Monday, April 24, 2017

ரூ.2 லட்சம் கேட்டு முதியவர் கடத்தல் : ரூ.50 கொடுத்து விடுவித்த சுவாரசியம்

பதிவு செய்த நாள்23ஏப்
2017
22:32

வேலுார்: வேலுாரில், முதியவரை காரில் கடத்திய கும்பல், இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது. அவர் குடும்பத்தினரிடம் பணம் இல்லை என, தெரிந்ததால், 50 ரூபாயை கொடுத்து, முதியவரை விடுவித்தது.

நடைபயிற்சி : வேலுாரைச் சேர்ந்தவர், பிரபாகரன், 66; வாஸ்து பார்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, பிரபாகரன் நடைபயிற்சி சென்ற போது, காரில் வந்த மர்ம நபர்கள், அவரை கடத்தினர். காட்பாடி அடுத்த, வள்ளிமலை மலையடிவாரத்தில், காரை கும்பல் நிறுத்தியது. பிரபாகரன் கை, கால்களை கட்டி போட்டு, இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது. தான் அந்த அளவுக்கு, 'ஒர்த்' இல்லை என, பிரபாகரன் கூறியுள்ளார். பிரபாகரன் குடும்பத்தினரை, மொபைல் போனில் தொடர்பு கொண்ட கும்பல், இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால், பிரபாகரனை விட்டு விடுவதாக கூறினர். அவர்களும், 'எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை; சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறோம்' என்றனர்.

தப்பியோடியது : பிரபாகரன் குடும்பத்தினரிடம் எதுவும் தேறாது என்பதை அறிந்த கடத்தல் கும்பல், காரில் இருந்து அவரை இறக்கிவிட்டது. 'இங்கிருந்து எப்படி ஊருக்கு போவது' என, பிரபாகரன் கேட்டதற்கு, 50 ரூபாயை கொடுத்து, பஸ், டிபன் செலவுக்கு வைத்து கொள்ளும்படி, கூறி விட்டு தப்பியோடியது. சம்பவம் குறித்து, சத்துவாச்சாரி போலீசில், பிரபாகரன் நேற்று புகார் செய்தார். சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகள், பிரபாகரனை கடத்தி சென்று மிரட்டியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...