Monday, April 3, 2017

சில்க் ஸ்மிதாவிற்கு ஆதார் கார்டு!

TOI Contributor | Updated: Apr 2, 2017, 10:43PM IST0


மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு ஆதார் கார்டு வழங்கியது பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாதாரண மனிதனின் அடையாளம் எனச்சொல்லி எல்லாவற்றிற்கும் மத்திய அரசு ஆதார் கார்டு கேட்கிறது. இது மிகவும் பாதுகாப்பானது, தகவல் வெளியாகாது என்று சொல்லி வரும் நிலையில் தமிழ் சினிமாவின் மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதா பெயரில் ஆதார் கார்டை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். கடந்த 1996ஆம் ஆண்டு சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது இயற்பெயரான விஜய லட்சுமி எனும் பெயரில் அவர் வசித்த தியாகராய நகர் வீட்டு முகவரிக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஆஞ்சநேயருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், தற்போது சில்க் ஸ்மிதாவிற்கு வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களுக்கு எப்படி ஆதார் அட்டை வழங்கமுடியும், பொய் தகவல் அளித்து ஆதார் அட்டை வாங்க முடியுமா என்று பல கேள்விகளை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...