Monday, February 13, 2017

காற்றுக்கு ஏன் பெயர்!

காற்றுக்கு ஏன் பெயர்!



காற்றில்லாமல் உயிரில்லை, சுவாசமில்லை, குளிர்ச்சியில்லை. காற்றின் மூலமே ஒலிகள் காதுகளை அடைகின்றன. காற்று பலமாய் அடிக்கும் இரவில் ஒரு துளி வாசனை திரவம் அரங்கத்தையே அசத்தும்.

காற்றில்லாமல் உயிரில்லை, சுவாசமில்லை, குளிர்ச்சியில்லை. காற்றின் மூலமே ஒலிகள் காதுகளை அடைகின்றன. காற்று பலமாய் அடிக்கும் இரவில் ஒரு துளி வாசனை திரவம் அரங்கத்தையே அசத்தும்.

வீசுகிற வேகத்தைப் பொறுத்தே காற்றைத் தரம் பிரிக்கிறோம். மென்மையாய் வந்து பூக்களில் மேனியைத் தடவும்போது மொட்டுகள் யாவும் கொட்டாவி விட்டு மலர்கின்றன. அதுவே வேகமாய் வந்தால் இருக்கும் பூக்களை உதிர்த்துவிட்டுச் செல் கிறது. கோபமாய் அடித்தால் செடியையே ஒடித்து விடுகிறது.

தமிழ் இலக்கியத்தில் வீசும் திசையைப் பொறுத்து காற்றுக்குப் பெயர் வைத்தார்கள். தெற்கில் வீசினால் தென்றல், வடக்கிலிருந்து வீசினால் வாடை, கிழக்கில் கொண்டல், மேற்கில் கோடை.

வீசுகிற காற்று வெட்டவெளியிலா, வயல்வெளியிலா என்பதைப் பொறுத்து பல்வேறு இடங்களில் அவற்றிற்குப் பலவிதப் பெயர்கள். பனிமுகடுகளில் வீசும் காற்று நம்மையே மூடிவிடும். பாலைவனத்தில் எழும் சூறாவாளி உடலின் துவாரங்கள் அனைத்திலும் மண்ணைத் தூவும்.

புயலுக்குப் பின் இயற்கையில் அமைதி இருக்கலாம்; ஆனால் இதயத்தில் இருப்பதில்லை. உதிர்ந்த உயிர்கள், அதிர்ந்த கட்டிடங்கள், இடிந்த இல்லங்கள், நொடிந்த குடும்பங்கள், நொறுங்கிய வாகனங்கள், உடைந்த பாலங்கள், தகர்ந்த சாலைகள் என்று சேதப்பட்டவற்றைக் காணும்போது, நமக்குள் வீசும் சூறாவளி எளிதில் அடங்குவதில்லை.

அண்மையில் சென்னையை உலுக்கிவிட்டுச் சென்றது ‘வர்தா’ என்னும் புயல். காதுகளில் வந்து கிசுகிசுக் கும் காற்று இப்படி இரக்கமின்றி அரக்க அவதாரம் எடுக்கும் என்று யார் எதிர்பார்த்தார்கள்!

சாலை முழுவதும் மரங்களாய்க் கிடந்தன. நம் ஊரின் பசுமையே பாதி பறிபோனதைப்போல பரிதாபம்.

குப்புறக்கிடந்த மரங்களை அப்புறப்படுத்தவே அதிகக்காலம் தேவைப்பட்டது என்றால், அவை வளர்வதற்கு எத்தனை ஆண்டுகள் ஏற்பட்டிருக்கும்!

விழுந்தவை எல்லாம் இளைய மரங்கள் அல்ல. பெரும்பாலும் நெட்டை நெடுமரமாய் வளர்ந்து நின்றவை. திருமலைநாயக்கர் மகால் தூண்போல திரண்டு நின்றவை.

மரங்கள் விழுந்தன என்பதோடு புள்ளிவிவரம் நின்றுவிடும். பசுமை குறைந்தது என்பதோடு சுற்றுச்சூழல் சுருங்கிவிடும். அப்புறப்படுத்தியதில் ஆன செலவோடு கணக்கு வழக்கு நிறைவுபெற்றுவிடும்.

ஏன் விழுந்தன இம்மரங்கள்! திடமாகவும் திண்மையாகவும் பூமிக்குள் கால் நுழைத்து, விண்ணிலே கிளைபரப்பி நின்ற இவை சாய்ந்தன, சரிந்தன, மாய்ந்தன, மடிந்தன. ஆனால் இத்தனைக் காற்றிலும் மெல்லிய சிறகு கொண்ட பட்டாம்பூச்சிகள் பழுதுபடாமல் பறக்கின்றனவே! எதைச் சுட்டுகிறது இந்த நிகழ்வு!

ஓரிடத்திலேயே எப்போதும் தங்கிவிடுபவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் சரிந்துவிடுவார்கள். பறந்து திரிகிறவர்களே, பயணம் செல்பவர்களே புயலையும் அனுசரித்துப் புவியை ஆள்வார்கள்.

விழுந்த மரங்களில் பெரும்பான்மையானவை வெளிநாட்டு மரங்கள். அவை வேகமாய் வளரும். அவற்றில் பழங்கள் இருப்பதில்லை. காய்கள் காய்ப்பதில்லை. ஆனால் கொத்துக்கொத்தாக வாசமில்லாத மலர்கள் பூத்துக் குலுங்கும். அவற்றின் அடிமரம் வெறும் தடிமரம். அவற்றால் எந்தப் பயனும் இல்லை. அவை உறிஞ்சும் கரியமில வாயுவின் அளவும் சொற்பம்.

சிரமப்படாமல் சிகரம் அடைய நினைப்பவர்கள் நாம். எனவே விரைவாக வளரும் மரங்களையே வீட்டின் முன் நட்டு வைத்தோம். நட்டு வைத்ததை எல்லாம் காற்று விட்டு வைத்து விடுமா! எது வேகமாக வளர்கிறதோ அது வேகமாக விழும் என்பதையே இந்த அந்நிய மரங்கள் நமக்குச் சொல்லும் கண்ணியமான சேதி.

மண்ணுக்கான மரங்கள் நம்மிடம் அதிகம். அவை வாழைபோல் வளராமல், தாழைபோல் தழைக்காமல், ஆலம்போல் மெதுவாகவே வளரும். அவற்றின் நிழல் பலருக்கும் கூடாரமாக இருக்கும். அம்மரங்களின் மலர்களில் மருத்துவ குணம் இருக்கும். கிளைகளை ஒடித்தால் பல்குச்சியாகப் பயன்படும். அவற்றின் அடிமரங்கள் நூற்றாண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும் கதவுகளாகும்.

அவற்றின் பழங்கள் பறவைகளுக்குப் பந்தி வைக்கும். அவற்றின் இலைகள் பசுக்களுக்குத் தீவனமாகும். அங்கு மழை வரும்போது குடையில்லாமல் ஒதுங்கலாம். ஊரே கூடி பிரச்சினைகளைப் பேசலாம்.

அவை வாகனங்கள் கக்கும் புகையை உறிஞ்சும். தொழிற்சாலைகள் விடும் வாயுவை விழுங்கும். அவற்றின் அடியில் தட்பவெப்பம் கணிசமாய்க் குறையும். இயற்கை அளித்த குளிர்சாதனப் பெட்டியாய் அவை நம்மைக் குளிர்விக்கும்.

மண்ணுக்கான மரங்கள் ‘உடனடி இடியாப்பமாய்’ இருப்ப தில்லை. அவை தாய் தயாரித்துப் பரிமாறும் பலகாரமாய், நேரமானாலும் நெஞ்சை நிறைக்கும்.

காற்று வந்து மோதினால், அன்று விடுதலைக்காகப் போராடிய இந்திய இளைஞர்கள்போல் அவை எதிர்த்து நிற்கும். அவற்றிற்குத் தெரியும், அவற்றின் வாழ்வு ஓராயிரம் உயிர்களையும் உள்ளடக்கியது என்று.

நம் மண் சார்ந்த மரங்களின் அருகில் இரவு நேரத்தில் சென்றால் எத்தனை உயிர்களுக்கு அவை விடுதியாக இருக்கின்றன என்பது தெரியும். வண்டுகளின் ஓசை, பறவைகள் அடையும் ஒலி என்று அம்மரங்களே வனங்களின் பிரதிநிதியாய் இருக்கும்.

இனிமேலாவது புயலுக்குத் தாக்குப்பிடிக்கும் மரங்களைத் தூக்கிப்பிடிப்போம்.

விழுந்து கிடந்த மரங்கள் வெறும் கட்டைகள் மட்டும்தானா! அவை எத்தனை சம்பவங்களைத் தங்கள் கிளைகளில் முடிந்து வைத்திருந்தன என்பது யாருக்குத் தெரியும்.

வழிதவறி வந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்த நினைவுகளை, வீட்டுக்குத் தெரியாமல் அவற்றின் கீழே அமர்ந்து அன்பாய்ப் பேசிய காதலர்களின் ரகசியங்களை, அன்றாடம் அவற்றின் நிழலில் கடைவிரித்த எளியவர்களின் எதிர்பார்ப்புகளை அவை யாரிடமும் பகிராமல் சென்றுவிட்டனவே!

இம்மரங்களில் வாழ்ந்த பறவைகள் எங்கு சென்றன! அவை அந்தக் கோரக் காற்றின்போது எங்கு சென்று தப்பித்தன!

மாற்றல் ஆணை வந்தால் பயணப்படியோடு செல்வதற்கே கண்ணைக் கசக்குகிற நமக்கு அவற்றின் கண்ணீரின் கனம் தெரியுமா!

இந்த மரங்கள் ஒவ்வொன்றிற்கும் எத்தனை ஆசை இருந்திருக்கும்! எந்த மரமாக இருந்தாலும் வாழும் வரை வளர்ந்தால்தான் அவை மரம்; இல்லாவிட்டால் பட்டமரம், வெறும் கட்டைமரம். அவை வாழ்ந்ததற்குப் பின்பு கட்டிலாகவோ, தொட்டிலாகவோ உருமாறுவதற்குக் கனவு கண்டிருக்கும். ஆனால் ஒரு சவப்பெட்டியாகக்கூட ஆகாமல் அவையே சவமாகி விட்டனவே!

மரங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதம் மட்டுமே மரத்துப்போய் இருக்கிறது. நம்மிலும் பலருக்கு அடைக்கலம் கொடுத்த அவற்றின் மரணம் பல சோகக் காவியங்களின் சொற்சித்திரம் என்பதே ‘வர்தா’ அழுத்தம் திருத்தமாய்ச் சொன்ன சேதி.

மனிதர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்தும் நாம் மரங் களுக்காகவும் செலுத்துவோம்.
தமிழக கவர்னர் பாரபட்சமின்றி செயல்படுகிறார், அவருக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

DAILY THANTHI

பெங்களூரு

தமிழக கவர்னர் பாரபட்சமின்றி செயல்படுகிறார், அவருக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

உள்நோக்கம்

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசியல் நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். அரசியல் சட்டப்படி, தனது கடமையை ஆற்றி வருகிறார். பாரபட்சமின்றி தனது கடமையை செய்து வருகிறார். அவருக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம்.

தமிழ்நாட்டில் முதல்- அமைச்சர் பதவிக்கு காலியிடம் எதுவும் இல்லை. அங்கு ஒரு முதல்-அமைச்சர் தலைமையில் அரசு நடந்து வருகிறது.

நாங்கள் தலையிடவில்லை

இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை, அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினை. அதற்கு அக்கட்சி தலைவர்களே தீர்வு காண்பார்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் தலையிடுவதாக கூறுவது நியாயமற்ற விமர்சனம்.

மேலும், தமிழக சட்டசபையில் பா.ஜனதாவுக்கு உறுப்பினர் இல்லை. எனவே, அங்கு நாங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் எந்த களத்தையும் தயார்படுத்தவில்லை.

நினைவிடம்

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக ஆக்கும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் யோசனையை நான் வரவேற்கிறேன். இது நல்ல விஷயம் என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். ஆனால், இதில் மத்திய அரசுக்கு தொடர்பு எதுவும் இல்லை. யாருமே அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடாதநிலையில், அ.தி.மு.க. தலைவர்கள்தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
அ.தி.மு.க.,வுக்கு குட்டி சிங்கம் வந்துள்ளதாம்! * தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறார் சசிகலா

'ஜெயலலிதாவும், நானும், சென்னை சிறையையும் பார்த்துள்ளோம்; பெங்களூரு சிறையையும் பார்த்துள்ளோம். அதிலிருந்து மீண்டு வந்து, ஆட்சியையும் பிடித்துள்ளோம். பெண் தானே என்று பயமுறுத்தி பார்க்கலாம் என நினைத்தால், ஜெயலலிதாவை போலவே, என்னிடமும் முடியாது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா ஆவேசமாக பேசினார்.

கல்பாக்கம் அருகே உள்ள கூவத்துார் சொகுசு விடுதியில், எம்.எல்.ஏ.,க்களிடம் அவர் பேசியதாவது:

இந்த இயக்கத்தை தலைவருக்கு பின், ஒரு பெண், தாயாகக் கட்டிக் காத்து வந்தார். அதன்பின், நீங்கள் எல்லாரும் சேர்ந்து, என்னை இந்த இயக்கத்தை நடத்த, அன்பான அழைப்பு விடுத்தீர்கள்.
அதை ஏற்று, நானும் இந்த இயக்கத்தை நடத்த முன்வந்தேன். எந்த அளவுக்கு, நம் எதிரிகள் வலை பின்னுகின்றனர்; கட்சி வளர்ந்து விடுமோ என்ற பயம், நான் பொதுச்செயலரான நாளில் இருந்து துவங்கி விட்டது.

அதற்கு காரணம், என்னை பற்றி நிறைய விசாரித்துள்ளனர். நான் எப்படி; அப்படி, இப்படி சொன்னால் கேட்பாரா என விசாரித்துள்ளனர். அப்போது எல்லாரும் கூறியுள்ளனர். 'இவர், மூன்று ஆண்டுகளாக, கட்சி கஷ்டமான நிலையில் இருந்தபோது, தன் முடிவில் இருந்து, ஒரு, 'இன்ச்' கூட பிறழாமல், ஜெ.,க்கு தோள் கொடுத்து, தளபதியாக இருந்துள்ளார். அதனால், முன்னின்று நடத்தக் கூடிய தகுதி அவருக்கு உள்ளது. அவரை ஜாக்கிரதையாக தான், 'டீல்' செய்ய வேண்டும்' என கூறியுள்ளனர்.

அதன் வெளிப்பாட்டை, தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பன்னீர்செல்வம் என, ஒருவர் உள்ளார். அனேகமாக, நீங்கள் மறந்திருப்பீர்கள். தற்போது, நம் கட்சியில் இல்லை.

அவரையும், என்னையும் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அவர் மிகவும் அமைதியாக, என்ன சொன்னாலும் தலையாட்டி, சொல்வதை கேட்டு போய் விடுவார் என நினைக்கின்றனர். என்னை பார்த்தால், நான் சிங்கத்தோடு இருந்தவள். குட்டி சிங்கம் புதிதாக வந்துள்ளது என, நினைக்கின்றனர்.

'அ.தி.மு.க.,விற்கு புது குட்டி சிங்கம் வந்துள்ளது. இதை, நாம் எப்படி சமாளிப்பது? எனவே, இப்பவே மீன் பிடிக்கிற மாதிரி, வலையை வீசுவோம்; எப்படியாவது மாட்டிவிடும்' என நினைக்கின்றனர். இந்த சிங்கம், எத்தனை வலை வீசினாலும், அதை எதிர்கொண்டு வெளியே வரும்.இந்த சிங்கத்தோடு கூட இருக்கும் எல்லாரும் சிங்கம் தான். அது, அவர்களுக்கு தெரியவில்லை. ஒரு சிங்கத்தை பார்த்து, பின்னால் வருவதும் சிங்கக் குட்டிகளாகத் தான் இருக்கும்.

ஒரு சிங்கம் இல்லை என்றால், மற்றொரு சிங்கம் பிறக்கும். ஜெ., அனைத்தையும் கற்றுக் கொடுத்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சியை எப்படியாவது கலைத்து விடலாம் என்று நினைத்து, சில எட்டப்பர்கள் உருவாகி உள்ளனர். அவர்களை வைத்து, இதை செய்து விடலாம் என நினைக்கின்றனர்.

ஆனால், இங்கு இருப்பவர்கள் தான் அரசாங்கம்; அதை அமைக்கக் கூடியவர்கள் தான், இங்கே இருக்கின்றனர். தலைவரும், ஜெ.,வும் துணையாக உள்ளனர். நீங்கள், ஒரே ஒரு மந்திரத்தை மட்டும், மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக இருந்த நம்மை, இந்த அளவிற்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா. அதை மறந்து விடாதீர்கள்.

எம்.எல்.ஏ.,க்களை அடைத்து வைத்துள்ளதாக கூறுகின்றனர். நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்பதை காட்ட, வீடியோ எடுக்க சொன்னேன். எந்த நேரத்திலும், தடை போட்டு நிறுத்தி விட முடியாது. இந்த, 129 எம்.எல்.ஏ.,க்களும் தங்கம். இதை யாரும் தடுப்பணை போட்டு தடுக்க முடியாது. அ.தி.மு.க.,வையும், அதனுடைய ஆட்சியையும், அழிக்க நினைக்கின்றனர். நிச்சயம் தோற்று போவர். எல்லாரும் சிங்கங்களாக மாறி விட்டீர்கள்.

நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது. நம்மிடம் வலை போட முடியவில்லை என்றால், குடும்பத்தில் வலை போட பார்ப்பர். ஜாக்கிரதையாக இருங்கள். ஜெ., ஆட்சி, தமிழக மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி.

அர்ப்பணிப்பு உணர்வோடு, நம்முடைய திட்டங்களை நிறைவேற்றி, அவர்களின் அன்பை பெற்று, லோக்சபா தேர்தலிலும், அதன்பிறகு வரும் சட்டசபை தேர்தலிலும், மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு, நம்முடைய உழைப்பு இருக்க வேண்டும். நானும் உழைப்பேன்; உங்களுடைய உழைப்பும் தேவை. நீங்கள் அனைவரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ.,வாக உள்ளீர்கள்.

புதியவர்களும், பழையவர்களும் உள்ளீர்கள். உங்கள் தொகுதியில், தற்போது நடக்கும் நிகழ்வு களை, ஆட்சி நம்மிடம் வந்ததும், இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன என்பதை எடுத்துக்கூறி, தொகுதி மக்களிடம் பழகி, லோக்சபா தேர்தலில், நாம், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

நாம் யார் என்பதை காட்டுவதற்கு, கோபம் பெரிதல்ல; செயல் தான் வேண்டும். அதில் தீவிரமாக இருந்து, வெற்றியை ஏற்படுத்தி, ஜெ., சமாதியில் போய், பாதத்தில் வைக்க வேண்டும்.நான் பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட பின், ஜெ., நினைவிடத்திற்கு போனபோது, அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. காலை எடுத்து வைக்க முயற்சித்தபோது, ஒரு சக்தி, என்னை ஈர்த்து கொண்டிருந்தது.

இந்த கட்சியை, தொண்டர்கள் அனைவரும், என்னை நம்பி ஒப்படைத்துள்ளனர். உங்கள் மீது ஆணையிட்டு கூறுகிறேன். இந்த இயக்கத்தையும், இந்த ஆட்சியையும், நிச்சயம் என் உயிர் உள்ளவரை காப்பாற்றிக் கொண்டே இருப்பேன் என, உறுதி எடுத்துவிட்டு தான் வந்தேன்.

இந்த இயக்கத்தையும், ஆட்சியையும், எந்த கொம்பனாலும், அசைத்து பார்க்க முடியாது. நிச்சயமாக, அதில் உறுதியாக இருக்கிறேன். கட்சிக்கு, ஒரு பிரச்னை என்று வந்தால், என் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவேன். ஒரு கஷ்டமான நேரத்தில், நாம் பார்க்கிறோம். வசதி, வாய்ப்பு உள்ளது. ஒரு அமைச்சராக இருந்து, கட்சியை இரண்டாக பிரிப்பதற்கு, இப்போது பன்னீர்செல்வம், நம் கையாலே நம் கண்ணை குத்துகிறார். இந்த சமயத்தில், நீங்கள் நடுநிலையான குடும்பத்தில் இருந்து வந்து, என்னுடன் இருக்கிறீர்கள்; நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன்.

இந்நிகழ்ச்சியை அ.தி.மு.க., பதிவேட்டில், நாம் எல்லாரும் சேர்ந்து பதிய வைக்க வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை, எனக்கு உண்டு. நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக, என்னுடன் இருந்தால், தமிழக மக்களுக்கும், நம் கட்சிக்கும், நம்முடைய பணியை செய்து, மேன்மேலும், அ.தி.மு.க.,வை இங்கிருந்து, டில்லி வரை சொல்கிறேன்; யாரும் எதுவும் செய்ய முடியாது.

நம் ஒற்றுமை தான் தேவை. என்னுடன் கூட இருந்தால் போதும், நான் எல்லாவற்றையும் சாதிப்பேன்; எவ்வளவு பேர் வந்தாலும் சாதிப்பேன். அந்த தைரியம் என்னிடம் உள்ளது. அது விலை போகாத தைரியம். யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் எடுத்த முடிவில் இருந்து, பின்வாங்க மாட்டேன். கட்சியையும், ஆட்சியையும் நிலைநாட்ட, எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, அதை தெளிவாக எடுப்பேன்; கலங்க மாட்டேன். ஜெ.,வுக்கு துணையாக இருந்துள்ளேன். இருவரும், சென்னை சிறையை பார்த்துள்ளோம்; பெங்களூரு சிறையையும் பார்த்துள்ளோம். அதிலிருந்து மீண்டு வந்து, ஆட்சியை பிடித்துள்ளோம்.

பெண் தானே என்று பயமுறுத்தி பார்க்கலாம் என நினைத்தால், ஜெ.,விடம் எப்படி முடியாதோ, அதுபோல் என்னிடமும் முடியாது. எனக்கு ஒன்றே ஒன்று தான். நான் உறுதிமொழி எடுக்கப் போகிறேன். நமது அரசை அமைத்து, ஜெ., சமாதியில், கேபினட் அமைச்சர்களோடு, புகைப்படம் எடுத்து, கோட்டைக்கு போக வேண்டும் என்பது தான் நமது சபதம்.

நீங்கள் அத்தனை பேரும், என்னோடு இருந்தால், ஒரு கோடி பேர் இருப்பதாக நினைத்துக் கொள்வேன். நமது ஒன்றரை கோடி உறுப்பினர்களையும் சேர்த்து தான் கூறுகிறேன். அவர்கள், ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பர்.

அவர்கள், கட்சிக்கு பிரச்னை வரும் என நினைப்பர். தலைவர் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய இயக்கத்தை, ஜெ., வழிநடத்தி மாபெரும் கட்சியாக உருவாக்கி, எம்.எல்.ஏ.,க்களை கொடுத்து சென்றுள்ளார். நாம் ஆட்சி அமைத்து, ஜெ., சமாதியில் உறுதிமொழி எடுத்து, கோட்டைக்கு போகிறோம். சட்டசபை உள்ளே, ஜெ., படத்தை திறக்கிறோம். முக்கியமான விஷயம், நீங்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள் அல்ல. ஜெ., வசதியை பார்க்க மாட்டார்.

ஒரு தொண்டர் கூட, நம் கட்சியில் எம்.எல்.ஏ.,வாக முடியும். ஒவ்வொரு தொண்டனும், எம்.எல்.ஏ.,வாக முடியும் என நினைக்கின்றனர். மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஜெ., படம், சட்டசபையில் வைக்க வேண்டும். அதை வைக்க விடாமல் செய்ய, நம் கட்சியில் இருந்து ஆள் போய் உள்ளது. இது, ஜெ.,வுக்கு செய்யும் துரோகம் இல்லையா?

எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து, ஜெ.,வின் உண்மையான விசுவாசி என்பதை நிரூபிக்க, ஜெ., படத்தை திறக்க வேண்டும். அதை, நான் பார்த்தால் தான், வாழ்க்கையில், மிகப்பெரிய பாக்கியமாக நினைப்பேன். காலா காலத்திற்கும், கட்சியை அழிக்க முடியாது என, ஜெ., கடைசியாக கூறினார்.

ஒரு பெண்ணை தலைமையாகக் கொண்ட இந்த இயக்கம், அடுத்ததும் நானும் பெண்ணாக வந்து விட்டேன். அந்த படத்தை திறக்கிறது தான் வேலை. அதற்கு எல்லாரும் ஒற்றுமையாக இருந்து, படத்தை திறக்க வேண்டும். இந்த வாய்ப்பை, நாம் நழுவ விட்டுவிடக் கூடாது. தி.மு.க.,வினரை பற்றி தெரியாமல் இருக்கலாம். அந்த கட்சி இல்லை என்றால், யார் படத்தை திறப்பர் என நினைக்கின்றனர். இதை, அந்த கட்சியில் இருந்து, ஒரு ஆள் கூறினார். நாங்கள், ஜெ., படத்தை திறப்போம்; அதை பார்க்கத்தான் போகிறீர்கள். ஒரு சபதம் எடுத்துள்ளேன்; அதை தான் கூறுகிறேன்.

எம்.ஜி.ஆர்., படம் இருந்தது. அதன்பின், கட்சியின் அடுத்த தலைவர் ஜெ., படத்தை திறக்க, எந்த இடையூறும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, உங்களுக்கு உள்ளது. ஜெ.,வை மனதில் நினைத்துள்ளோம். அது உண்மை எனக் கூறுவது, சட்டசபை வளாகம்.

இந்த கட்சி பொதுச்செயலர் பொறுப்பை கொடுத்துள்ளீர்கள். அந்த பொறுப்பில், துளியும் மாறாமல், இந்த கட்சியின் தலைவர் படத்தை, சட்டசபையில் வைக்க, அரசை பொதுச்செயலர் என்ற முறையில் நடத்திக் காட்டுவேன். அதுவே என் ஆசை; அதை பகிர்ந்து கொள்ளவே வந்தேன்.நாம் ஒரே குடும்பமாக இருந்து, ஜெ., படத்தை சட்டசபையில் திறந்து வைப்போம்.
இவ்வாறு சசிகலா பேசினார்.

பேச்சின் நடுவே, ஆள்காட்டி விரலை உயர்த்தியும், கண்ணை உருட்டியும் பாவனை செய்தது, எம்.எல்.ஏ.,க்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.


சசிகலா வழக்கு தீர்ப்பு எப்போது?
சென்னை:''சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, புதன் அல்லது வியாழன் வெளியாகலாம்,'' என, மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி கூறியுள்ளார்.



தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அவரை காபந்து முதல்வராக பதவியில் நீடிக்கும்படி, கவர்னர், வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டார். அதன் பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா,

முதல்வர் ஆவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், நிர்பந்தம் காரணமாவே பதவியை ராஜினாமா செய்ததாக, முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்ததால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வராக பதவியேற்க, யாரை அழைப்பது என்ற விஷயத்தில், கவர்னர் வித்யாசாகர் ராவ் காலந் தாழ்த்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி விபரம்:

இந்த வாரத்தில் தீர்ப்புவெளியாகாத பட்சத்தில், சசிகலாவை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்பது சரியானதாக இருக்கும்.

சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, புதன் அல்லது வியாழன் வெளியாகலாம். சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல்,

கவர்னர் காலந்தாழ்த்துவது சரியே. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால்இதுகுறித்து முடிவு எடுக்க, அவருக்கு நேரம் தேவைப்பட்டி ருக்கும். அவர், சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை;

எனவே, காலதாமதம் சட்ட விரோதமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
அரசு இ - சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்?

அரசு, 'இ - சேவை' மையங்களில், இணையதளம் மூலம், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சேவையை, உணவு துறை துவக்க உள்ளது. தமிழகத்தில், ரேஷன் கடைகளில், குறைந்த விலையில் உணவு பொருட்கள் வாங்குவது உட்பட, அரசின் பல சலுகைகளைப் பெற, ரேஷன் கார்டு அவசியம். ரேஷன் கார்டு பெற வேண்டும் எனில், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் கார்டு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால், குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை. இதற்கு தீர்வாக, புதிய நடைமுறை வர உள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் துறையின், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் சேவைக்கான பணி முடிந்துள்ளது. இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். தற்போது, முகவரி மாற்றம்; பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளை இணையதளத்தில் செய்யலாம். தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், எல்காட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, 10 ஆயிரம், 'இ - சேவை' மையங்கள் உள்ளன. அவற்றின் மூலமும், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் துவங்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


சசி தந்த பட்டியல்; கவர்னர் சந்தேகம்!

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அமைச்சர் பாண்டியராஜன், ஆதரவு அளித்துள்ளதால், சசிகலா தந்த பட்டியல் குறித்து, கவர்னருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.




முதல்வர் பன்னீர்செல்வம் கவர்னரை சந்தித்து, 'எனக்கு, 64 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும், சசிகலா தரப்பினர் அடைத்து வைத்துள்ளனர். எனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க, வாய்ப்பு தாருங்கள்' என, கோரிக்கை விடுத்தார். கவர்னர் எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளார்.

இந்நிலையில், சசிகலா கவர்னரை சந்தித்த போது, அவருக்கு ஆதரவாக, அமைச்சர் பாண்டியராஜனும் சென்றிருந்தார். ஆனால்,

நேற்று முன்தினம், திடீரென முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்தார். இதனால், சசிகலா வழங்கிய, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு பட்டி யலை நம்பி, அவரை ஆட்சி அழைக்க முடியுமா என்றசந்தேகம், கவர்னருக்கு எழுந்துள்ளது.

பாண்டியராஜனை போல், ஏராளமானோர் பன்னீர் செல்வம் பக்கம் செல்ல வாய்ப்புள்ளதால், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும், கவர்னர் தனித்தனியே சந்தித்து பேச வாய்ப்புண்டு என, கவர்னர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சசிகலாவுக்கு சிக்கல்

தமிழக சட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தற்போதைய நிலவரப் படி, முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பில், ஏழு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மயிலாப்பூர், எம்.எல்.ஏ., நடராஜ், மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த, நாகப்பட்டினம் எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆகியோர், முடிவை அறிவிக்காமல் உள்ளனர்.

மீதமுள்ள, 126 எம்.எல்.ஏ.,க்களில், எத்தனை பேர், சசிகலாவுக்கு முழு மனதுடன், ஆதரவு தெரிவித் துள்ளனர் என, தெரியவில்லை. பெரும்பாலான,
எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வத்திற்கு, ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவர்களால், தனியார் விடுதியில் இருந்து, தப்பிக்க முடியாத நிலை உள்ளது.

அவர்களில், குறைந்தது, 12 எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வத்திற்கு, ஆதரவாக திரும்பி னாலே, சசிகலாவால் ஆட்சி அமைக்க, உரிமை கோர முடியாது. எனவே, அனைவரையும் தக்க வைத்துக்கொள்ள, சசி தரப்பு, அனைத்து வித முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
- நமது நிருபர் -

தன்னிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் சந்தோஷ மாக இருப்பதாக, சசிகலா கூறினாலும், அவர்கள் மத்தியில், பெரும் புகைச்சல் கிளம்பி உள்ளது.


தன்னிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் சந்தோஷ மாக இருப்பதாக, சசிகலா கூறினாலும், அவர்கள் மத்தியில், பெரும் புகைச்சல் கிளம்பி உள்ளது. 

DINAMALAR




கூவத்துார் விடுதிக்கு நேரில் வந்து, ஒவ்வொரு வரையும் தனித்தனியாக சந்தித்த சசிகலா, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியதாக, அவர்கள் புலம்புகின்றனர். 'மொபைல் போனில் பேசக் கூடாது; 'டிவி' பார்க்க கூடாது' என, மன்னார்குடி உறவுகள், ஆளாளுக்கு உத்தரவு கள் போடுவதாலும், எம்.எல்.ஏ.,க்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து, மனிதச் சங்கிலி போல, உயரமான, தடிமனான மனிதர்களை நிறுத்தி, இருட்டு இடத்தில் அடைத்து வைத்தி ருப்பதால், வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.காஞ்சி மாவட்டம், கல்பாக்கம் அருகில் உள்ள, சொகுசு விடுதியில் தங்கியுள்ள, எம்.எல்.ஏ.,க்களை, இரண்டு நாட்களாக, சசிகலா சந்தித்து பேசி வருகிறார். நேற்று முன்தினம், மூன்று மணி நேரம் அங்கிருந்த சசிகலா, ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசியுள்ளார்.

அப்போது, ஒவ்வொருவரிடமும், அமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதி கூறியுள்ளார். மேலும், எம்.எல்.ஏ.,க்களிடம், '15 கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்' என்றும், உறுதி

அளித்ததாக தெரிகிறது.இப்படி அவர், ஒவ் வொருவரிடமும் கூறிய விஷயம்,அவர் சென்ற பின், கூடிப் பேசியபோது, எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிய வந்துள்ளது; அதனால், அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'அனைவருக்கும், எப்படி அமைச்சர் பதவி தர முடியும்? நம்மை ஏமாற்ற முயல்கிறார்; ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, பணமும் தரவில்லை. தங்கம் வேற தர்றேன்னு யாரோ போன் பண்ணிச் சொல்கின்றனர்.நம்பவா முடிகிறது?' என, எம்.எல்.ஏ.,க்கள் புலம்பியுள்ளனர்.

இதனால், அதிருப்தியில் இருக்கும், எம்.எல்.ஏ.,க் களை, சசிகலா உறவினர்கள், ஆளாளுக்கு போடும் உத்தரவுகளும் எரிச்சல் அடைய செய் துள்ளது. 'அங்கே போகக் கூடாது; வெளி யில் யாரிடமும் பேசக்கூடாது' என, அவர்கள் காட்டும் கெடுபிடிகளும், கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தகவல், சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களை சமாதானப்படுத்த, நேற்று இரண்டாவது நாளாக, சசிகலா, கூவத்துார் சென் றார். அதிருப்தியில் இருந்தவர்களிடம், மேலும் சில வாக்குறுதிகளை அளித்துள்ளார். பின், அங்கே பட்டுவாடா நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், அமைச்சர் பதவி என, எல்லாருக்கும் பொய் வாக்குறுதி அளித்த விஷயம்,
எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில், புகைச்சலை கிளப்பி உள்ளது. அதனால், அங்கிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளனர். ஆனால், அங்கிருந்து செல்ல முடியாத அளவுக்கு, நுழைவு வாயில் பூட்டப்பட்டு, மனிதச் சங்கிலியாக, குண்டர்கள் நிறுத்தப்பட்டுஉள்ளனர். விடுதி வெளியில்

கும்மிருட்டாக உள்ளதால், வெளியில் தலை காட்டவும் அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து, அதிருப்தியாளர்கள் கூறியதாவது:


மற்ற இடத்தை விட, இந்த ரிசார்ட் அமைவிடம் வித்தியாசமானது. கடலில் அலைகள் அதிகரிக்கும்போது, கழிமுகப் பகுதிக்கு நீர் வந்து செல்லும். இத்தகைய கழிமுக பகுதியில், மூன்று பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டு, ஒரேயொரு வழி மட்டும் கொண்டதாக, இது அமைந்துள்ளது.நுழைவாயில் சாலையை தவிர்த்து, சுற்றுப்புற பகுதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல், தீவு போன்ற பகுதி இது. எனவே, இங்கு தங்க வைத்தால், தப்பிச் செல்ல முடியாது என்பதை திட்டமிட்டே செய்துள்ள னர். போதாத குறைக்கு, மனிதச் சங்கிலி போல, உயரமான, தடிமனான ஆட்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால், சிறையில் அடைபட்டது போன்றே, எம்.எல்.ஏ.,க்கள் கருதுகின்றனர். சசிகலா தரப்பு மீது அதிருப்தி அடைந்தாலும், அங்கிருந்து தப்பிக்க முடியாத நிலை உள்ளது. கிட்டத்தட்ட அந்தமான் சிறைக் கைதிகள் போல தான், இவர்கள் அங்கே இருக்கின்றனர்.காவல் துறை உதவினால் மட்டுமே, எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் விருப்பப்படி வெளியில் வர முடியும் என்ற நிலை காணப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தங்களின் ஆபத்தான தருணங்களை மறக்க, சிலர், 'உற்சாகம்' ஏறிய நிலையில், தம்மை மறந்து, 'குத்தாட்டம்' போடுகின்றனர்; 'உற்சாகம்' குறைந்ததும், தங்கள் நிலையை எண்ணி, கவலையில் மூழ்குகின்றனர்.

- நமது நிருபர் -

Self-financing medical, dental college fee details released

Self-financing medical, dental college fee details released The Hindu Bureau Chennai. 16.08.2026 Tamil Nadu’s Selection Committee has put up...