Thursday, March 16, 2017


வெளியானது Moto G5 Plus... வர்லாம் வர்லாம் வா...





மோட்டோரோலா நிறுவனத்தின் G5 Plus போன் இந்தியாவில் வெளியானது. இந்த போன் 14,999 ரூபாயில் இருந்து கிடைக்கும். ஃப்ளிப்கார்ட் இணையத்தில் மட்டுமே இப்போதைக்கு G5 Plus விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன், க்ரே மற்றும் கோல்டு கலர் வேரியன்ட்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.

5.2 இன்ச் ஸ்க்ரீன், IPS LCD டிஸ்ப்ளே, 2GHz Snapdragon 625 octa-core ப்ராசஸர், 4 GB ரேம் என்ற அட்டகாசமான வசதிகளுடன் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது. Xiaomi ரெட்மி நோட் 4 ஸ்மார்ட் போன்களுக்கு Moto G5 Plus போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

உ.பி முதல்வர் ஆகிறார் ராஜ்நாத் சிங்?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடக்கும் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அதில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மனோஜ் சின்ஹா, கே.பி.மவுரியா, யோகி ஆதித்யநாத், சித்தார்த் நாத் சிங் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம். இவர்களில், ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம்.

மகிழ்ச்சியை எங்கே தேடுவது? #MorningMotivation


கூகுளில் நாம் எதையாவது தேட ஒரு வார்த்தை தட்டினால் கீழே ஒரு சஜஷன் லிஸ்ட் நீளும். அதன்படி 'மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?' (How to be happy) என்று நாம் கேள்வியை முடிக்கும் முன்பாகவே, மகிழ்ச்சி தொடர்பான பல தேடல்களைக் காணலாம். எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கத் தேடுகின்றனர் இவர்கள்?

எப்போதுமே..

எப்போதுமே! உறியடி படத்தில் வரும் மாணவர்கள் போல, எப்பவும் ஜாலியா இருக்கணும் சார். என்ற உயர்ந்த கொள்கை கொண்டவர்கள் இவர்கள். யு கய்ஸ் டோண்ட் ஒரி... நாங்க எல்லாருமே உங்க கட்சிதான்!

தனியா..

தனியா.., சமையலுக்கு பயன்படுத்தும் தனியா இல்லங்க ஜி. ‘தனிமையிலே இனிமை காண முடியுமா?’ என்ற பாடலின் டெக்ஸ்ட் வெர்ஷன்தான் இந்த கேள்வி. பெரும்பாலும் பிரேக்கப் ஆன காதலர்கள்தான் இத்தகைய கேள்வியைக் கேட்பார்கள் என்பதால், அவர்கள் மனநிலையை நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். என்னதான் இப்படியெல்லாம் அறிவாளித்தனமாக கேள்வியெல்லாம் கேட்டாலும், கடைசியில் இன்னொரு காதலன்-காதலி பின்னால் மறுபடியும் போய், மறுபடியும் வந்து இதே கேள்வியையே கூகுளைக் கேட்டு டார்ச்சர் பண்ணும் ஆபத்தான ஆட்கள் இவர்கள். இவர்களிடம் எப்போதுமே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது ஜி!

வாழ்க்கையில்..

வாழ்க்கையில்.., என்னமோ இவர்களுக்கு மட்டும்தான் கஷ்டம் இருப்பது போலவும், மற்றவர்கள் எல்லாம் மெகா சைஸ் சந்தோசத்தை அனுபவிப்பது போலவும் எண்ணிக் கொண்டு சோகத்தோடு கூகுளிடம் கேள்வி கேட்கும் கூட்டம் இது. இவர்கள் தான், தட் வாழ்வே மாயம் கேங். எப்போ பார்த்தாலும் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக அலைவார்கள். ஒரே செமஸ்டர்ல அஞ்சு அரியர் வச்சவங்கள கூட தேத்திடலாம். ஆனால், இவங்கள தேத்தறது, இம்பாஸிபில் ஜி!

கணவருடன்..

கேள்வியைப் பார்த்த உடனே உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். இந்த காலத்து மாடர்ன் கேர்ள்ஸ் மற்றும் வெளிநாட்டு பெண்களின் மனம் தான், இந்த கேள்வி தோன்றிய இடம். கல்யாணத்துக்கு முன்பு வரைக்கும் மட்டுமே, இந்த கேள்வி அவர்களுக்கு வரும் என்று சொல்லப்படுவதால், இந்த கேள்வி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. ஆனாலும், இந்த இடத்தில் 'மனைவியுடன் சந்தோசமாக இருப்பது எப்படி?' என்ற கேள்வி வராததை வைத்தே, ஆண்களின் மூத்தோர் சொல் மதிக்கும் குணத்தை அறிந்துகொள்ளலாம் மக்களே!

தினந்தோறும்..

இந்தக் கேள்வியைக் கூகுளிடம் கேட்பவர்கள், வாழ்க்கையில் தினம் தினம் தீபாவளி கொண்டாட விரும்புகிறார்கள் என்றதொரு அர்த்தம் பொருந்தும். இந்த கேள்விக்கு கிடைக்கும் பதிலைக் கொண்டு சந்தோசமாக இருப்பதைக் காட்டிலும், அந்த அட்வைஸ்களை அடுத்தவர்களுக்கு அள்ளி இறைப்பதிலேயே கண்ணாக இருப்பார்கள். அதன் மூலம், இவர்கள் தினந்தோறும் சந்தோசமாக இருப்பார்கள் மக்களே!



இருப்பதைக் கொண்டு..

'இருக்கறத வச்சி சிறப்பா வாழணும்' என்ற மொழியை உலகுக்கு சொன்ன முன்னோர்களின் பின்னோர்கள் தான், இந்த கேள்விக்குச் சொந்தக்காரர்கள். 'இல்லாத பலாக்காய்க்கு இருக்குற கலாக்காய் மேல்' என்று இவங்க மூளை சுவத்துல முட்டிக்காத குறையா சொல்லும். ஆனால், இவர்கள் மனசு பக்கத்து வீட்டுக்காரன் பைக் வாங்கினாலே, பல்ஸ் ஏத்தி விட்டுடும். ஏறுன பல்ஸ், இந்தக் கேள்விக்கு கிடைக்கும் பதில்கள் மூலம் இறங்குமான்றது உங்களுக்கே தெரியும் மக்களே!

கேள்விகளின் மறுபக்கம்..

என்னதான் இந்தக் கேள்விகள் ஒரு பக்கம் நமக்கு வேடிக்கையாக தெரிந்தாலும், மறுபுறம் இந்தக் கேள்விகளை இயந்திரத்திடம் கேட்கும் மனிதமனங்கள் அதிகரித்து வரும் ஆபத்தையும் நாம் உணர வேண்டும். இந்த கேள்விகளை கூகுளிடம் கேட்பவர்கள் யாரோ அல்ல நம் நட்பு வட்டத்தில் இருப்பவர்களும் தான். அவ்வளவு ஏன்.., அது நானாகக்கூட இருக்கலாம். தன் மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள தோழமை இல்லாததும், மனநல மருத்துவர்களை நாட நம்மை தடுக்கும் தயக்கமுமே இந்தக் கேள்வி எழக் காரணங்களாக பார்க்கப்படுகிறது.

இந்தத் தயக்கத்தை உடைத்து கூகுளிடம் தகவல்கள் தான் தேட முடியும், மகிழ்ச்சி அல்ல என்பதை நாம் உணர வேண்டும். நிறைய நண்பர்களுடன் சேர்ந்து பழக வேண்டும். அந்த இயல்புதான், மனநலம் சார்ந்த எந்தக் கேள்விகளையும் தகர்த்தெரிந்துவிடும். அதனால், மகிழ்ச்சியையும், துக்கத்தையும் கூகுளிடம் தேட வேண்டாம். நம்மைச் சுற்றியிலும், நமக்குள்ளும் தேடுங்கள். அதுதான் நிஜம். அன்றாடம் நிஜமுடன் வாழ்வோம்!

கேரட், பாதாம், கோதுமை, இருட்டுக்கடை அல்வா... ஆசையை அடக்கலாமா, கூடாதா?
vikatan.com

எந்த உணவின் பெயரைச் சொன்னாலும் ஏற்படாத ஒரு கிளுகிளுப்பு உணர்ச்சி அல்வாவுக்கு உண்டு. திரைப்படத் துறையினரும், ஊடகங்களும் மல்லிகைப்பூவையும் சேர்த்து பல வருடங்களாக ரொமான்ஸ் மூடை ஏற்படுத்தும் ஒன்றாக அல்வாவை மாற்றிவிட்டார்கள். ஆனாலும், கேரட், கோதுமை, பாதாம், ஃப்ரூட், பூசணி, பேரீச்சம்பழம், பப்பாளி, ராகி, மாம்பழம்... என விரிந்துகொண்டே போகிற அல்வா வகைகள் மனிதர்களுக்கு இதன் சுவை மேல் உள்ள ரசனையின் அடையாளங்கள். திருநெல்வேலி இருட்டுக்கடை தொடங்கி, மதுரைப் பக்கம் திருவிழாக்களில் கிடைக்கும் `தாதுபுஷ்டி அல்வா’ வரை இதை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ரசிகர்களே அதிகம். எந்த ஸ்வீட் கடைக்குப் போனாலும் நிச்சயம் இது இல்லாமல் இருக்காது என்பதே அல்வாவின் பெருமைக்குச் சான்று. இதன் வரலாறு, ஆரோக்கியப் பக்கம்... அத்தனையையும் கொஞ்சம் தித்திப்புச் சுவையோடு ருசிக்கலாமா?



அல்பேனியாவில் தொடங்கி அமெரிக்கா வரை புகழ்பெற்ற இனிப்பு வகை இது. `அரேபியர்கள்தான் கண்டுபிடித்தார்கள்’, `துருக்கியர்களை விட்டுவிட முடியுமா... அவர்களே இதன் சொந்தக்காரர்கள்’ என்று பல்வேறு கருத்துகள் வரலாற்றுப் ப்க்கங்களில் நிலவுகின்றன. ஆனாலும், அல்வா நம் நாட்டுக்குள் வந்ததென்னவோ பல அரிய உணவுகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய முகலாயர்கள் மூலமாகத்தான். வெவ்வேறு வடிவங்கள், பொருட்கள், முறைகளால் செய்யப்பட்டாலும் அல்வா அல்வாதான். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பெயர்... `ஹல்வா’, `அல்வா’, `ஹலேவே’, `ஹலவா’, `ஹெல்வா’, `ஹலுவா’, `அலுவா’, `சால்வா’... என நீள்கிற பெயர்ப் பட்டியலே மலைப்பைத் தருகிறது. சமஸ்கிருதத்தில் `ஹலாவா’ (Halava) எனக் குறிப்பிடப்படுகிறது.

உணவு வரலாற்று ஆசிரியர்கள் சொல்லும் தகவல் ஆச்சர்யமானது. இது, கி.மு. 3000-க்கும் முற்பட்டதாக இருக்கலாம் என்று ஒரு போடு போடுகிறார்கள். இந்த அற்புத உணவு குறித்து சொல்லப்படும் பல கதைகள் ஆச்சர்மயானவை. `லோகம்’ (Lokum) என ஒரு அல்வா வகை உண்டு. 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அது உருவானதற்கு ஒரு காரணக் கதை சொல்கிறார்கள். துருக்கியில் இருந்த சுல்தான் ஒருவர், தன் மனைவியைக் கவர நினைத்திருக்கிறார். அவளோ உணவுப் பிரியை. அதிலும் இனிப்பு என்றால் அவளுக்கு உயிர். சுல்தான் யோசித்தார். தன் சமையல்காரரை அழைத்தார். `என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. சாப்பிட்டவுடனே கிறங்கிப் போற மாதிரி ஒரு ஸ்வீட் செஞ்சு கொண்டு வா...’ என ஆர்டர் போட்டுவிட்டார்.



கேட்டது எஜமானராயிற்றே... கலங்கிப்போனார் சமையல்காரர். அந்தக் காலத்தில் எல்லாம் எஜமானர்கள் எதற்கு என்ன தண்டனை தருவார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. சவுக்கடியா, சிறைத்தண்டனையா எனக் குழம்பியவர் எப்படியோ யோசித்து, பல பொருட்களைச் சேர்த்து `லோகம்’ என்ற அந்த அபூர்வப் பண்டத்தை உருவாக்கினார். அதன் சுவையில் சுல்தானின் மனைவி மட்டுமல்ல... சுல்தானே மயங்கிப்போனார். பிறகென்ன... சமையல்காரரின் மேல் விழுந்தது பரிசு மழை.



`அல்வாவில் என்னென்ன சேர்த்தால் ருசி கூடும்?’ என யோசிக்க ஆரம்பித்தார்கள் சமையல் மேதைகள். அவர்களுக்கு உதவுவதற்காகவே படையெடுத்தன உலர் திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, பேரீச்சை, ஏலக்காய், குங்குமப்பூ... மற்றும் பிற. இவ்வளவு வகைகள், உலகம் முழுக்க அல்வா பிரியர்கள் (வெறியர்கள்) இது இனிப்புப் பண்டம்தானே! அதற்காக அல்வா ஆசையை அடக்க முடியுமா? இது குறித்து விளக்குகிறார் டயட்டீஷியன் சௌமியா...

``நாக்கில் வழுக்கிக்கொண்டு போகும் இதன் இனிப்புச் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை. அதே நேரத்தில் இதில் கலந்திருக்கும் மூலப் பொருட்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.





சாதாரணமாகத் தயாரிக்கப்படும் ஒரு சிறிய துண்டு (ஒரு அவுன்ஸ்) அல்வாவில் 131 கலோரிகள், 3.5 கிராம் புரோட்டீன், 16.9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் கொழுப்பு (ஒரு நாளுக்குத் தேவையான கொழுப்பில் 9 சதவிகிதம்) நிறைந்துள்ளது. இதில் 1.2 சதவிகிதம் நல்ல கொழுப்பு. அதோடு மிகக் குறைந்த அளவில், 1.3 கிராம் என்ற கணக்கில் நார்ச்சத்தும் உள்ளது. இதில் மிகச் சிறந்த எண்ணிக்கையில் வைட்டமின்கள் இல்லை என்றாலும், கணிசமான அளவில் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாஸ்பரஸும் காப்பரும் 17 சதவிகிதம், மக்னீசியம் 15 சதவிகிதம், மாங்கனீஸ் 15 சதவிகிதம் உள்ளன. உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க காப்பர் தேவை. நம் டி.என்.ஏ-வுக்கு பாஸ்பரஸும் மக்னீசியமும் அவசியம். காயங்களை குணமாக்க மாங்கனீஸ் முக்கியம்.

அல்வாவில் சேர்க்கப்படும் மிக முக்கியமான உணவுப் பொருள் சர்க்கரை. இதைச் சேர்ப்பது என்பது, நம் உடலுக்கு எந்த ஊட்டச்சத்தையும் தராமல், கலோரிகளை மட்டுமே சேர்க்கும். அதனால்தான் இவற்றை `வெற்று’ (Empty) கலோரிகள்’ என்று குறிப்பிடுவார்கள். சர்க்கரை அதிகம் நிறைந்த அல்வா நமக்கு உடல்பருமனுக்கான அபாயத்தை ஏற்படுத்தும். அதனால் உடல்பருமன் தொடர்பான உடல் கோளாறுகளும் நமக்கு ஏற்படும். அதற்காக அல்வாவையே சாப்பிடக் கூடாது என்று அர்த்தமல்ல. எப்போதாவது சாப்பிடலாம்; அதையும் மட்டான அளவில் சாப்பிடலாம்.



சால்மோனெல்லா (Salmonella) உணவில் உருவாகும் ஒரு வகை பாக்டீரியா. ஜூரம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை உருவாக்கும் தன்மைகொண்டது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இந்த வகை பாக்டீரியாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது நோய்க் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு மையத்தின் (Centers for Disease Control and Prevention) ஒரு புள்ளிவிவரம். சால்மோனெல்லா உருவாகும் முக்கியமான இடங்கள் எவை தெரியுமா? பால் பொருட்கள், முட்டை... இதோடு அல்வாவும் அடங்கும். அல்வாவில் ஈரப்பதம் அதிகம் இருக்காது; லேசான பிசுபிசுப்புதான் இருக்கும். அதனால், சால்மோனெல்லா உருவாகும் வாய்ப்புக் குறைவே. ஆனால், அல்வாவை ஃப்ரிட்ஜில் வைக்காமல், சாதாரண ரூம் தட்பவெப்பநிலையில் வைத்திருந்தாலோ, காற்றுப்புகாத வகையில் பேக் பண்ணாமல், லூஸாக வைத்துப் பாதுகாத்தாலோ இதில் சால்மோனெல்லா ஊடுருவும் வாய்ப்பு உண்டு. எனவே முறையாக, பாதுகாப்பாக அல்வாவை வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

எடை குறைக்க நினைப்பவர்களுக்கு, சர்க்கரைநோயாளிகளுக்கு அல்வா ஏற்றதல்ல...’’

ஆக, நடுத்தர வயதைத் தாண்டியவர்கள், சர்க்கரை நோயாளிகள், உடல்பருமன் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்டதை மற்றவர்கள் அளவாகச் சாப்பிடலாம்.


- பாலு சத்யா

உறுமீன் வரும்வரை...

By ஆசிரியர்  |   Published on : 16th March 2017 01:06 AM 
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், அதிகம் கவனத்தை ஈர்க்காத மாநிலம் மணிப்பூர். இந்தியாவின் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கும் மாநிலம் என்பதால் அது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. 40 இடங்களைக் கொண்ட கோவாவுக்கு நாம் தரும் முக்கியத்துவத்தை 60 இடங்களைக் கொண்ட மணிப்பூருக்குத் தருவதில்லை என்பதிலிருந்தே நாம் எந்த அளவுக்கு அந்தப் பகுதி மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறோம் என்பது வெளிப்படுகிறது. இந்தியாவின் ஏனைய பகுதிகளில் தங்களைக் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை என்பதால்தான் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களை இந்தியர்களாகக் கருதுவதில்லை.
கோவாவில் நடந்ததைவிடப் பெரிய அரசியல் சடுகுடு ஆட்டம் மணிப்பூரில்தான் அரங்கேறி இருக்கிறது. 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கான தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் 28 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. ஆட்சியமைப்பதற்கு இன்னும் மூன்று உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை என்கிற நிலையில் காங்கிரஸ் இருந்தும்கூட, காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு பா.ஜ.க.வின் அரசியல் ராஜதந்திரம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது.
2002 முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ஒக்ராம் இபோபி சிங், இந்த முறை தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த 2012 தேர்தலில் 60 இடங்களில் 42 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன் மூன்றாவது முறையாக முதல்வரான இபோபி சிங்கின் செல்வாக்குச் சரிவுக்கு முக்கியமான காரணம், கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெறும் நாகர்களின் போராட்டமும், பொருளாதாரத் தடையும்தான். மணிப்பூரின் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லவிடாமல் மலைப்பகுதியில் வாழும் நாகா தீவிரவாதிகள் சாலைகளை எல்லாம் முடக்கிவிட்டிருக்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்னால் இபோபி சிங் அரசு ஆறு புதிய மாவட்டங்களை அறிவித்தது. இதன்படி, நாகர்கள் அதிகமாக உள்ள பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு எந்தவொரு மாவட்டத்திலும் நாகர்கள் தனிப்பெரும்பான்மை பெற முடியாத சூழலை உருவாக்க முற்பட்டார் அன்றைய முதல்வர் இபோபி சிங். இதை எதிர்த்துத்தான் ஐக்கிய நாகர்கள் குழு போராட்டம் நடத்துகிறது. நாகர்கள் வசிக்கும் பகுதிகளை எல்லாம் இணைத்து ’நாகாலிம்' என்கிற பெரிய மாநிலத்தை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவரும் நிலையில், அதனால் மணிப்பூரின் பகுதிகள் பிரிக்கப்படக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவுதான் மாவட்டங்களைப் பிரிப்பது.
இந்தப் பின்னணியில்தான் மணிப்பூர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, நாகா பிரிவினைவாதிகளுடன் மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு இபோபி சிங் சவால் விட்டார். எந்தக் காரணத்துக்காகவும் மணிப்பூர் பிரிக்கப்படாது என்று பிரதமர் வாக்குறுதி அளித்தாரே தவிர, நாகர்களுடனான ஒப்பந்தத்தை வெளிப்படுத்தவில்லை. இதைத் தனக்கு சாதகமாக மாற்ற முயன்றார் இபோபி சிங். ஆனால் முடியவில்லை.
இதுவரையில் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித அடித்தளமும் இல்லாத மணிப்பூரில், அக்கட்சி 21 இடங்களை வென்றிருப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத வெற்றி. இதன் பின்னணியில், அஸ்ஸாம் மாநிலத்தில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஹேமந்த விஸ்வ சர்மாவின் கடுமையான உழைப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
60 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 21 இடங்களை மட்டுமே பெற்றிருக்கும் பா.ஜ.க. ஆட்சி அமைத்திருக்கிறது. அதிக எண்ணிக்கையுள்ள கட்சியாக இருந்தும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் பா.ஜ.க.வின் பீரேன் சிங்கிற்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அது உறுதி செய்யப்பட வேண்டும்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உறுப்பினராக இருக்கும் நான்கு இடங்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சியும், நாகா மக்கள் முன்னணியும், தலா ஓர் இடத்தில் வெற்றி பெற்றிருக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஒரு சுயேச்சை ஆகியோரின் ஆதரவுடன் பீரேன் சிங் ஆட்சி அமைத்திருக்கிறார்.
எண்ணிக்கை பலத்தை ஏற்படுத்திக்கொண்டு பா.ஜ.க. மணிப்பூரில் ஆட்சி அமைத்திருக்கிறது என்றாலும், ஆட்சியில் தொடர்வது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை. பா.ஜ.க. அரசுக்கு நாகா மக்கள் முன்னணி ஆதரவு அளித்திருக்கிறது என்றாலும் நாகாலிம் பிரச்னை எழுமேயானால், பீரேன் சிங் அரசால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசுக்கும் நாகா தீவிரவாத அமைப்புக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயன்றால், அது நிச்சயமாக மணிப்பூர் ஆட்சியை ஆட்டம் காண வைக்கக்கூடும்.
60 பேர் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் அமைச்சரவையின் எண்ணிக்கை முதல்வரையும் சேர்த்து 12 பேர் மட்டுமே என்கிற வரம்பு இருக்கிறது. 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க.வால் அத்தனை பேரையும் திருப்திப்படுத்தி எத்தனை காலம் ஆட்சியில் தொடர முடியும் என்பது கேள்விக்குறி. ஆட்சி அமைக்க நான்கு உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படும் முன்னாள் முதல்வர் இபோபி சிங், அதை எதிர்பார்த்துத்தான் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கிறார்!

தேவை வாகனக் கட்டுப்பாடு

By எஸ். ஸ்ரீதுரை  |   Published on : 16th March 2017 01:04 AM   
காலை பத்து மணி. பரபரப்பாக இயங்கும் பிரதான சாலையின் ஓரம் திடீரென முளைத்திருந்தது ஒரு பந்தல்.
இருசக்கர வாகனம் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் கண்கவரும் புதிய வண்டிகள் அங்கே அணிவகுத்திருந்தன. ஒலி பெருக்கியில் சிற்சில சினிமாப் பாடல்கள். இடையிடையே அவ்வண்டிகளின் பெருமைகளைப் பறைசாற்றி, வாங்க வாங்க என்று வரவேற்கும் அழைப்புகள்.
வண்டி வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தருவதற்காக ஒரு மேசையையும் அதில் ஏகப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் ஓர் ஊழியரையும் அங்கே பார்க்க முடிந்தது. சினிமாக் கதாநாயகர் ஒருவர் அவ்வண்டிகளுடன் காட்சி தரும் விளம்பரப் பதாகைகளும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.
வண்டிகளை ஆர்வத்துடன் பார்வையிட்டவர்களில் இளைஞர்களே அதிகம்.
மாலையில் வீடு திரும்பிய எனது கவனத்தை, எனது பக்கத்து வீட்டு வாசலில் நின்றிருந்த புதிய இருசக்கர வண்டி ஈர்த்தது.
’சின்னப் பையன் ஆசைப்பட்டான் ஸார், சரின்னு வாங்கிக்குடுத்துட்டேன்....' என்று கூறிச் சிரித்தார் எனது பக்கத்து வீட்டுக்காரர். மாடுகள் வைத்துப் பால் கறந்து வியாபாரம் செய்பவர் அவர். இரண்டு மகன்களில் பெரியவனுக்கு சுமாரான சம்பாத்தியத்தில் ஒரு வேலை. இளைய மகன் படிப்பிலும் சுமார். வேலையிலும் இல்லை.
இந்த நிலையில், ஏற்கெனவே ஒரு மொப்பெட்டும், ஒரு ஹீரோ ஹோண்டாவும் வைத்திருக்கும் அந்த எளிய குடும்பத்திற்கு இளைய மகன் ஆசைப்பட்டதால் இன்னொரு பெரும் செலவு, இந்தப் புதிய வண்டி.
அவர்கள் சம்பாத்தியம், அவர்களது செலவு - இருந்தாலும் இது அத்தியாவசியமான செலவுதானா என்பதை வண்டி வாங்கித்தரச் சொன்ன பிள்ளையும் யோசிக்கவில்லை வாங்கிக் கொடுத்த தகப்பனாரும் சிந்திக்கவில்லை.
வண்டி வாங்கிவிட்டால் ஆயிற்றா? பெட்ரோல், (முதல் வருடம் இலவச பராமரிப்பு வாக்குறுதியையும் தாண்டி) ரிப்பேர்-உதிரி பாகங்களுக்கு ஆகும் செலவும் வேறு குடும்பமா செய்யப் போகிறது....
மத்திய தரக் குடும்பத்தில் இப்படி என்றால் - கோடீஸ்வரக் குடும்பத்துப் பிள்ளைகள் இரு சக்கர ரேஸ் வண்டிகளுக்கும், இறக்குமதிக் கார்களுக்கும் ஆசைப்பட்டு விடுகிறார்களும். அந்தஸ்து மிதப்பில் இருக்கும் பெற்றோர்களும் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள்.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் நூறு கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பறப்பது, மது போதையில் பிளாட்பார வாசிகளின் மேல் ஏற்றுவது என்று பணக்காரப் பிள்ளைகளின் திருவிளையாடல்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன. ஊடகங்களில் சிலநாட்கள் பேசப்பட்டு மறக்கவும் படுகின்றன.
முன்பெல்லாம், வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருந்தாலே பெரிது. பள்ளி - கல்லூரி வயதுப் பிள்ளைகளுக்கென தனியாக ஒரு சைக்கிளை கேட்டால், தேவையும், வசதியுமிருந்தாலும் கூட, உடனடியாக வாங்கிக் கொடுத்துவிட மாட்டார்கள். அப்படியே வாங்கிக் கொடுத்துவிட்டாலும், சைக்கிளைக் கேட்ட தங்கள் மகன்களுக்கு அந்தக் காலப் பெற்றோர்கள் ஒரு நீண்ட உபதேசமே செய்வார்கள்.
இப்போதோ, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பெட்ரோல்-டீசல் குடிக்கும் இரு சக்கர வாகனங்கள். நிறுத்த இடமில்லாவிட்டாலும் வாடகைக் கொட்டகைகளில் தவமிருக்கும் கார்கள்.
நடுத்தர வர்க்கத்தினரிடம் வண்டி வாங்கப் பணம் இல்லாவிட்டாலும் மாதத்தவணையில் வாங்கக் கடன் வசதி இருக்கிறது. மேல்தட்டு வர்க்கத்திற்கு அந்தக் கவலையும் இல்லை. பிறகென்ன? சாலையில் இடம் கொள்ளாத அளவிற்கு வண்டிகள் பறக்கின்றன.
ஆரவாரம் அற்ற கிராமத்துச் சாலைகளைக்கூட கடப்பதற்கு பயமாக இருக்கிறது. விர்ரென்று விரையும் வண்டிகளில் இடி படாமல் நாம் வீடு வந்து சேர்ந்தாலே போதும் என்றாகி விட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கிளம்பும் புகையிலோ மூச்சு முட்டுகின்றது.
புவி வெப்பமயமாவதைப் பற்றிப் பேசிக்கொண்டே அந்த வெப்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டுவதில் ஆளுக்கு ஒரு வண்டி வாங்கும் எல்லோரும் பங்களிக்கின்றோம்.
வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் ஆளுக்கொரு இருசக்கர அல்லது நான்கு சக்கர வண்டி வாங்குவதில் என்ன தவறு என்று சிலர் சிந்திக்கலாம்.
ஆனால், இந்த பூதாகர வளர்ச்சியின் விளைவாக எண்ணை வளச்சுரண்டலும், சுற்றுச் சூழல் மாசுபடுதலும் உலகெங்கும் நடைபெற்று வருகிறது.
உலகளாவிய எண்ணை வளம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வருவதாக ஒரு புறம் கூறப்படுகிறது. பெட்ரோல்-டீசலுக்கு மாற்றான எரிசக்தியை இப்போதே தயார் செய்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இதனை எதிர்கொள்ள, அனைத்து நாடுகளின் அரசுகளும் பொதுமக்களுக்கு வசதியான மற்றும் கட்டுப்படியாகக் கூடிய பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
அப்போதுதான், இருக்கின்ற எண்ணைவளத்தை தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சரக்குப் போக்குவரத்து போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியும். ஆடம்பரமான - அவசியமற்ற தனிநபர் பிரயாணங்களுக்காக எண்ணைவளத்தை வீண் செய்வதைக் குறைக்க முடியும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
நாடுகளின் தலைமைகள் இதுகுறித்து முடிவெடுப்பதும் நடமுறைப்படுத்துவதும் ஒருபுறம் இருக்கட்டும்.
தேவை இல்லாமல், ஆசை அல்லது ஆடம்பரத்துக்காகப் புதிய வண்டிகள் வாங்குவதை ஒவ்வொரு குடும்பமும் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், நம் எதிர்காலச் சந்ததியினர் கரங்களில் கொஞ்சம் எண்ணை வளத்தையும், தூய்மையான சுற்றுச்சூழலையும் ஒப்படைக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

தோல்விக்கு பொன்விழா ஆண்டு

By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா  |   Published on : 16th March 2017 01:05 AM  |  
venkadaramana
எதற்கெல்லாமோ பொன்விழா கொண்டாடுகிறார்கள். சென்னை மகாணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியாக இயங்கி வந்த கட்சி 1967 பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடையும் பொன்விழா ஆண்டு இது.
ஜனநாயக அரசியலில் ஒரு கட்சி தோற்பதும் மற்றொரு கட்சி ஜெயிப்பதும் தோற்ற கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதும் சாதாரண நடைமுறை. ஆனால் தோல்வியே சுகமென அரசியலில் நிலைத்திருப்பது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மட்டும்தான்.
உலகிலேயே தேர்தல் மூலமாக ஆட்சியை பிடித்த கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெருமை கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.
கேரளத்தில் கம்யூனிஸ்டுகளிடமும் ஆந்திரத்தில் ராமாராவின் தெலுங்கு தேசத்திடமும் கர்நாடகத்தில் ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க.விடமும், மகாராஷ்டிராவில் சிவசேனையிடமும் ஏன் தம்மாத்தூண்டு பாண்டிச்சேரியில் திராவிட இயக்கங்களிடமும் தோல்வியடைந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தாலும் தமிழ்நாட்டில் ஆட்சி என்ற வார்த்தை தமிழ்நாடு காங்கிரஸுக்கு பிடிக்காத வார்த்தை ஆகி விட்டது. இதற்கு யார் காரணம்?
இத்தனைக்கும் இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. இந்தியாவில் தமிழகமும் தமிழகத்தில் அந்தணர்களும் சுதந்திர போராட்டத்திற்கான முன்னோடிகள் என மா.பொ.சி. ’விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். நாட்டு நலனுக்காக போராடிய கட்சியும் மக்கள் நலனுக்காக உழைத்த தலைவர்களும் மறக்கப்பட்டது ஏன்?
இந்தியா விடுதலை அடைய வேண்டுமானால், பாகிஸ்தான் பிரிய வேண்டும் என்ற அறுவை சிகிச்சையை சொன்ன அறிஞரும் அணுகுண்டுக்கு எதிராக கென்னடியிடமும் மதுவிலக்கு ரத்துக்கு எதிராக கருணாநிதியிடமும் கெஞ்சிய நேர்மையாளருமான ராஜாஜியும், தனது ஓராண்டு மேயர் பதவியில் சென்னையின் பூண்டி நீர் தேக்கத்தை கொண்டு வந்த சத்தியமூர்த்தியும் மகாகவி பாரதியும் ஜாதியின் பெயரால் கொச்சைபடுத்தப்பட்டனர்.
கல்விகண் திறந்த காமராஜரும் தொடர்ந்து ஆண்ட பக்தவச்சலமும் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டார்கள். மெய்போலுமே, மெய்போலுமே சொல் வளமை உளதால் மெய்போலுமே என்ற அதிவீரராம பாண்டியனின் கருத்தை திராவிட இயக்கங்கள் தங்கள் அழகு தமிழால் மெய்ப்பிக்க 1967-இல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
காமராஜின் உழைப்பும் தியாகமும் பக்தவச்சலத்தின் நிர்வாக திறமையும் விழலுக்கு இரைத்த நீராயின. தி.மு.க. ஆட்சியை பிடிக்க, அண்ணாதுரை மறைவுக்கு பிறகு கருணாநிதி கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றினார்.
பிறவி பணக்காரர் பக்தவச்சலத்தை 10 லட்சம் என கொச்சைப்படுத்தி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வின் சென்னை மாநகராட்சியின் மஸ்டர் ரோல் ஊழல் தொடங்கி கூவத்தில் வழிந்து ஓட, லஞ்சம் பெருகி விட்டது என திருக்கழுகுன்றத்தில் கணக்கு கேட்டு தனிக்கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆருக்கு பின்னால் வந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தார்கள் என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு சிறை சென்றது நகைமுரண்.
நல்ல காலம் ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் மீண்டும் ஒரு பஸ் எரிப்பு சம்பவம் நடக்கவில்லை. இதனால் ஜெயலலிதாவிற்கு இருந்த தொண்டர் செல்வாக்கு சசிகலாவுக்கு இல்லை என்ற உண்மை சோகமானதா, மகிழ்ச்சியானதா என்று புரியவில்லை.
கல்விக்கூடங்களையும், அணைகளையும், தொழிற்சாலைகளையும் அமைத்து மக்கள் நல்வாழ்வுக்கு விளம்பரம் இல்லாமல் காங்கிரஸ் அரசு பாடுபட்டபோது, கக்கூஸ் முதல் வராத வெளிநாட்டு முதலீடு வரை வந்ததாக சொல்லி விழாக்கள் எடுத்த திராவிட இயக்கங்களுக்கு மக்கள் மாறி மாறி வாக்களித்து ஏன்? காங்கிரஸ் உருமாறி உருக்குலைந்து போனதன் காரணம் என்ன?
தமிழ்நாடு காங்கிரஸின் வீழ்ச்சிக்குக் காரணம் காங்கிரஸ் கட்சியை இந்திய அளவில் உச்சத்துக்கு கொண்டு சென்ற இந்திரா காந்தியிடம் துவங்குகிறது. இன்டிகேட், சிண்டிகேட் என பிரித்த காங்கிரஸின் தமிழ்நாட்டு தனிப்பெரும் தலைவராக காமராஜர் இருந்தார்.
ஒரு கல்லூரி மாணவனால் விருதுநகரில் அவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கோவில் அவர் மீண்டெழுந்து வந்தும், அவரை இந்திரா ஒரு எதிர்ப்பு சக்தியாகத்தான் பார்த்தார். காமராஜர் நிஜலிங்கப்பா உட்பட மாநில தலைமைகளை ஜவாஹர்லால் நேரு ஊக்குவிக்க, இந்திரா மாநில தலைமைகள் தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்கு தடை என கருதினார்.
இந்த நிலையில் தேர்தல் வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு 10 எம்.பி. சீட்டுக்காக இந்திராகாந்தி தி.மு.க.வை கூட்டணிக்கு அழைக்க கருணாநிதியும் ’நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக' என தேர்தலில் குதித்து வெற்றி கண்டு சர்க்காரியா கமிஷனை நீர்த்து போக செய்தார்.
இந்திரா மாநிலத் தலைவர்களை கண்டு பயந்ததுபோல் கருணாநிதி எம்.ஜி.ஆர் செல்வாக்கை கண்டு பயந்து தன் மகன் முத்துவை திரைத்துறைக்கு அனுப்பி அது எடுபடாமல் போகவே எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கினார். காமராஜருடன் இந்திரா ஒத்துபோக முடியாமல் போனதும் எம்.ஜி.ஆரின் விஸ்வரூபமும் தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்கு தடையானது.
காமராஜர் மறைவுக்கு பிறகு மூப்பனார் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் இந்திரா காங்கிரஸுடன் ஐக்கியமானதும் அவர்களுக்குள் இருந்த அதிகாரப் போட்டி மறையவே இல்லை. இந்திரா - எம்.ஜி.ஆரின் 3:1 பார்முலா படி நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு 30 சீட்டுகளும் சட்டப்பேரவையில் 60 சீட்டுகளும் என்ற வெற்றி கூட்டணி காங்கிரஸ்காரர்களின் மக்கள் தொடர்பை குறைத்து விட்டது.
கூட்டணியின் மூலமாக காங்கிரஸ்காரர்கள், நோகாமல் நொங்கெடுக்கலாம் என கண்டு கொண்டு வெகுஜன அரசியலை விட்டு விலகி நின்றார்கள். எனக்கு தெரிந்த ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் அவசரம் என்று கேட்டால்கூட ரயில்வேக்கு கடிதம்கூட கொடுக்க மாட்டார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெட்ரோல் பங்க், கேஸ் உரிமங்கள் வாங்குவதற்கும் வாங்கி கொடுப்பதற்கும் காட்டிய ஆர்வத்தை தொகுதி பிரச்னைகளுக்காக காட்டவில்லை.
காவேரி பிரச்னையிலும் முல்லை பெரியாறு பிரச்னையிலும் மாநில நலன்களுக்காக தமிழர் நலனில் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை என்ற பொது கருத்து வலுப்பெற ஆரம்பித்தது.
சுதந்திரத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வலுவான அரசியல் இயக்கமாக காங்கிரஸ் காலூன்ற முடியவில்லை. பிரிவு படாத சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்டுகள் வலுவாக இருந்தும் அவர்கள் உலக அரசியலை பேசியபடி உள்ளூர் அரசியலை கோட்டை விட்டனர்.
இதை சரியாக பயன்படுத்திய ஆந்திர காங்கிரஸ் பலம் பெற்ற பொழுது உள்ளூர் வேறுபாடுகளால் தமிழ்நாட்டை காங்கிரஸ் கோட்டை விட்டது. எம்.ஜி.ஆருக்கு ஈடாக வலிமையாக இருந்த ராமாராவ் கட்சியை ஆந்திராவில் வீழ்த்த முடிந்த காங்கிரஸ் தொலைநோக்கு பார்வை இல்லாததால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் போனது வரலாற்றுச் சோகம்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜா, ஜெ எனப்பிரிந்த அ.தி.மு.க. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு எனப்புரிந்து கொண்டு இணைந்து மீண்டும் ஆட்சியை பிடித்தது. இன்று ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. மீண்டும் உடைந்துள்ளது. கட்சியை இணைக்க வேண்டுமென்று எண்ணிய ஜானகியின் பெருந்தன்மை இன்றைய குடும்ப அரசியல் மற்றும் அதிகார அரசியல் போட்டியாளர்களுக்கு இல்லாததால் அவர்கள் இணைய வாய்ப்பில்லை.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என ஜெயலலிதா சொன்னது இன்று தி.மு.க.வின் ஸ்டாலினுக்கும் பொருந்தும். அடாவடி அரசியலை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு ஸ்டாலின் எடுத்த நடுப்பாதை சரியாகத்தான் போய் கொண்டிருந்தது.
ஆனால் ரகசிய வாக்கெடுப்பு என்ற ஞானப்பழம் தங்களுக்கு கிடைக்காது என்று தெரிந்தும் தி.மு.க.வினர் சட்டப்பேரவையில் செய்த கலாட்டாவால், வெளிப்படை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கலாம் என்று நினைத்தவர்கள்கூட எடப்பாடியை ஆதரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக ஆகி விட்டது.
எடப்பாடியின் எதிர்ப்பாளர்களான தி.மு.க.வும், காங்கிரஸும் அவையின் உள்ளிருந்து வாக்களித்திருந்தால் 5 ஓட்டுகள் மாறி இருக்கலாம். அத்துடன் தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தும் மாறி இருக்கும். 50 ஆண்டுகாலமாக தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத காங்கிரஸ் இன்றைய அரசியல் நிகழ்வுகளில் வெறும் பார்வையாளராக மட்டும் இருப்பது மிகப்பெரும் சோகம்.
பேசுவதால் மட்டுமே தலைவராகலாம் என நினைக்கும் இளங்கோவனும், பேசாமலே தலைவராக இருக்கலாம் என நினைக்கும் சிதம்பரமும், பழைய நினைப்புத்தான் பேராண்டி என செயல்படும் திருநாவுக்கரசரும், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என உரைத்த அண்ணாவின் கருத்தை ஒட்டி வெளிப்படையாக தி.மு.க.வை ஆதரிக்கும் பீட்டர் அல்போன்சும் மாநில வெற்றியை விட நாடாளுமன்ற வாய்ப்பு முக்கியம் என தில்லி தலைமையும் நினைக்கும் வரை பொன்விழா அல்ல, 100 ஆண்டு கடந்தாலும் தமிழ்நாட்டு ஆட்சி கட்டில் காங்கிரஸுக்கு இலவு காத்த கிளிதான்.
கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...