Friday, April 28, 2017

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்

பதிவு செய்த நாள்
ஏப் 27,2017 23:00

சென்னை: உடல்நலக் குறைவால், நடிகர் வினுசக்கரவர்த்தி, நேற்று இறந்தார்.

மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்தவர் வினுசக்கரவர்த்தி,71. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர், நேற்று உடல் நலக்குறைவால் இறந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கரகர குரலுடன் ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற இவர், கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவை, வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். வில்லன், குணச்சித்திர வேடம் ஏற்றுள்ள இவர், அந்த படத்திற்கு கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு, கர்ணப்பூ என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும், சண்முகப்ரியா என்ற மகளும் உள்ளனர்.

நடிப்பு உலகின் 'சக்கரவர்த்தி' : கதாசிரியராக சினிமாவில் நுழைந்து நடிகர், இயக்குநராக விளங்கிய வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் நேற்று மறைந்தார். 1945, டிச.15ம் தேதி மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வினுசக்ரவர்த்தி பிறந்தார். ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லே பள்ளியிலும், சென்னையில் உள்ள கல்லுாரியிலும் அவர் படித்தார். கல்லுாரி நாள்களில் நாடகம் எழுதி நடித்துள்ளார். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், படகா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிகபட்சம் காமெடி, குணச்சித்திரம் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார். 2007ல் வெளியான 'முனி' திரைப்படம் இவரது 1000மாவது படமாக அமைந்தது. படிப்பை முடித்ததும் காவல்துறை பணியில் சேர்ந்தார். பின் தெற்கு ரயில்வேயில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

முதன்முதலில் கன்னட இயக்குநர் ஒருவரிடம் கதாசிரியராக பணியாற்றினார். இதில் 'பரசக்கே கண்ட தின்மா' என்ற படம் வெற்றி பெற்றது. இதை தமிழில் 'ரோசாப்பூ ரவிக்கைகாரி' என ரீமேக் செய்தனர். சிவக்குமார் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் இவர் தமிழில் அறிமுகமானார். தமிழில் குரு சிஷ்யன், நாட்டாமை, அருணாச்சலம், மாப்பிள்ளை கவுண்டர், சிவப்பு நிலா, நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத் தேடி, அமர்க்களம், பாண்டவர் பூமி, தென்காசி பட்டனம், ஜெமினி, சுந்தரா டிராவல்ஸ், கிரி, முனி, தேசிங்கு ராஜா,வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி, ராமராஜன், ரஜினி, கமல், விஜய், அஜித், அர்ஜூன், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இறுதியாக 2014ல் 'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் 900 படங்களும், மலையாளத்தில் 30 படங்களும், தெலுங்கில் 5 படங்களும், ஒரே ஒரு திரைப்படம் படகா மொழியிலும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியுள்ளார். பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளார்.

சில்க் ஸ்மிதா அறிமுகம் : 1979ல் இவர் கதை எழுதி வெளியான 'வண்டிசக்கரம்' என்ற படத்தில், மறைந்த நடிகை 'சில்க் ஸ்மிதா'வை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் சாராயக் கடையில் 'சிலுக்கு' என்ற கேரக்டரில் ஸ்மிதா நடித்திருப்பார். இதன்பின் சில்க் ஸ்மிதா என்ற அடைமொழியால் அறியப்பட்டார்.

விருதுகள் : மாநில அரசின் கலைமாமணி விருது, மலேசியா, சிங்கப்பூர், கனடா தமிழ் சங்கம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, காஞ்சி சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

'லக்கி' நடிகர் : ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வினுசக்கரவர்த்தி பேசும்போது, 'நான் ரஜினிக்கு லக்கியான நடிகர் என அறியப்படுகிறேன். ரஜினியும் இதனை ஒத்துக்கொள்வார். நான் அவருடன் நடித்த படங்கள் அனைத்தும் 'ஹிட்' அடித்துள்ளன' என்றார். ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு, குரு சிஷ்யன், மனிதன், சிவா, ராஜாதி ராஜா, அண்ணாமலை, அருணாச்சலம் என 25 'ஹிட்' படங்களில் நடித்துள்ளார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...