Monday, February 13, 2017

தன்னிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் சந்தோஷ மாக இருப்பதாக, சசிகலா கூறினாலும், அவர்கள் மத்தியில், பெரும் புகைச்சல் கிளம்பி உள்ளது.


தன்னிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் சந்தோஷ மாக இருப்பதாக, சசிகலா கூறினாலும், அவர்கள் மத்தியில், பெரும் புகைச்சல் கிளம்பி உள்ளது. 

DINAMALAR




கூவத்துார் விடுதிக்கு நேரில் வந்து, ஒவ்வொரு வரையும் தனித்தனியாக சந்தித்த சசிகலா, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியதாக, அவர்கள் புலம்புகின்றனர். 'மொபைல் போனில் பேசக் கூடாது; 'டிவி' பார்க்க கூடாது' என, மன்னார்குடி உறவுகள், ஆளாளுக்கு உத்தரவு கள் போடுவதாலும், எம்.எல்.ஏ.,க்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து, மனிதச் சங்கிலி போல, உயரமான, தடிமனான மனிதர்களை நிறுத்தி, இருட்டு இடத்தில் அடைத்து வைத்தி ருப்பதால், வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.காஞ்சி மாவட்டம், கல்பாக்கம் அருகில் உள்ள, சொகுசு விடுதியில் தங்கியுள்ள, எம்.எல்.ஏ.,க்களை, இரண்டு நாட்களாக, சசிகலா சந்தித்து பேசி வருகிறார். நேற்று முன்தினம், மூன்று மணி நேரம் அங்கிருந்த சசிகலா, ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசியுள்ளார்.

அப்போது, ஒவ்வொருவரிடமும், அமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதி கூறியுள்ளார். மேலும், எம்.எல்.ஏ.,க்களிடம், '15 கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்' என்றும், உறுதி

அளித்ததாக தெரிகிறது.இப்படி அவர், ஒவ் வொருவரிடமும் கூறிய விஷயம்,அவர் சென்ற பின், கூடிப் பேசியபோது, எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிய வந்துள்ளது; அதனால், அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'அனைவருக்கும், எப்படி அமைச்சர் பதவி தர முடியும்? நம்மை ஏமாற்ற முயல்கிறார்; ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, பணமும் தரவில்லை. தங்கம் வேற தர்றேன்னு யாரோ போன் பண்ணிச் சொல்கின்றனர்.நம்பவா முடிகிறது?' என, எம்.எல்.ஏ.,க்கள் புலம்பியுள்ளனர்.

இதனால், அதிருப்தியில் இருக்கும், எம்.எல்.ஏ.,க் களை, சசிகலா உறவினர்கள், ஆளாளுக்கு போடும் உத்தரவுகளும் எரிச்சல் அடைய செய் துள்ளது. 'அங்கே போகக் கூடாது; வெளி யில் யாரிடமும் பேசக்கூடாது' என, அவர்கள் காட்டும் கெடுபிடிகளும், கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தகவல், சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களை சமாதானப்படுத்த, நேற்று இரண்டாவது நாளாக, சசிகலா, கூவத்துார் சென் றார். அதிருப்தியில் இருந்தவர்களிடம், மேலும் சில வாக்குறுதிகளை அளித்துள்ளார். பின், அங்கே பட்டுவாடா நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், அமைச்சர் பதவி என, எல்லாருக்கும் பொய் வாக்குறுதி அளித்த விஷயம்,
எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில், புகைச்சலை கிளப்பி உள்ளது. அதனால், அங்கிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளனர். ஆனால், அங்கிருந்து செல்ல முடியாத அளவுக்கு, நுழைவு வாயில் பூட்டப்பட்டு, மனிதச் சங்கிலியாக, குண்டர்கள் நிறுத்தப்பட்டுஉள்ளனர். விடுதி வெளியில்

கும்மிருட்டாக உள்ளதால், வெளியில் தலை காட்டவும் அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து, அதிருப்தியாளர்கள் கூறியதாவது:


மற்ற இடத்தை விட, இந்த ரிசார்ட் அமைவிடம் வித்தியாசமானது. கடலில் அலைகள் அதிகரிக்கும்போது, கழிமுகப் பகுதிக்கு நீர் வந்து செல்லும். இத்தகைய கழிமுக பகுதியில், மூன்று பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டு, ஒரேயொரு வழி மட்டும் கொண்டதாக, இது அமைந்துள்ளது.நுழைவாயில் சாலையை தவிர்த்து, சுற்றுப்புற பகுதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல், தீவு போன்ற பகுதி இது. எனவே, இங்கு தங்க வைத்தால், தப்பிச் செல்ல முடியாது என்பதை திட்டமிட்டே செய்துள்ள னர். போதாத குறைக்கு, மனிதச் சங்கிலி போல, உயரமான, தடிமனான ஆட்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால், சிறையில் அடைபட்டது போன்றே, எம்.எல்.ஏ.,க்கள் கருதுகின்றனர். சசிகலா தரப்பு மீது அதிருப்தி அடைந்தாலும், அங்கிருந்து தப்பிக்க முடியாத நிலை உள்ளது. கிட்டத்தட்ட அந்தமான் சிறைக் கைதிகள் போல தான், இவர்கள் அங்கே இருக்கின்றனர்.காவல் துறை உதவினால் மட்டுமே, எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் விருப்பப்படி வெளியில் வர முடியும் என்ற நிலை காணப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தங்களின் ஆபத்தான தருணங்களை மறக்க, சிலர், 'உற்சாகம்' ஏறிய நிலையில், தம்மை மறந்து, 'குத்தாட்டம்' போடுகின்றனர்; 'உற்சாகம்' குறைந்ததும், தங்கள் நிலையை எண்ணி, கவலையில் மூழ்குகின்றனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Self-financing medical, dental college fee details released

Self-financing medical, dental college fee details released The Hindu Bureau Chennai. 16.08.2026 Tamil Nadu’s Selection Committee has put up...