Sunday, March 12, 2017

பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி




'பத்தினி தெய்வம்' என, தன்னை இழிவாக விமர்சித்த, நாஞ்சில் சம்பத்துக்கு, 'உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி, உங்களுக்கு மிகப் பொருத்தம் என, நிரூபித்து விட்டீர்கள்' என்று, பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க.,வில் சசிகலா அணி ஆதரவாளரும், தலைமை பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், தன் முகநுால் பதிவில் கூறியுள்ளதாவது:முன்னாள் முதல்வர் பன்னீரின் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்ப்பது அல்லது ஸ்டாலின் முதல்வராக துணை நிற்பது. அதுவும் முடியாவிட்டால், தேர்தலுக்கு வழிகாணுவது. இந்த சதி திட்டத்துக்கு சப்பைக்கட்டு கட்ட, இன்றைக்கு தகிடுதத்தம் செய்கிறார்; தப்பாட்டம் ஆடுகிறார்.

பத்தினி தெய்வங்கள்

பாத்திமா பாபு, லதா போன்ற பத்தினி தெய்வங்களின் ஆதரவும், அவருக்கு கிடைத்து விட்டது. ஆனால், பார்த்த முகங்களையே திரும்பத் திரும்ப பார்த்து, அரசு வீட்டில் இருந்து கொண்டு, அரசியலில் காணாமல் போன ஆட்களையும், காலாவதியான தலைவர்களையும், வீட்டில் கூட்டி வைத்துக் கொண்டு, கும்மாளம் போடுகிறார்.இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்திருந்தார்.

உங்கள் தட்டில் இருப்பது சோறா?

இது தொடர்பாக, அ.தி.மு.க.,வில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பாத்திமா பாபு மற்றும் நடிகை லதா ஆகிய இருவரும், ஊடகங்களிடம் எதுவும் பேசவில்லை. அதே நேரத்தில், நாஞ்சில் சம்பத்தின் முகநுால் பக்கத்தில் போய், பாத்திமா பாபு போட்டிருக்கும், 'கமென்ட்' இது தான்:'சம்பத் அவர்களே... உங்கள் வாந்தியை பொது வெளியில் எடுத்து உள்ளீர்கள். நேரமிருந்தால், பின்னுாட்டங்களைப் படித்து பாருங்கள். உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி, உங்களுக்கு மிகப் பொருத்தம்' என, நிரூபித்து விட்டீர்கள்.இவ்வாறு பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

-- நமது நிருபர் - -
இணையதளத்தில் புது பிரிவு அறநிலையத்துறை அறிமுகம்
  • அறநிலையத்துறை இணையதளத்தில், பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழக கோவில்களின் நிகழ்வுகள், திருவிழாக்கள், வழிகாட்டி, ஓலைச்சுவடி, ஆகமம் போன்றவை குறித்த தகவல்கள் உள்ளன. தற்போது, 'இணைய சுற்றுலா' என்ற தலைப்பில், புதிய பகுதி 
  • இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
  • இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  • இணைய சுற்றுலா பகுதியில், முதல் கட்டமாக, திருவண்ணாமலை, தஞ்சை, பழநி, காஞ்சி, கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம், திருச்செந்துார், நாகை, நெல்லை கோவில்கள் இடம் பெற்றுள்ளன. இக்கோவில்களின் வரலாறு, 
  • இ - சேவை, பூஜை நேரம், திருவிழாக்கள், கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக கோவிலை, 360 டிகிரி கோணத்தில் பார்வையிடலாம். இந்தப் பகுதி
  • யில், விரைவில் பிரதான கோவில்கள் அனைத்தும் இடம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

  • - நமது நிருபர் -
சொத்து விற்றதில் கிடைத்த பணம் அண்ணனுக்கு தராத தம்பிக்கு சிறை

பூர்வீக சொத்தை விற்றதில், அண்ணனுக்கு உரிய பங்கு பணத்தை தராமல் ஏமாற்றிய தம்பிக்கு, மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, சைதாப்பேட்டை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

சென்னை, அடையாறு சாந்தி காலனியைச் சேர்ந்தவர் பிரேமா. இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை, நான்கு பேரும் சேர்ந்து, 2011ல், 39 லட்சத்திற்கு விற்றனர்.
சொத்தை வாங்கியவர், நான்கு பேருக்கும் தலா, 9.56 லட்சம், பிரித்து கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல், பிரேமாவின் இளைய மகன் பாலன் பெயருக்கு, முழுத்தொகையையும் வரைவோலையாக கொடுத்துள்ளார். 

பாலன் அந்தத் தொகை யை சகோதரர் மற்றும் சகோதரிக்கு பிரித்துக் கொடுக்கவில்லை. அதனால், 'தனக்கு வர வேண்டிய பணம் வரவில்லை' என, அவரின் சகோதரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அவருக்கு சேர வேண்டிய தொகையை, பாலன் கொடுத்ததால் வழக்கு முடிக்கப்பட்டது.
அதேபோல, பாலனின் அண்ணன் நீலகண்டனும், தனக்கு தர வேண்டிய பங்கு பணத்தை தராமல் தம்பி ஏமாற்றுவதாக, 2014ல், சாஸ்திரி நகர் போலீசில் புகார் கொடுத்தார். 

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு நடந்து வந்த போது, நீலகண்டன் இறந்து விட்டார். அதனால், அவரது மனைவி திலகவதி, வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார். 

சைதாப்பேட்டை, ௯வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில், மாஜிஸ்திரேட் சங்கர் சமீபத்தில் தீர்ப்பளித்தார்.
அதில், சொத்தை விற்றதில், அண்ணனுக்குரிய பங்கை தராமல் ஏமாற்றிய பாலனுக்கு, மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

அபராதத்தை கட்டத் தவறினால், மேலும், ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கில், அரசு சார்பில் வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆஜரானார். இருப்பினும், தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், பாலன் அப்பீல் செய்ய, ௨௦ நாட்கள் அவகாசம் தரப்பட்டது.

- நமது நிருபர் -
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி மகாமக குளத்தில் புனித நீராடல்

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று, மாசி மக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே விழா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாசி மாத விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று காலை, 12 சிவாலயங்களிலிருந்து, சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர்.பின், அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து, நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
தீர்த்தவாரியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து, மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

மாசி மகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, வைணவத் தலங்களிலும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று காலை சக்கரபாணி சுவாமி உபநாச்சியாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின், காலை, 9:00 மணியளவில் நுாற்றுக்கணக்கான பக்தர்களால் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. மாலை சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகபெருமாள், தாயாருடன் காவிரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினர்.

ராஜிவ் கொலையாளிகள் விடுதலையாகாதது ஏன் முன்னாள் நீதிபதி கேள்வி

மதுரை, ''காந்தியடிகள் கொலையாளிகள் 18 ஆண்டுகளுக்கு பின் விடுதலையாகினர். ராஜிவ் கொலையாளிகள் 22 ஆண்டுகளுக்கு பிறகும் கூட விலையாகாதது ஏன்,'' என உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கேள்வி எழுப்பினார்.

மதுரையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:

இந்தாண்டு பொங்கல் முடிந்ததும் வெயிலால் கொதிப்பாக உள்ளது. ஜல்லிக்கட்டு, நெடுவாசல், தாமிர பரணி, ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்னை என இரண்டு ஆண்டாக உயர் நீதிமன்றங்கள் கொதிப்பாக உள்ளது.
''ஊழல் இல்லை என யாராவது கூறினால் அது நேர்மையற்ற பேச்சு,'' என தலைமை நீதிபதி லோதா கூறினார். ''ஊழல் செய்த நீதிபதிகள்,'' என்ற பட்டியலை சாந்தி பூஷன் வெளியிட்டார். தற்போது நீதிபதி கர்ணன் பிரச்னை. ஆக ஊழல் இல்லாத இலாகாக்களில் நீதித்துறை எம்மாத்திரம். போராட்டம் வெடிக்கும் போது தான் யார் உண்மையானவர்கள், யார் துரோகிகள், யார் முகமூடிகள் என்பது பற்றி தெரியவரும்.

காந்தியடிகள் 1948 ஜன.,30ல் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் இருவருக்கு துாக்கு தண்டனை, மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பின் 1966ல் ஆயுள் கைதிகளை விடுதலை செய்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. ராஜிவ் கொலையாளிகள் 22 ஆண்டு
களுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்கலாம் என, நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார். அப்போது, முதல்வராக இருந்தவர் குற்றவியல் நடைமுறைச்சட்டப்படி விடுதலை செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. காங்கிரசிற்கு வெளியே இருந்தவர்கள் இதை எதிர்த்தார்கள்.
கச்சத்தீவில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் இதுவரை 600 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு   உள்ளனர். 

கடல் மார்க்கமாக வந்து மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஈடுபட்டனர். ஆனால் பாகிஸ்தான் மீனவர்
அல்லது இந்திய மீனவர் ஒருவர் கூட சுட்டுக்கொல்லப்படவில்லை. குஜராத் மீனவர்களை பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீனவர்களை குஜராத்தும் சுட்டுக்கொல்லவில்லை. ஒருவேளை குஜராத் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அரசே ஆடும்; ஆட்டம் கண்டுவிடும்.
கேரள மீனவர் ஒருவரை
சுட்டுக்கொன்றதால் இத்தாலிக்காரர்களின் நிலைமையை பார்த்தீர்களா. ஆனால் தமிழக மீனவர்கள் 600 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஒன்றுமே நடவடிக்கை இல்லை என அரசியல் நோக்கர்கள் பேசுகிறார்கள்.
இவ்வாறு பேசினார்.










உள்ளாட்சிக்கும் பொள்ளாச்சிக்கும் சண்டை! தினகரன் முன்னால் நடந்த களேபரம்



கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் நேற்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது, பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தடித்த வார்த்தைகளால் பேசி உள்ளனர். இருவரையும் சமாதானப்படுத்த முடியாமல் டி.டி.வி.தினகரன் தவித்துள்ளார். இதையடுத்து பொள்ளாச்சியையும் உள்ளாட்சியையும் கட்சியினர் சமாதானப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் ஆதரவாளர்கள் கூறுகையில், "உள்ளாட்சித்துறையில் டென்டர்கள், அமைச்சர் தரப்புக்கே கொடுக்கப்படுகின்றன. இதை அண்ணன் (ஜெயராமன்)தட்டிக் கேட்டார். இதை துணைப் பொதுச் செயலாளர் தினகரனிடமும் சொன்னார். அதற்கு அமைச்சர் வேலுமணி, 'கட்சிக்கு நான்தான் செலவு செய்கிறேன். அதனால் அப்படிதான் டென்டர் கொடுக்க முடியும்' என்று தைரியமாக சொல்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரையும் தினகரன் சமரசப்படுத்த சிரமப்பட்டார். கட்சியினர் சமரசப்படுத்தினர். இல்லையென்றால் தகராறு அடிதடியில் முடிந்து இருக்கும்" என்றனர்.



அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் கூறுகையில் , "அமைச்சர் தரப்பு கொங்குமண்டலத்தில் தனியாக கோலோச்ச நினைக்கிறது. அவருக்கு வேண்டியவர்களுக்கு கட்சிப் பதவி கொடுத்துள்ளது. இதுவே பிரச்னைக்கு அடிப்படை காரணம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இந்த மண்டலத்திலிருந்து கிடைத்ததால்
அ.தி.மு.க ஆட்சி மீண்டும் மலர காரணமானது. அதற்கு நாங்கள் எப்படி உழைத்தோம் என்று அம்மாவுக்குத் தெரியும். அமைச்சர் தரப்பினரின் அனைத்து உள்விவகாரம் சின்னம்மாவுக்கு தெரியும். அவர் மீது பல புகார்கள் கட்சித்தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்றனர்.

இதுதொடர்பாக வேலுமணியும், ஜெயராமனும் பதிலளிக்க மறுத்து விட்டனர்.



கட்சித்தலைமை வட்டாரங்கள் கூறுகையில், "இது எங்கள் கட்சி விவகாரம் என்பதால் பதில் சொல்ல முடியாது. ஆலோசனை கூட்டத்தில் இதுபோன்ற வாக்குவாதம் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்படுவது சகஜம்தான். கட்சி என்றாலே கோஷ்டி மோதல் இருக்கத்தான் செய்யும்" என்றார்

அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் கூறுகையில் "அம்மா மறைவுக்குப் பிறகு கட்சி கட்டுப்பாட்டை இழந்து விட்டது. முன்பெல்லாம் அம்மா மீது பயம் இருக்கும். இப்போது நிலைமை மாறிவிட்டது. தினகரன் முன்னால் சண்டை நடக்கிறது. சசிகலா, சிறையில் இருப்பதால் நிர்வாகிகள் தங்கள் விருப்பம் போல செயல்படுகிறார்கள். பன்னீர்செல்வம், தீபாவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கட்சித்தலைமை பயப்படுகிறது" என்றனர்.

நமது நிருபர்


வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...