Friday, April 28, 2017

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது

பதிவு: ஏப்ரல் 28, 2017 13:42

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. இது குறித்த செய்தியை பார்க்கலாம்.





நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதனை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு சுவாமி பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் 1 மணிக்கு கோவில் யானை கோமதி பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.



தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

அன்று காலை 5.30 மணிக்கு கோரதம், விநாயகர், சுப்பிரமணியர் பவனியும், காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்டம், தனித்தனியாக நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் லட்சுமணன், துணை ஆணையர் பொன் சுவாமிநாதன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...