Monday, January 30, 2017

பாதுகாப்பில்லா பெட்டகம்

By வாதூலன்  |   Published on : 28th January 2017 01:38 AM  | 
இரண்டு வாரம் முன்பு, சில ஏடுகளிலும் ஊடகங்களிலும் வெளியான செய்தி பலரையும் பதற்றப்பட வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

சென்னையில் வங்கிக் கிளையொன்றில், பாதுகாப்புப் பெட்டகங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதுதான் அந்தச் செய்தி.
இதுபோன்ற கொள்ளை சம்பவம் இதுவரை அறிந்தே இராத ஒன்று. எனவேதான், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த வங்கிக் கிளை, "அவசர விடுமுறை'யை அறிவித்து, வாடிக்கையாளர்களை அருகிலிருக்கும் வேறு கிளைகளை அணுகுமாறு கோரிக்கை விட்டிருக்கிறது.
"பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம், சேதம் எவ்வளவு என்பதை ஆராய்ந்து வருகிறோம்' என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வங்கியின் அறிக்கை மழுப்பலாகத் தெரிந்தாலும், நடைமுறை அதுதான்.

வங்கியில் பாதுகாப்பு பெட்டக சேவை என்பது, மிகத் தனியான வகை. இதில், வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்கும் இடையே உள்ள உறவு, பிற கணக்குகளில் இருப்பது போலல்ல, கிட்டத்தட்ட இது வீட்டு உரிமையாளர்களுக்கும் வீட்டில் குடியிருப்போருக்கும் நிலவும் உறவு போன்றதுதான்.

ஒரு வீட்டை ஒருவருக்கு வாடகைக்குக் கொடுப்பது போல, வங்கி மேலாளர் பெட்டகத்தை ஒரு வாடிக்கையாளருக்கு வாடகைக்குக் கொடுக்கிறார். இல்லத்துக்கு முன்பணம் கொடுப்பது போல, பெட்டகத்துக்கும் நாலு மாச அட்வான்ஸ் தர வேண்டும் (வேறு வகையான டெபாஸிட்டுகள் நிறைய இருந்தால்கூட இதற்கான முன்பணம் அவசியமென்று வங்கி வற்புறுத்துகிறது).

அவ்வப்போது, வீட்டு வாடகை உயர்த்தப்படுவதுபோல வாடகை பெட்டக அளவுக்குத் தக்கபடி வாடகைத் தொகை மாறுபடும், வீட்டு உடமையாளருக்கு, வீட்டுக்குள் வைத்திருக்கும் பொருள்கள் என்னென்ன என்பதை தெரிவிக்க வேண்டியது எப்படி அவசியமில்லையோ, அதேபோல, பெட்டகத்தில் உள்ள பொருள்களின் விவரத்தை வாடிக்கையாளர் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

பெட்டகத்தில் இன்னின்ன பொருள் களைத்தான் வைக்க வேண்டும் என்கிற வரையறை எதுவும் கிடையாது. நகை, பாத்திரங்கள், உயில், வீட்டுப் பத்திரங்கள் என்று எதை வேண்டுமானாலும் வைக்கலாம் (சேதம் விளைவிக்கக் கூடிய சாமான்கள் இருக்கக் கூடாதென்று ஒப்பந்த படிவத்திலேயே ஒரு ஷரத்து உண்டு).

பெட்டகத்தைத் திறப்பதற்கு, வாடிக்கையாளருடன் வங்கி அதிகாரியும் உடன் செல்வார். அதிகாரியிடம் இருக்கும் Master Key யும், வாடிக்கையாளரின் சாவியும் இணைந்து செயல்பட்டால்தான், லாக்கரைத் திறக்க இயலும்.
பின்னர், நிதானமாக வாடிக்கையாளர் தேவையானவற்றை எடுத்தோ, வேறு பொருள்களை வைத்தோ, பூட்டிக் கொள்ளலாம். அப்போது அதிகாரி யாரும் அருகிலிருக்க மாட்டார். இதுதான் நடைமுறை.

பெட்டகத்தை உடைத்துத் திறக்க மிக அரிதான தருணங்களில் வங்கிக்கு உரிமை உண்டு. ஒரு குறிப்பிட்ட காலம் கடந்தும் கட்டணம் செலுத்தாமலிருந்தால் -- கடிதம், பதிவுத் தபால் எல்லாம் போட்டும் பதில் இல்லாமலிருந்தால் -- வங்கி அதிகாரி ஒரு சாட்சி முன், அதை திறந்து பார்ப்பார் (நூற்றுக்கு 99 சதவிகிதம் அதில் ஏதும் இருக்காது, பெட்டக வாடிக்கையாளர் எங்காவது வெளிநாட்டிலிருந்து, மறந்தும் போயிருப்பார்!).
வேறொரு சூழலிலும் பெட்டகத்தை உடைக்கலாம். புலனாய்வுத் துறையிலிருந்தோ, வருமான வரி அலுவலகத்திலிருந்தோ நோட்டீஸ் வந்தால், அவர்கள் முன்னிலையிலேயே உடைப்பார்கள்.
1976-ஆம் ஆண்டு அவசர நிலையின்போது, வருமான வரி அதிகாரிகள் ஒரு சிறிய பெட்டகத்தை உடைத்து, அதிலுள்ள கட்டு கட்டான நோட்டுகளை அரசு கணக்கில் வரவு வைத்தார்.

இன்னொன்றையும், இங்கு அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். பெட்டகத்திலுள்ள பொருள்களின் மீது வங்கிகளுக்கு உரிமை கிடையாது; அதாவது வாராக் கடன் உள்ள வாடிக்கையாளர் பெட்டகத்தில் நகையோ வேறு வீட்டு பத்திரமோ வைத்திருந்தால், அதை கடனுக்குச் சரி செய்யக் கூடாது.
பொதுவாக, வங்கிகளில் இரும்பறையில் (Double Lock) உள்ள தொகை; அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகள் இவற்றுக்குக் காப்பீடு உண்டு. குத்து மதிப்பாகச் சில கோடிகளுக்குக் காப்பீடு எடுத்திருப்பார்கள்.
இதுதவிர, வங்கியிலிருந்து வேறு இடத்துக்குக் கொண்டு செல்லும் பணத்துக்கும் (Cash in trsnsit) காப்பீடு உண்டு. ஆனால், பெட்டகத்துள் இருக்கிற பொருள்களுக்கு காப்பீடு கிடையாது.

ஏனெனில் என்னென்ன வைக்கப்பட்டிருக்கின்றன, மதிப்பு எவ்வளவு என்பது வாடிக்கையாளருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஆயிற்றே?
கூட்டுறவு வங்கியில் சில மாத முன் நிகழ்ந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். வாடிக்கையாளர் ஒருவர் தன் பெட்டகத்திலுள்ள ஆவணங்களைக் கறையான் அரித்து விட்டதாக வழக்கு கொடுத்து, வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இதில் வங்கி செய்த தவறு, ஏற்கெனவே அவர் புகார் தந்தும் கண்டு கொள்ளவில்லை. நட்ட ஈடாக வங்கி ஒன்றரை லட்ச ரூபாய் வழங்குமாறு நீதியரசர் தீர்ப்பு அளித்திருக்கிறார்.

அண்மையில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் ஒருவர் அல்ல; பல வாடிக்கையாளர்கள். வங்கியில்
காவலாள் இல்லையா? எச்சரிக்கை மணி வைக்கப்படவில்லையா? இருந்தும் அது செயல்படவில்லையா? வங்கியின் பாதுகாப்பு அம்சத்தில் ஏதாவது பெரியதவறு இருந்ததா?

பொதுவாக, வீட்டில் திருட்டுப் பயம் உண்டென்ற அச்ச உணர்வில்தான், வங்கியில் பெட்டகத்தை மக்கள் நாடுகிறார்கள், பாதுகாப்பு பெட்டகத்துக்கே பாதுகாப்பு இல்லையானால்? வங்கி நிர்வாகம் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது

Wednesday, January 25, 2017

ஜல்லிக்கட்டு: தமிழக அரசின் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு; உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் மனு கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மனு தாக்கல் செய்தன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு மிருக வதை தடுப்புச் சட்டத்தில் கொண்டுவந்த திருத்தத்தை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தன.

தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திங்கள் கிழமையன்று விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. விலங்குகள் நல வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஆனந்த் குரோவர் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து..

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை), ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைகள் வாபஸ் பெறப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

மத்திய அரசு அறிவிக்கையின் விவரம்:

மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளையை சேர்த்து கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நிரந்தர தடை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேவியட் மனுக்கள்:

இதற்கிடையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக யாரேனும் வழக்கு தொடர்ந்தால் தமிழக அரசைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு மட்டுமல்லாது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் 70 கேவியட் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

NEET attempts capped at 3; age at 25 for unreserved

Times of India

MUMBAI: Medical aspirants across India can now only take three shots at the National Eligibility cum Entrance Test(NEET), a cap introduced to discourage the thousands who keep trying their luck at the examination. Also, candidates must fulfil a new age criterion if they wish to sit for the medical and dental exam.

The decision was taken at a University Grants Commission (UGC) meeting on Tuesday in Delhi. The minimum age to appear for NEET is 17 years. The maximum age for open category students is 25 years, and 30 years for the reserved category. To date, there has never been a maximum age defined to take NEET, nor has there been a limit on the number of attempts. "This is a good decision," said Dr Pravin Shingare, director at the Maharashtra directorate of medical education and research (DMER).

"There are some students who keep taking the test, and when they don't make the cut, join a BSc college and keep taking the medical entrance test," he added. In fact, the rule would also bar the faculty of coaching classes who keep on attempting the test to understand its altering pattern. The NEET information brochures contain this information and will be distributed soon. "We often find that coaching classes field candidates and sometimes that leads to fraud and cheating," said an expert. This cap on age and attempts will force candidates to focus on the field where their capability and passion lie, said medical college principals.

Two years ago, it may be recalled, the All India Pre Medical Test had to be conducted again as it was revealed that 90 answers had been transmitted to the candidates during the examination, for a fee of Rs 15 to 20 lakh. The AIPMT-2015 scandal had at least 45 beneficiaries who were supplied with special vests fitted with SIM cards and a bluetooth device, among other equipment, to facilitate the transmission of answers.

While all-India data is unavailable, in Maharashtra, the number of older candidates competing with 17-year-old aspirants has been rising with each passing year. About 12,000 repeat aspirants took the CET in 2007, while in 2008, the number grew to 13,568. According to data collected from the DMER, the oldest candidate was 38 years old and at least another 100 aspirants were in their early 30s.

முக்கிய பிரச்சினைகளை மறக்கடித்த ஜல்லிக்கட்டு போராட்டம்: அடுத்து என்ன செய்யப்போகிறது இளைஞர் பட்டாளம்?

ஜல்லிக்கட்டுக்காக ஒரு வாரமாக மாணவர்களும் இளைஞர்களும் நடத்தி வந்த தன்னெழுச்சிப் போராட்டம், தமிழக அரங்கில் தகித்துக் கொண்டிருந்த பல முக்கியப் பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளி மழுங்கடித்துவிட்டது.

எந்தவிதமான சுயபலனும் எதிர்பாராமல் மாணவர்களும் இளைஞர்களும் கைகோர்த்து நடத்திய மெரினா அறவழிப் புரட்சி, வெற்றி அடைந்திருக் கிறது. அகிம்சையை மிஞ்சிய ஆயுதம் எதுவும் இல்லை என்பதை இந்தப் போராட்டத் தின் மூலம் மீண்டும் ஒருமுறை உலகுக்கே எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள் நம் இளைஞர்கள்.
இது ஒருபுறமிருக்க, ஜல்லிக் கட்டுக்காக நடந்த போராட்டங் களால் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருந்த வேறு பல முக்கியப் பிரச்சினைகள் பின் னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதை யும் உணர முடிகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், ‘‘டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டும் அதிர்ச்சியிலும் உயிரிழந்துள்ள னர். இதற்கு தமிழக அரசு என்ன பரிகாரம் தேடப் போகிறது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம், அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக கிளம்பிய அதிருப்தி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிர வேசம் என தமிழக அரசியல் களம் பரபரப்பான நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கியது. ஆனால், ஜல்லிக் கட்டு போராட்டத்தின் தாக்க மானது மற்ற விஷயங்கள் அனைத்தையும் தமிழக மக் களிடம் இருந்து அந்நியப்படுத்தி விட்டது’’ என்றனர்.

ஒதுங்கிக் கொண்ட முகங்கள்

மெரினா கூடிய இளைஞர் கள், முதல்வர் பன்னீர்செல்வம் தங்களிடம் வந்து பேசவேண்டும் என்றனர். ஆனால், முதல்வரோ ஆளும் கட்சியினரோ மெரினா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அதே நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவான பிரபல முகங்கள் சிலர், ‘கட்டுக்கோப்பான இந்த அறவழி போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே நாம் திரும்பிப் பார்க்க வைத் திருக்கிறோம். என்ன ஆனாலும் சரி, நாம் கேட்டது கிடைக்கும் வரை போராட்டத்தை விடக் கூடாது’ என போராட்டக் களத்து இளைஞர்களை உசுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது விவசாயிகள் மரணம் உள்ளிட்ட மற்ற பிரச்சினைகளை மறக்கடிப்பதற்காக இந்தப் போராட்டங்கள் வளர்க்கப்பட்ட தோ என்ற ஐயப்பாடு எழுகிறது. தேவையானபோது போராட்டத்தை வளரவிட்டு, தேவையில்லை என்றதும் போராட்டத்தை கலைக்கக் கிளம்பி விட்டனர். குடிசைக்கும் வாகனங்களுக்கும் தீ வைக் கத் துணிந்தவர்கள், போராட் டக்காரர்கள் மீது ‘சமூக விரோதிகள்’ முத்திரை குத்தி இருக்கிறார்கள். அவர்களு டைய நோக்கம் ஜல்லிக் கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதல்ல.

இனி எந்தப் பிரச்சினைக் காகவும் இளைஞர் படை இப்படி தன்னெழுச்சி யாக திரண்டுவிடக் கூடாது என்ற அதிகார வர்க்கத்தின் தொலைநோக்குத் திட்ட மும் இதற்குள்ளே ஒளிந்திருக் கிறது.
ஆளும் கட்சியை பொறுத்த வரை, மாணவர்கள் போராட்டத் தைக் காட்டி ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசை மடக்கியது, போராட்டத்தை வளர விட்டதன் மூலம் மற்ற பிரச்சினைகளை மறக்க வைத் தது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக் கிறது.
மெரினா களத்தில் ஜல்லிக் கட்டு மட்டுமல்லாது, விவசாயி கள் பிரச்சினை, நதீநீர் பங்கீட்டு விவகாரம், மீனவர் பிரச்சினை, இயற்கை விவசாயம் இத் தனையும் பற்றி ஆழ்ந்து பேசிய இளைஞர் பட்டாளம் அதையெல்லாம் சாதிக்க அடுத்து என்ன செய்யப் போகிறது என எதிர்பார்த்து காத்திருக்கிறது தமிழகம்.

வாழ்க்கைக்கு அடையாளம் கொடுத்த ஆசிரியரை மறக்காத மாணவர்கள்: ஓய்வுபெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாராட்டு விழா

எஸ்.கோபாலகிருஷ்ணன்
விழாவில் பாராட்டு பெற்ற 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோ.பாஸ்கரன். உடன், ஓய்வுபெற்ற 18 ஆசிரியர்கள்.

பெற்றோரையும், உறவினர்களையும் தாண்டி மாணவர்களுக்கான சமூக உறவை ஏற்படுத்தித் தரும் உன்னத இடம் பள்ளிக்கூடம். இங்கிருந்துதான் சமூகத்தின் பல் வேறு அம்சங்கள் குறித்து படிக்க வும், படித்தவற்றைக் கொண்டு பக்குவமடையவும், கற்ற கல்வி யால் வாழ்க்கையை நன்கு அமைத் துக்கொள்ளவும் கற்றுக்கொள்கி றார்கள்.

மாணவப் பருவத்தில் பள்ளிக் கூடம் கசந்தாலும், படித்து நல்ல நிலைக்குச் செல்ல அச்சாணியாக இருந்தது பள்ளிக்கூடமும் அங்கு கல்வி போதித்த ஆசிரியர்களும் தான் என்பதை உணர்ந்து, அவர் களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், அவர்களது அர்ப்பணிப்பை அங்கீ கரிக்க வேண்டும் என்று சமூகத் தில் நல்ல நிலைக்கு வந்த ஒவ் வொரு பழைய மாணவரின் மனசாட்சியிலும் அசரீரியாக ஒலித்துக்கொண்டிருக்கும்.

அந்த அசரீரியை உண்மையாக் கிய நிகழ்வாக இருந்தது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத் துள்ள ஆலங்கோட்டை திருவள்ளு வர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற தலைமையாசிரி யருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பாராட்டு விழா.

ஆசிரியர்- மாணவர் உறவைப் பறைசாற்றும் இந்த நெகிழ்ச்சியான விழாவின் நாயகர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோ.பாஸ்கரன். மன்னார்குடியை அடுத்துள்ள ஆலங்கோட்டையில் உள்ள திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1964-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டுவரை ஆசிரி யராகவும், தலைமை ஆசிரியராக வும் பணியாற்றியவர்.

இவரிடம் படித்த மாணவர்கள் பல்வேறு அரசுத் துறைகளி லும், வெளிநாடுகளிலும் பணியாற்று கின்றனர். கண்டிப்பு, நேர்மை, அரவணைப்பு ஆகிய மூன்றையும் தனது கொள்கையாகப் பாவித்து பணியாற்றிய பாஸ்கரன், அப்பள்ளி உயர்நிலை, மேல்நிலை என தரம் உயரக் காரணமானவர்களில் முக்கியப் பங்காற்றியவர்.

ஒவ்வொரு மாணவரைப் பற்றி யும் அவர்களின் குடும்பப் பின்ன ணியுடன் தெரிந்து வைத்திருப்பார் இவர். கல்வி, விளையாட்டில் நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இணை யாக இந்தப் பள்ளியை மேம்படுத்தி யவர். பள்ளியின் அருகிலேயே வசிக்கும் கோ.பாஸ்கரன், தலைமை ஆசிரியராகப் பணியாற்றியபோது வீட்டிலிருந்து கிளம்பிவிட்டார் என்ற தகவல் தெரிந்தால்போதும், பட்டாம்பூச்சிகளாகப் பள்ளி வளாகத்தில் அங்குமிங்கும் சுற்றித் திரியும் மாணவ, மாணவிகள், அடுத்த நிமிடம் அமைதியாகச் சென்று வகுப்பறையில் ஆஜராகி விடுவார்கள்.
மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பெற்றோருக்கும் தக்க வழிகாட்டல்களைத் தந்து ஆசிரியராக மட்டுமல்லாமல், ஊரில் அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் கோ.பாஸ்கரன் என்று அவரது பெருமைகளைப் பட்டியலிடுகின்றனர், இவரிடம் படித்த பழைய மாணவர்கள்.
இவரிடம் படித்து ஆசிரியரான பலர் தற்போது தலைமை ஆசிரி யர்களாகப் பணியாற்றுகின்றனர். பாராட்டு விழாவில் கலந்துகொண்ட இந்த தலைமை ஆசிரியர்கள், நிகழ்ச்சியில் பேசும்போது, “பாஸ் கரன் சார், தலைமை ஆசிரியர் களுக்கெல்லாம் தலைமை ஆசிரி யர்” என்று பாராட்டியது பொருத்த மாக இருந்தது.
கோ.பாஸ்கரன்

இதுகுறித்து, பாராட்டு விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒரு வரும் மெக்கானிக்கல் இன்ஜினீய ரிங் முடித்து, சிங்கப்பூரில் பணி யாற்றிவிட்டு தற்போது விவசாயம் செய்துவரும் பாலமுருகன் கூறும் போது, “கடந்த 1997-ம் ஆண்டு பணி ஓய்வுபெற்றபோது, நாங்கள் பாராட்டு விழா நடத்துகிறோம் என்று கேட்டபோது, வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தொடர்ந்து, இவர் மறுத்து வந்த நிலையில் பள்ளியில் பணி ஓய்வுபெறும் மற்ற ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடத்த இயலாமல் போய்விட்டது.

இந்தநிலையில், அவரிடம் படித்து நல்ல நிலையில் உள்ள பலரும் ஒன்றுசேர்ந்து சென்று, பாஸ்கரன் சாரைச் சந்தித்து அனுமதி கேட்டோம். எங்களின் விருப்பத்தையும், அதன் தீவிரத்தை யும் உணர்ந்து ஒப்புக்கொண்ட அவர், விழாவில் தனக்கு ஒரு சால்வை மட்டும் போட்டால் போதும், பரிசுப்பொருட்கள் எதுவும் தரக்கூடாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.
இருப்பினும், அவரிடம் படித்த பழைய மாணவர்கள் நிதியை வாரி வழங்கினர். அந்த நிதியை பாஸ்கரன் சாரின் பெயரால் அறக்கட்டளை தொடங்கி, இப் பள்ளியில் படிக்கும் மாணவர் களைக் கல்வியில் மேம்படுத்த, பரிசுகளை வழங்கி ஊக்கப் படுத்தலாம் என திட்டமிட்டுள்ளோம். எங்கள் தலைமை ஆசிரியரைப் பாராட்டியதுடன், 1997-ம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வுபெற்ற இப்பள்ளி ஆசிரியர்கள் 18 பேரையும் பாராட்டியுள்ள மன நிறைவு இந்த விழாவால் ஏற்பட்டுள்ளது” என்றார்.
மாணவர்களின் நலனுக்காகப் பாடுபட்ட தலைமை ஆசிரியருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திர ளாகக் கலந்துகொண்டு, அவரைப் பாராட்டினர்

காவல் துறை நம் நண்பன்தானே?

வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ‘ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ ரத்தக் கறையோடு முடிந்திருக்கிறது. தொடக்கம் முதல் அறவழியில் சென்ற போராட்டம் இது. லட்சக்கணக்கானோர் தன்னெழுச்சியாகத் திரண்டதன் விளைவாக தமிழக அரசு இது எந்த விதத்திலும் வன்முறையை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது என்று காவல் துறையை முழுமையாகக் கட்டுப்படுத்தியது. விளைவாக, அமைதி வழியில் போராடிய இளைஞர்களிடம் இதுவரை காணாத அளவுக்கு அசாதாரண ஒத்துழைப்பைத் தமிழகக் காவல் துறையினர் வழங்கினர்.

போராட்டத்தில் ஈடுபடுவோர் எல்லாம் அரசுக்கும் காவல் துறைக்கும் எதிரிகள் அல்ல; உண்மையில் அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்; ஜனநாயகத்துக்கு வலு சேர்ப்பவர்கள் என்பதைத் தமிழகக் காவல் துறை அருகிலிருந்து உணர இது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றும்கூடச் சொல்லலாம். போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, தன்னாலான உச்சபட்ச முயற்சியாக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றியது தமிழக அரசு.

போராட்டத்தை அத்துடன் முடித்திருந்தால் ஒரு நல்ல நிறைவை அது தந்திருக்கும். பெரும்பாலானோர் அந்த முடிவையே தேர்ந்தெடுத்தனர் என்றும்கூடச் சொல்லலாம். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் கூடிய சென்னை மெரினா கடற்கரையில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான திங்கள்கிழமை பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர். எனினும் சில ஆயிரம் இளைஞர்கள் மிச்சம் இருந்தனர். அவசரச் சட்டம் நிரந்தரத் தீர்வல்ல எனும் கருத்து அவர்களிடம் இருந்தது.
இதனிடையே மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு போராட்டத்தை வேறு திசை நோக்கித் திருப்பும் சமூக விரோத சக்திகள் சிலவும் அவர்கள் மத்தியில் ஊடுருவியிருந்தன. குடியரசு தினம் நெருங்கி வரும் சூழலில், போராட்டத்தை விரைவில் முடிக்கும் அவசரத்தில் இருந்த அரசு, இந்தச் சட்டம் தொடர்பில் விளக்கம் தர அரசு வெவ்வேறு ஆட்கள் மூலம் முயன்றாலும், நேரடியாக ஆட்சியாளர்கள் தரப்பில் யாரும் சென்று பேச முற்படவில்லை. இது அரசு செய்த பெரும் பிழையானது.

மெரினா கடற்கரையில் மிச்சமிருந்த மாணவர்களை வெளியேற்றும் நிர்ப்பந்தத்தில் இருந்த காவல் துறையினர் தன் முகத்தை மாற்றத் தொடங்கினர். இதனிடையே சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் தடைகளை உண்டாக்கி போக்குவரத்தை முடக்கினர் சிலர். நிச்சயமாக அவர்கள் அதுவரை போராட்டத்திலிருந்த மாணவர்கள் அல்லர். அவர்கள் வீதியில் இறங்க, இதற்காகவே காத்திருந்ததுபோல கடும் தாக்குதலில் இறங்கினர் காவல் துறையினர். விளைவாகப் பெரும் கலவரம் வெடித்தது.

108 அரசு பஸ்கள் கல்வீச்சுக்கு உள்ளாகின. காவல் துறை, தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 61 வாகனங்கள் எரிக்கப்பட்டன. கூடவே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் வாகனங்களும் படகுகளும் கடைகளும் வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகின. இதன் தொடர்வினையாக மாணவர்கள் மீதும் காவல் துறை தாக்குதலை நடத்தியது.

இந்தப் போராட்டம் நெடுகிலும் காவல் துறை மிகுந்த நெருக்கடிகளையும் பணிச்சுமையையும் எதிர்கொண்டது வெளிப்படை. சொல்லப்போனால், அரசுத் தரப்பு தோற்ற இடங்களில் காவல் துறை நிறுத்தப்பட்டிருந்தது. கறைகள் ஏதுமின்றி காவல் துறை முழுவதுமாக மாணவர்களை வெளியேற்றியிருந்தால், அது வரலாற்றில் பேசப்படும் காரியமாக இருந்திருக்கும். காவல் துறை அந்த வாய்ப்பைத் தவறவிட்டது. பிரச்சினை அது மட்டும் அல்ல. கலவரங்களில் பல இடங்களில் காவல் துறையினரே கலவரக்காரர்களாக உருமாறியதை சமூக வலைதளங்களில் வெளிவரும் படங்களும் காணொலிகளும் அம்பலப்படுத் துகின்றன. பொதுமக்களின் உடைமைகளுக்குக் காவல் துறையினர் தீ வைக்கும் காட்சிகள், வாகனங்களை நொறுக்கும் காட்சிகள், வீடு புகுந்து பெண்களைத் தாக்கும் காட்சிகள் அதிரவைக்கின்றன. மிக மிக அபாயகரமான போக்கு இது.

காவல் துறையினர் மீதான புகார்களின் தொடர்ச்சியாக “இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும்” என்று சொல்லியிருக்கிறார் சென்னைப் பெருநகரக் காவல் ஆணையர் ஜார்ஜ். இவை வெறும் சம்பிரதாய வார்த்தைகளாகக் கூடாது. தீவிரமான விசாரணை வேண்டும். கலவரத்தில் இறங்கிய காவலர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கூடவே மாணவர்களின் லட்சியப் போராட்டத்தின் ஊடாக நுழைந்து, தத்தமது சித்தாந்தங்கள், தனிப்பட்ட வேட்கைகளுக்கு மாணவர்களைப் பகடைக்காய்களாக்கி, வன்முறையை நோக்கி உள்ளும் புறமுமாக அவர்களைத் தள்ளியவர்கள் ஒவ்வொருவரையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக நகரை வன்முறையை நோக்கித் தள்ளியவர்கள் யார் என்பதும் அதில் கலவரத்தில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு என்ன பங்கியிருந்தது என்பதும் தெரிய வேண்டும். ‘காவல் துறை உங்கள் நண்பன்’ எனும் வாக்கியம் சாதாரண தருணங்களில் அல்ல, இக்கட்டான தருணங்களில் காவல் துறையினர் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டே அளவிடப்படும் என்பதைக் காவல் துறையினர் உணர வேண்டும்!

IRCTC to launch first pilgrim train for North East region Read more at: http://www.moneycontrol.com/news/wire-news/irctc-to-launch-first-pilgrim-train-for-ne_8280501.html?utm_source=ref_article

IRCTC to launch first pilgrim train for North East region Originating from Guwahati, the train will be launched on February 17 and cover pilgrimage sites in West Bengal and Odisha.

 These sites include Gangasagar, Sri Swamy Narayan Temple, Kalighat and Birla Temple in West Bengal as well as Sri Jagannath Temple, Konark Temple and Lingaraj Temple in Odisha. | 1 Comments IRCTC will launch its first pilgrim train for the north east region next month which will take passengers to destinations like Jagannath and Konark temples.

 This will be a six nights and seven days package for a total amount of Rs 6,161. Originating from Guwahati, the train will be launched on February 17 and cover pilgrimage sites in West Bengal and Odisha. These sites include Gangasagar, Sri Swamy Narayan Temple, Kalighat and Birla Temple in West Bengal as well as Sri Jagannath Temple, Konark Temple and Lingaraj Temple in Odisha. The package includes travel in sleeper class, all meals in the tour, non-ac tourist buses for local sightseeing, accommodation in dormitories/dharamshalas among others. 

"Buoyed by the central government's support, the inaugural run of the tourist train will set pace to the promotion of north eastern region which is rich in cultural heritage and biodiversity," an official press statement said. The ministry said this was in line with the "PM's focus on removing NE isolation through pro-active Act East Policy". 

This package is part of IRCTC's pilgrim tourist scheme which connects various pilgrim destinations as part of its different packages. Tourists who intend to avail the services may book the tickets online from www.irctctourism.com or through registered e-ticket agents or from any office of IRCTC.

Read more at: http://www.moneycontrol.com/news/wire-news/irctc-to-launch-first-pilgrim-train-for-ne_8280501.html?utm_source=ref_article

NEWS TODAY 03.07.2026