Saturday, June 3, 2017

Noisy scenes in Puducherry Assembly over medical college admission

By PTI  |   Published: 01st June 2017 04:05 PM  |  

PUDUCHERRY: Members of the Opposition and ruling Congress engaged in a war of words in the Puducherry Assembly today on the issue of admission of students for PG courses in private medical colleges under government quota, leading to a walk out by the opposition over the matter.
Members of the opposition AIADMK and AINRC alleged that the students seeking admissions in medical colleges faced hardships owing to lack of proper approach in deciding the list of candidates for the medical courses.
Ruling Congress MLAs and a section of Ministers took strong exception to the allegations of the opposition while Speaker V Vaithilingam ordered switching off of all the microphones of the opposition.
Earlier, the AIADMK (Amma) legislature party leader A Anbalagan sought clarification from the state government on the number of students selected for admission to various PG courses in the colleges through counselling held on different dates in the CENTAC, a body authorised for selection of the candidates.
Anbalagan contended that the territorial government had committed a blunder of conducting the counselling without fixing the fees first.
He also alleged that there was an attempt to divert the unfilled seats to management quota of the colleges.
Former Chief Minister and Leader of the opposition N Rangasamy also sought a detailed probe into the alleged irregularities in the selection process.
Refuting the allegations, Chief Minister Narayanasamy said he had already apprised the Union Health Minister of the situation and asked the opposition to speak with sufficient evidence to prove any irregularity in the admission process.
Ads by ZINC
Narayanasamy told the House that he would present a detailed report tomorrow as to how many students were selected along with other details relating to admissions.
He also said the state government had issued show cause notices to the managements of the some colleges here for declining to admit students selected through CENTAC for PG courses on the ground that the fee fixed by the Fee committee was not acceptable to them.

Friday, June 2, 2017

இந்தியாவில் ரூ.10,000 தள்ளுபடி விலையில் LG ஜி6 ஸ்மார்ட்போன்


எல்ஜி நிறுவனம் அதன் புதிய ஜி6 என்ற ஸ்மார்ட்போனின் விலையை இந்தியாவில் குறைத்துள்ளது. நாட்டில் 20வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் ரூ.10,000 ஆக குறைந்துள்ளது.
எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்திய போது ரூ.51,990 ஆக இருந்த விலை தற்போது ரூ.41,990 ஆக குறைந்துள்ளது.

ஒற்றை சிம் ஆதரவு கொண்ட எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட் மூலம் இயங்குகிறது. எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனில் 564ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1440x2880 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.70 இன்ச் QHD+ முழுகாட்சி (ஃபுல்விஷன்) டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி LPDDR4 ரேம் உடன் இணைந்து குவால்காம் ஸ்நாப்டிராகன் 821 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 2000ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி மற்றும் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனில் ஹைபிரிட் ஆட்டோஃபோகஸ் கொண்ட 125 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ், 71 டிகிரி லென்ஸ், f/2.4 அபெர்ச்சர், OIS 2.0, எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.4 அபெர்ச்சர் உடன் வைட் ஆங்கிள் லென்ஸ், 100 டிகிரி லென்ஸ், ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 3300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.2, NFC, USB Type-C 2.0, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 148.9x71.9x7.90mm நடவடிக்கைகள் மற்றும் 163 கிராம் எடையுடையது. இது ஐஸ் பிளாட்டினம், ஆஸ்ட்ரோ பிளாக், மிஸ்டிக் வைட் ஆகிய வண்ண வகைகளில் வருகிறது.

Posted by kalviseithi.net at 4:16 AM

தரம் குறைந்த கல்லூரிகள் பட்டியல் : பல்கலை மானிய குழு வெளியிடுகிறது

'உயர் கல்வித் தரத்தை மேம்படுத்த, தரம் குறைந்த கல்லுாரிகளின் பட்டியல் வெளியிடப்படும்' என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
மூன்று பிரிவுகல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய திட்டங்களை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, கல்லுாரிகளை, அவற்றின் கல்வித் தரம் அடிப்படையில், மூன்று பிரிவாக பிரிக்க, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

தேசிய தர மதிப்பீட்டுக் குழுவான, 'நாக்' மூலம், 3.5 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, தேசிய தரவரிசை பட்டியலில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, முதல், 50 இடங்களுக்குள் வந்த கல்லுாரிகள், முதல் பிரிவில் சேர்க்கப்படும். நாக் மதிப்பீட்டில், 3.01 முதல், 3.49 வரை மதிப்பெண் பெற்று, தேசிய தரவரிசை பட்டியலில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள், 51 முதல், 100 இடங்களில் வந்த கல்லுாரிகள், இரண்டாம் பிரிவில் இடம்பெறும். இவற்றில் வராத கல்லுாரிகள், மூன்றாம் பிரிவில் இடம்பெறும்.இந்த பிரிவுகளின்படி, கல்லுாரிகளின் தரம்ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, அவற்றுக்கான தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்படும்.நாக் மதிப்பீட்டையும், தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பெறுவதையும், தொடர்ந்து கடைபிடிக்காவிட்டால், அந்த கல்லுாரிகள், பின்னுக்கு தள்ளப்படும்.

செயல் திறன் ஆய்வு : இதற்காக, ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மற்றும் டிசம்பரில், கல்லுாரிகளின் செயல் திறன் ஆய்வு செய்யப்படும். அதே போல, இந்திய பல்கலைகளுடன் இணைய உள்ள, வெளிநாட்டு பல்கலைகளும், கல்லுாரிகளும், சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என, விதிகள் கொண்டு வர உள்ளதாக, யு.ஜி.சி., அறிவித்துஉள்ளது.

இது குறித்த வரைவு விதிகள், www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கல்வியாளர்கள், பொது மக்கள், தங்கள் கருத்துக்களை, ஜூன், 15க்குள், feedback2ugc@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பலாம் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

Posted by kalviseithi.net

முதுநிலை ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில்... தில்லுமுல்லு!

பள்ளி கல்வித் துறையின், ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில், வசூலுக்காக, 1900 இடங்கள் மறைக்கப்பட்டு, தில்லுமுல்லு நடந்துள்ளது. இதனால், கொதித்தெழுந்த ஆசிரியர் சங்கங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளன.

பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டைய னும், செயலராக உதயசந்திரனும் பொறுப் பேற்ற பின், பொதுத் தேர்வில் ரேங்கிங் முறை ஒழிப்பு, பிளஸ் 1க்கு கட்டாய பொதுத் தேர்வு உட்பட, பல மாற்றங்கள் அமலாகின. இதனால், துறையில் இனி முறைகேடுகள் நடக்காது என, ஆசிரியர்களும், பெற்றோரும் நம்பினர்.

மாற்றம்

இந்நிலையில், வழக்கமாக,ஜூலை, ஆகஸ்டில் நடக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங், மே மாதத்திற்கு மாற்றப்பட்டது. இதில், 'காலி இடங்கள் மறைக்கப்படாமல், பேரத்திற்கு வழியின்றி, வெளிப்படையாக கவுன்சிலிங் நடக்கும்' என, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், மே,24ல் நடந்த, முதுநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில், 1,900 இடங்களை, சத்தமின்றி மறைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, உத்தரவு பெற்றுள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது:

தமிழகம் முழுவதும், 100 உயர்நிலைப் பள்ளி கள் மேல்நிலைப் பள்ளிகளாகவும்; 150 நடு நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக வும், தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இவற்றில், மேல்நிலைப் பள்ளிகளில், தலா, ஒன்பது முது நிலை ஆசிரியர்களும், ஒரு தலைமை ஆசிரியர் பணியும்; உயர்நிலைப் பள்ளிகளில், தலா, ஐந்து முதுநிலை ஆசிரியர் களும், ஒரு தலைமை ஆசிரியர் பணியும் ஒதுக்கப் பட்டுள்ளது.

சந்தேகம்

இந்த, 1,900 இடங்களை, கவுன்சிலிங்கில் இடம் பெறச் செய்வோம் என, அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால், அந்த இடங்களை மறைத்து, கவுன்சிலிங்கை முடித்து விட்டனர்.

வெளிப்படைத் தன்மை இல்லாமல், மறைக் கப்பட்ட இடங்களை, வேறு விதமாக நிரப்ப முயற்சி நடக்கிறதோ என, ஆசிரியர்கள் சந்தே கம் அடைந்து உள்ளனர். அதனால், நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தோம். நீதி மன்ற உத்தரவு படி, மீண்டும் கவுன்சிலிங் நடத்த கோரிக்கை விடுத்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நீதிமன்ற உத்தரவு என்ன?

கே.பி.ஓ.சுரேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவு:

இரு தரப்பினர் ஒப்புதலுடன், இந்த வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர், மனு தாரரின் மனுவை பரிசீலித்து, சட்டப்படி முடிவு எடுக்க வேண்டும். இந்த உத்தரவு கிடைத்த, இரண்டு வாரத்திற்குள் மனுதாரரை அழைத்து, அவரது கோரிக்கையை கேட்டு, உரிய முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Posted by kalviseithi.net
Chennai Silks delayed calling firefighters?

By Ram M Sundaram | Express News Service | Published: 03rd June 2017 06:44 AM |




Fire tenders at work near T Nagar’s Chennai Silks building on Thursday, a day after a fire broke out in it | D SAMPATHKUMAR

CHENNAI: Why was the blaze in T Nagar’s Chennai Silks not quickly contained? While the shopping complex sought to blame the TN Fire and Rescue Services (TNFRS) for reacting late, fire officials suspect they were alerted two long hours after the fire broke out in the basement of the building.

“The ground floor caved in around 7.30 am. Normally, it takes about six hours for a concrete floor to cave in during a fire. So, the workers perhaps called us only after they couldn’t control the blaze themselves,” M Shahul Hameed, Joint Director of TNFRS told Express. While the first rescue call was made around 4 am, he suggested the fire could have started at least two hours before the alert.

Even after the firemen reached the spot, the private guards employed by Chennai Silks allegedly refused to let them access the basement through the ground floor, which is the only access, as it was stacked with gold and diamond jewellery.

Seven firemen with apparatus to support breathing for 30 minutes, tried to enter the basement from where the fire spread to other floors. “It took several vital minutes to convince them (private security) before they could let us in,” said one among the seven.

The revelations came on a day when the process to pull down the burnt structure began

நாங்க பாஸ்; உங்க உத்தரவு பாஸ் ஆகலை' : பிரதமர் மோடிக்கு புதுகை மாணவி கடிதம்
பதிவு செய்த நாள்03ஜூன்  2017 00:10




புதுக்கோட்டை: பிரதமர் மோடிக்கு, புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஆண்டு, ஒன்பதாம் வகுப்பு படித்த, மாணவி சரஸ்வதி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

வகுப்பறைகள் : அதில் அவர் எழுதியுள்ளதாவது:எங்கள் பள்ளியில், 1,800 மாணவியர் படிக்கிறோம்; 40 ஆசிரியர்கள் உள்ளனர். ஒரே பெஞ்சில், எட்டு மாணவியர் அமர வேண்டி உள்ளது. போதிய வகுப்பறைகள் இல்லை. மூன்று கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடம், சைக்கிள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் ஏதுமில்லை. இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் எழுதி இருந்தார்.
இது குறித்து, நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் அலுவலகத்தில் இருந்து, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் நகல், மாணவிக்கும் அனுப்பப்பட்டது.
இதன்படி, கல்வி, வருவாய் துறையினர் பள்ளியை ஆய்வு செய்து, அறிக்கை அனுப்பினர்.
இதற்கிடை யில், பள்ளிக்கு அருகில் செயல்படாமல் கிடக்கும் பொதுப்பணி துறை அலுவலக கட்டடத்தை, பள்ளிக்கு ஒதுக்கி தருமாறு, பெற்றோர், பொதுமக்கள் சார்பில், உண்ணாவிரதம் நடத்தினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, மாணவி சரஸ்வதி மீண்டும், கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'நாங்கள் ஒன்பதாம் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பிற்கு பாஸாகி விட்டோம்; ஆனால், உங்களது உத்தரவு
எதுவும் பாஸ் ஆகவில்லை' என குறிப்பிட்டு உள்ளார்.

போராட்டம் : இதற்கு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 'பொதுப்பணித் துறை கட்டடத்தை பள்ளிக்கு தராவிட்டால், ஜூன் 7 பள்ளி திறக்கும் நாளன்று, பள்ளிக்கு பூட்டு போட்டு மறியல் போராட்டம் நடத்தப்படும்' என, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.2 லட்சத்துக்கு மேல்  ரொக்கமாக பெற்றால் அபராதம்
புதுடில்லி:'எந்த ஒரு பரிவர்த்தனையிலும், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வாங்கினால், அதே அளவு தொகையை, அபராதமாக செலுத்த நேரிடும்' என, வருமான வரித் துறை எச்சரித்து உள்ளது.






ஊக்குவிப்பு

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, ரொக்கப் பரிவர்த்தனையை குறைக்கவும், மின்னணு பரிவர்த்தனையை அதிகரிக்கவும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை நடந்தால், அந்த பணத்தை வாங்குபவர்கள், அதே அளவு தொகையை அபராதமாக செலுத்தும்வகையில், நிதி மசோதா வில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இது, இந்த ஆண்டு, ஏப்ரல், 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு பத்திரிகைகளில், வருமான வரித் துறை நேற்று வெளியிட்டுள்ள விளம்பரங்களில் கூறியுள்ளதாவது:
கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், ரொக்கப் பயன் பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்யக் கூடாது.

ஒரு நாளில் அல்லது ஒரு நபர் அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை நடந்தால், பணத்தை வாங்குபவர்கள், அதே அளவு தொகையை

அபராதமாக செலுத்த நேரிடும். இது போன்ற பரிவர்த்தனைகள் நடப்பது தெரியவந்தால், blackmoneyinfo@incometax.gov.in என்ற இ - மெயில் முகவரிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தருவோர் குறித்த விபரங்கள் ரகசிய மாக வைத்திருக்கப்படும். இவ்வாறு அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.