Tuesday, April 25, 2017

'பந்த்'துவக்கம்; தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

பதிவு செய்த நாள்25ஏப்
2017
06:11




சென்னை: தமிழகத்தில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இன்று நடத்தும், 'பந்த்' காரணமாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பந்த்:

தமிழகத்தில் இன்று(ஏப்.,25) முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், போலீசார், அதிகாலையிலேயே பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க, மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு:

சென்னையில், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை:

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கணிசமான முறையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது,. கடைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகி்ன்றன.

No comments:

Post a Comment

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats 03.06.2026 Written By : Barsha...