Thursday, April 27, 2017

அட்சய திரிதியைக்கு தங்கம் : முன்பதிவுக்கு குவியும் கூட்டம்
பதிவு செய்த நாள்27ஏப்
2017
00:15

அட்சய திரிதியை தினத்தில், தங்க ஆபரணங்கள் வாங்க முன்பதிவு செய்வதற்காக, நகை கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அட்சய திரிதியை, தீபாவளி போன்ற சுப தினங்களில், தங்கம் வாங்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இதனால், அன்றைய தினங்களில், தங்கம் விற்பனை, வழக்கத்தை விட, 20 - 30 சதவீதம் அதிகரிக்கும்.கடந்த, 2016ல், அட்சய திரிதியை மே மாதம் வந்தது. அப்போது, தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கமிஷன் கெடுபிடிகள், கடுமையாக இருந்தன. இருப்பினும், 1,500 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின.
இந்நிலையில், நாளை, அட்சய திரிதியை வருகிறது. அன்று, தங்கம் வாங்க, நகை கடைகளில், தற்போது மக்கள் பணம் செலுத்தி, முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், நகை கடைகளில், மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ''ஏப்., 28ல் துவங்கும் அட்சய திரிதியை, 29ல் முடிகிறது. ௨௦௧௬யை ஒப்பிடும் போது, தற்போது, தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால், அட்சய திரிதியைக்கு, தங்க நகைகள் விற்பனை அதிகமாக இருக்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...