Friday, April 28, 2017

மோசடி புகார்: அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பதிவு: ஏப்ரல் 28, 2017 14:19

பண மோசடி புகாரில் அமைச்சர் காமராஜூக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.





புதுடெல்லி:

தமிழக அமைச்சரவையில் உணவு மந்திரியாக இருப்பவர் காமராஜ். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீடாமங்கலம் செட்டி சத்திரத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் சென்னையில் வீடு வாங்குவது தொடர்பாக ரூ.30 லட்சம் பணத்தை அமைச்சர் காமராஜிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் வீடு வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பணத்தையும் திரும்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக குமார் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் கோர்ட்டு உதவியை நாடினார்.



இதுதொடர்பாக அவர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனால் அமைச்சர் காமராஜ் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...