Sunday, March 12, 2017

பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி




'பத்தினி தெய்வம்' என, தன்னை இழிவாக விமர்சித்த, நாஞ்சில் சம்பத்துக்கு, 'உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி, உங்களுக்கு மிகப் பொருத்தம் என, நிரூபித்து விட்டீர்கள்' என்று, பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க.,வில் சசிகலா அணி ஆதரவாளரும், தலைமை பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், தன் முகநுால் பதிவில் கூறியுள்ளதாவது:முன்னாள் முதல்வர் பன்னீரின் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்ப்பது அல்லது ஸ்டாலின் முதல்வராக துணை நிற்பது. அதுவும் முடியாவிட்டால், தேர்தலுக்கு வழிகாணுவது. இந்த சதி திட்டத்துக்கு சப்பைக்கட்டு கட்ட, இன்றைக்கு தகிடுதத்தம் செய்கிறார்; தப்பாட்டம் ஆடுகிறார்.

பத்தினி தெய்வங்கள்

பாத்திமா பாபு, லதா போன்ற பத்தினி தெய்வங்களின் ஆதரவும், அவருக்கு கிடைத்து விட்டது. ஆனால், பார்த்த முகங்களையே திரும்பத் திரும்ப பார்த்து, அரசு வீட்டில் இருந்து கொண்டு, அரசியலில் காணாமல் போன ஆட்களையும், காலாவதியான தலைவர்களையும், வீட்டில் கூட்டி வைத்துக் கொண்டு, கும்மாளம் போடுகிறார்.இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்திருந்தார்.

உங்கள் தட்டில் இருப்பது சோறா?

இது தொடர்பாக, அ.தி.மு.க.,வில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பாத்திமா பாபு மற்றும் நடிகை லதா ஆகிய இருவரும், ஊடகங்களிடம் எதுவும் பேசவில்லை. அதே நேரத்தில், நாஞ்சில் சம்பத்தின் முகநுால் பக்கத்தில் போய், பாத்திமா பாபு போட்டிருக்கும், 'கமென்ட்' இது தான்:'சம்பத் அவர்களே... உங்கள் வாந்தியை பொது வெளியில் எடுத்து உள்ளீர்கள். நேரமிருந்தால், பின்னுாட்டங்களைப் படித்து பாருங்கள். உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி, உங்களுக்கு மிகப் பொருத்தம்' என, நிரூபித்து விட்டீர்கள்.இவ்வாறு பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

-- நமது நிருபர் - -

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...