Sunday, March 19, 2017
முதலில் சேலம், கோவைக்கு ஸ்மார்ட் கார்டு வினியோகம்
மேட்டூர்;தமிழகத்தில் முதலாவதாக, சேலம், கோவை மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இம்மாத இறுதியில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன.தமிழகம் முழுவதும் கார்டுதாரர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது, 'ஆதார்' எண்களையும், ரேஷன் பணியாளர்களிடம் வழங்கி, பதிவு செய்து கொள்ள அரசு உத்தரவிட்டது.இதில், சேலம் மற்றும் கோவை மாவட்டத்தில், 80 சதவீத கார்டுதாரர்கள், தங்கள் ஆதார் எண்களை பதிவு செய்து விட்டனர்.
இதனால், தமிழகத்தில் முதற்கட்டமாக சேலம், கோவை மாவட்ட கார்டுதாரர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.மார்ச் இறுதியில், இரு மாவட்ட கார்டுதாரர்களுக்கும், ஸ்மார்ட் கார்டு வினியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கார்டை ரேஷனில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்த முடியும். அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர்;தமிழகத்தில் முதலாவதாக, சேலம், கோவை மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இம்மாத இறுதியில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன.தமிழகம் முழுவதும் கார்டுதாரர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது, 'ஆதார்' எண்களையும், ரேஷன் பணியாளர்களிடம் வழங்கி, பதிவு செய்து கொள்ள அரசு உத்தரவிட்டது.இதில், சேலம் மற்றும் கோவை மாவட்டத்தில், 80 சதவீத கார்டுதாரர்கள், தங்கள் ஆதார் எண்களை பதிவு செய்து விட்டனர்.
இதனால், தமிழகத்தில் முதற்கட்டமாக சேலம், கோவை மாவட்ட கார்டுதாரர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.மார்ச் இறுதியில், இரு மாவட்ட கார்டுதாரர்களுக்கும், ஸ்மார்ட் கார்டு வினியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கார்டை ரேஷனில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்த முடியும். அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மின்விசிறியிலே ஏற்படுத்தலாம் 'ஏசி' இனி வேண்டாமே கோடை 'டென்ஷன்'
சிவகாசி:கோடை துவங்கும் கால கட்டத்தில் வெயில் மக்களை பெரிதும் வாட்டி வதைக்கும். இதில் இருந்து தப்பிக்க நாம் பல்வேறு முயற்சிகளை எடுப்போம்.
வீட்டில் 'ஏசி' மாட்டுவது, குளிர்சாதன பெட்டி வாங்கி வைப்பது என செலவினங்களை அதிகப்படுத்தும். ஒரு காலத்தில் ஊரெங்கும் மரங்கள் இருந்தன. இதனால் நாம் ஓரளவு வெயில் தாக்கத்தில் இருந்து தப்பித்து வந்தோம். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது.
மின் கட்டணம்
நகர் பகுதிகள் கான்கிரீட் வீடுகளாக மாறிவருகின்றன . இதனால் வீட்டில் கண்டிப்பாக 'ஏசி' இருந்தாகவேண்டும் என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம். சந்தையில் இன்று 'ஏசி' வாங்க வேண்டுமென்றால் ரூ.சில ஆயிரங்கள் செலவழித்தே ஆகவேண்டும். 'ஏசி' பொருத்தியவுடன் தானாகவே மின் கட்டணம் அதிகரித்துவிடும். இதனாலே பலரும் 'ஏசி' யை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேஜை மின்விசிறி
இந்நிலையில் 'ஏசி'க்கான பணம் மற்றும் மின் கட்டணம் என இரண்டும் இன்றி வீட்டிலே 'ஏசி' வசதி ஏற்படுத்தலாம். இதற்கு மின்சாதன கருவிகளில் அதிக ஆர்வம் மற்றும் முயற்சி இருந்தால் போதும். இன்டெர்நெட் வாயிலாக கிடைக்கும் தகவல் மூலம் வீட்டில் இருக்கும் மேஜை மின்விசிறியை மினி 'ஏசி' யாக மாற்ற முடியும். இதற்காக நமக்கு தேவைப்படும் உபகரணங்கள் காப்பர் கம்பிகள், மீன் வளர்ப்புக்கு துணை புரியும் ஆக்சிஜன் மோட்டார், பெரியளவிலான ஐஸ் கட்டிகள் மட்மே.
சுருள் வடிவில்
முதலில் மேஜை மின் விசிறியின் மேல் தரப்பு இரும்பு மூடியை வெளியில் எடுத்து காப்பர் கம்பிகளை வைத்து சுற்றிக் கொள்ள வேண்டும். நன்றாக இணைத்து சுருள் வடிவில் கட்டியப்பின், இணைக்கும் இரு கம்பிகளை மட்டும் அப்படியே விட்டு விட வேண்டும். அந்த கம்பியில் நாம் மீன் தொட்டியில் பயன்படுத்தும் ஆக்சிஜன் மோட்டாரின் பிளாஸ்டிக் குழாய்களை உள்ளே நுழைத்து இழுத்து கட்டிக் கொள்ள வேண்டும்.
அதன்பின் பெரியளவிலான ஐஸ்கட்டிகளை எடுத்து எடைக்கு தகுந்த பிளாஸ்டிக் பேக்கில் வைத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மோட்டாரை அதற்குள் போட்டுவிட வேண்டும்.
காப்பர் கம்பி
அடுத்து பிளாஸ்டிக்பை நிரம்பும் அளவு தண்ணீர் விட, தண்ணீரில் ஐஸ் கட்டி மிதக்கும் படி இருத்தல் வேண்டும். பின் மோட்டாரை மீன் வளர்ப்பு தொட்டியில் இயக்குவது போல் மின் இணைப்பு கொடுத்து இயக்கினால் அதில் இருந்து வரும் குமிழ்கள், குழாய் வழியாக காப்பர்
கம்பிகளுக்கு சென்று மின்விசிறி வழியாக குளிர்ந்த காற்றினை வெளிவரச் செய்யும். இதுவே குறைந் த செலவில் வீட்டில் 'ஏசி' செய்யும் முறையாகும்.
சிவகாசி இன்ஜினியர் ரவிசங்கர் கூறுகையில், “இன்டர்நெட் வாயிலாக நமக்கு பல்வேறு தகவல் பெறுகிறோம். அத்தகவலை நாம் படித்து காற்றோடு பறக்கவிட்டு விடுவோம். யாரும் செய்முறை செய்வதில்லை.
குறைந்த செலவில் வீட்டில் இருக்கும் மேஜை மின்விசிறியில் 'ஏசி'செய்ய முடியும். இதை சாத்தியப்படுத்த முயற்சி மட்டும் இருந்தால் போதும். இதை செய்தால் இனி நீங்கள் வெயில் காலத்தில் 'ஏசி' தேடி அலைய வேண்டிய தேவையில்லை,” என்றார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்பு:'ரேங்க்' பட்டியல் கேட்கிறது மத்திய அரசு
தமிழகத்தில் மருத்துவமனை அமைக்க மதுரை உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஏப்.,2015ல் மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் தாரித்ரி பாண்டா தலைமையிலான குழு இட தேர்வு குறித்த ஆய்வுக்காக தமிழகம் வந்தது. ஆனால் ஆய்வு பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
இருப்பினும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மன்னார்குடி கும்பலை திருப்திப்படுத்த எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சையில் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.
இது தென்மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. முதல்வரின் முடிவை எதிர்த்து தென் மாவட்டங்களில் பல்வேறு சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. விரைவில், கடையடைப்பு போராட்டம் மற்றும் டில்லியில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை, எய்ம்ஸ் அமைக்க பரிந்துரை செய்யப்பட்ட மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சி புரம் ஆகிய இடங்களில் உள்ள வசதிகளின் அடிப்படையில் 'ரேங்க்' பட்டியல் தயாரித்து தருமாறு தமிழக அரசிடம் கேட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் அனுப்பப்பட உள்ள இப்பட்டியலின் அடிப்படையிலேயே எய்ம்ஸ் மருத்துவமனையின் அமைவிடம் தேர்ந்தெடுக்கப்படும்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: விமான சேவை, நான்கு வழிச்சாலை, டாக்டர்களுக்கான இருப்பிட வசதி போன்றவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கி அதன் அடிப்படையில் 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை முதலிடம் பெறும் நிலையில் உள்ளது. ஆனால், சிலரது சுயநலத்திற்காக தஞ்சையை முன்னிலைப்படுத்த ஆளும்கட்சி முயன்று வருகிறது, என்றார்.
இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
இதுபோல் சட்ட விதிகள் உள்ளது எனக்கு தெரியாது. ‛எஸ்பிபி 50' என்ற இசை நிகழ்ச்சியை எனது மகன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்தார். டோரன்டோ நகர், ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். அப்போது இளையராஜா தரப்பிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. முன்னர் நான் கூறியது போல், இது பற்றிய சட்டம் எனக்கு தெரியாவிட்டாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். கீழ்படிய வேண்டும்.இதுபோன் சூழ்நிலையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை எங்களது குழுவால் இனிமேல் பாட முடியாது. ஆனால், இசை நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். கடவுள் அருளால், மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளேன். அவற்றை பாடுவேன். வழக்கம்போல் இசை நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் ரசிகர்கள் எந்த விவாதமும் நடத்த வேண்டாம். மோசமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். இதனை கடவுள் திட்டமிட்டிருந்தால் அதற்கு நான் அடிபணிய வேண்டும். இவ்வாறு எஸ்பிபி கூறியுள்ளார்.
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்! கந்தலான அட்டைகளுக்கு ஏப்., 1 முதல் விடுதலை

சென்னையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளதால், அடுத்த மாதம், பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, 'ஆதார்' எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்படுகின்றன. பெரும்பாலான கார்டுதாரர்களிடம் இவற்றை வாங்கும் பணி முடிந்து விட்டதால், ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி, சென்னையில் துவங்கியுள்ளது.
10 லட்சம்
இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூறியதாவது:தற்போதைய நிலவரப்படி, அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் பதிவு செய்த, ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 1.40 கோடி; தினமும், 10 லட்சம் கார்டுகள் என, ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படுகிறது. இந்த பணி, வரும், 28ல் முடிவடையும்.
அச்சிடப்பட்ட கார்டுகள், 29, 30ம் தேதிகளில், சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். அங்கிருந்து, 31ல், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.
சென்னையில் எப்போது?
ஏப்., 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும். சென்னையில் மட்டும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வினியோகம் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
என்ன இருக்கும்?
ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு' வடிவில் இருக்கும். அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை' என, அச்சிடப்பட்டிருக்கும்.
அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும். பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்.,' என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது' என, எழுதப்பட்டிருக்கும்.
முன்னுரிமை
ரேஷன் கார்டுதாரரின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவை என, ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள, 1.90 கோடி கார்டுகளில், 38 சதவீதம் முன்னுரிமை கார்டுகள்; 62 சதவீதம், முன்னுரிமை அல்லாதவை. முன்னுரிமை கார்டில், குடும்ப தலைவராக பெண் படம்; மற்ற கார்டில், ஆண் படம் இடம் பெறும். அரிசி கார்டுதாரர்களில் சிலர், முன்னுரிமை அல்லாத பிரிவில் இருந்தாலும், வழக்கம் போல், ரேஷனில் அனைத்து பொருட்களும் தரப்படும்.
எத்தனை வகை?
ஸ்மார்ட் கார்டுகள், ஐந்து வகைகளில் இருக்கும். அதன்படி, கார்டில், புகைப்படம் அருகில், 'பி.எச்.எச்., - ரைஸ்' என்றிருந்தால், அனைத்து பொருட்களும்; 'பி.எச்.எச்., - ஏ' என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும். என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும். 'என்.பி.எச்.எச்., - எஸ்' என்றிருந்தால், சர்க்கரை; 'என்.பி.எச்.எச்., - என்.சி.,' என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.
தமிழகத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, 'ஆதார்' எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்படுகின்றன. பெரும்பாலான கார்டுதாரர்களிடம் இவற்றை வாங்கும் பணி முடிந்து விட்டதால், ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி, சென்னையில் துவங்கியுள்ளது.
10 லட்சம்
இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூறியதாவது:தற்போதைய நிலவரப்படி, அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் பதிவு செய்த, ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 1.40 கோடி; தினமும், 10 லட்சம் கார்டுகள் என, ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படுகிறது. இந்த பணி, வரும், 28ல் முடிவடையும்.
அச்சிடப்பட்ட கார்டுகள், 29, 30ம் தேதிகளில், சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். அங்கிருந்து, 31ல், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.
சென்னையில் எப்போது?
ஏப்., 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும். சென்னையில் மட்டும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வினியோகம் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
என்ன இருக்கும்?
ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு' வடிவில் இருக்கும். அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை' என, அச்சிடப்பட்டிருக்கும்.
அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும். பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்.,' என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது' என, எழுதப்பட்டிருக்கும்.
முன்னுரிமை
ரேஷன் கார்டுதாரரின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவை என, ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள, 1.90 கோடி கார்டுகளில், 38 சதவீதம் முன்னுரிமை கார்டுகள்; 62 சதவீதம், முன்னுரிமை அல்லாதவை. முன்னுரிமை கார்டில், குடும்ப தலைவராக பெண் படம்; மற்ற கார்டில், ஆண் படம் இடம் பெறும். அரிசி கார்டுதாரர்களில் சிலர், முன்னுரிமை அல்லாத பிரிவில் இருந்தாலும், வழக்கம் போல், ரேஷனில் அனைத்து பொருட்களும் தரப்படும்.
எத்தனை வகை?
ஸ்மார்ட் கார்டுகள், ஐந்து வகைகளில் இருக்கும். அதன்படி, கார்டில், புகைப்படம் அருகில், 'பி.எச்.எச்., - ரைஸ்' என்றிருந்தால், அனைத்து பொருட்களும்; 'பி.எச்.எச்., - ஏ' என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும். என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும். 'என்.பி.எச்.எச்., - எஸ்' என்றிருந்தால், சர்க்கரை; 'என்.பி.எச்.எச்., - என்.சி.,' என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.
I-T dept shames defaulters, but most remain
`untraceable'
New Delhi
TIMES NEWS NETWORK
|
In its drive against tax defaulters, the income tax department published a full-page advertisement in newspapers on Saturday naming 29 individuals and companies, asking them to `pay tax arrears immediately'. Many of these entities are `not traceable' in the department's records or have no assets to recover. The total arrears against them amounts to around `448 crore.
It seems the biggest tax defaulters are yet to come on the radar of the department as the total tax arrears exceeded `8 lakh crore till 2015-16. In the current list of 29, the biggest tax defaulter is one Irfan Ahmed having arrears of `257 crore, while a few others have defaults of around `2-4 crore against their name. Ahmed, like most others in the list, is `not traceable'. His last address available with the department is Aminabad in Lucknow.
Interestingly , the I-T department had assessed Ahmed's income for four years from 2005-06 to 2008-09 to arrive at his tax obligation, but now it claims that it doesn't know his father's name or what business he operated. The department neither has his PAN number nor is aware of his “last known source of income“.
This is the second time that the department has published defaulters list in newspapers in an attempt to name and shame them.But, on both occasions, it had skipped naming defaulters with bigger arrears. A comptroller and auditor general (CAG) report, tabled in Parliament on March 10, shows total tax arrears is to the tune of `8.24 lakh crore, higher than the total direct tax collection of `7.48 lakh crore in 2015-16. The arrears increased from `7 lakh crore in 2014-15 to `8.24 lakh crore in 2015-16.
According to the CAG report, the I-T department had claimed that 97% of this demand is “difficult to recover“. The last time the department had carried out a similar exercise, it had named 67 entities with tax arrears.
Subscribe to:
Comments (Atom)
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
NBEMS launches official WhatsApp channel for real-time updates The platform will offer timely updates on examinations, accreditation, and tr...
