Monday, April 3, 2017

9 இடங்களில் வெயில் சதம்: சேலம், பரமத்தியில் 105 டிகிரி

By DIN  |   Published on : 03rd April 2017 04:41 AM  |

sunset1

Ads by Kiosked
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக சேலம் மற்றும் கரூர் பரமத்தியில் 105 டிகிரி வெயில் பதிவானது.

கோடை காலம் தொடங்கிவிட்டதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரிக்கவே செய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது: கோடை காலம் தொடங்கியுள்ளதால் அடுத்த சில தினங்களுக்கு 1 முதல் 2 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவித்தனர்.

9 இடங்களில் 100 டிகிரி: ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி, சேலம், தருமபுரி, வேலூர் ஆகிய இடங்களில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
சேலம், கரூர் பரமத்தி 105
திருச்சி, வேலூர் 102
தருமபுரி 103
கோவை, மதுரை, பாளையங்கோட்டை 101
சென்னை 100

சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்

By DIN  |   Published on : 02nd April 2017 11:56 PM  

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உள்பட 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தர முதல்வர்களை (டீன்) தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான விவரம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் பொறுப்பு இயக்குநராகவும் பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.நாராயண பாபு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தப் பதவியில் 2020-ஆம் ஆண்டு வரை நீடிப்பார்.
ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறைத் தலைவரும் பொறுப்பு முதல்வருமான டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம் அந்தக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வசந்தாமணி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதாமணி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் நரம்பியல்துறை இயக்குநர் டாக்டர் கோபிநாத் பதவி உயர்வு வழங்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் திங்கள்கிழமை(ஏப். 3) பொறுப்பேற்றுக்கொள்கின்றனர்.

கல்லூரிகளுக்கு நிரந்தர முதல்வர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதால், நிர்வாகப் பணிகள் இனி தொய்வின்றி நடைபெறும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மருத்துவக் கல்வி இயக்குநர் இன்னும் ஒரு வார காலத்திற்குள் நியமிக்கப்படுவார் எனவும் இதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான பட்டியலில் மூன்று மூத்த மருத்துவர்கள் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் விரைவில் இயக்குநர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அவர் கூறினார்.

மின்னணு குடும்ப அட்டையைப் பயன்படுத்துவது எப்படி?

By DIN  |   Published on : 03rd April 2017 03:31 AM 
card
கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் நவீன மின்னணு குடும்ப அட்டைகளைப் பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

தமிழகம் முழுவதும் 1.89 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்தாள் இணைப்புடன் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதில், போலி குடும்ப அட்டைகள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து போலி அட்டைகளை ஒழிக்கவும் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவைக் கட்டுப்படுத்தவும் நவீன கையடக்க அளவில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை (ஏப்.1) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பயன்படுத்துவது எப்படி: இந்த அட்டையை கூட்டுறவு நியாய விலைக்கடையில் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த அட்டையை பெற்றதும் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய சதுர பெட்டி வடிவிலான நவீன இயந்திரம் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

அந்த இயந்திரத்துடன் பில் போடுவதற்கும் தனியாக ஒரு சிறிய இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்கள் வாங்க கடைக்கு சென்றதும் மின்னணு குடும்ப அட்டையை சிறிய சதுர பெட்டி வடிவ இயந்திரத்தின் மேலே உள்ள வெள்ளை நிற விளக்கு வெளிச்சத்தில் வைத்தால் போதுமானது. உடனே அந்த இயந்திரம் செயல்படத் தொடங்கும்.

மற்றொரு இயந்திரம் மூலம் அந்த அட்டைக்கான பொருள்கள் ஒதுக்கீடு அளவுக்கு விற்பனையாளர்கள் பில் போடுவார். அதைத் தொடர்ந்து நாம் வாங்கும் பொருள்களின் விவரம் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டையில் பதிவாகும்.

இது தொடர்பான விவரங்கள் செல்லிடப்பேசியிலும் குறுஞ்செய்தியாக அறிந்து கொள்ளலாம்.

இதன் மூலம் முறைகேடுகள் செய்வதற்கு வாய்ப்பின்றி தகுதியானவர்களுக்கு பொருள்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அணைகளைத் தூர்வாருவோம்

By எஸ். சந்திரசேகர்  |   Published on : 03rd April 2017 02:10 AM  |   

தமிழகத்தில் முழுவீச்சில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீண்ட காலத்துக்குப் பிறகு தண்ணீர் சேமிப்புக்காக கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திட்ட அமலாக்கத்தில் சில இடங்களில் பிரச்னைகள் நிலவினாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இத்திட்டம் வரவேற்கத் தக்கதே.

அதேசமயம் மற்றொரு முக்கிய அம்சம் பல ஆண்டுகளாக அறிக்கை நிலையிலேயே உள்ளது. அது அணைகள் தூர்வாரும் பிரச்னை.
மதுரையின் நீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை கட்டப்பட்ட பிறகு தூர்வாரப்படவே இல்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அணையின் 71 அடி கொள்ளளவில் 10 அடிக்கு சகதி படிந்துள்ளதாக கூறினர். ஆண்டுகள் செல்லச் செல்ல சகதியின் அளவு கூடி தற்போது 20 அடி வரை சகதி உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், "22 அடி வரை சகதி உள்ளது. அதற்கு மேல் இருக்கும் ஓரிரண்டு அடிகளையும்கூட குடிநீருக்குப் பயன்படுத்த முடியாது. மழை குறையக்குறைய சகதி அதிகரிக்கும். இதனால் அடுத்த சில ஆண்டுகளில் அணையில் சகதியின் உயரம் 30 அடியைத் தொட்டுவிடும்' என்றார்.

அணையில் சகதி அதிகரிக்க அதிகரிக்க கடைமடையின் விவசாயம் தரிசாகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசன நிலங்களில் இரண்டு விதமான நிலங்கள் உள்ளன. பெரியாறு அணை பாசனப் பகுதிகள் மற்றும் பூர்வீக வைகை பாசன நிலங்கள்.

இவற்றில் பெரியாறு அணைப் பாசனப் பகுதிகளுக்கு வைகை அணை வழியாக தண்ணீர் வந்தாலும் அதை வைகை பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது. ஆனால், பூர்வீக வைகை பாசன நிலங்களுக்கு முழுக்க முழுக்க வைகை தண்ணீர் தான் பயன்படுத்த வேண்டும்.

பெரியாறு - வைகை பாசன விளை நிலங்களில் பல ஹெக்டேர் நிலங்கள் பல ஆண்டுகளாகவே தரிசாக கிடக்கின்றன. இதன் விளைவாக கிரானைட் குவாரிகளும், மனை வணிகர்களும் பாசனக் கால்வாய்களையும், கண்மாய்களையும் உருக்குலையச் செய்துவிட்டனர்.

அதே நிலைதான் அணைக்கு நீர் வழங்கும் நீர்பிடிப்புப் பகுதிகளிலும். மூல வைகை பல இடங்களில் ஓடையாக மாறிவிட்டது. இதன் விளைவாக அணைக்கும் தண்ணீர் சரிவர வருவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே வைகை அணை நிரம்பியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க காட்டும் ஆர்வத்தில் பாதியளவு ஆர்வத்தை வைகை அணை மீது காட்டினால் போதும். இப்பகுதி விவசாயம் பிழைக்கும். இப்போதைய நிலையில் பெரியாறு - வைகை தண்ணீரால் தேனி மாவட்டம் மட்டும் ஓரளவு பாசன வசதி பெறுகிறது.
அதைக் கடந்து தண்ணீர் வருவதே இல்லை. வந்தாலும் ஒருபோகத்தைக்கூட உருப்படியாக விளைவிக்க முடிவதில்லை. மழை இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், தண்ணீரை தேக்க முடியவில்லை என்பது முக்கியமான காரணம்.

பயிரை விதைத்துவிட்டு பதைபதைக்கும் நெஞ்சுடன் காத்திருக்கும் விவசாயிக்குத்தான் தண்ணீரின் அருமை தெரியும். உரிய நேரத்தில் மழை பெய்யாவிட்டாலும் சிக்கல்... தேவையில்லாத நேரத்தில் மழை பெய்தாலும் சிக்கல்.

இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் எப்படியாவது விளைச்சல் எடுத்துவிட வேண்டும் என இரவு பகலாக காத்திருக்கும் விவசாயியைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

எந்த விவசாயியும் வறட்சி நிவாரணத்தை விரும்புவதில்லை. லாரித் தண்ணீரை விலைகொடுத்து வாங்கியாவது பயிரைக் காப்பாற்றாத்தான் முயல்கிறார். எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட பிறகு தான் கருகும் பயிர்களை பார்த்து கண்ணீர் விடுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே மழை போதுமான அளவுக்கு இல்லை. இப்போது வைகை அணையில் வெறும் 25 அடிதான் தண்ணீர் உள்ளது. அதிலும் 20 அடி சகதி. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தூர் வாரும் பணிகளை மேற்கொண்டால் ஓரிரு மாதத்தில், அதாவது மழைக்கு முன்னதாகவே பணிகளை முடித்துவிட முடியும்.

முன்பெல்லாம் தூர் வார வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பு தேவை. இப்போது அந்த நிலை இல்லை. தூர்வாரவும், அதை அள்ளிச் செல்லவும் விதம் விதமான இயந்திரங்கள் உள்ளன. பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும். இதில் உள்ள ஒரே பிரச்னை தூர்வாரியபின் அந்த மண்ணை அப்புறப்படுத்துவது தான்.

அணையின் சகதி மண் வளம் மிக்கது. இதை விவசாயிகளை எடுத்துச் சொல்ல அனுமதி வழங்கினால், உடனடியாக காலியாகிவிடும். எனவே தூர்வாரும் மண்ணை காலி செய்வது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.
மேலும் செங்கல் சூளைகளுக்கு மணல் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ வழங்கப்பட்டால் செங்கல்லின் விலை குறையும். கட்டுமானப் பணிகள் சுறுசுறுப்படையும்.

ஆனால், அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரும் பணிகளுக்கு மதிப்பீடு தயார் செய்வதுடன் தங்கள் கடமை முடிந்தது என்று இருந்து விடுகின்றனர்.
அவர்கள் தான் அப்படியென்றால் மக்கள் பிரதிநிதிகள் அதைவிட மோசம். இதைப் பற்றி பேசுவதே கிடையாது.

வைகை அணை மட்டும் இல்லை. இன்று தமிழகத்தில் உள்ள பல அணைகளின் நிலை இதுதான். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் புதிதாக எந்த அணையும் கட்டப்படவில்லை. இருக்கும் அணைகளையாவது தூர்வாரி தண்ணீர் சேமிக்கும் அளவை உயர்த்தலாமே.
ஒவ்வோர் ஆண்டும் வறட்சி நிவாரணம் என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிடுவதை விட, அணைகளைத் தூர்வாரினாலே விவசாயம் தழைக்கும்.

ஆதார் எழுப்பும் கேள்வி!

 By ஆசிரியர்  |   Published on : 03rd April 2017 02:04 AM  |   

தனி வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு முறையான பாதுகாப்பு நடவடிக்கையோ, முன்யோசனையோ இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. 2017-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கடைசி நிமிடத்தில் எந்தவித விவாதமோ, அறிவிப்போ இல்லாமல் நிதியமைச்சரால் புதிதாகச் சேர்க்கப்பட்ட முடிவு இது. குடிமக்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசுக்கு தெரிய வேண்டும் எனும்போது, வெளிப்படைத்தன்மை இல்லாமல், நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தபோது கூறாமல், இப்படி கடைசி நிமிடத்தில் இந்த உத்தரவை இணைக்க வேண்டிய அவசியம் என்ன?

நிதிப் பரிமாற்றங்களில் வெளிப்படைத் தன்மை கொண்டு வருவதில் தவறே கிடையாது. அப்படிக் கொண்டு வருவதன் மூலம் தனிநபர் ஒருவருடைய செலவுகளையும், அவர் சமர்ப்பிக்கும் வருமான வரிக் கணக்கையும், வரி ஏய்ப்பு செய்யப்படுகிறதா என்பதையும் அறிந்து கொள்ள முடியும்தான். அதே நேரத்தில், இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது.

அரசு இயந்திரம் ஒவ்வொரு தனி நபரின் தனிப்பட்ட விவரங்களான வங்கிக் கணக்கு, கல்வித் தகுதி, உடல்நிலை ஆகியவை குறித்துத் தெரிந்து கொள்ள முடியும். இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் தொலைபேசி அழைப்புகளையும், செல்லிடப்பேசி பயன்பாடு குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். அதில் இருக்கும் ஒரு பிரிவு, எந்தவொரு குடிமகனையும் தேசியப் பாதுகாப்பு என்கிற பெயரில் கண்காணிக்க முடியும் என்கிறது. அதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கேட்கலாம். இருக்கிறது.

தேசியப் பாதுகாப்பு என்பது தெளிவில்லாத ஒரு குற்றச்சாட்டு. அந்த அடிப்படையில் இந்தியக் குடிமகன் ஒருவருடைய தனியுரிமையும், தனிப்பட்ட விவரங்களும் பாதிக்கப்படும்போது அதை எதிர்த்து சட்டப்படி நீதி பெற முடியாது. ஆதார் சட்டம் 47-ஆவது பிரிவின்படி, ஆதார் ஆணையம் மட்டும்தான், திருடு போகும் தகவல்கள் குறித்து வழக்குத் தொடர முடியும். நமது தகவல்கள் பொது வெளியில் கசிந்தால், அதை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் உரிமைகூட இனிமேல் நமக்கில்லை.

வங்கிக் கணக்குகள், வருமான வரிக் கணக்கு ஆகியவற்றிற்கு ஆதார் கட்டாயமாக்கப் படுவதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது. மானியங்களையும், சமூகநலத் திட்டங்களையும் பெறுவதற்கு மட்டும்தான் ஆதார் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்று கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமல்ல. ஆனால், ஓய்வூதியம் வங்கிக் கணக்கில்தான் போடப்படும். வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம். அதேபோல, மானியங்கள் பெற ஆதார் எண் தேவையில்லை. ஆனால் மானியங்கள் வங்கிக் கணக்கில்தான் போடப்படும். வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம். இது வேடிக்கையாக இருக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏன் யோசிக்கவில்லை? வழக்குரைஞர்கள் ஏன் அவர்களுக்கு எடுத்துரைக்கவில்லை.

ஆதார் பிரச்னையில் மையமாக இருக்கும் விவாதம் தனியுரிமை தொடர்பானது. ஆதார் அட்டையின் அடிப்படை நோக்கம், அந்த எண்ணுக்கு உரிய நபர் அவர்தானா என்பதும், அவரது பெயர், முகவரி, அங்க அடையாளங்கள் இவையிவை என்பதும்தான். இதன் மூலம் ஒரே நபர் அரசின் மானியங்களை மூன்று நான்கு பெயரிலோ, போலி முகவரிகளின் மூலமாகவோ பெறுவது தடுக்கப்படும். அதுவரையில் யாருக்கும் அது குறித்துக் கருத்து வேறுபாடு கிடையாது.

ஆனால் ஆதார் எண் அந்த நபரின் பொருளாதார விவரங்கள், மருத்துவப் பதிவுகள், வேலை செய்யும், செய்த விவரங்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்படும்போது, தனியுரிமை குறித்த கேள்விகள் எழுகின்றன. இவையெல்லாம் இணைக்கப்படும்போதும், நோக்கம் விரிவுபடுத்தப்படும்போதும் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதும், பரிமாற்றம் செய்யும்போது கசிந்து விடாமல் பாதுகாப்பதும் மிகவும் கடினம்.
இந்தக் கவலைகள் முதலில் தெரிவிக்கப்பட்டபோது, அரசு அத்தனை தகவல்களும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் இருப்பது உறுதிப்படுத்தப்படும் என்று அறிவித்தது. ஆனால், இப்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையே பல்வேறு அமைச்சகங்களால் பெறப்பட்ட ஆதார் மட்டுமல்லாமல் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட பல தனிநபர் தனியுரிமைத் தகவல்கள் பொதுவெளியில் இணையத்துக்குக் கசிந்திருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் அதைப் பெற முடிகிறது என்றும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

ஆதார் எண்ணைப் பெயர், பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றுடன் வெளியிடுவது ஆதார் சட்டம் 2016-க்கு எதிரானது என்றும், மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு உரியது என்றும் அதனால் எந்த அரசுத்துறையும் அவற்றைப் பொதுவெளியில் பதிவு செய்வது தவறு என்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் ஆதார் விவரங்கள் இணையத்தில் பதிவாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுபோல, ஆதார் விவரங்களைச் சேகரிக்கும் தனியார் நிறுவனங்கள் அந்த விவரங்களைக் கசிய விடுவது சட்டப்படி குற்றம் என்றாலும், கசிந்த பிறகு அவர்களை யார் தண்டிப்பது?

ஒரு நபரின் வருமானவரி விவரங்களையும், வங்கிக் கணக்குகளையும் ஆதாருடன் இணைத்தால், அந்த நபரின் தனியுரிமையையும், தனி விவரங்களையும் பாதுகாக்க அரசு என்ன செய்யப்போகிறது என்கிற முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் கேள்வி மிகவும் முக்கியமானது. முறையான தனியுரிமைச் சட்டம் கொண்டுவரப்படாமல், ஆதார் கட்டாயமாக்கப்படுவது தனிமனித உரிமைகளை பாதிப்பதாக அமையும்!
Court: Abuse for loan repayment is abetment to suicide
Mumbai:


Continuously beating a family man in his family's presence at his home and at the workplace, and demanding documents of his house certainly amounts to instigation and provocation to commit suicide, the Bombay high court held while refusing to drop a case of abetment to suicide against two moneylenders.
Gurunath Gawli and Sangita Gawli had moved the HC with a revision plea against an order passed last year by a sessions judge, who refused to discharge them from a 2014 case of abetment under the Indian Penal Code and offences under the Bombay Moneylenders' Act.

Umesh Bombley's widow had accused the Gawlis of harassing him to return a loan of `19 lakh. They used to regularly abuse, intimidate and beat him, an FIR lodged with the Mulund police stated.
“A prudent family man, when meted with such treatment day in and day out, would certainly think of committing suicide,“ Justice A M Badar said, rejecting the plea of the duo.
The HC relied on a Supreme Court ruling which held that at the pre-trial stage, suspicion was enough to frame the charge, and marshalling of evidence was not required. It also relied on the conduct of the accused prior to the suicide to show that the suspicion pointed towards them provoking and facilitating him to commit suicide.

“The accused persons' conduct in assaulting the deceased for getting back the loan amount appears to be wilful and its gravity seems to propel or compel a person of ordinary prudence to commit suicide,“ the HC said.

Bomble, who committed suicide at his home in September 2014, used to sell cutlery on a Mumbai footpath.“He was not well-educated,“ the court observed, and said, “Intention and a guilty mind are pre-requisite of offence of abetment. There should be a reasonable nexus between the suicide and abetment by the accused.“

The court noted that “intention is a mental state of mind and no tangible evidence can be produced by the prosecution to establish intention. Therefore, intention of accused persons is required to be gathered from all surrounding circumstances by applying test of a prudent person“.

திருமலை-திருப்பதியில் என்னவெல்லாம் இலவசம்? தெரிந்து கொள்வோமா?! 

VIKATAN

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடத் தொடங்கிவிட்டார்கள். குழந்தைகளும், `எங்காவது டூர் கூட்டிக்கிட்டுப் போங்க’, `பிக்னிக் கூட்டிட்டுப் போங்க’ என்று பெற்றோர்களை அரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவரவர் அவரவர்களின் வசதிக்கு ஏற்ப, இப்போதே எங்கு செல்லலாம் என்று திட்டமிடத் தொடங்கிவிட்டார்கள்.



பிள்ளைகள் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். பெரியவர்கள் யாத்திரை செல்ல விரும்புவார்கள். பிள்ளைகளுக்கு சுற்றுலாவாகவும் பெரியவர்களுக்கு யாத்திரையாகவும் இருக்கும் ஸ்தலம் என்றால், அது திருப்பதிதான். `திருப்பதியா... அது பணக்காரசாமியாச்சே... அங்கெல்லாம் நாம எப்படிப் போக முடியும்?’ என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக அப்படிக் கிடையாது.

'எவரெவர் எங்கிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், அங்கிருந்தே என்னை உளப்பூர்வமாக நினைத்தால், நிச்சயம் என்னை வந்து அடைவார்கள்' என்பதற்கிணங்க நாம் சுவாமியை எந்தத் தடையுமில்லாமல் வணங்கவேண்டுமென சந்தேகத்துக்கு இடமின்றி நினைத்தால் நிச்சயம் அது இயல்பாக நிகழும்.

சரி, எந்த ஊராக இருந்தாலும், தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் பணம் செலவாகுமே... என்ன செய்வது? என்றுதானே கவலைப்படுகின்றீர்கள். அது பற்றி கவலைப்படத் தேவை இல்லை. தேவை வைராக்கியமும் பொறுமையும்தான்.

திருமலை-திருப்பதியில் என்னவெல்லாம் இலவசம் என்று பாருங்கள்... இலவசம் என்பதால் அவை நம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்விதமாக இருக்கும். ஆனால், ஆடம்பர வசதிகள் இருக்காது என்பதை முதலிலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.



* திருப்பதி பஸ்-ஸ்டாண்டின் எதிர்புறம் இருக்கும் சீனிவாசன் காம்ப்ளக்ஸில் இலவசக் குளியலறைகள், கழிவறைகள் உள்ளன. இவை தவிர நமது லக்கேஜ் பையை வைக்க, இலவச லாக்கர்களும் உள்ளன. அதில் நாம் கொண்டு போன லக்கேஜ்களை வைத்துவிட்டு, அங்கிருக்கும் ஹாலில் ஓய்வெடுக்கலாம். இரவு நேரம் என்றால் அங்கேயே படுத்து உறங்கலாம். சுத்தமாகவும் சிறப்பாகவும் அவை பராமரிக்கப்படுகின்றன. கீழ்த் திருப்பதியிலிருக்கும் கோவிந்தராஜ சுவாமி கோயில், அலமேலு மங்காபுரம் ஆகிவற்றுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம்.

* ரயிலில் வருபவர்களுக்கு வசதியாக ரயில் நிலையம் எதிரிலிருக்கும் விஷ்ணு நிவாஸத்திலும் இதே போல் வசதிகள் உள்ளன.

* கீழ்த் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்துசெல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக அலிபிரிக்கும், ஶ்ரீவாரிமெட்டுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இலவச பஸ் வசதி உண்டு.



* திவ்ய தரிசனம் செய்ய, நடந்தே மலையேறி வருபவர்களுக்கு வசதியாக அவர்கள் கொண்டுவரும் லக்கேஜ்களை இலவசமாகக் கொண்டு செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லட்டு ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.

* திருமலையில் பக்தர்களின் வசதிக்காக பல இடங்களிலும் இலவச லாக்கர் வசதி உண்டு. இதில் நம் லக்கேஜ்களை வைத்துச் செல்லலாம். ஆனால், மிகவும் காஸ்ட்லியான நகைகள், அளவுக்கு அதிகமான பணம் இவற்றைத் தொடக்கத்திலேயே தவிர்த்துவிடுங்கள்.

* திரும்பிய பக்கமெல்லாம் இருக்கும் இலவசக் கழிப்பறைகள், பக்தர்கள் காலைக் கடன்களை முடிக்க எளிதாக உதவக்கூடியவை.

* உங்களின் செல்போன், காலணிகளைப் பாதுக்காப்பாக வைப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அங்கு வைத்து டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.

* 'கல்யாணக்கட்டா' என்று சொல்லப்படும் முடிக்காணிக்கை செய்யும் இடத்தில் முடிக்காணிக்கைக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. இங்கு சந்தனம் மற்றும் புதிய பிளேடு ஒன்று இலவசமாக வழங்கப்படும்.

* சர்வதரிசன க்யூவில் சென்று சுவாமி தரிசனம் செய்தால், தரிசனம் செய்ய எந்தக் கட்டணமும் கிடையாது. செவ்வாய், புதன்கிழமைகளில் கூட்டம் மிகவும் குறைவாக இருக்கும். தரிசனத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் பொங்கல், சாம்பார் சாதம், உப்புமா இவற்றில் ஏதேனும் ஒன்று இலவசமாக வழங்கப்படும். சிலவேளைகளில் பசும்பால் வழங்கப்படும்.



* தரிசனம் முடித்து வரும் அனைவருக்கும் சிறிய லட்டு பிரசாதம் வழங்கப்படும். இல்லாவிட்டால், பொங்கல், புளியோதரை, மிளகு சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும்.

* கோயிலின் பிரதான வாசலைத் தாண்டி வெளியே வந்தால், தரிகொண்டா வெங்கமாம்பா இலவச அன்னதானக்கூடம் இருக்கிறது. இங்கு வேண்டுமளவு சாதம் சாம்பார், ரசம், மோர், பொரியல் துவையலுடன் இலவசச் சாப்பாடு வழங்கப்படுகிறது.

* இதையெல்லாம் தாண்டி மலை முழுவதும் சுற்றி வர, இலவச பஸ் ஆரஞ்சு நிறத்தில் ரதம்போல பவனி வருகின்றது. ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு பஸ் என காலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரை மலையைச் சுற்றி வருகிறது. இதில் ஏறி நாம், திருமலையில் எந்த இடத்தில் இறங்க வேண்டுமோ அங்கு இறங்கிக் கொள்ளலாம்.

* இது தவிர இலவச மருத்துவமனை ஒன்றும் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...