Friday, December 9, 2016

ஜெயலலிதா வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய கடலூர் By DIN | Published on : 09th December 2016 10:20 AM |

jayalalitha

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய நகரமாக கடலூர் திகழ்வதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசியலில் உச்சம் தொட்ட ஜெயலலிதாவின் வாழ்வில் கடலூர் மாவட்டம் முக்கியப் பங்கு வகித்ததை கட்சியினர் நினைவுகூர்ந்தனர். ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தின் போது கடலூர் மாவட்டம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது கடலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழிதேவனை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், "எனது அரசியல் கடலூரில்தான் தொடங்கியது' என நினைவுகூர்ந்ததை இன்றைய தலைமுறையினரும் கேட்டிருக்கலாம்.
இதுகுறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், தற்போதைய சென்னை மாவட்ட கூடுதல் சிவில் நீதிபதியுமான எம்.ராஜலட்சுமி கூறியதாவது:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தட்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் எனது தந்தை மாரிமுத்து கவுண்டர். அவர் அதிமுக விசுவாசி என்பதால் எனக்கும் அந்தக் கட்சியின் மீது ஈர்ப்பு இருந்தது. சட்டம் படித்து விட்டு வழக்குரைஞர் தொழில் செய்தபோது 1982-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 19ஆம் தேதி கடலூர், விழுப்புரம் பகுதிகள் ஒன்றிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் அதிமுக சார்பில் அனைத்து மகளிர் அணி மாநாடு நடத்தப்பட்டது.
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத என்னை எம்ஜிஆர் அழைத்து, "முதல் நாள் மாநாட்டுக்கு நீ தான் தலைமை' என்றார். இதை என்னால் நம்பவே முடியவில்லை.
திருவந்திபுரத்திலிருந்து தொடங்கிய பேரணி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் முடிந்து, அங்கு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அதிமுக உறுப்பினராக ஜெயலலிதா சேர்ந்தார். மாநாட்டில் பலரும் உரையாற்றினர். அப்போது அங்கு வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா பேசிவிட்டாரா? எனக் கேட்டார். இல்லையென்றதும் அவர் பேச அழைக்கப்பட்டார்.
ஜெயலலிதா பேசுகையில், "ராமர் இலங்கை செல்வதற்கு பாலம் அமைக்கும் பணியில் அணில் எவ்வாறு செயல்பட்டதோ, அதேபோல எம்ஜிஆரின் பணிக்கு அணில் போல நான் செயல்படுவேன் என்று பேசினார். அன்று தொடங்கிய ஜெயலலிதாவின் அரசியல் மேடைப்பேச்சு, தமிழகத்தில் ஆட்சிபுரியும் அளவுக்கு அவரை உயர்த்தியது. அதில் நானும் பங்கெடுத்தேன் என்பதே மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றார்.
கடலூர் மாவட்ட அதிமுக துணைச் செயலரும், கட்சியின் மூத்தத் தலைவருமான கே.முருகுமணி கூறியது:
1986ஆம் ஆண்டு மதுரையில் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அப்போது, ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட மாணவரணிச் செயலராக இருந்த என்னை மாநாட்டுக்கு தலைமை வகிக்க எம்ஜிஆர் பணித்தார். மாநாட்டில் கொள்கை பரப்புச் செயலர் ஜெயலலிதா வழங்கிய வெள்ளி செங்கோலை பெற்றுக்கொண்ட எம்ஜிஆர், அதை திரும்ப அவரிடமே வழங்கினார். இது கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஜெயலலிதாவிடம் வழங்கியதற்கான சமிஞ்கையாக அப்போதே பார்க்கப்பட்டது என்றார்.

ஜெயா இல்லாத சசி இனி என்ன செய்வார்?

jaya_with_sasi

ஜெயா இல்லாத சசி இனி என்ன செய்வார்?

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 06th December 2016 04:17 PM 

80 களில் ஜெயலலிதா அ.தி.மு.க வுக்கு தமிழகம் முழுதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான் முதன்முறையாக சசிகலாவின் அறிமுகம் கிடைக்கிறது. மைலாப்பூரில் ஒரு சாதாரண வீடியோ கவரேஜ்& லெண்டிங் லைப்ரரி வைத்திருந்த சசிகலா நடராஜனுக்கு அந்த தேர்தல் பயணம் முழுக்க ஜெயலலிதாவின் உடனிருந்து அவரது பிரச்சாரப் பேச்சுகளை கவரேஜ் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. இப்படித்தான் ஆரம்பமானது இவர்களது நட்பு. பின்னர் அது விருட்சமாக வளர்ந்து சின்னம்மா இல்லாமல் ‘அம்மா’ இல்லை எனும் நிலையை வெகு சீக்கிரத்திலேயே அடைந்தது.

ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கையில் நடிகர் சிவக்குமார் தெரிவித்ததைப் போல ‘பெற்ற தாய் இல்லை, தகப்பனார் இல்லை, உடன் பிறந்த அண்ணன் இல்லை, தனக்கான ஆதரவென்று எம்.ஜி.ஆர் அளித்த அரசியல் அறிமுகத்தைத் தவிர வேறு எந்த விதமான உதவிகளும், உறுதுணைகளும் இன்றி தன்னை மட்டுமே நம்பி தனியொரு பெண்ணாக அரசியலில் ஜெயலலிதா சாதித்தது மிக அதிகம்.’

அப்படி சாதித்தவரின் நம்பிக்கைக்குரியவராவதும் அப்படி ஒன்றும் எளிதான காரியமில்லை. சசிகலா நட்பான அந்த தேர்தல் பிரச்சார விடியோ கவரேஜ்களில் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை உருவகப்படுத்தக் கூடிய வகையிலான அத்தனை சாத்தியங்களையும் ‘சசிகலா அண்ட் கோ’ செய்திருந்தது. ஜெயலலிதாவே கூறியதைப் போல ‘தனது தாயின் இடத்தை எடுத்துக் கொண்டவராகவே’ சசிகலா ஜெயலலிதாவால் குறிப்பிடப்பட்டார். ஜெயலலிதா தான் இழந்து விட்டதாக நினைத்த தாயின் கவனிப்பையும், அரவணைப்பையும் சசிகலா மூலமாகப் பெற்றதாக நம்பினார். சசிகலா ஜெயலலிதாவின் வாழ்வில் நுழைய அவரது அம்மா சந்தியாவின் மறைவு ஓரு முக்கிய காரணமானதை விட ஜெயலலிதாவுக்கு அதற்கு முன் அத்யந்த நட்புகள் என எதுவும் இல்லாமல் போன வெற்றிடமும் பெருங்காரணமாக இருந்தது எனலாம்.
திரையுலகுக்கு வந்த சில வருடங்களில் நடிகை ஷீலா ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக சில காலம் அடையாளம் காணப்பட்டார். பின்பு இந்த நட்பிற்கு ஆயுள் குறைந்து ஜெயலலிதாவின் வாழ்விலிருந்து அவர் முற்றாக மறைந்து போனார். எழுத்தாளர் சிவசங்கரி, நடன இயக்குனர் ரகுராம் எனச் சிலரை தன்னது நட்பு வட்டத்தில் எப்போதும் வைத்திருந்தார் ஜெயலலிதா. ஆனாலும் எந்த ஒரு நட்புக்கும் சசிகலாவுக்கு கிடைத்த இந்த மாபெரும் அங்கீகாரமோ, அதிகாரமோ கிடைக்கவில்லை. எல்லோருமே ஒரு கால கட்டத்தில் ஜெயலலிதாவின் வாழ்விலிருந்து தூரமாகிக் கொண்டே சென்றார்கள். இவர்களில் அறிமுகமான நாட்கள் தொட்டு ஜெயலலிதாவின் அனைத்து வெற்றிகளிலும், தோல்விகளிலும் அவரை விட்டு நீங்காத துணையாக இருந்தவர் சசிகலா மட்டுமே!

ஒருமுறை எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் குறிப்பிட்டதாக ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது; ராஜம் கிருஷ்ணன் தமிழில் அன்றும் இன்றும் என்றும் மறக்க இயலாத இலக்கிய ஆளுமை, அவர் சந்தியாவின் நெருங்கிய தோழியாகவும் இருந்தார். ஒரு முறை ராஜம் கிருஷ்ணனை சந்திக்கப் போன சந்தியா சில மணி நேரங்களில் கடிகாரத்தைப் பார்த்து பரபரப்படைந்து ‘அடடா! இத்தனை நேரமாகி விட்டதே... அம்மு ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்துடுவாளே, அவ வரும் போது நான் வீட்ல இல்லைன்னா கோவிச்சுப்பாளே! அவ வீட்டுக்கு வரும் போது நான் வீட்ல இருக்கணும்’ என்று உடனடியாக விடை பெற்றுச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இது ஒரு அம்மாவுக்கு மகளின் மீதிருந்த பாசம் என்பதைத் தாண்டி ஜெயலலிதா தன் அம்மாவை எத்தனை தூரம் சார்ந்திருந்தார் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

அப்பேர்ப்பட்ட அம்மாவின் இழப்பின் பின் அவரது இடத்தைத் தான் ஜெயலலிதா சசிகலாவுக்கு தந்திருந்தார். இப்படித்தான் வேதா இல்லமாக இருந்து போயஸ் கார்டனாக மாறிய ஜெயலலிதாவின் மாளிகையில் சசிகலா கால் வைத்தார். முதலில் தம்பதி சமேதராக உள்ளே வந்தார்கள். பிறகு தன்ன்னை டாமினேட் செய்யப் பார்க்கிறார் என்று குற்றம் சாட்டி நடராஜன் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டார். ஆனால் சசிகலா தனது உடன்பிறவா அக்காவான ஜெயலலிதாவை விட்டு அகலவில்லை. கணவன் வெளியேற்றப் பட்டபோதும் ஜெயலலிதாவுடனேயே சசிகலாவை நீடிக்க செய்தது எதுவோ அதுவே ஜெயலலிதாவையும் சசிகலாவை விட்டுப் பிரியாதிருக்கச் செய்திருந்தது.

96 ஆம் வருட இறுதியில் ஜெயலலிதா பல ஊழல் வழக்குகளில் சிக்கி அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவரது நலம் விரும்பிகள் பலரும். ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலமே சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் அதிகார துஷ் பிரயோகத்தால் அஸ்தமனமாகி விடும், எனவே உடனே அவரை போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றுங்கள் என அறிவுறுத்தினார்கள். அப்போது தனது பத்திரிகைப் பேட்டி ஒன்றின் மூலம் ஜெயலலிதா அளித்த பதில்;
‘எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, அண்ணன் இல்லை, உறவினர்கள் இருக்கலாம். ஆனால் அவர்களில் யாரும்ம் அவரவர் சொந்தக் குடும்பங்களை விட்டு விட்டு என்னுடன் வந்து தங்கி என்னையும் எனது வாழ்வையும் கவனிக்கத் தயாராக இல்லை. சசிகலா ஒருவர் மட்டுமே தன் குடும்பம் , தனது கணவர் என எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து என்னுடனேயே தங்கி எனக்கொரு உடன்பிறவா சகோதரியாக என் மீது அக்கறை காட்டினார். உண்மையாகச் சொல்லப் போனால் என்னுடன் இருப்பதனால் மட்டுமே தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட ஒரு பெண் அவர். அவர் எனது அரசியல் விவகாரங்களில் தலையிடுவதே இல்லை.’ என்பதே. சசிகலா அரசியல் விவகாரங்களில் தலையிட்டாரா? இல்லையா? என்பதில் அவரவர்க்கு ஆயிரமாயிரம் விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் ஜெயலலிதாவின் மறுக்க முடியாத உறவுப் பட்டியலில் இருந்தார் என்பதற்கு யாருக்கும் எந்த விதமான விமரிசனங்களும் இருக்க வாய்ப்பே இல்லை.

இறுதியாக ஒரு வார்த்தை...

ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி நேர்காணலில் ஜெயலலிதா தெரிவித்ததைப் போல ’ஒரு வேளை தனக்குத் திருமணம் ஆகியிருந்தால் அப்போதைய 70 களின் வழக்கபபடி தானும் ஒரு அரசாங்க அதிகாரியாக உயர் பொறுப்பில் இருந்து கொண்டு நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக தன் கடமையைச் செய்து கொண்டிருந்திருக்கக் கூடும். என்று சொன்னதற்கிணங்க, அப்படி ஏதாவது நடந்திருந்தால் நமக்கு இப்போதைய இந்த இரும்புப் பெண்மணி கிடைத்திருக்க மாட்டார்.

இதுவரை ஜெயலலிதாவுடனான சசிகலாவை, ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலாவைத் தான் நாம் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இனி ஜெயா இல்லாத சசி என்ன செய்வார்?

234 நாட்களில் ஒரு ஸ்டேடியம்... ஜெயலலிதாவால் மட்டுமே இது சாத்தியம்!


மறைந்த முதல்வர் ஜெயலலிதா விளையாட்டுப் பிரியர். விளையாட்டுத் துறைக்கு அவர் எப்போதும் ஸ்பெஷல் கவனம் செலுத்தி வந்தார். அவர் புண்ணியத்தில்தான் தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் உள்கட்டமைப்பு ஓஹோவென இருந்தது. நேரு ஸ்டேடியம் அதற்கு ஒரு சான்று.

முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராக அரியணை ஏறியதும், 1993ல் கார்ப்பரேஷன் பூங்கா இருந்த இடத்தில் நேரு ஸ்டேடியத்தை கட்டினார். நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ரூ. 44 கோடி மதிப்பிலான அந்த ஸ்டேடியம் வெறும் 234 நாட்களில் கட்டப்பட்டது. ஜெயலலிதாவின் உந்துதலால் மட்டுமே இது சாத்தியமானது. வேகமாக கட்டினாலும், சர்வதேச தரத்திலும் அமைந்தது கூடுதல் பெருமை. இதற்கான எல்லா பெருமையும் அவரையே சாரும்.

சென்னையில் சர்வதேச தரத்தில் ஒரு ஸ்டேடியம் அமைய வேண்டும் என்ற, தமிழ்நாடு கால்பந்து சங்க முன்னாள் செயலர் சி.ஆர்.விஸ்வநாதன் கனவு நனவானது அப்போதுதான். புதிதாக கட்டப்பட்ட இந்த மைதானத்தில்தான் நேரு கோல்டு கப் கால்பந்து தொடர் நடந்தது.

அதன்பின், ஜெயலலிதாவின் ஆட்சியில், கடந்த 2013ல் சின்தெடிக் டிராக், ஃபுட்பால் டர்ஃப், ஃப்ளட் லைட், வார்ம் அப் கிரவுண்ட் என மொத்தம் ரூ. 33 கோடி செலவில் நேரு மைதானம் புதுப்பிக்கப்பட்டது. அன்று முதல் நேரு மைதானத்தில் இரவு - பகல் என எப்போது வேண்டுமானாலும் போட்டிகளை நடத்தலாம், பயிற்சி செய்யலாம் என்ற சூழல் உருவானது. இப்போது ஐ.எஸ்.எல். போட்டிகள் நேரு மைதானத்தில் ஜெகஜ்ஜோதியாக நடந்து வருகிறது.

பல்நோக்கு காரணங்களுக்காக கட்டப்பட்ட சென்னை நேரு மைதானம் இந்தியாவில் உள்ள சிறந்த மைதானங்களில் ஒன்று. விளையாட்டு தவிர்த்து, கலை நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நடப்பது உண்டு. தவிர, வாலிபால், டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால் ஆடுவதற்கேற்ப, 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கவல்ல உள் விளையாட்டு அரங்கை அமைத்த பெருமையும் ஜெயலலிதாவையே சாரும். பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு அரங்கங்கள், ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அமைத்தது என, அவர் ஏற்படுத்தித் தந்த உள் கட்டமைப்பு வசதிகள் ஏராளம்.

சென்னையில் 1995ல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதற்கு முழு முதல் காரணம் ஜெயலலிதா. கிட்டத்தட்ட சென்னையில் நடந்த பெரிய சர்வதேச அளவிலான முதல் போட்டி இதுவே. அப்போதுதான் ஹாக்கி ஃபைனலில் இந்தியா - பாகிஸ்தான் மோதின. இந்தியாவின் தன்ராஜ் பிள்ளை, பாகிஸ்தானின் ஷபாஸ் அகமது இருவரும் உச்சத்தில் இருந்த சமயம் அது. எனவே அந்த போட்டியும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.



சென்னையில் 2013ல் வேர்ல்ட் செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. உள்ளூரில் விளையாடியது ஆனந்துக்கு நெருக்கடியை கொடுத்தது என்றாலும், அந்த தொடரை இங்கு கொண்டு வந்ததும், அதற்கு 30 கோடி செலவு செய்ததும், பாராட்ட வேண்டிய விஷயம். சமீபத்தில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பில், சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சனுக்கு, அந்தளவு பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்பது கவனிக்க வேண்டியது.

கடந்த 2012ல் வேர்ல்ட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 கோடி கொடுத்து கெளரவித்தார் ஜெயலலிதா. இதற்கு விமர்சனம் எழுந்தபோது, ‛ஒலிம்பிக்கில் வெல்லும் தங்கத்தை விட இந்த சாதனை பெரிது. அதனால் ஒலிம்பிக் தங்கத்துக்கு நிகரான பரிசு வழங்கப்படுகிறது’ என காரணம் சொன்னார். அதோடு, செஸ்ஸை பள்ளி அளவில் மேம்படுத்த ஆனந்திடம் அறிவுறுத்தியிருந்தார்.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கான பரிசுத் தொகையை அதிகரித்தது ஜெயலலிதாவின் பெருமை பேசும். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 2 கோடி, காமன்வெல்த், ஏசியன் கேம்ஸில் தங்கம் வென்றால் ரூ.50 லட்சம் என, அள்ளி வழங்கினார். அதை விட, நேஷனல் கேம்ஸில் முதலிடம் பிடித்தால் ரூ.5 லட்சம் என அறிவித்தது பாராட்ட வேண்டிய விஷயம்.

இன்ஜினனீரிங் கல்லூரிகளில் விளையாட்டுத் துறைக்கான இட ஒதுக்கீட்டை 100ல் இருந்து 500 ஆக உயர்த்தியதும் அவரது சாதனையே. ஒரு கட்டத்தில் சென்னையில் இருந்து வெளியேறுவதாக இருந்த ஏ.டி.பி. டென்னிஸ் தொடரை, இங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து, ஸ்பான்சர் அளித்ததற்கும் ஜெயலலிதாவே காரணம் என்கின்றனர் டென்னிஸ் பிரியர்கள்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களைக் கண்டறித்து, ஆண்டுதோறும் ஐந்து வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் செலவில், போதிய வசதி வாய்ப்புகளை செய்து தருவதற்காக, உருவாக்கப்பட்ட எலைட் பேனல்’ திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், அதில் பயன்பெற்ற யாரும் ஒலிம்பிக் செல்லவில்லை என்பது வேறு விஷயம்.

சி.எம்.டிராபி. இதுதான் விளையாட்டுத் துறைக்கு ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் அல்டிமேட். ஏதோ ஒரு கணத்தில் அவர் கற்பனையில் உதித்த ‘முதல் அமைச்சர் கோப்பை’ உண்மையிலேயே நல்ல விஷயம். முதலிடம் பிடித்தால் ஒரு லட்சம், குழு விளையாட்டு எனில் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம், மாவட்ட அளவில் வென்றவர்களுக்கும் ஆயிரக் கணக்கில் பரிசு என, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு பரிசு கொடுத்ததில்லை. பாராட்டுக்குரிய விஷயம். ஆனால், இதை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முறையாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.



சில குறைகளும் உண்டு. 2014ல் செஸ் ஒலிம்பியாட்டில் 2014 வெண்கலம் வென்ற வீரர்களுக்கு ஒரு பைசா கூட தரவில்லை. வாழ்த்து கூட சொல்லவில்லை. ரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற வீரர்களுக்கும் வாழ்த்து இல்லை. ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸில் ஜெயித்தவர்களுக்கு உடனே வழங்குவது போல, நேஷனல் கேம்ஸில் ஜெயித்தவர்களுக்கு உடனடியாக பரிசுத் தொகை வழங்குவதில்லை. 2014ல் ஜெயித்தவர்களுக்கு இன்னமும் பணம் கிடைத்தபாடில்லை.

ஜெயலலிதாவை எளிதில் அணுக முடியாத காரணத்தினால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அண்டர் -17 வேர்ல்ட் ஃபுட்பால் கப் சென்னையில் இருந்து நழுவி விட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மெம்பர் செகரட்டரியை மாற்றிக் கொண்டே இருப்பதும், விளையாட்டுத் துறை அமைச்சருக்கு அதிகாரமே இல்லாமல் இருப்பதும் அவர் மீதான குறைகள்.

இலங்கைக்கு விளையாட சென்ற இரண்டு வாலிபால் வீரர்களை திரும்ப வரவழைத்தது, ஒரு ஸ்டேடியம் ஆஃபீசரை சஸ்பெண்ட் செய்தது, நேரு மைதானத்தில் உள்ள வாலிபால் அலுவலகத்துக்கு சீ்ல் வைத்தது எல்லாம், அவருக்கு நெகட்டிவ் மார்க் பெற்றுத் தந்தன.

ஆனாலும், நேரு மைதானம் அவர் பெருமையை நின்று பேசும்.

அதிமுகவை வசப்படுத்த தீவிர முயற்சி: வெல்லப் போவது பாஜகவா? காங்கிரஸா? - காய் நகர்த்தும் தலைவர்கள் எம்.சரவணன்

கோப்பு படம்

Return to frontpage

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரு மான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அக்கட்சியை வசப்படுத்த காங்கிரஸும், பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் 75 நாட்களாக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு காலமானார். அவரது மரண அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 31 அமைச் சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது.

செல்வாக்கு மிக்க ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிகார மாற்றம் சுமுகமாக நடந்தாலும் அதன் பின்னணியில் நடந்த சம்பவங்கள் அடுத்து வரப்போகும் மாற்றங்கள், குழப்பங்களுக்கு கட்டியம் கூறுவதுபோல இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே தமிழக அரசு நிர்வாகத்தை மத்திய அரசு தனது கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் சென்னை வந்து, இங்கேயே முகாமிட்டுள்ளனர்.

ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத் துக்கு காலை 7 மணிக்கே வந்த வெங்கய்ய நாயுடு, உடல் அடக்கம் செய்யப்படும் வரை உடனிருந்து அனைத்தையும் கவ னித்து வந்தார். அவரது ஆலோசனையின்படியே ஓ.பன்னீர் செல்வம் புதிய முதல்வராக பதவியேற் றுள்ளார்.

இன்னும் 7 மாதங்களில் குடியரசுத் தலை வர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற வுள்ளது. இத்தேர்தலில் 50 எம்.பி.க்கள், 136 எம்எல்ஏக்களை கொண்டுள்ள அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது. எனவே, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மூலம் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாஜக காய் நகர்த்துகிறது. இதற்காக சசிகலா உள்ளிட்டோர் மீதுள்ள வழக்குகளும் ஆயுதமாக பயன் படுத்தப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை உறுதிப்படுத்துவதுபோல ஜெய லலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, சசிகலாவின் தலையில் கை வைத்தும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்டியணைத்தும் ஆறுதல் கூறினார். சசிகலாவின் கணவர் நடராஜனை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் மோடியிடம் அறிமுகப்படுத்தினார். அதை மோடி கவனிக்காதபோதும் தொடர்ந்து மூன்று, நான்கு முறை நடராஜனை அறிமுகப்படுத்த இல.கணேசன் முயற்சித்தார். அந்த முயற்சி, ஏதோ நடக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் அதிமுகவை தன் வசப் படுத்த காங்கிரஸும் முயற்சித்து வருகிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி திடீரென அப்போலோ மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார். அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அதிமுகவை விமர்சிக்காமல் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார். நடராஜன் மூலம் திருநாவுக்கரசர் செய்த ஏற்பாட்டின் பேரிலேயே ராகுல் காந்தி திடீரென அப்போலோ மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்தி, அவரது இறுதிச் சடங்கிலும் கலந்துகொண்டார். ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை சுமார் 1 மணி நேரம் ராகுல் காந்தி, திருநாவுக்கரசர் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திருநாவுக்கரசர் தனது இரு கைகளிலும் பூக்களை எடுத்துக் கொடுக்க ஜெயலலிதாவுக்கு நடராஜன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “1967-ல் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸால் 50 ஆண்டுகள் ஆகியும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சி, கடந்த 2014 தேர்தலில் 4.3 சதவீத வாக்குகளையே பெற்றது. எனவே, தற்போதைய சூழலில் அதிமுகவை வசப்படுத்தினால் 39 எம்.பி.க்களைக் கொண்ட தமிழகம் 2019-ல் காங்கிரஸுக்கு கை கொடுக்கும் என ராகுல் காந்தி திட்டமிடுகிறார். அதற்கான வேலைகளை நடராஜன் மூலம் திருநாவுக்கரசர் மேற்கொள் ளவும் வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு பல் வேறு போராட்டங்களை நடத்தி, பலரின் எதிர்ப்புகளை மீறி முதல்வர் பதவியை பிடித் தவர் ஜெயலலிதா. கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். அவரது மறைவால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும் என்பதை தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் உணர்ந்துள்ளன. எனவேதான் அதிமுகவை வசப்படுத்த இரு கட்சிகளும் போட்டி போட்டு காய்நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போட்டியில் காங்கிரஸ், பாஜகவுக்கு வெற்றி கிடைக்குமா அல்லது ஜெயலலிதாபோல யாராவது ஒருவர் தோன்றி அதிமுகவின் தனித் தன்மையை காப்பாற்றுவாரா? என்பது அடுத்தடுத்த வாரங்களில் தெரிய வரலாம்.

அப்போலோ செவிலியர்களிடம், ஜெயலலிதாவின் ரியாக்‌ஷன்!



ஜெயலலிதாவுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் பரபரப்பானது மருத்துவமனை மட்டுமல்ல அங்கிருந்த ஊழியர்களும்தான். குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பணிவிடை செய்த செவிலியர்கள்.

அப்போலோ மருத்துவமனை செவிலியர்கள் மூன்று ஷிப்ட்டில் பணியாற்றி வருகின்றனர். காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையும் அவர்கள் பணி தொடர்கிறது. மருத்துவமனையின் 2-வது தளத்தில் உள்ள MDCCU வார்டில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். பணி நேரத்தில் மூன்று செவிலியர்கள் அவருக்கு பணிவிடை செய்து வந்துள்ளனர். இரண்டு செவிலியர்கள், ஜெயலலிதா அருகில் நின்று கொண்டே கவனித்து வந்தனர். ஒரு செவிலியர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகள் குறிப்பு எடுத்துக் கொள்வார்.

இரவுப் பணி முடிந்து செல்லும் செவிலியர்கள், காலை பணிக்கு வரும் செவிலியர்களிடம், ஜெயலலிதாவுக்கு இந்த வகையான சிகிச்சையும், மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இனி அவருக்கு அளிக்கப்பட உள்ள சிகிச்சை, மருந்துகள் குறித்து விளக்கம் அளித்துச் செல்வார்கள். அனுமதிக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் ஜெயலலிதா சற்றே கடுமையாக நடந்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் செவிலியர்கள் பணிவிடை செய்து கொண்டிருந்தபோது, ஜெயலலிதா வலியால் துடித்துள்ளார். இதனால் பதறிப் போன செவிலியர்கள், பணிவிடை செய்வதை நிறுத்தி விட்டனர். "வலி தாங்க முடியவில்லை. ஏதேனும் செய்யுங்கள்!" என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஒருமுறை காலை பணியில் இருக்கும் செவிலியர்கள், அன்று கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள், பணிவிடைகள் குறித்து ஜெயலலிதாவிடம் கூறியுள்ளனர். அப்போது, Don't disturb me. I want to take rest என்று கூறியுள்ளார். இந்த நடவடிக்கையால் சில நேரங்களில் ஜெயலலிதா மருந்துகள் கூட எடுக்காமல் இருந்துள்ளார். இது குறித்து மருத்துவர்களிடம், செவிலியர்கள் கூறியுள்ளனர். அவருக்கு மருந்து கொடுக்க வேண்டியது உங்களது கடமை என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்!'' என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில்!

எஸ்.சாராள்

ஒன்றுகூடிய மன்னார்குடி... விரட்டப்பட்ட தீபா!

vikatan.com

முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகி 75 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், மிக அதிகமான பதட்டத்தை உண்டாக்கியது டிசம்பர் 4-ம் தேதிதான். 75 நாட்களில், முதல் 30 நாட்கள் மட்டும்தான் அப்போலோ பரபரப்பாக இருந்தது. அதன்பிறகு, காவிரி, ரூபாய் நோட்டுப் பிரச்னைகளால் மக்களின் மனதில் இருந்து அப்போலோ மெள்ள மறையத் தொடங்கியது. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அப்போலோ மீண்டும் பரபரப்புச் செய்தியானது. ‘நீர்ச்சத்துக்குறைவு’ என ஜெயலலிதா அட்மிட் ஆனபோது என்ன பரபரப்பு நிலவியதோ, அதைக்காட்டிலும் பல மடங்கு பரபரப்பும் பதற்றமும் அப்போலோவைச் சூழ்ந்தன.



மாலை 5.30 மணியில் இருந்து அப்போலோ ஏரியாவில் சந்தேகத்துக்குரிய சில அறிகுறிகள் தென்படத் தொடங்கின. தமிழகத்தின் அரசுத் துறை செயலாளர்கள் அனைவரும் அப்போலோவை நோக்கி வர ஆரம்பித்தனர். சென்னையிலும் வெளியூரிலும் இருந்த அமைச்சர்கள் பதறியடித்துக்கொண்டு அப்போலோ வந்தனர். போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் அப்போலோவை முற்றுகையிட்டனர். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், ஒட்டுமொத்த அரசாங்கமும் அப்போலோவில் மையம் கொண்டது. இவ்வளவு பரபரப்புகள் அரங்கேறியபோதும், அங்கு என்னதான் நடக்கிறது என்பதே தெரியாமல், அப்பாவியாக இருந்தனர் அ.தி.மு.க தொண்டர்கள். அவர்களில் சிலர், கடந்த 75 நாட்களாக அங்கு காத்துக் கிடப்பவர்கள். அரசுத் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. எனவே, வழக்கம்போல் அதிகாரிகள் வருகின்றனர், அமைச்சர்கள் வருகின்றனர் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

மாலை 6.30 மணி அளவில், மெதுவாக ஒரு தகவல் வெளியானது. `முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்’ என்பதுதான் அந்தத் தகவல். ஆனால், மாரடைப்பில் இருந்து முதலமைச்சர் மீண்டுவிட்டாரா? அல்லது விபரீதமாக ஏதாவது நடந்துவிட்டதா? என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை. அந்த நேரத்தில், அரசு இயந்திரம் அசுரத்தனமாக இயங்கிக் கொண்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது என்ற தகவல் போனது. அதனால், தமிழகம் பரபரப்பு அடை வதற்கு முன்பே டெல்லி பரபரத்தது. டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். உள்துறை அமைச்சகம் அவசர அவசரமாக சில உத்தரவு களைப் பிறப்பித்தது. அவர்கள் மூலம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், ராகுல் காந்திக்கும் தகவல் போனது. அதையடுத்து, “முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும்” என்று டெல்லியில் இருந்து தலைவர்களின் அறிக்கைகள் 9 மணியில் இருந்து அடுத்தடுத்து வெளியாகின. அதன் பிறகுதான், அப்போலோ மருத்துவ மனையின் அறிக்கை வெளியானது.

அப்போலோ மருத்துவமனை சார்பில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளியான அந்த மருத்துவ அறிக்கை ‘இறுக்கமாக’ இருந்தது. முன்பு வெளியான அறிக்கைகளில், “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார்; உடல்நிலை தேறிவருகிறார்” என்பது போன்ற வாசகங்கள் இருக்கும். ஆனால், 4-ம் தேதி வெளியான அறிக்கையில், அப்படி எந்த வாசகமும் இல்லை. மாறாக, ‘முதலமைச்சருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்” என்று மட்டும் சொல்லப்பட்டு இருந்தது. இது அ.தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நேரத்தில், அங்கு வந்த டி.டி.வி.தினகரன் அப்போலோவுக்குள் சென்றார். இவர், இதற்குமுன் ஒரே ஒருமுறை அப்போலோவுக்கு வந்து, உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றவர். இந்த முறை அவரைத் தடுக்க எந்த அதிகாரியும் முன்வரவில்லை.



ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் என்ற செய்தி ஊடகங்களில் வெளியான உடனே, அப்போலோ மருத்துவமனை முன்பு கொந்தளிப்பு மிகுந்த சூழல் உருவானது. அ.தி.மு.க தொண்டர்கள், மருத்துவமனையை நோக்கி சாரை சாரையாகப் படையெடுத்து வரத் தொடங்கினார்கள். பாதுகாப்புக்காக அங்கு நின்றிருந்த போலீஸ்காரர்களை ஏக வசனத்தில் திட்டிவிட்டு, இரும்புத் தடுப்புகளைத் தள்ளிவிட்டு அப்போலோ முன்பு குவிந்தனர். அங்கு, கவரேஜ் செய்து கொண்டிருந்த தொலைக்காட்சிகளின் கேமரா மேன்களையும் அவர்கள் திட்டித் தீர்த்தனர். இந்த பரபரப்பான சூழலில், ஓரமாக நடந்துவந்த டாக்டர் வெங்கடேஷ், சத்தமில்லாமல் அப்போலோவுக்குள் போனார். முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் அப்போலோவுக்குள் இருந்தனர். அப்போலோவுக்கு வெளியே அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள் யாரும் இல்லை. அதனால், தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

‘ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட்’ என்ற செய்தியை அறிந்ததும், ஒட்டுமொத்த தமிழக காவல்துறையும் அலர்ட் ஆனது. உளவுத் துறை உயர் அதிகாரிகளோடு, காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. பின்னர், மத்திய உள்துறையின் உதவியும் கோரப்பட்டது. மத்திய அரசு, தன் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 30 கம்பெனி போலீஸை உடனடியாக அனுப்பி வைத்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள போலீஸ் பிரிவுகள் அலர்ட் செய்யப்பட்டன. சென்னையில் விடுமுறையில் இருந்த காவலர்கள் அனைவரும் மறுநாள் (5-ம் தேதி) காலையில் வந்துவிட வேண்டும் என உத்தரவுகள் பறந்தன. இந்த உத்தரவுகள் எல்லாம் கன்ட்ரோல் ரூம் மூலமாகவே சென்றன.

மகாராஷ்டிராவில் இருந்த தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ், அவசர அவசரமாக சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அப்போலோவுக்கு கவர்னர் வந்தபோது, அவருடைய காரை அ.தி.மு.க தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர். அதனால், அப்போலோ முன்பு கவர்னரின் கார் சிறிதுநேரம் நின்றது. அதன்பிறகு, கூட்டத்தைக் கட்டுப்படுத்திய போலீஸ்காரர்கள், கவர்னர் காருக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். அப்போலோவுக்குள் கவர்னர் நுழைந்தபோது, நள்ளிரவு 12 மணி. உள்ளே சென்ற கவர்னர், 12.15 மணிக்கு வெளியே வந்தார். கவர்னரின் கார் வெளியே வந்தபோது, அதற்குப் பின்னால், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியின் காரும் வந்தது. இருவருடைய கார்களையும் சூழ்ந்துகொண்ட ஊடகவியலாளர்கள், அவர்களிடம் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் அவர்கள், கார்களை விட்டு வெளியே தலைகாட்டவில்லை.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அப்போலோவில் இருந்து துரத்தப்பட்ட அதே நேரத்தில், மன்னார்குடி உறவுகள் அனைத்தும் அப்போலோவில் ஒன்றுகூடின. திவாகரன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார் உள்ளிட்ட மன்னார்குடி சொந்தங்கள் எல்லாம் அப்போ லோவில் இருந்தனர். ஆனால், சசிகலாவின் கணவர் நடராஜன் அப்போலோ பக்கம் வரவில்லை. அவர் பெசன்ட் நகர் வீட்டிலும் இல்லை. மாறாக, ரகசியமான இடத்தில் இருந்து சில முக்கியமான வேலைகளுக்கு காய் நகர்த்திக்கொண்டிருந்தார்.



அப்போலோ மருத்துவமனை ஏரியாவில் நிலவிய கொந்தளிப்பான சூழல், நள்ளிரவு 2 மணிக்கு மேல் சீரடைந்தது. மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கிளம்பிப் போனார், சசிகலா. அவரையடுத்து டி.டி.வி.தினகரனும் வெளியே சென்றார். அதன் பிறகு, என்ன மாயமோ தெரியவில்லை, அப்போலோவில் ஏரியாவில் அமைதி திரும்பத் தொடங்கியது. அத்துடன் மழையும் சேர்ந்துகொண்டதால், அங்கிருந்து தொண்டர்கள் கலையத் தொடங்கினார்கள்.

- ஜோ.ஸ்டாலின், பிரம்மா

படங்கள்: சு.குமரேசன், பா.காளிமுத்து, ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன், தே.அசோக்குமார்

``என்னிடம் நேரில் சொல்லட்டும்!’’

அப்போலோவைச் சுற்றி சோகமும் கொந்தளிப்பும் இருந்த நேரத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தன் அத்தையைப் பார்க்க வந்தார். ஆனால், யார் உத்தரவிட்டார்களோ தெரியவில்லை, தீபாவை அப்போலோவின் கேட் அருகில்கூட நெருங்கவிடவில்லை. “தயவுசெய்து போய்விடுங்கள். இங்கே பிரச்னை செய்யாதீர்கள். உங்களை உள்ளேவிடக்கூடாது என்று எங்களுக்கு உத்தரவு” என்று தீபாவை போலீஸ்காரர்கள் மிரட்டினர். அதனால், பத்திரிகையாளர்களிடம் தீபா பேச முயன்றார். ஆனால், அதற்கும் போலீஸ்காரர்கள் அனுமதிக்கவில்லை. ஆனாலும், பத்திரிகையாளர்கள் விடாமல் தீபாவை துரத்திச் சென்று பேசினர். அப்போது, “என்னை உள்ளே விடக்கூடாது என்று சொல்ல அவர்கள் யார்? அவர்களை வெளியே வரச்சொல்லுங்கள். அவர்கள் என்னிடம் நேரில் சொல்லட்டும்” என்று கொந்தளித்தார். அவரிடம் பத்திரிகையாளர்கள், “மேடம், உங்களை உள்ளே விடக்கூடாது என்று சொன்னவர்கள் யார் என்று உங்களால் கணிக்க முடிகிறதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “என் அத்தை கூடவே இருப்பவர்கள்தான் சொல்லி இருப்பார்கள்” என்று தீபா சொன்னார். போலீஸார் கடும் கெடுபிடி காட்டவே, தீபா தன் கணவருடன் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு மீடியாவினர் படம் எடுக்கவிடாமல் போலீஸ் தடுத்தது.

‘அந்த கடைசிப் பார்வையில் எந்த அசைவுமில்லை..!’ #ஜெயலலிதா பாதுகாவலர் பெருமாள்சாமி

பெருமாள்சாமி
vikatan.com

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இசெட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தவர். பத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் அதைத் தவிர மாநில போலீசார் என 36 பேர் முதல்வர் ஜெயலலிதாவை சுற்றியே எப்போதும் வலம் வருவார்கள். இவர்களை மீறி யாரும் அவரை அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியாது. ஒவ்வொரு முதல்வரும், தங்களுக்கு பிடித்த பாதுகாவலர்களேயே தேர்வு செய்வார்கள். பொதுக் கூட்டம் நடந்தால் துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் கூட சற்றுத் தள்ளிதான் நிற்பார்கள். மேடையை சுற்றிலும்தான் அவர்களது கண்காணிப்பு இருக்கும். ஆனால் மேடையில் முதல்வரின் இருபுறமும் சாதாரண சபாரி உடையில் கையில் ஆயுதம் ஏதுமில்லாத பாதுகாவலர்கள் இருவர் நிற்பார்கள். இவர்கள்தான் ஆந்தை போல அதீத விழிப்புடன் செயல்படுவார்கள்.

சமயத்திற்கு ஏற்ப சமயோசிதமாக அதீத புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டிது இவர்களது பொறுப்பு. முக்கியமாக தேர்தல் பிரசாரக் காலக்கட்டங்களில் தலைவர்களை பாதுகாப்பதில் இவர்களது பங்கு அளப்பறியது. நீண்ட நாள் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக இருந்தவர் பெருமாள்சாமி.

சில நேரங்களில் முதல்வர் கான்வாயை நிறுத்தி விட்டு, ரோட்டில் நிற்பவர்களிடம் மனு வாங்க ஆரம்பித்து விடுவார். அடுத்த விநாடி பெருமாள்சாமி மின்னல்வேகத்தில் முதல்வரின் இருக்கை அருகே ஆஜராகி விடுவார். அந்த சமயத்தில் இவரது கண்கள் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்ணுடன்தான் நோக்கும். முதல்வர் முகத்தை பார்த்தே எதிரே நிற்பவர்களை அப்புறப்படுத்தி விடுவார். எந்த சமயத்திலும் எந்த இடத்திலும் பெருமாள்சாமியின் ஒரு கண் முதல்வரின் மீதும் மற்றொரு கண் எதிரில் நிற்பவர்கள் மீது இருக்கும். முதல்வரின் குறிப்பறிந்து பெருமாள்சாமி செயல்பட்டால், இவரது குறிப்பறிந்து இவருக்கு கீழ் பணியாற்றும் பாதுகாவலர்களும் செயல்படுவார்கள்.



பெருமாள்சாமி முதல்வரை பாதுகாத்த சம்பவங்களுக்கு உதராணமாக ஒன்றை சொல்லலாம். ஜெயலலிதாவுக்கு யானைகள் மீதான பாசம் அதிகம். யானைகளுக்கு மிகவும் பிடித்த சீதோஷ்ண நிலை நிலவும் முதுமலையில் கோயில் யானைகளுக்கும் முகாம் நடத்தி வெக்கையில் கிடந்த அவற்றை ஓரளவுக்கு குதூகலிக்க வைத்தவர் ஜெயலலிதா. முதுமலையில் வளர்ப்பு யானைகள் முகாமும் இருக்கிறது. அங்கு, காவிரி என்ற குட்டி யானை இருந்தது. முதுமலைக்கு ஒரு முறை சென்ற ஜெயலலிதா காவிரி யானைக்கு உணவளித்து மகிழ்ந்தார். முதல்வரை சுற்றி கூடியக் கூட்டதைப் பார்த்து மிரண்ட குட்டி யானை, தும்பிக்கையால் முதல்வரை தள்ளி விட முயன்றது. ஜெயலலிதா திணறி விட, அருகில் நின்ற பெருமாள்சாமிதான் அரணவணைத்து முதல்வரை குட்டியானையிடம் இருந்து பாதுகாத்தார்.

அத்தனை விசுவாசம் மிகுந்த பெருமாள்சாமி மற்றும் அவரது குழுவினருக்கு முதல்வரின் மறைவு சொல்ல முடியாத துயரத்தை தந்திருக்க வேண்டும். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலக்கட்சியின் தலைவியின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக விளங்கிய அவரால், அவரின் மறைவை ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் ராணுவ பயிற்சி பெற்ற இதயம். எந்த வேதனையையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. முதல்வர் உயிருடன் இருந்தால் எப்படி யாரும் அவரை நெருங்க விடாமல் பாதுகாப்பாரோ அதைப் போலவே ஜெயலலிதா உடலுக்கும் பாதுகாவலை பெருமாள்சாமியின் டீம் வழங்கியது. அப்பலோவில் இருந்து போயஸ் கார்டன். பின்னர் அங்கிருந்து ராஜாஜி ஹால். தொடர்ந்து எம்ஜிஆர் சமாதி வரை பெருமாள்சாமிக் குழுவினர் பாதுகாப்பு வழங்கினார்.

ஜெயலலிதாவின் உடல் மண்ணுக்குள் புதைக்கப்படுவதற்கு முன்பாக, சந்தனபேழையில் வைத்து மூடப்படும் கடைசிக் கட்டத்தில் எங்கிருந்தோ ஓடி வந்தார் பெருமாள்சாமி.அந்தப் பெட்டியின் மீது கையை வைத்து கனத்த இதயத்துடன் முதல்வரின் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். வழக்கமாக முதல்வரின் கண் அசைவைக் கண்டு பெருமாள் சாமி செயல்படுவார். அந்தக் கடைசிப் பார்வையில், முதல்வரின் கண்களில் எந்த அசைவுமில்லை!

NEWS TODAY 14.06.2026