Tuesday, April 4, 2017

இது வரம், சாபமல்ல!

By ஆசிரியர்  |   Published on : 04th April 2017 01:34 AM  |   

நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பொது மருத்துவத்துக்கான எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவத்துக்கான பி.டி.எஸ். உள்ளிட்ட கல்வித் தகுதிகளுக்கு அகில இந்திய அளவிலான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு(National Eligibility cum Entrance Test) எனப்படும் 'நீட்' தேர்வின் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக இருக்கிறது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற காரணத்தைக் கூறி தமிழகம் இனியும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற முடியாது என்று தோன்றுகிறது.

சர்வதேச அளவில் இந்தியாவில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களின் கல்வித் தரம் குறைந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடிப்படைத் தகுதியைத் தேர்வு மூலம் முடிவு செய்து அதனடிப்படையில் மட்டும்தான் மதிப்பெண் அடிப்படையில் ஆனாலும், நன்கொடை அடிப்படையானாலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட முடியும் எனும் நிலை ஏற்பட்டால், இந்திய மருத்துவக் கல்வியின் தரம் உறுதிப்படுத்தப்படும் என்பதுதான் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டதன் நோக்கம்.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்துத் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு உறுதிப்படுத்தப்பட்டது. அந்த முடிவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே, 'நீட்' தேர்வு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.

பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தந்த அழுத்தத்தின் காரணமாக, மாநில அரசுகள் விருப்பப்பட்டால், 'நீட்' தேர்விலிருந்து அவற்றுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதற்கான அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. ஆனாலும்கூட, தனியார் மருத்துவக் கல்லூரிகள் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது. கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு மட்டும், மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றது.
மருத்துவக் கல்வியில் உள்ள பிரச்னைகளுக்கு 'நீட்' நுழைவுத் தேர்வே தீர்வு என்று நினைத்துவிட வேண்டாம். 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களைப் பெறும் மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டணங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்குக் கடுமையான கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்துக் கவலைப்படாத நமது அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும். 'நீட்' நுழைவுத் தேர்வை மட்டுமே எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரச்னை தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு அல்ல. நமது மாநில அரசின் கல்வித் திட்டம் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தின் அளவுக்குத் தரம் வாய்ந்ததாக இல்லாமல் இருப்பதுதான். 'நீட் தேர்வை நடத்துவது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்பதால், அந்தக் கல்வித் திட்டத்தின் தரத்தில் படித்திருந்தால் மட்டுமே, அந்தத் தேர்வை எதிர்கொள்ளமுடியும்.

இந்த ஆண்டு 'நீட்' தேர்வு எழுதுவதற்கு தமிழகத்திலிருந்து 88,431 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்கள் தனியார் பயிற்சி நிலையங்கள் நடத்தும் 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் படித்தவர்கள். அநேகமாக எல்லா தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் 'நீட்' தேர்வையே சாக்காக வைத்து அதற்கான தனிப் பயிற்சிக்கென ரூ.50,000-த்திலிருந்து ரூ.1 லட்சம் வரை வசூல் செய்கிறார்கள். முறையான பயிற்சி பெற்றவர்களால்தான் அந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. 'நீட்' குறித்த அடிப்படையே தெரியாத பலர் பயிற்சி வகுப்புகள் நடத்துவதும், தனியார் பள்ளிகளுடன் இணைந்து பயிற்சி வழங்குவதும் அரசுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.
கிராமப்புற மாணவர்களால் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு எழுத முடியாது என்கிற காரணத்தைக் காட்டி அவர்களை எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இப்படியே வைத்துக் கொண்டிருக்கப் போகிறோம்? 'நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோருவதன் மூலம் தமிழக மாணவர்களின் தரத்தை அரசே குறைத்து மதிப்பிடுவது அவமானகரமாக இல்லையா' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் எழுப்பியிருக்கும் கேள்வி கவனத்தில் கொள்ளத்தக்கது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை, நமது பாடத்திட்டங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தரத்துக்கு உயர்த்துவதும், தமிழக அரசே நமது மாணவர்களை 'நீட்' தேர்வுக்கு முறையான தகுதியுள்ள ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளித்துத் தயார் படுத்துவதும்தானே ஆக்கபூர்வமான அணுகுமுறையாக இருக்க முடியும்?

அவரவர் தாய்மொழியில் 'நீட்' தேர்வு எழுதலாம் என்று சொல்லிவிட்ட நிலையில், நமது கிராமப்புற மாணவர்களை தேசியத் தேர்வுகளின் போட்டிக்குத் தயார் படுத்துவதில் முனைப்புக் காட்டுவோம். நமது பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவோம். இதுபோல நெருக்கடி ஏற்பட்டால்தான் மாற்றங்கள் சாத்தியப்படும். 'நீட்' நமக்குக் கிடைத்திருக்கும் வரம், சாபமல்ல!

ஜூன் வரை வெயில் வாட்டும்; இயல்பை விட அதிகரிக்கும் கோடை வெயில் காரணமாக, அடுத்த இரு மாதங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குளிர் காலத்தின் பின் பருவம் முடிந்து, மார்ச், 1 முதல் கோடை வெயில் துவங்கியது. இதில், டெல்டா மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் துவக்கம் முதலே வெப்பம் அதிகமாக உள்ளது. தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், 40 டிகிரி செல்சியஸ்; சென்னை உள்ளிட்ட வடகிழக்கு
மாவட்டங்களில், 35 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பம் பதிவானது. ஆனால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்துள்ளது.

அடுத்து வரும் மாதங்களில், ஜூன் வரை, வெயிலின் அளவு கடுமையாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன், அடுத்த இரு மாதங்களுக்கான முன் கணிப்பையும், இந்திய வானிலை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.

* பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில், மேல்மட்ட வெப்ப அளவில், பெரிய மாற்றம் இல்லை. வழக்கமான கோடை வெயிலை விட, ஒரு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கூடுதலாக இருக்கும்

* வடக்கு, மத்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்; தென் மாநிலங்களில், 0.5 டிகிரி செல்சியஸ் அளவு மட்டும், வெப்பம் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
 Research, startups make IIT-Madras best in class

CHENNAI: Indian Institute of Technology - Madras is the second best institution in the country and the best among engineering institutions in the national institutional ranking framework (NIRF) released by the Union minister for human resource and development Prakash Javadekar on Monday. Anna University, Chennai finished 13th in the overall ranking and is sixth among engineering institutions.

This is the first time that the Union ministry of human resource and development (MHRD) has made it mandatory for all higher educational institutions in the country to take part in the annual ranking process. In the overall category, IIT-M stood second behind Indian Institute of Science, Bengaluru.

IIT-M director, Prof Bhaskar Ramamurthy, attributed the rank to the objectives of the 'Strategic Plan 2020'. "The plan spells out quantified targets for all key pillars. These include flexible curriculum, increase in faculty strength, research programme that increases publication quality and count, strong industry-academia collaboration epitomised by research park, a startup ecosystem with 100 companies being incubated currently, an expanding programme of collaborations and student exchanges with leading global universities, and an impressive placement record," he said.

Anna University was placed sixth among universities and 13th in the overall category. "Anna University was awarded the status of university with potential for excellence by the UGC. The university aims to reach greater heights through continued programmes in academics and research and strengthen its collaborations with national and international agencies," said registrar S Ganesan.

Coimbatore-based Amrita University was ranked ninth in the university category. "It is a great feeling to reach the top of the ranking," said vice-chancellor of Amrita University P Venkat Rangan. "This is a testament to the academic excellence and outstanding faculty that the university is known. We maintain a staff-student ratio of 1:10," he said. Amrita was also ranked the best private deemed university in India in the QS Rankings and Times Higher Education Rankings.

SASTRA University, Thanjavur has been ranked in all the categories of the NIRF Rankings. It has been ranked 50/724 in the overall category, 32/232 among universities, 25/1007 in engineering and 44/542 in management. "This is a significant improvement when compared to the 2016 rankings. The management acknowledges the support and encouragement of Government of India, MHRD, funding agencies, corporates, parents, students and well-wishers," said the dean of planning and development, S Vaidhyasubramaniam.
தலையங்கம்
சுற்றுலா வருபவர்கள் நமது சகோதர–சகோதரிகள்
றைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எப்போதுமே, சுற்றுலா என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் உந்துசக்தி என்று குறிப்பிடுவார். பிரதமர் நரேந்திரமோடி, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 2 தலைநகரங்களான காஷ்மீரையும், ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் 9.2 கிலோமீட்டர் தூரத்திற்கு, ரூ.2,500 கோடி செலவிலான நாட்டிலேயே மிகப்பெரிய சுரங்கப்பாதையை நேற்று முன்தினம் திறந்துவைத்தார்.
அப்போது அவர், கடந்த 40 ஆண்டுகளில் சுற்றுலா இந்தப்பகுதியில் மேம்பாடு அடைந்திருந்தால், உலகமே காஷ்மீரின் காலடியில் இருந்திருக்கும். காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க சுற்றுலாவா?, பயங்கரவாதமா? என்பதை முடிவு செய்யவேண்டும். சுற்றுலா வளர, வளர பொருளாதாரம் வளர்ந்துகொண்டேபோகும். அந்தமாநில மக்களும் அதனால் பயனடைந்து கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் இந்த கருத்துகளை தெரிவித்த அதேநாளில், சென்னை அருகிலுள்ள மாமல்லபுரத்தில் வெட்கி தலைகுனிய வைக்கும் ஒருசம்பவம் நடந்திருக்கிறது. மாமல்லபுரத்திற்கு ஜெர்மன் நாட்டிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்திருக்கிறார்கள். அதில் 5 பேர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை காலையில் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள். 4 பேர் ‘சன்பாத்’ எடுத்துக்கொண்ட நேரத்தில், ஒருபெண் மட்டும் நான் நடைபயிற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு, கடற்கரையில் நடந்துசென்றிருக்கிறார். அப்போது 3 அடையாளம் தெரியாத நபர்கள் அவரை பக்கத்திலுள்ள சவுக்கு தோப்புக்குள் தூக்கிக்கொண்டு போய் அதில் ஒருவன் கற்பழித்திருக்கிறான். அவர்களிடமிருந்து தப்பித்த அந்த பெண் உடனடியாக தூதரகத்துக்கு புகார்செய்ய, இப்போது போலீஸ் விசாரணை நடக்கிறது.
‘‘பெண்களை கடவுளாக மதிக்கும் இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது’’ என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். அனைவருக்கும் இது வேதனையளிக்கிறது. ஆக, சுற்றுலா தலங்களில் இன்னும் பாதுகாப்பை மேம்படுத்தவேண்டிய பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே முதல்இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தமிழ்நாடு இருக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அயல்நாட்டு சுற்றுலா பயணிகளையும் இதேபோல அதிகளவில் ஈர்த்தால், பொருளாதார நிலைமை மேம்படுமே என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், மலையும் மலைவாழ் சார்ந்த இடங்களும் கொண்ட ‘குறிஞ்சி’ நிலமும், காடும் காடுசார்ந்த இடங்களை கொண்ட ‘முல்லை’ நிலமும், வயலும் வயல்சார்ந்த கொண்ட ‘மருதம்’ நிலமும், கடலும் கடல்சார்ந்த இடமும் கொண்ட ‘நெய்தலும்’, மணலும் மணல்சார்ந்த ‘பாலை’ நிலமும் ஒருங்கே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கல்ல, மனங்களில் மகிழ்ச்சி. சுற்றுலா வருமானத்தை மட்டும் பெருக்காமல், பண்பாட்டை பரிமாறவும் பேருதவி புரிகிறது. வேலைவாய்ப்புகளை பெருக்குகிறது. தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவாக வந்தால் அது விரையம் அல்ல ‘கிரையம்’ என்ற உணர்வுகளை உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடமும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் வளர்க்கவேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.

 சுற்றுலா தலங்களுக்கு என தனியாக சுற்றுலா போலீஸ் என்ற அமைப்பை அமைக்க அரசு பரிசீலிக்கலாம். சுற்றுலாத்தலங்களில் உள்ள மக்களுக்கு, நம்பகுதிக்கு சுற்றுலா வரும் மக்கள் அனைவரும் நமது சகோதர–சகோதரிகள். இங்கு வந்துவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு, அல்லது சொந்தநாட்டுக்கு திரும்பும்போது, அவர்கள் ஒரு தாய்வீட்டுக்கு, சகோதரன்–சகோதரி வீட்டுக்குவந்த இனிமையான உணர்வோடு திரும்ப வேண்டும் என்பதையே முக்கியக்குறிக்கோளாக தங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

Monday, April 3, 2017

சில்க் ஸ்மிதாவிற்கு ஆதார் கார்டு!

TOI Contributor | Updated: Apr 2, 2017, 10:43PM IST0


மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு ஆதார் கார்டு வழங்கியது பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாதாரண மனிதனின் அடையாளம் எனச்சொல்லி எல்லாவற்றிற்கும் மத்திய அரசு ஆதார் கார்டு கேட்கிறது. இது மிகவும் பாதுகாப்பானது, தகவல் வெளியாகாது என்று சொல்லி வரும் நிலையில் தமிழ் சினிமாவின் மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதா பெயரில் ஆதார் கார்டை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். கடந்த 1996ஆம் ஆண்டு சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது இயற்பெயரான விஜய லட்சுமி எனும் பெயரில் அவர் வசித்த தியாகராய நகர் வீட்டு முகவரிக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஆஞ்சநேயருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், தற்போது சில்க் ஸ்மிதாவிற்கு வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களுக்கு எப்படி ஆதார் அட்டை வழங்கமுடியும், பொய் தகவல் அளித்து ஆதார் அட்டை வாங்க முடியுமா என்று பல கேள்விகளை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
 இறந்த பிறகும் சம்பளம் வாங்கிய ஆசிரியை!

 
கயா: இறந்துபோன ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ஊதியம் எடுக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கயாவில் உள்ள வாசிர்கஞ் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த ராஞ்சனா குமாரி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி உயிரிழந்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாத ஊதியம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 2 முறை அவரது பெயரில் உள்ள ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

Aadhaar: The great identity crisis

By Yatish Yadav  |   Published: 02nd April 2017 06:48 AM  |  
 
Image used for representational purpose only
NEW DELHI: After the government blacklisted Ranchi-based Aadhaar enrolment agency that had inadvertently leaked details of former Indian cricket team captain Mahendra Singh Dhoni, questions are being raised on selection of domestic and international players for the game-changing yet tricky unique identification programme that involves security and privacy concerns.

Here are the details of a contract the Unique Identification Authority of India (UIDAI) had signed with L-1 identity solution, a US-based company that was later acquired by France-based Safran Group. The clause 15.3 of the contract signed on August 24, 2010, said: “The data shall be retained by M/s L-1 identity solutions not more than a period of seven years as per retention policy of the government of India or any other policy that UIDAI may adopt in future.” According to sources, similar agreements were signed with other foreign vendors, who had opened shops in India. What happened to the personal data of 112 crore people after retention period expired last year? The government officials were tightlipped over the issue; however, they maintained that UIDAI’s Aadhaar data is fully secured and have never been compromised.

“Any complaints received against enrolment agency is taken seriously by the government and UIDAI regional offices. The officers are told to take immediate action against the delinquent agency. Each enrolment goes through various checks and data stored with UIDAI cannot be breached. It is a fully secure system,” the officials said.

The government earlier this month in a statement vouched for the safety of Aadhaar data. But, two weeks later, the Ministry of Electronics and Information Technology admitted that in some instances, personal identity of individuals, including Aadhaar number and sensitive data, has found its way into the public domain.

You are buying your monthly ration at the government shop. The shopkeeper holds the camera of smartphone up to your eyes and later on fingers. The smartphone confirms a match to biometrics in a database, already linked to your bank. Phew! Your transaction is over within minutes.
This sounds great. But, when top secretaries gave a presentation to PM Narendra Modi last year, they had raised the issues related to security of data in such transactions.

The No. 6 of the presentation—Mobile Based Authentication—had recommended using Aadhaar for authentication.
It said most smartphones have cameras, which can be converted into an Iris scanner with changes to the phone design, and Iris camera requires change in filter of an ordinary camera and associated embedded software. It further said, “Prototypes of the same were also invited from the industry and tested by UIDAI. The tests were confirming the possibility of making smartphones Iris-compliant.”

The next para, however, touches upon the security concerns. “While the UIDAI ensures safety of biometrics once encrypted and sent to its server, the biometrics when captured and stored in the individual’s device need to be encrypted through security-related interventions in system hardware. These security requirements would ensure that the biometrics are not misused or reused. Liveliness of biometrics is another issue.”


The recommendation further said UIDAI and Department of Electronics and IT would take up with Google and other major smart-phone providers to allow third party ‘Authenticating Protocol Interface’ from Aadhaar to be integrated with Android.
The Mazdoor Kisan Shakti Sangathan of Rajasthan has collected some case studies which reveal that people with mismatch fingerprints are unable to avail the benefits.
In 2010, Ernst & Young was asked to set up the Central Identities Data Repository and a chapter in it raised doubts over the accuracy of biometrics data.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...