Monday, February 13, 2017



சசிகலா வழக்கு தீர்ப்பு எப்போது?
சென்னை:''சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, புதன் அல்லது வியாழன் வெளியாகலாம்,'' என, மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி கூறியுள்ளார்.



தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அவரை காபந்து முதல்வராக பதவியில் நீடிக்கும்படி, கவர்னர், வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டார். அதன் பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா,

முதல்வர் ஆவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், நிர்பந்தம் காரணமாவே பதவியை ராஜினாமா செய்ததாக, முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்ததால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வராக பதவியேற்க, யாரை அழைப்பது என்ற விஷயத்தில், கவர்னர் வித்யாசாகர் ராவ் காலந் தாழ்த்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி விபரம்:

இந்த வாரத்தில் தீர்ப்புவெளியாகாத பட்சத்தில், சசிகலாவை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்பது சரியானதாக இருக்கும்.

சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, புதன் அல்லது வியாழன் வெளியாகலாம். சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல்,

கவர்னர் காலந்தாழ்த்துவது சரியே. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால்இதுகுறித்து முடிவு எடுக்க, அவருக்கு நேரம் தேவைப்பட்டி ருக்கும். அவர், சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை;

எனவே, காலதாமதம் சட்ட விரோதமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025