Monday, February 13, 2017

வெளிநாடு செல்ல கனிமொழிக்கு அனுமதி

புதுடில்லி: துணை ஜனாதிபதியுடனான வெளிநாட்டு பயணத்தில் பங்கேற்க, '2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழிக்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மோசடி குறித்த வழக்கில், தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 'துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, வரும், 19 முதல் 24 வரை, ருவாண்டா, உகாண்டா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பயணக் குழுவில் இடம்பெற்றுள்ளதால் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், கனிமொழி மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த சிறப்பு கோர்ட் நீதிபதி, ஓ.பி.சைனி, பல்வேறு நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தார்.

No comments:

Post a Comment

Self-financing medical, dental college fee details released

Self-financing medical, dental college fee details released The Hindu Bureau Chennai. 16.08.2026 Tamil Nadu’s Selection Committee has put up...