Sunday, March 12, 2017

மோடிக்கு வாழ்த்து சொன்ன ராகுல்... ரீ-ட்வீட் செய்த மோடி!

rahul Gandhi and Modi

ஐந்த மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் வெற்றி பெற்றதற்கு பா.ஜ.க மற்றும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்' என்று பதிவு செய்துள்ளார்.

ராகுல் காந்தி மேலும், 'காங்கிரஸை வெற்றி பெற வைத்தமைக்கு பஞ்சாபில் இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். பஞ்சாபின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் இதயம் மற்றும் மனதை வெல்லும் வரையில் எங்களின் போராட்டம் முடிவு பெறாது' என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி, வாழ்த்தி ட்வீட் செய்ததற்கு பதில் ட்வீட்டாக பிரதமர் நரேந்திர மோடி, 'வாழ்த்துக்கு நன்றி. வாழ்க ஜனநாயகம்' என்று ரீ-ட்வீட் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...