்துவ கல்லூரிகளுக்கான அனுமதி மற்றும் ஆய்வில் (inspection) பெரிய தொகை கை மாறுகிறது. 2. நாட்டில் ஆண்டுதோறும் போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் 3. 70 கோடி மக்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கு (specialist care) வாய்ப்பு இல்லை. 4. 80 சதவிகித சிறப்பு மருத்துவர்கள் நகர்ப்புறங்களில்தான் உள்ளனர். 5. மருத்துவ துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக ஜூலை 2014 ல் என்டிஏ அரசு நியமித்த பேராசிரியம் ரன்ஜித் ராய் சவுத்திரி கமிட்டியின் அறிக்கை உடனே அமல் படுத்தப் பட வேண்டும். 6. எம்சிஐ க்கு மாற்றாக தேசீய மருத்துவ ஆணையகம் (National Medical Commission) ஒன்று ஏற்படத்தப் பட வேண்டும், ஆனால் எந்தளவுக்கு இந்தப் பரிந்துரைகள் செயற்படுத்தப் படும் என்று தெரியவில்லை. அரசியல் வாதிகள் அடிக்கும் கொள்ளையின் முக்கியமான வடிகாலாக இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் சீர்திருத்தங்கள் அவ்வளவு சுலபமல்லதான். இந்த பின்புலத்தில் பார்த்தால் நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பெரியதாக எந்த மாற்றமும் வரப் போவதில்லை என்பதே எளிய உண்மை!

மே 1 - அஜித் குமார் 44-வது பிறந்ததினம்


மே 1 - அஜித் குமார் 44-வது பிறந்ததினம்

செலவிலான விளம்பரங்களுடன் வெளியாகும் பல படங்கள் விளம்பரச் செலவைக்கூட வசூலிப்பதில்லை. ஆனால், அஜித் படம் என்றால் விளம்பரம் குறைவாகத்தான் இருக்கும்; வசூலோ கோடிகளை அள்ளும். காரணம் அஜித் மட்டுமே!

பெரும் எப்போது அஜித் கால்ஷீட் தேதிகள் கிடைக்கும் என்று பல தயாரிப்பாளர்கள் ஏங்கிவருகிறார்கள். காரணம் அவர் நடிக்கும் படங்களின் வசூல். ஒரு படம் ஒப்புக்கொண்டால் அதில் அஜித் காட்டும் ஈடுபாடு மிகவும் அலாதியானது. ‘வேதாளம்' படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பின்போது காலில் அடிப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியபோது, படப்பிடிப்பை முழுக்க முடித்துவிட்டுதான் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது ‘வேதாளம்' படத்தின் அணியுடன் மீண்டும் இணையவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

இணையத்தில் ஆதிக்கம்

சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தும் ரசிகர் கூட்டங்களில் அஜித் ரசிகர்கள் அதிகம். அஜித் படத்தைப் பற்றி ஒரு செய்தி வெளியிட்டால் கண்டிப்பாக அது முதன்மை பெறும். காரணம், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு. அவருடைய திருமண நாள், மகள் - மகன் பிறந்த நாள் என எதுவாக இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்வார்கள். தனது மகனுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அந்த அலுவலகம் வந்த நாளில், இணையத்தை அஜித் மகன் புகைப்படங்களே ஆட்கொண்டன.

சர்ச்சைகளும் அஜித்தும்

அஜித்தை ரசிகர்கள் பெரும்பாலும் திரையில் மட்டுமே காண முடியும். தனது படத்தின் இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே அஜித் தலைகாட்டுவதில்லை என்பது ரசிகர்களின் தீராத ஆவலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதுவே அவருடைய படங்களின் பெரிய வசூலுக்கு ஒரு காரணம் என்று விநியோகஸ்தர் ஒருவர் சொல்கிறார். அஜித்தைப் பற்றித் தவறாகவோ கிண்டலாகவோ யாராவது பேசினாலோ எழுதினாலோ மொத்த ரசிகர்களும் ஒன்றிணைந்து திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

பொதுவாகத் திரையுலகில் எல்லாத் தரப்பிலும் நல்ல பெயர் எடுத்திருக்கும் அஜித், சில சமயம் சர்ச்சைகளிலும் மாட்டிக்கொள்கிறார் எனலாம். சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலின்போது, போட்டியிட்ட இரண்டு அணியினரும் அவரைச் சந்திக்க வேண்டும் என்றபோது அஜித் யாரையும் சந்திக்கவில்லை. காரணம், தனக்கு ஒரு பிரச்சினை என்று வந்தபோது நடிகர் சங்கத்தினர் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை என்ற வருத்தம்தான் என்கிறார்கள். நட்சத்திர கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விஷயங்களுக்காகப் பேசியபோதுகூட அஜித் யாரையும் சந்திக்க விரும்பவில்லையாம். கிரிக்கெட் போட்டிக்கான அழைப்பிதழைக்கூட அவர் வீட்டின் காவலாளியிடம்தான் கொடுக்க முடிந்ததாகக் கூறுகிறார்கள்.

தன்னைச் சுற்றி எழும் சர்ச்சைகளில் அஜித் பொதுவாகக் கருத்து தெரிவிப்பதில்லை. அதே சமயம், சர்ச்சைகளுக்குத் தூபம் போட்டு வளர்க்கும் விதத்தில் எதையும் செய்வதும் இல்லை. கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்தில் ஒலித்த அஜித் பாடலை விஷால் நிறுத்தினார் என்ற சர்ச்சை எழுந்தபோது அவரிடம் போய் அதைச் சொல்லியிருக்கிறார்கள். “நீங்கள் அங்கிருந்தீர்களா, இல்லையென்றால் அங்கிருந்தவர்கள் சொன்னார்களா?” என்று கேட்டிருக்கிறார் அஜித். “இல்லை… செய்தி வெளியாகி யிருக்கிறது” என்ற கூற “Leave it” என்று சொல்லிவிட்டாராம் அஜித்.

“பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா'வில் அஜித் பேசியது சர்ச்சையான பிறகுதான் அவர் நிறைய மாறிவிட்டார் என்கிறார்கள். ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருக்க ஆரம்பித்தவுடன் அவரது புகழ் மேலும் உயர்ந்து வருகிறது” என்று அஜித்தின் நண்பர்கள் சொல்கிறார்கள்.

மவுனமே ஆயுதமா?

கடின உழைப்பு, ரசிகர்களின் மகத்தான ஆதரவு என அவரைச் சுற்றி பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் சமீபத்திய சர்ச்சைகளுக்கு மவுனமே பதில் என்பது சரியானதில்லை என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது. நடிகர் சங்கத் தேர்தல், நடிகர் சங்கக் கடன் ஆகிய விஷயங்களில் ஒரு நடிகராக அஜித் மவுனத்தை மட்டுமே தனது பங்களிப்பாகத் தருவது சரியல்ல என்று பலர் கருதுகிறார்கள்.

அஜித்தின் திரைப்படங்கள் குறித்தும் ஒரு விமர்சனம் உள்ளது. பெருந்திரளான ரசிகர்களும் பெரும் வசூலுக்கான உத்தரவாதமும் கொண்ட அஜித் வித்தியாசமான முயற்சி எதிலும் ஈடுபடுவதில்லை. நடிக்கத் தொடங்கியபோது வித்தியாசமான பாத்திரங்களின் மீதும் நுட்பமான நடிப்பின் மீதும் அவருக்கு இருந்த ஆர்வம் இப்போது காணாமல் போய்விட்டது. வசூல் நாயகனாக மட்டும் இருந்தால் போதும் என்று அவர் நினைக்கிறாரா? இந்தித் திரையுலகில் மாபெரும் சூப்பர் ஸ்டார்கள்கூட அவ்வப்போது வித்தியாசமான, அர்த்தமுள்ள முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அவை வெற்றியும் பெறுகின்றன. அதுபோன்ற முயற்சிகளில் அஜித் ஏன் ஈடுபடுவதில்லை என்னும் கேள்வியும் எழுகிறது.

எப்படியிருப்பினும் அஜித்தின் கலையாத மவுனம், திரையுலகில் தனித்த, நிகழ்காலப் பண்பாளர்களில் ஒருவராக அடையாளம் காட்டுவதை அவரது போட்டியாளர்கள் கூட ஒப்புக்கொள்கிறார்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்!

அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ப்ளஸ், மைனஸ் என்ன என்பதைப் பட்டியலிட்டுங்கள் என 'தி இந்து' தமிழ் இணையத்தில் கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு வாசகர்கள் தங்களுடைய பதில்களைக் குவித்திருந்தார்கள். அவற்றில் தேர்ந்தெடுத்த சில..

ரமேஷ்குமார்:

பலம்: தனித்தன்மை - மற்ற சக நடிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட பார்வை, முன்மாதிரி - சினிமா ஒரு தொழில் என்பதை உணர்ந்த , உணர வைத்த மனிதர், பெப்சி பிரச்சினையில் தொழிலாளர் பக்கம் நின்று தோள்கொடுக்கும் தன்மை, தைரியம் - முதல்வர் முன் நின்று தனது பார்வையையும் வேண்டுகோளையும் வைத்தவர், அழகானவர், ஆனால் அழகை மட்டும் நம்பிச் செயல்படாதவர் (salt & pepper look), தோல்விகளில் துவளாதவர், மிகப் பெரிய ரசிகர் வட்டம் கொண்டவர்.

பலவீனம்: நடனம் மற்றும் உடல்வாகு - முதுகுத் தண்டுவடம் ஆபரேஷன் ஒரு காரணம். எளிதில் தொடர்புகொள்ள முடியாத நிலை, ஹீரோயிஸம் சார்ந்த கதைகளில் மட்டும் நடிப்பது. புது முயற்சி இல்லாமை.

தினேஷ்:

ப்ளஸ் - நல்ல மனிதர், பிறருக்கு உதவி செய்து அதை ரசித்து பார்க்கும் குணம், ஸ்டைல் & மாஸ், படத்தில் வரும் சிறப்பு வாய்ந்த வசனங்கள்.

மைனஸ்: சமீபத்திய மவுனம், ஃபிட்னெஸ்.

கோவர்தனன்:

ப்ளஸ்: தமிழ் சினிமா நடிகர்களில் தன் சுயலாபத்துக்காக ரசிகர்களைப் பணயம் வைக்காதவர். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றி இயக்குநர்களாக்கியவர். தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றவர். தன் கீழே பணிபுரிபவரையும் தனக்குச் சரிநிகராக நடத்துபவர். ஆதாரம் இல்லாமல் எதையும் நம்பாதவர். யாரையும் எதிரியாக எண்ணாதவர். உதவும் உள்ளம்.

மைனஸ்: இது வேண்டுகோள். வளரும் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் விழியில் உங்களைப் பார்க்க ஆசை அல்லது ஆர்வம்.

புதிய இந்தியன்:

ப்ளஸ்: தன்னுடைய உண்மையான தோற்றத்தில் நடிப்பது, பந்தா இல்லாதது.

மைனஸ்: சில முக்கிய நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது.

சந்தோஷ்:

ப்ளஸ்: மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தன்னடக்கத்துடன் இருப்பது, ரசிகர்ளைத் தங்களின் குடும்பத்தை கவனிக்கச் சொன்னது, யாருக்கும் தெரியாமல் உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்வது

மைனஸ்: தன்னைப் பற்றி வரும் தவறான தகவலுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் இருப்பது, ரசிகர்களின் தவறான போக்கைக் கண்டிக்காமல் இருப்பது (நல்லது செய்ய சொல்லிருக்கிறார்; ஆனால் எல்லை மீறும்போது கண்டித்தது இல்லை), எல்லாவற்றையும் விட்டு விலகியே இருப்பது.

உலகச் சுகாதார நாள்: நீரிழிவை வெல்வோம்

Saturday, April 30, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 29 - பயன்தரும் ஆரம்பம்

டாக்டர் ஆ. காட்சன்

இணைய அடிமைத்தன பிரச்சினையில் ஒருவேளை ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் அல்லது செயலியில் அதிக நேரத்தை விரயம் செய்தால், அதை ஸ்மார்ட்ஃபோனிலிருந்து நீக்கிவிடுவது நல்லது. மொபைல் ஃபோனில் அலர்ட் அல்லது செய்திகள் வந்துள்ளதை உணர்த்தும் சத்தத்தை நிறுத்தலாம். தேவையற்ற புக் மார்க் மற்றும் தேடுதல் வரலாற்றை (bookmarks and history) நீக்கிவிடலாம். மொத்தத்தில் கணினியை ரீஸ்டார்ட் செய்வதுபோலச் சமூக வலைதளங்களை பார்க்கும் நேரத்தைத் தலைகீழாக மாற்றுவது, பழக்கத் தோஷத்தில் நேரம் விரயமாவதைத் தடுக்க உதவும். உதாரணமாக, இரவில் நேரம்போவது தெரியாமல் பயன்படுத்துபவர்கள் பகலில் அவசியத் தேவைகளுக்குச் சிறிது நேரத்தைத் திருப்பலாம்.

மருந்து தேவைப்படலாம்

தற்போது மனநோய் வெளிப்பாடுகளும்கூட இணையத்தை அதிகமாகப் பயன்படுத்தும் முறையில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்படும்போது, இணைய அடிமைத்தனத்துக்கும் உட்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மன எழுச்சி நோயால் (Mania) பாதிக்கப்படும் இளைஞர்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்துவது, ஆபாச வலைதளங்களை அதிகம் பார்ப்பது, செல்ஃபோன் கொடுக்காவிட்டால் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது போன்ற அறிகுறிகளுடன் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள், இணையதளத்துக்கும் அடிமையாகவும் வாய்ப்புண்டு. இப்படி மன நோயின் பாதிப்புகளோடு இருக்கும் வளர்இளம் பருவத்தினர் மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது இணைய அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

ஐந்தில் வளையாதது

l சிறு குழந்தைகளை அமைதிப்படுத்தவும் தொந்தரவு இல்லாமல் இருக்கச் செய்யவும் மொபைல் ஃபோன்களை கொடுத்துப் பழக்குவதுதான் இணைய அடிமைத்தனப் பிரச்சினையின் ஆரம்பம். தொட்டில் பழக்கம் கடைசிவரை மாறாமல் போக வாய்ப்பு அதிகம்.

l இணைய விளையாட்டுகளுக்குக் குழந்தைகள் எளிதில் அடிமையாக வாய்ப்புள்ளதால், அவற்றை மொபைல் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

l இணையம், ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த அனுமதிக்கும் வயதை முடிந்தவரை காலம் தாழ்த்துவது நல்லது. கட்டாயம் தேவைப்படும் நேரத்தில் பெற்றோரின் கண்காணிப்பில் குறைந்த நேரம் பயன்படுத்த அனுமதிக்கலாம்.

l பள்ளி, கல்லூரிகளில் கணினி குறித்த பாடங்களோடு அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தையும் இணைய அடிமைத்தனத்தின் பின்விளைவுகளையும் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.

l வீட்டில் இருக்கும்போது சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும் நேரத்தை வரையறை செய்யவேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடனும், கல்லூரிகளில் இருக்கும்போதும் சமூக வலைதளப் பயன்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

l தேவைப்படும் நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் இணையத் தொடர்பை அணைத்து வைப்பது நல்லது. இதனால் அடிக்கடி சோதித்துப் பார்க்கும் எண்ணச் சுழற்சி குறையும்.

(அடுத்த வாரம்: இருதுருவ மனநிலை)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godson psychiatrist@gmail.com

எம்ஜிஆர் 100 | 55 - இசைபட வாழ்ந்தவர்!

1985-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இருந்து நடராஜர் சிலையை பரிசாக பெறுகிறார் மாண்டலின் னிவாஸ்.

எம்ஜிஆர் 100 | 55 - இசைபட வாழ்ந்தவர்!


M.G.R. ரசிகர்கள் பலதரப்பட்ட வகையினர். அவர்களில் ஒருவர் கர்னாடக இசைத்துறையைச் சேர்ந்த, மறைந்த மாண்டலின் இசைமேதை யூ. ஸ்ரீனிவாஸ். தனது தீவிர ரசிகராக இருந்தவரின் இசைக்கு, பின்னர் எம்.ஜி.ஆரே ரசிகராக மாறினார். அத்தகைய பெருமையை பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

தூர்தர்ஷனில் 1983-ம் ஆண்டு இசை அரங்கம் நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சி முடிந்தவுடன் தூர்தர்ஷன் இயக்குநருக்கு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் பேசியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.! எதற்காக அழைக்கிறார் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, ‘‘இப்போது தூர்தர்ஷனில் மாண்டலின் வாசித்த சிறுவனின் வாசிப்பு அபாரம். அந்தப் பையனின் தொலைபேசி எண் வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

அப்போது, வடபழனியில் தனது குருவின் வீட்டிலேயே தங்கி மாண்டலின் கற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த வீட்டில் தொலைபேசி கிடையாது. எனவே, வீட்டு முகவரியை எம்.ஜி.ஆருக்கு தூர்தர்ஷன் இயக்குநர் அளித்தார். மறுநாள், எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தவர் வந்து ஸ்ரீனிவாஸை சந்தித்து, முதல்வர் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், ‘‘எம்.ஜி.ஆர். தலைமையில் விரைவில் நடக்க உள்ள விழாவில் மாண்டலின் கச்சேரி செய்ய வேண்டும்’’ என்றும் கூறினார். அந்த விழா, நடிகர் கமல்ஹாசனுக்கு எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த பாராட்டு விழா!

கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த எம்.ஜி.ஆரை வெகு அருகில் பார்த்து மகிழ்ச்சியில் மனம் நிறைந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த விழாவில் மாண்டலின் கச்சேரியை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர், தமிழக அரசின் ஆஸ்தான கலைஞராக ஸ்ரீனிவாஸை நியமிக்கப் போவதாக மேடையிலேயே அறிவித்தார். அந்த வருடம் வெளியான ஆஸ்தான கலைஞர்கள் பட்டியலில் வாய்ப்பாட்டு கலைஞர் மகாராஜபுரம் சந்தானம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டவர்களுடன் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயரும் இடம் பெற்றது.

ஆஸ்தான கலைஞராக நியமிக்கப் பட்டபோது மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு வயது பன்னிரண்டுதான்! ஒருவரிடம் இருக்கும் திறமையை மட்டுமே எம்.ஜி.ஆர். பார்ப்பாரே தவிர, வயதை அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். பின்னர், தஞ்சையில் ஆஸ்தான கலைஞர்களை நியமிக்கும் விழா நடந்தபோதும் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் கச்சேரியை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார்.

அதன் பின்னர், கச்சேரிகள் செய்வதற் காக விமானப் பயணம் மேற்கொள் ளும்போது, சென்னை விமான நிலையத்தில் சில சமயங்களில் அங்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் பேச வேண்டும் என்று அவருக்கு ஆசை. என்னதான் இசைமேதையாக இருந்தாலும் சிறுவனான அவருக்கு எம்.ஜி.ஆரிடம் போய் பேசத் தயக்கம். அதுபோன்ற நேரங்களில், எம்.ஜி.ஆரே ஸ்ரீனிவாஸை அழைத்து, அன்புடன் விசாரிப்பார். ‘‘அது நான் செய்த பாக்கியம்’’ என்று பெருமை பொங்கக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

எம்.ஜி.ஆரின் வசீகரமான முகமும் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் துடிப்பான நடிப்பும் சிறுவயதிலேயே மாண்டலின் ஸ்ரீனிவாஸை ஈர்த்தது. அவரது படங்களில் இடம் பெற்ற அற்புதமான பாடல்கள், அதற்கான அபாரமான இசை ஆகியவற்றால் சொக்கிப்போனார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறிய ஸ்ரீனிவாஸ், மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து ரசிப்பார். அவர் மட்டுமின்றி, டி.வி.யில் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பானால் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே பார்த்து ரசிக்கும்.

1984-ம் ஆண்டு கச்சேரிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்ரீனிவாஸ் சென்றிருந்தார். அப்போது ஓய்வு நேரங்களில் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து தீர்த்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால், காரில் வெளியூர்களுக்கு ஸ்ரீனிவாஸ் செல்லும்போது எம்.ஜி.ஆர். படப் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார். ‘‘தன் படத்தில் இடம் பெறும் பாடல்களை எம்.ஜி.ஆரே கேட்டு டியூன்களை ஓ.கே. செய்வார் என்று கேள்விப்பட்டது உண்டு. அந்தப் பாடல்களை கேட்கும்போது, அவரது அபாரமான இசை ரசனையை புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று சிறுவயதிலேயே இசைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆரின் இசை ரசனையை வியந்து போற்றியுள்ளார்.

இசையை ரசித்தவர் மட்டுமல்ல; இசைபட வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




இந்தத் தலைமுறையினர் பலர் அறிந் திராத செய்தி இது. எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையமைப்பாளர் வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்திய நாதன் என்றுதான் முதலில் விளம்பரம் வெளியானது. ஆனால், பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். 1977-ம் ஆண்டு மார்ச் 5-ல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த ‘நவரத்தினம்’ படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். அவர் இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர். படம் ‘நவரத்தினம்’.

நீங்கள் தவிர்க்க வேண்டிய பாஸ்வேர்டு தவறுகள்! ....சைபர் சிம்மன்

THE HINDU

பாஸ்வேர்டு தொடர்பாகப் பிரபலமான நகைச்சுவைத் துணுக்குகள் பல இணையத்தில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்று, ‘சரியில்லாதது' என்பதற்கான ஆங்கிலச் சொல்லான ‘இன்கரெக்ட்' எனும் வார்த்தையை பாஸ்வேர்டாக மாற்றிக்கொண்டுவிட்டேன். ஏனெனில், பாஸ்வேர்டை மறந்துவிட்டால், உங்கள் பாஸ்வேர்ட் சரியில்லை என நினைவுபடுத்தும்” என்பதாகும்.

இந்தத் துணுக்கு சிரிக்கவும் வைக்கும். கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும்.

ஆனால் பாஸ்வேர்டுகளை விளையாட்டாக எடுத்துக் கொள்வதற்கில்லை. அவைதான் உங்கள் இணையப் பாதுகாப்புக்கான சாவி. இந்தச் சாவியைக் கவனமாகக் கையாள்வது அவசியம். இல்லை எனில் அது இணையக் கள்வர்கள் கையில் சென்றுவிடும் அபாயம் இருக்கிறது.

பொதுவாகப் பாதுகாப்பான பாஸ்வேர்டுக்குச் சொல்லப்படும் அடிப்படையான விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இணையம் வளர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், இணையப் பாதுகாப்புக்கான சவால்களும் அதிகரித்துவருவதால் பாஸ்வேர்டு பாதுகாப்பையும் நீங்கள் அப்டேட் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பாஸ்வேர்டு நீளம்

உதாரணத்துக்கு வலுவான பாஸ்வேர்டுக்கான அடிப்படை விதியை எடுத்துக்கொள்வோம். ஒரு காலத்தில் நல்ல பாஸ்வேர்டு குறைந்தது ஆறு எழுத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்கும் குறைவாக எழுத்துக்கள் இருந்தால், அவை எளிதாக ஊகிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால் இன்றைய ஹேக்கர்களோ, ஆறு எழுத்து பாஸ்வேர்ட்களைக்கூட மிக எளிதாக ஊகித்துவிடக்கூடிய அளவுக்கு அவர்கள் கையாளும் கணினிகள் ஆற்றல் கொண்டிருக்கின்றன. எனவே இப்போது பாஸ்வேர்டுகள் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். 10 முதல் 12 எழுத்துக்கள் கொண்டதாக இருந்தால் இன்னும் நல்லது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கணக்குகளுக்கானது என்றால் தயங்காமல் 14 முதல் 16 எழுத்துக்களில் பாஸ்வேர்டை அமைத்துக்கொள்ளலாம் என்று வல்லுந‌ர்கள் சொல்கின்றனர். ஆக, பாஸ்வேர்டுக்கான நீளம் பற்றிய உங்கள் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள்.

பாஸ்வேர்டுக்குப் பதில் பாஸ்பிரேஸ்

அடுத்ததாகச் செய்ய வேண்டிய விஷயம், உங்கள் பாஸ்வேர்டு குழப்பமானதாக இருக்க வேண்டும். அதாவது பாஸ்வேர்டு எளிதாக இருக்கக் கூடாது. 1 முதல் 12 வரை கொண்ட எண்களை வைத்துக்கொள்வதோ, ஆங்கில அகர வரிசையில் முதல் 8 எழுத்துக்களை வைத்துக்கொள்வதோ நல்ல பாஸ்வேர்டாகிவிடாது. பாஸ்வேர்டு பூட்டை உடைக்கும் ஹேக்க‌ர்கள் இவற்றை எல்லாம் நொடியில் ஊகித்துவிடுவார்கள். இதைத் தவிர்க்க, வெறும் எழுத்துக்களைக் கொண்டு மட்டுமே பாஸ்வேர்டு அமைக்காமல், இடையே எண்கள், நிறுத்தல் குறிகள் மற்றும் சிறப்புக் குறியீடுகளைப் பயன்படுத்துங்கள்.

முதலில் சில எழுத்துக்கள் அதைத் தொடர்ந்து சில எண்கள், அதன் பிறகு சிறப்புக் குறியீடுகள், பின் மீண்டும் சில எண்கள் இறுதியில் சில எழுத்துக்கள்... இப்படி இருந்தால் உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பில் பல படிகளைக் கொண்டிருக்கிறது என பொருள்.

இதற்கான எளிய வழி, வார்த்தைகளைக் கொண்டு பாஸ்வேர்டை யோசிக்காமல், ஒரு ஆங்கிலச் சொற்றொடரை எடுத்துக்கொண்டு அதில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் வரிசையாக எழுதிவிட்டுப் பின்னர் இடையிடையே எண்களையும், நிறுத்தல் குறிகளையும் சேர்க்கலாம் என்கின்றனர். இந்த முறை ‘பாஸ்பிரேஸ்' (passphrase) எனக் குறிப்பிடப்படுகிறது.

பாஸ்வேர்டு பார்ப்பதற்குப் படு சிக்கலாகத் தோன்றும். ஆனால் அதன் அடிப்படையாக அமைந்த சொற்றொடரைக் கொண்டு பாஸ்வேர்டை மறக்காமலும் இருக்கலாம்.

தேவை தனித்தனி பாஸ்வேர்டு

நீளமான பாஸ்வேர்டுகளை அமைப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது கஷ்டமாக இருக்கும் என்பதுதான். பாஸ்வேர்டு தொடர்பாகப் பலரும் செய்யும் இரண்டு தவறுகளுக்கு இது வழிவகுக்கலாம்.

ஒன்று, அதுதான் சூப்பர் ஸ்டிராங் பாஸ்வேர்டு உருவாக்கியாச்சே என்ற நம்பிக்கையில், எல்லா இணையச் சேவைகளுக்கும் அதே பாஸ்வேர்டைப் பயன்படுத்தத் தோன்றும். இது நடைமுறையில் எளிதாக இருக்கலாம் என்றாலும் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ஒரு சேவையில் பாஸ்வேர்டு திருடப்படும் நிலை ஏற்பட்டால், அந்த ஒரு கள்ளச்சாவியைக் கொண்டே விஷமிகள் ஒருவரது மற்ற இணைய சேவைகளுக்கு உள்ளேயும் எளிதாக நுழைந்துவிடுவார்கள்.

இமெயிலுக்கான பாஸ்வேர்டு மெயிலுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும். பேஸ்புக்கிற்கும், ட்விட்டருக்கும், இன்னும் பிற இணையச் சேவைகளுக்கும் கட்டாயம் தனித்தனி பாஸ்வேர்டு தேவை.

வேண்டுமானால், ஒரு அடிப்படை பாஸ்வேர்டை உருவாக்கிவிட்டு, ஒவ்வொரு சேவைக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்து அவற்றைப் பயன்படுத்தலாம்.

பாஸ்வேர்டு மேனேஜர்

ஆனால், இப்படி தனித்தனியே பல பாஸ்வேர்டுகளை உருவாக்கிக் கொள்ளும்போது, அவற்றை எல்லாம் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கும் எண்ணம் இயல்பாக எழலாம். இதைவிட ஆபத்தானது எதுவும் இல்லை என்று இணையப் பாதுகாப்பில் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது.

ஹேக்க‌ர்கள் உங்கள் சிஸ்டத்தில் கைவரிசை காட்டலாமே தவிர, உங்கள் மேஜையில் கைவிட்டு இந்தக் காகிதத்தை எடுக்க முடியாதுதான். ஆனால் உங்கள் வீட்டிற்கு வரும் வேறு யாரேனும் கையில் கிடைத்தால் சிக்கலாகலாம். நினைவில்லாமல் இவற்றைத் தூக்கி வீசினாலும் பிரச்சனை ஆகலாம். நிறைய பாஸ்வேர்டுகளை நினைவில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் பாஸ்வேர்டு மேனேஜர் சேவைகளை நாடலாம். இணையத்தில் நிறைய பாஸ்வேர்டு மேனேஜர் சேவைகள் உள்ளன. அவற்றைப் பரிசீலித்துப் பாருங்கள்.

பாஸ்வேர்டு மேனேஜர் மென்பொருட்களைப் பயன்படுத்தினாலும் சரி, பாஸ்வேர்ட்களை நீங்கள்தான் கவனமாகப் பராமரிக்க வேண்டும்.

அதாவது, தேவை எனில் பாஸ்வேர்ட்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு 3 மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாஸ்வேர்டுகளை மாற்றுவது நல்லது எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது. இப்படி அடிக்கடி மாற்றுவது நல்லதல்ல என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.

என்றாலும், நிச்சயமாக ஆண்டுக் கணக்கில் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவது பாதுப்பானது இல்லை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் உங்கள் பாஸ்வேர்டை தூசி தட்டி அப்டேட் செய்துவிட வேண்டும். அதிலும் குறிப்பாக, இமெயில் சேவைகளிலிருந்து ‘உங்கள் கணக்கில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கை நிகழ்ந்துள்ளது, பாஸ்வேர்டை மாற்றுங்கள்' என எச்சரிக்கை வந்தால் அலட்சியம் செய்யக் கூடாது.

மண்டை ஓடு பாஸ்வேர்டு

நிற்க, இணையவாசிகளை இத்தகைய சிக்கல்கலிருந்து எல்லாம் விடுவிக்கும் வகையில், ஓயாமல் பாஸ்வேர்டு ஆய்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

பயனாளிகளுக்கு எளிதான ஆனால், ஹேக்க‌ர்கள் கைவைக்க முடியாத பாஸ்வேர்டை உருவாக்குவது தொடர்பாக மாற்று வழி சாத்தியமா எனும் திசையிலும் ஆய்வுகள் நடக்கின்றன.

இவற்றில் சுவாரஸ்யமான ஒன்று, பயனாளிகளின் மண்டை ஓட்டை பாஸ்வேர்டுக்கான மாற்றாகப் பயன்படுத்த முடியுமா என்பதாகும். அமெரிக்காவின் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பிரபலங்கள், உணவு வகைகள் போன்ற ஒளிப்படங்களைப் பார்க்கும்போது மூளை அவற்றை எதிர்கொள்ளும் விதத்தையே பாஸ்வேர்டாக்க முடியுமா எனும் கேள்வியுடன் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொருவரது மூளையும், இந்தத் தகவல்களை எதிர்கொள்ளும் விதம் தனித்தன்மை மிக்கதாக இருப்பதால், இந்த முறையையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்த முடியும் என கருதுகின்றனர்.

இதே போல ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மண்டை ஓட்டுக்குள் ஒலி மோதி திரும்பும் வித்தியாசங்களைக் கணக்கிட்டு அதை பாஸ்வேர்டாக மாற்ற முடியுமா என ஆய்வு செய்துவருகின்றனர்.

CET students lose sleep over 1st phase of NEET tomorrow Bengaluru: April 30, 2016, DHNS:


For students who aspire to study MBBS or BDS course in Karnataka, cracking the Common Entrance Test (CET) has been their first priority. Probably, not anymore.

With the Supreme Court ruling on National Eligibility cum Entrance Test (NEET), many students have been forced to concentrate — at a short notice — on an entrance exam that was at the bottom of their priority list just a few days ago.

As per the court’s direction, the existing All India Pre-Medical/Pre-Dental Entrance Test (AIPMT), scheduled for Sunday, will be the first phase of NEET. Students who are unable to take this exam can appear for NEET-II on July 24.

Confusion prevails

Students, however, remain confused. Since a number of MBBS/BDS aspirants didn’t register for the AIPMT, they fear that if they don’t take it on Sunday, they will become ineligible and cannot get another chance.

Abdul Qadeer, secretary, Shaheen PU College, Bidar, said that a number of students were asking him about the possibility of skipping NEET-I in the hope they can register for and take NEET-II.

Vaishnavi Prakash, a student at Little Rock Indian School, Brahmavar in Udupi district, said she had been mainly preparing for the CET given its several advantages.

“I registered for the AIPMT too, but didn’t prepare much for it. The CET it is easier than the AIPMT. The CET doesn’t have negative marks but the AIPMT does,” she said. “I am in a complete state of shock given the short notice of the exam.”

‘Undue advantage’

Many students also feel that those who take NEET-II (on July 24) will get an undue advantage, as they will have at least two months to prepare. Krishnappa Shivapappa, another student, has not registered for NEET-II.

“All of this has happened so sudden. Karnataka CET was my first preference. It is more entwined with the state’s pre-university syllabus. I wonder how poor people living in rural areas like me will appear for the AIPMT or NEET. I am very disturbed,” he said.

He said it would be “serious injustice” if some students got three months to prepare and others just three days.

NEWS TODAY 04.06.2026