Saturday, April 8, 2017

Health of ‘patients’ stumps MCI team
Tanu Kulkarni

 
Bengaluru April 08, 2017 00:00 IST

Members of the Medical Council of India (MCI), who were on an inspection of some of the private medical colleges in Karnataka, were surprised when they entered the wards of their teaching hospitals. Not only were the number of patients much lower than what the records showed, but many looked quite in the pink of health to be in-patients.

The executive committee of the MCI, during a recent meeting, recommended that three private colleges — in Tumakuru, Kolar Gold Fields, and Devanahalli in Bengaluru — be debarred from admitting students for two academic years (2017-2018 and 2018-2019) as they were not able to fulfil the requirements mandated to run a college, which includes patient intake. All these colleges had shortage of faculty.

In addition, one more college has been recommended for similar action for not having the necessary infrastructure and faculty.

Houses of Health Minister, Sarathkumar also searched

The Income Tax department seized more than Rs. 5.5 crore from two persons, considered close to Tamil Nadu Health Minister C. Vijayabaskar, during a raid on Friday across the State.
The I-T sleuths also searched the houses and offices belonging to Mr. Vijayabaskar, actor-turned-politician and Samuthuva Makkal Katchi leader Sarathkumar and S. Geethalakshmi, Dr. MGR Medical University Vice- Chancellor.

Many officials deployed
The raids began early morning at more than 30 places and, by 11.30 a.m., the taxmen found some evidence which pointed to more locations.


“The raids were then extended to more than 50 locations,” said an I-T official. More than 100 officials were deployed for this operation. A search at the MLA’s Hostel and a city lodge opened a Pandora’s box.

“We found several incriminating documents at both these places,” an official said.

At the Minister’s premises, some papers were recovered. The papers had signatures of people (confidants) who received money. Simultaneously, searches were conducted at the homes of relatives and associates of Mr. Vijaybaskar. “We recovered Rs. 3.5 crore from Nainar Mohammed (a confidant of the Minister) and Kalpesh (Rs. 1.1 crore). Another crore was seized from a confidante of the Minister,” the taxmen said.

The Minister’s accountant Srinivasan had some papers in his possession, which showed that Rs. 89 crore was distributed at R.K Nagar.
ரயில் கால அட்டவணை செப்., 30 வரை நீட்டிப்பு

பதிவு செய்த நாள் 08 ஏப்
2017
01:30


சென்னை: தெற்கு ரயில்வே, ரயில் கால அட்டவணை, செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தெற்கு ரயில்வேயால், ஒவ்வொரு ஆண்டும், ஜூலை, 1ல், புதிய ரயில் கால அட்டவணை வெளியிடப்படும். கடந்த ஆண்டில், இந்த அட்டவணை, அக்., 1ல் வெளியானது. இந்த ஆண்டாவது, ரயில் கால அட்டவணை, ஜூலை, 1ல் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 'புதிய ரயில் கால அட்டவணை, ஜூலை, 1ல் வெளியாகாது. எனவே, ஏற்கனவே உள்ள ரயில் கால அட்டவணை, செப்., 30 வரை நீடிக்கப்படுகிறது' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 பாதி 'டேங்க்' பெட்ரோல் போதும் : எண்ணெய் நிறுவனங்கள் பிரசாரம்

இரு சக்கர வாகனங்களில், தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க, எண்ணெய் நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. கார், மோட்டார் பைக் உள்ளிட்ட வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவது, சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடித்து, விபத்தும், அதனால் உயிரிழப்பும் நேரிடுகிறது.இந்தியன் ஆயில் நிறுவனத்தினர், பெட்ரோல் பங்க்குகளில், விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர். அதில், 'வானிலையில் நிலவும், அதிக வெப்பத்தால், வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடிக்கக் கூடிய அபாயம் உள்ளது. பெட்ரோல் டேங்குகளை முழுவதுமாக நிரப்பும் போது, அதனுள், காற்று சுழற்சிக்கு இடமில்லாமல், பெட்ரோல் சூடாகி வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, பெட்ரோல் டேங்கில் பாதியளவு, பெட்ரோல் நிரப்பினால் போதும்' என, கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

 குற்ற வழக்கில் பெயர் சேர்ப்பு - மாற்றத்துடன் பாஸ்போர்ட் வழங்கலாமா : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பாஸ்போர்ட்டில் சில மாற்றம் செய்து வழங்குவது தொடர்பான வழக்கில், 'குற்றவழக்கு (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக மட்டும், குற்றவியல் நடவடிக்கை நிலுவையில் உள்ளது எனக்கூற முடியாது. மனுவை பாஸ்போர்ட் அதிகாரி சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி அப்துல் ரசீக் தாக்கல் செய்த மனு: எனக்கு 2012 ல் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. பஹ்ரைனில் வேலை செய்தேன். பின் திருமணம் நடந்தது. நான் திருமணம் ஆனவர் என்ற தகுதி நிலையை பாஸ்போர்ட்டில் பதிவு செய்து வழங்கக்கோரி, மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் விண்ணப்பித்தேன். குடும்ப வன்முறைச் சட்டத்தில் மனைவி புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மண்டல பாஸ்போர்ட் அதிகாரி,'உங்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதா?,' என விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பினார். இல்லை என பதில் அளித்தேன். எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அப்துல் ரசீக் மனு செய்திருந்தார்.

நீதிபதி வி.பார்த்திபன் உத்தரவு: குற்றவழக்கு (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக மட்டும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை நிலுவையில் உள்ளது எனக்கூற முடியாது. போலீசாரின் விசாரணை முடிந்து, கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாதவரை, குற்றவியல் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அது மனுதாரர் விவகாரத்தில் பொருந்தும்.சட்டத்திற்குட்பட்டு, தகுதி அடிப்படையில் மனுவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை நிறைவு

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 22 மணி நேரமாக நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றது. அரசியல் உள்நோக்கம் காரணமாகவே வருமானவரி சோதனை நடைபெற்றது என சோதனைக்கு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சோதனை நிறைவு:

அமைச்சர் விஜயபாஸ்கரின், சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லம் உட்பட, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று(ஏப்.,7) காலை, 6:00 மணியளவில், அதிரடி சோதனையை துவக்கினர். இந்நிலையில் நேற்று காலை துவங்கி 22 மணி நேரமாக நடைபெற்ற சோதனை, இன்று(ஏப்.,8) அதிகாலை 4 மணி அளவில் நிறைவு பெற்றது.


அமைச்சர் பேட்டி:

சோதனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது: எனது வீடு மற்றும் எனது சகோதரர் வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. எனது சொந்த ஊர் ளற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையிலும் எதுவும் சிக்கவில்லை. என் வீட்டிலும், சரத்குமார் வீட்டிலும் நடந்த வருமானவரி சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது. வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்தேன். ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு நடந்தே சோதனை இது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 வெளியே வேலை செய்ய திகார் கைதிகளுக்கு வாய்ப்பு
 
புதுடில்லி: திகார் சிறையில் உள்ள கைதிகள் முதல் முறையாக, வளாகத்திற்கு வெளியில் வேலைக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர். கொலை மற்றும் இதர குற்ற சம்பவங்களில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள், டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறை வளாகத்தில் இருந்து வெளியில் சென்று டில்லியில் எங்கு வேண்டுமானாலும் வேலைக்கு செல்ல அனுமதி உண்டு. காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை, இவர்கள் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவர். ஆனால், இதற்கு சில தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தங்களுடைய தண்டனை காலத்தில், சிறை எண், 2ல், 12 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

அவர்களின் நன்னடத்தையை பொறுத்து, பாதி திறந்தவெளி சிறைக்கு மாற்றப்படுவர்.
இவர்களில் சிறந்த கைதிகளை தேர்ந்தெடுத்து, சிறை வளாகத்திற்கு வெளியில் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். தற்போது, பாதி திறந்தவெளி சிறையில், 78 கைதிகள் உள்ளனர். அவர்களில், சிறை வளாகத்திற்கு வெளியில் சென்று வேலை செய்வதற்காக, ஆறு பேரை திகார் சிறை கமிட்டி தேர்ந்தெடுத்துள்ளது. இவர்கள், வெளியில் சென்று வேலை தேட வேண்டியதில்லை; அவர்களுக்கு சிறை நிர்வாகமே வேலை வாய்ப்பை பெற்றுத் தரும்.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...