Saturday, April 1, 2017


ஆர்.கே நகரில் 8,000 ரூபாய்க்கு கணக்கு சொல்லி சுண்டல் சாப்பிட்ட அ.தி.மு.க. பணிக்குழு! #MustReadFun



ஆர்.கே.நகரில், டி.டி.வி.தினகரனின் தேர்தல் பணிக்குழு, சுண்டல்காரருக்கு 8,000 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில், தினமும் ஒரு சுவாரஸ்யமான தகவல் நிகழ்ந்துவருகிறது. அதில், தண்டடையார்பேட்டையில் உள்ள வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் நடந்த ‘சுண்டல் கதை’ ரொம்பவே ருசிகரமானது!
தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்தான் வேட்பாளர்கள் டி.டி.வி.தினகரன், மருது கணேஷ், தீபா ஆகியோரின் தேர்தல் அலுவலகங்கள் உள்ளன. அதில், டி.டி.வி.தினகரனின் தேர்தல் அலுவலகத்தின் அருகில் சென்றாலே, சுண்டல் வாசனை மூக்கைத்துளைக்கும். காலையிலும் மாலையிலும் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு சுண்டல் பொட்டலங்கள் சப்ளை செய்யப்படும். இதற்காக, சுண்டல்கடைக்காரரிடம் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார், முன்னாள் பெண் அமைச்சர் ஒருவர்.

சுண்டல் இலவசம் என்பதால், மாலையில் ருசியான சுண்டலைச் சாப்பிடுவதற்கென்றே கட்சியினர் அதிகளவில் அங்கு கூடுவார்களாம். இதனால், சில நாட்களாக சுண்டல் கணக்கு எகிறியுள்ளது. இது, சம்பந்தப்பட்ட முன்னாள் பெண் அமைச்சர் தரப்பினருக்கு கையைக்கடித்துள்ளதாம். இதனால், சுண்டல் கணக்கை தினமும் முடிக்காமல், வாரத்தில் ஒருநாள் முடிப்பதாக சுண்டல் கடைக்காரரிடம் சொல்லியிருக்கிறார் முன்னாள் பெண் அமைச்சர். ஆனால், சுண்டலுக்கு ஒழுங்காக பணம் கொடுக்கவில்லையாம். எப்படியும் பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வழக்கம்போல சுண்டல் பொட்டலங்களைக் கொடுத்துவந்தார் சுண்டல்கடைக்காரர். சில தினங்களுக்கு முன்பு, சுண்டல்காரர் பணத்தைக் கேட்டபோது, அமைச்சர் தரப்புக்கும் கடைக்காரருக்கும் வாக்குவாதம் முற்றிவிட்டதாம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, 'சி.எம். வரப்போகிறார். நாளைக்கு கொடுக்கிறேன், அந்தப்பக்கம் ஒதுங்கி நில்லு...' என்று ஒருமையில் பேசியிருக்கிறார், முன்னாள் பெண் அமைச்சர். வேறு வழியின்றி சுண்டல்காரரும், 'தின்ன சுண்டலுக்கு காசு கேட்டா... இப்படி கோவம் வருது, சி.எம். வாராரு... வேட்பாளர் வாராருன்னு சொல்லி துரத்திவிடுறாங்க..'என்று புலம்பியபடியே கிளம்பிச் சென்றிருக்கிறார். தற்போது வரை 8,000 ரூபாய் கணக்கு வருகிறதாம். சுண்டல்காரர், தேர்தல் அலுவலகத்துக்கே வருவதில்லையாம். புதிதாக சுண்டல்காரர் ஒருவர் மூலம் தேர்தல் அலுவலகத்தில் சுண்டல் பொட்டலங்களைக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இவருக்கு எவ்வளவு பாக்கி விழப்போகிறதோ... எனத் தெரியவில்லை. இந்த நிலையில் பழைய சுண்டல்காரர், வெறுப்பில், எங்கு சென்று இதைப் புகார்செய்வது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறாராம்!


- எஸ்.மகேஷ்

எங்கிருந்து வருகிறது இவ்வளவு பணம்?’ - மார்க்சிஸ்ட்டுகளை மிரள வைத்த தினகரன்
 #VikatanExclusive



ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் அடிதடி காட்சிகளை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. தினகரன் ஆட்களும் பன்னீர்செல்வம் ஆட்களும் மோதிக் கொண்டிருக்க, ‘எங்கிருந்துதான் வருகிறது இவ்வளவு பணம்? ஆளும்கட்சி அதிகாரிகளே தேர்தல் பணியில் இருப்பதால், யாரும் எதையும் கண்டுகொள்வதில்லை' என ஆதங்கப்படுகின்றனர் சி.பி.எம் கட்சியினர்.

அ.தி.மு.க அம்மா கட்சி சார்பில் தினகரனும் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டாலும், அவர்களின் சின்னங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. தினகரனுக்காக முப்பது அமைச்சர்களும் அ.தி.மு.க எம்.பிக்களும் களத்தில் இறங்கியுள்ளனர். பண விநியோகம் கட்டுக்கடங்காமல் செல்கிறது' என தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குத் தொடர்ந்து புகார்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப, அ.தி.மு.க எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு வேண்டப்பட்ட தேர்தல் பதிவு அலுவலர் விஜயகுமார், உதவி தேர்தல் அலுவலர் சேகர் ஆகியோரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். இதை தினகரன் ஆட்கள் எதிர்பார்க்கவில்லை. தொகுதியின் பல பகுதிகளில் மதுசூதனன் ஆட்களோடு நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும்கட்சியினரின் மோதலைப் பொருட்படுத்தாமல் தொகுதிக்குள் வலம் வருகிறார் சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன். இன்று மாலை சி.பி.எம் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறார் அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

‘தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது?’ என்ற கேள்வியை சி.பி.எம் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். “தொகுதிக்குள் ஏராளமான பணத்தை செலவு செய்கிறது தினகரன் அணி. பண விநியோகம் குறித்து தி.மு.க புகார் கூறினாலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்து அவர்களும் பேசி வருகின்றனர். வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார் தினகரன். அவையெல்லாம் ஓட்டுக்களாக மாறுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறி. ஏனென்றால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் கீழ்மட்ட அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூத் வாரியாக மிகத் துல்லியமாக கணக்கெடுத்து விநியோகிக்கின்றனர். நேற்று பண விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கருணாமூர்த்தி என்பவரைக் கைது செய்துள்ளனர். இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில்தான் பணத்தை விநியோகித்து வந்தார்கள். அரசியல் கட்சிகள் புகார் கூறிய பிறகு, கோவில்களில் இருந்து இடத்தை மாற்றிவிட்டார்கள்.

மாநகராட்சி அதிகாரிகளே தேர்தல் அலுவலர்களாக இருப்பதால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வாகன தணிக்கைளையும் வேகப்படுத்தவில்லை. நேற்று மேட்டுத்தெருவில் உள்ள மாதாகோவில் பகுதிக்குச் சென்று அங்குள்ள பெண்களிடம் விசாரித்தேன். 'தினசரி ஆளும்கட்சியின் அமர்ந்துள்ள பூத்துகளுக்குச் சென்று அமர்ந்தாலே, தினசரி தலைக்கு 300 ரூபாய் கொடுக்கின்றனர்' என்கின்றனர். 256 பூத்துக்கும் தலா 300 ரூபாய் என்றால், தொகையின் எண்ணிக்கையை அளவிடவே முடியாது. எங்கிருந்துதான் இவர்களுக்கு இவ்வளவு பணம் வருகிறது? இங்குள்ள பெரும்பாலான மக்கள், அன்றாட சாப்பாட்டுக்கே கடுமையாக உழைக்கின்றனர். தொகுதிக்குள் எங்கள் கட்சிக்கென்று பொதுவான மரியாதை இருக்கிறது. இந்தப் பகுதியின் செயலாளராக இருந்த லோகநாதன், வேட்பாளராகியிருக்கிறார். மக்கள் பிரச்னைகளை ஏராளமாக முன்னெடுத்திருந்ததால், அவருக்கு இங்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. எளிய மக்களைப் பணத்தைக் கொண்டு விலைக்கு வாங்கிவிட முடியும் என ஆளும்கட்சியினர் கணக்குப் போடுகின்றனர். அவர்களின் கணக்குகள் எல்லாம் தேர்தல் நாளில் தவிடு பொடியாகும்" என்றார் நிதானமாக.

சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். "ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வாகனங்கள் செல்வது மிகச் சிரமம். குறுக்குத் தெருக்கள் மிக அதிகம். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் தி.மு.கவும் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகளை களம் இறக்கியுள்ளனர். நாங்கள் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறோம். தொகுதிக்குள் டோக்கன் கொடுத்துவிட்டு, தொகுதிக்கு வெளியில் பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் முதற்கொண்டு தங்கக்காசு வரையில் விநியோகம் நடக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடி வருகிறோம். 'பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் தி.மு.கவும் ஊழல் கட்சிகள் என்பதை மக்கள் அறிவார்கள். இவர்களுக்கு எதிரான எங்கள் போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்றார் உறுதியாக.


-ஆ.விஜயானந்த்

KUHS exam norms arbitrary, says High Court 

LAST YEAR NEWS 1.4.2016 

A REMINDER

Special Correspondent KOCHI: April 01, 2016 00:00 I
 The Kerala High Court on Thursday declared unreasonable and arbitrary a clause in the regulation of the Kerala University of Health Sciences (KUHS) to the extent that candidates who failed in one subject, either in theory or practical, should appear for all papers including theory and practical.
Justice V. Chitambaresh passed the verdict while disposing of a batch of writ petitions filed by S. Geethu, Thiruvananthapuram, and other postgraduate students in various medical colleges in the State challenging the clause 3.16 of the regulation.

MCI stipulations
 
The court observed that the Medical Council of India (MCI) regulations did not explicitly state that a candidate should secure a minimum of 50 per cent marks in theory and practical simultaneously in order to be successful. The MCI regulation did not forfeit the marks obtained in theory or practical in case of shortcoming in one subject, compelling the student to re-do the exercise all over again. However, the regulation of KUHS was not consistent with or in conformity with the MCI regulations.
 High Court denies bail to retired employee in swindling case 

LAST YEAR NEWS 
 
  Special Correspondent MADURAI: April 01, 2016 00:00 IST

The Madras High Court Bench here on Thursday denied anticipatory bail to a retired government servant accused of having swindled Rs.1.17 crore of public money by hoodwinking his superior officials when he was in service and obtaining their signatures on cheques with blank spaces.
Justice P.N. Prakash dismissed the second advance bail application moved by K. Ganesan, former Superintendent in the office of the Deputy Director of Health Services in Pudukottai district, after observing that he was not entitled to the relief in view of serious nature of allegations levelled against him.
The Pudukottai District Crime Branch police had booked the petitioner under various provisions of Indian Penal Code on the basis of a complaint lodged by Deputy Director of Health Services Arunkumar, who happened to detect the crime only after the retirement of the accused from government service.
According to the complainant, the petitioner had misappropriated Central government funds by obtaining signatures from cheque-signing authorities, including the Administrative Officer and the Deputy Director, in as many as 26 cheques with blank spaces between February 1, 2012, and October 20, 2014.
Explaining the modus operandi to the High Court, the complainant stated that the accused had once produced a bill for purchase of three boxes of paper at a cost of Rs.420 and obtained signatures on a cheque for the same amount by leaving adequate space in the words as well as numerals column. “Thereafter, the petitioner has added the words ‘Two Lakh’ and ‘2,00’ and thereby withdrew Rs.2,00,420 as against Rs.420. In the cash book, he has made double entries in respect of the cheque by showing Rs.2 lakh to have been transferred to Block Primary Health Centres,” the complainant said.

KILL A COW GET A LIFE


நம்பிக்கையே மருந்து

By வாதூலன்  |   Published on : 01st April 2017 01:58 AM  |   

இரண்டு மாத முன்பு, கண் சிகிச்சை நிபுணரைச் சந்தித்தேன். சொட்டு மருந்து ஒன்றை சில நிமிடங்களுக்கொருதரம் விட்டு விட்டு, பிறகு உன்னிப்பாகப் பரிசோதித்தார். "உங்களுடைய பார்வை சரியாக இருக்கிறது. கண்ணாடி, "பவரை'யும் மாற்ற வேண்டாம். இமைப் பக்கம் அரிப்பதற்குக் காரணம், வயசால் தோல் வறண்டு போவதுதான்!' என்று சொல்லி, ஏற்கெனவே நான் பயன்படுத்தி வந்த "டிராப்ûஸ'யே மறுபடியும் பரிந்துரைத்தார்.

வெளியே வந்து, ரிசப்ஷனில் கட்டணம் கொடுப்பதற்காகக் காத்திருந்தேன். சில நிமிடம் பொறுத்து திரும்பின ஊழியர், ""இந்த மாத்திரை இரண்டு நாளுக்கு ஒரு முறை உட்கொள்ளச் சொன்னார். இதோ "டிராப்ஸ்' '' - நான் திகைத்துப் போய்ப் பார்த்தேன். புது சொட்டு மருந்து! ஊழியர், டாக்டர் பீஸ் தவிர, மருந்துகளுக்கும் கூடுதலாகத் தொகை பெற்றுக் கொண்டார்.

"என்னிடம் அப்படிச் சொல்லவில்லையே? டாக்டரை நேரில் பார்க்கலாமா?' என்று கேட்டேன். "அவர் வெரி பிசி!' என்று கூறிக் கடன் அட்டையைப் பெற்றுக் கொண்டு, பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்தார். திரும்புகிற வழியில், மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கையில்,  கண் சிகிச்சை மையத்திலிருந்து ஓர்  அவசர அழைப்பு! "ஸாரி சார்! வேறு நோயாளிகளுக்குத் தர வேண்டியதை உங்களுக்கு மாற்றி தந்து விட்டோம், உடனே வாருங்கள்!'

ஏற்கெனவே உடல் உபாதை; பசி; சில மணி நேரம் தொடர்ந்து அசையாமல் உட்கார்ந்திருந்ததால் அயர்ச்சி; எனக்குக் கோபம்தான் மேலோங்கியது. ஆனாலும் என்ன செய்ய? திரும்பவும் ஆட்டோவில் சென்று மருந்துகளைத் திருப்பிக் கொடுத்தேன். அதிகப்படி கட்டணத்தைத் தந்துவிட்டார், மன்னிப்பு கேட்டு. இது டாக்டரின் தவறா அல்லது பணியாளர்களின் அவசரத்தினால் விளைந்த கோளாறா என்று தெரியவில்லை.
"நல்ல காலம்! வேறு மருந்து கண்ணில் விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? விடுங்கள்' என்று மனைவி சமாதானப்படுத்தினாள்.

சில நாட்கள் கழித்து வேறு ஓர் உபாதைக்காக மருத்துவமனையிலேயே தங்க நேர்ந்தது, சேர்ந்த மறுநாள், செவிலிப் பெண்மணி காலை ஏழு மணிக்கு மாத்திரையொன்றை உட்கொள்ளும்படி சொன்னாள், பார்த்ததும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! ஏனெனில் அது வைட்டமின் மாத்திரை. "காலை சிற்றுண்டிக்குப் பிறகு தானே போட்டு கொள்ள வேண்டும்?' என்று கேட்டேன்.
அந்த நர்ஸ் மருத்துவச் சீட்டைக் காண்பித்தாள் "டாக்டர் அப்படித்தான் எழுதி இருக்கிறார்' என்று சொல்லி, பிடிவாதமாக, அசையாது நின்றார்.

நான் மருத்துவக் கோப்பை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு, பழைய சீட்டைக் காண்பித்து, அதில் 9 ஏ.எம். என எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டினேன். அப்புறம்தான் அவள் திரும்பிப் போனார், அதுவும், தயக்கத்துடன். இதே மாதிரி, மனையை விட்டு நீங்கும்போது எழுதின சீட்டில், மாலை என்பதற்குப் பதில் காலை என்று ஒரு மாத்திரையை எழுதி விட்டார். மீண்டும், நேரில் போய் மாற்றித் திருத்தி வந்தேன்.

பொதுவாக மருத்துவர்கள் நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 15 நோயாளிகளையாவது பார்க்கிறார்கள். இது தவிர, ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள ஐ.சி.யூ. நோயாளிகள், பிற நோயாளிகள் ஆகியவர்களையும் பார்க்கிறார்கள். அவர்களுக்கு, நோயாளியின் பழைய மருந்துச் சீட்டுத்தான் ஆதாரம். நோயின் தன்மையை மருத்துவ மொழியில் சுருக்கி எழுதியிருப்பார்கள்.

அந்தச் சீட்டைப் பார்த்த பின், விசாரித்து, தற்போதுள்ள நிலைமை பற்றித் தெரிந்து கொண்டு, புது மருந்துச் சீட்டு எழுதித் தருவார்கள். அது போல் செய்கிற போது, சிலவற்றை விட்டு விடச் சாத்தியக் கூறுகள் உண்டு. நோயாளிகளான நாம்தான் சரி பார்த்து, ஐயம் இருந்தால் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
இவ்வளவு தூரம் மருத்துவர்களைப் பற்றிச் சொல்லிய பிறகு, நோயாளிகளைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா? ஊடகச் செய்திகள், செவி வழிச் செய்திகள், இணையதளத் தகவல்கள் அனைத்தும் நோயாளியைக் குழப்புகின்றன.

ஏடுகளில் வருகிற மருத்துவக் குறிப்புகள் பொதுவானதே, அவை மாறிக் கொண்டே இருக்கும். அண்மையில் உப்பு குறித்து வெளியான செய்தி ஓர் உதாரணம். ("குறைவாக உப்பு சேர்த்தால் இதய நோய் வரலாம்') இது போல் சாக்லேட் உட்கொள்ளுவது, குடிநீர் அருந்துவது போன்ற பல விஷயங்கள். ஆராயச்சியாளர்கள் ஓர் உணர்வையோ, மருந்தையோ இன்று நல்லது என்பார்கள். மறு மாதமே அது கெட்டது எனக் கூறுவார்கள்.

என் நண்பர் ஒருவரின், வயிற்றுக் கோளாறுக்கு ஒரு புரிபடாத சோதனையை நிபுணர் எடுக்கச் சொல்லியிருக்கிறார். நண்பர் மறுநாளே கணினியில் பார்த்து அது புற்றுநோய்க்கு அறிகுறி என்று முடிவே செய்து விட்டார். டாக்டரைச் சிலநாள் கழித்துச் சந்தித்தபோது அவர் கடுமையாகப் பேசியிருக்கிறார்.

"உங்களை யார் அதைப் பார்க்கச் சொன்னது?' பிறகு, ஓரளவு தணிந்து, மறுபடியும் பரிசோதித்து "உங்களுக்கு புற்றுநோய் இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. இப்போதைக்கு வேறு மாத்திரை எழுதி தருகிறேன்' என்றார். அவற்றை உட்கொண்டு நண்பர் தெம்புடன் இருக்கிறார்.

வேறு சிலர் ஒரு படி மேலே சென்று, மருத்துவர்களுக்கே யோசனை கூறுவார்கள். "ஒரு சி.டி. ஸ்கேன் எடுக்கலாமே? யு.எஸ். அப்டமன் பார்க்கலாமே' என்று தங்கள் மருத்துவ "அறிவை'(?) வெளிப்படுத்துவார்கள். இது தேவையா?

ஒரு மருத்துவ நிபுணரின் இல்லத்தில் இருந்த பலகையில் பார்த்தேன். "மருத்துவர்களை நம்புங்கள்'. இது முற்றிலும் உண்மை, அவநம்பிக்கையில் ஏதாவது விபரீதக் கற்பனை செய்தால், அன்றாட வாழ்வே நரகமாகி விடும்.

பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.

பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு. | தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1990க்கு பின்பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் தற்போது பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, இறந்தவரிடம் இருந்து சொத்துக்களை மாற்றி கொள்வதற்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பொதுவாக, பிறந்தோ அல்லது இறந்தோ 1 வருடத்திற்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் பிறப்பு அல்லது இறப்பை பதிவு செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடி அதற்கான ஆணை பெற்ற பிறகுதான் வருவாய் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள்பிறப்பு சான்றிதழ் பதிவு செய்கின்றனர். 
 
இதனால், பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும், கால விரயமும் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இதை தொடர்ந்து பொது சுகாதாரத்துறை தலைமை பதிவாளர் அனைத்து நகராட்சி நிர்வாக ஆணையர், டவுன் பஞ்சாயத்து இயக்குனர், கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றைஅனுப்பியுள்ளார். 
 
அதில், சட்ட விதி 3ன் கீழ் பிறப்பு, இறப்பு 1 ஆண்டுக்குள் பதிவு செய்யாமல் விடப்பட்டாலும், வருவாய் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, இனி வருங்காலங்களில் 1 ஆண்டிற்கு பிறகு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைய வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரு வருடத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டு, அந்த ஆவணங்கள் பதிவுத்துறைக்கு அனுப்ப வேண்டும். எங்களால் இந்த ஆவணங்களை பாதுகாக்க முடியுமே தவிர திருத்தம் மேற்கொள்ள கூடாது. ஒரு வருடத்தில் பதியாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி அதன்பிறகுவட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். 
 
பொதுமக்கள் 3 மாதங்கள் வரை நடையாய், நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சட்ட திருத்தத்தில் கொண்டு வந்ததன் மூலம் பொதுமக்கள் அலைய வேண்டிய தேவையில்லை. வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இனி பதிவு செய்யமுடியும். இதற்கான ஆவணங்களை அவர்கள் வட்டாட்சியர் முன்பு சமர்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்' என்றார்

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...