Sunday, March 12, 2017

இரோம் ஷர்மிளாவுக்கு வெறும் 90 ஓட்டு

இம்பால், :மணிப்பூரில், தொடர்ந்து, 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து, உலகின் கவனத்தை ஈர்த்த, இரோம் ஷர்மிளா, 43, அங்கு நடந்த சட்டசபை
தேர்தலில், வெறும், 90ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட, இரோம் ஷர்மிளா, சமீபத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டார்; உலகில், நீண்டகாலம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் என்ற பெருமையை பெற்றார். 

இதை தொடர்ந்து, மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி என்ற கட்சியை துவக்கினார். மணிப்பூரில் நடந்த சட்டசபை தேர்தலில், அவரது கட்சியும் போட்டியிட்டது.

அங்கு ஆளுங்கட்சியாக இருந்த, காங்., முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்கை எதிர்த்து, தொபல் சட்டசபை தொகுதி யில், அவர் போட்டியிட்டார்.
இபோபி சிங்கிற்கு எதிராக கடுமையான பிரசாரம் செய்தார்; ஆளும் காங்கிரசுக்கு பெரும் சவாலாக இருப்பார் என, கருதப்பட்டது. இந்நிலையில், அங்கு நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில், அவர் படுதோல்வி அடைந்தார். 
தி யில், இபோபி சிங், 18,649 ஓட்டுகள் பெற்றார்; இரண்டாவது இடத்தை பிடித்து தோல்வியடைந்த, பா.ஜ., வேட்பாளர் பசண்டா, 8,179 ஓட்டுகள் பெற்றார். ஆனால், இரோம் ஷர்மிளாவுக்கு, வெறும், 90 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. அவரது கட்சி சார்பில், மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களும், படுதோல்வியை சந்தித்தனர்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...