Sunday, July 9, 2017

திருடர்களிடமிருந்து காப்பாற்றிய நாகப்பாம்பு...நன்றிக்காக நினைவு மண்டபம் எழுப்பிய தம்பதியர்

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
00:07

காரியாபட்டி :பண்டைய காலத்தில் அதிசயம், ஆச்சரியமூட்டும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.பெரும்பாலான வரலாறுகள் எப்படியாவது தெரிந்துவிடும். சில வரலாறுகள் வெளியில் வராமல் காணாமல் போய்விடும். ஆனால் அப்படிப்பட்ட வரலாறும் எப்படியாவது சில நேரங்களில் வெளிச்சத்திற்கு வரும் போது, நமக்கு ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில், காரியாபட்டி மாங்குளத்தில் ஒரு நினைவு மண்டபம் பாழடைந்து, மாடு கட்டும் இடமாக கிடந்தது. யாரால், எதற்காக நினைவு மண்டபம் கட்டப்பட்டது என விசாரித்த போது, பலருக்கு அதுபற்றிய விபரங்கள் தெரியவில்லை.

அங்குள்ள பெரியவரிடம் கேட்டபோது, மண்டபம் கட்டியதற்கான கருவை மட்டும் தெரிவித்தார். முழுவிபரம் தெரியாவிட்டாலும், அவர் சொன்ன வரலாறு மிகவும் அருமையானதாக இருந்தது. அது என்னவென்றால், ராணிமங்கமாள் காலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் பாதையிருந்தது. அதில் ஒரு பாதை மாங்குளம் வழியாக திருமங்கலம் வரை செல்கிறது.

தலைதெறிக்க ஓட்டம்
பாதசாரிகள் தங்கி ஓய்வெடுக்க ஆங்காங்கே மண்டபம், பசியாற அன்னதான சத்திரம், தாகம் தீர்க்க கிணறு போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வாணிபத்திற்கோ, உறவினர்களின் வீடுகளுக்கோ செல்ல ஒரு வாரம், பத்து நாட்கள் என நடந்து சென்று வருவது வழக்கம். அப்படி வாணிபத்திற்காக மதுரைக்கு வந்த செட்டியார் தம்பதியினர், மாங்குளத்தை வந்தடைந்த போது இரவாகிவிட்டது. இதற்கு மேல் நடந்து சென்றால் திருடர்களிடம் சிக்கிக் கொள்வோம் என யோசித்து, அங்கிருந்த அன்னதான சத்திரத்தில் உணவு சாப்பிட்டு அங்கேயே ஓய்வெடுக்க முடிவு செய்தனர். அவ்வாறு சாப்பிட்டு ஓய்வெடுத்த போது, நடு இரவில் திருடர்கள் இவர்களை சுழ்ந்துள்ளனர். அப்போது, ஒரு நாகப் பாம்பு துாங்கிக் கொண்டிருந்த தம்பதியரின் அருகில் தலையை துாக்கி நின்றுகொண்டிருந்ததை பார்த்த திருடர்கள், தலைதெறிக்க ஓடினர். விடியும் வரை எங்கும் நகராமல் பாம்பு அங்கேயே நின்றிருந்தது.
இன்றளவும் பேசுகிறது


காலையில் எழுந்து பார்த்த போது, பாம்பு மெதுவாக நகர்ந்து சென்று மறைந்தது. இந்த அதிர்விலிருந்து மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த தம்பதியினர் அங்கேயே தங்கினர். அப்போது, ஒரு நாள், இரவில் நடந்த சம்பவத்தை திருடன் ஒருவன் கூறியதை கண்டு ஆச்சரியமடைந்தனர் தம்பதியர். தங்களுக்கு அரணாக இருந்த நாகப் பாம்புக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக காலமெல்லாம் இவற்றை நினைவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த இடத்தில் நினைவு மண்டபம் எழுப்பி வழிபட்டு வந்துள்ளனர். தனது வருமானத்தில் ஒருபகுதியை அங்கிருக்கும் அன்னதானத்திற்கு வழங்கினர்.

இன்று சிதலமடைந்து, மாடுகள் கட்டும் இடமாக இருந்தாலும், அவர்களது நினைவை இன்றளவும் பேச வைத்திருக்கிறது. ஒரு துாணில் அந்த தம்பதியரின் சிலையும் வடிக்கப்பட்டு உள்ளது. ஊருக்கு மேற்கு பக்கத்தில் உள்ள இந்த நினைவு மண்டபம் இன்றும் நன்றிக்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது.
காது கேளாத ஊழியருக்கும் ரூ.1,000 பயணப்படி

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
19:32

காது கேளாத அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோரில், பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோருக்கு, 1989ல் இருந்து பயணப்படியாக, 50 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. 2010ல், பயணப்படி, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. .இந்த படி, தற்போது, காது கேளாத ஊழியர்களுக்கும் வழங்க, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், 'காது கேளாத ஊழியர்கள், அரசு மருத்துவமனையில் சான்று பெற்று வழங்கினால், படியை அனுமதிக்கலாம். பணிபுரியாத காலங்கள், மருத்துவ விடுப்பின் போது பயணப்படி வழங்கக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -
காரைக்காலில் மாங்கனி திருவிழா மாம்பழங்களை அள்ளிய பக்தர்கள்


காரைக்கால், காரைக்கால் அம்மையார் கோவிலில் நடந்த, மாங்கனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலில், 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான மாங்கனி திருவிழா,6ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.

நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும், இரவு திருமண முடிந்த காரைக்கால் அம்மையார் பரமதத்தர் முத்து பல்லக்கில் வீதி உலா நடந்தது.

நேற்று அதிகாலை பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. நான்கு திசையிலும் வேதபாராயணங்கள், மேள தாளம் முழங்க, காலை, 6:30 மணிக்கு பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா வந்தார்.

அப்போது, சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்தனர். பின், வீட்டு மாடியில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, மாங்கனிகளை பிடிக்க போட்டாபோட்டியில் ஈடுபட்டனர்.
ஆதார் - பான் இணைப்பால் போலிகள் 'காலி' ஒரு நபர், பல முகம் இனி இருக்காது!

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
03:35



திருப்பூர் : 'பான்' கார்டுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பல நன்மைகள் இருப்பதாகவும், கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்போர் மாட்டிக் கொள்வர் எனவும் ஆடிட்டர்கள், தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வங்கி கணக்கில், 'பான்' எண், ஆதார் இணைக்கப்பட்டுள்ளன; ஜி.எஸ்.டி.,யிலும், இவ்விரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. அதுபோல், பான் கார்டுடன் ஆதார் இணைப்பதும், கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுக்கோப்பான முறைகளால், வரிஏய்ப்பு செய்வோரைகண்டறிவது, அரசுக்கு எளிதாகி விடுகிறது.

திருப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர், தனஞ்செயன் கூறியதாவது:பணம் மறுசீரமைப்பின் போது, பான் கார்டு வழங்கினால், சிக்கலாகும் என்பதற்காக, பலரும், ஆதார் எண் வழங்கி, பணம் செலுத்தியுள்ளனர். பான் கார்டு, ஆதார் இணைப்பால், கறுப்பு பணம் செலுத்தியோர் சிக்கிக்கொள்வர்.

வரி ஏய்ப்பு நோக்கத்துக்காக, போலி பான் கார்டுகள் பெறப்படுகின்றன; ஆதார், பான் இணைப்பால், இதுபோன்ற முறைகேடுகளும் தடுக்கப்படும். நேர்மையானவர்களுக்கு, இதனால் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. அதேநேரம், முறைகேடுகளில் ஈடுபட நினைப்போர், பயந்து தான் ஆகவேண்டும். எதிர்காலத்தில், கறுப்புப் பணம் உருவாகாமல் இருக்கவும், இந்த கட்டமைப்புகள் உதவிகரமாக அமையும்.இவ்வாறு ஆடிட்டர் தனஞ்செயன் கூறினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜாசண்முகம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரே நபர், வெவ்வேறு பெயர், முகவரிகளில் பான் கார்டு பெறுகின்றனர். ஆதார்,- பான் இணைப்பால், ஒரு நபர்; பல முகம் என்கிற நிலை ஒழிந்துவிடும். வருமான வரி, வர்த்தகம் சார்ந்த வரி ஏய்ப்புகள் தடுக்கப்படும்.

சில தொழில் துறைகளில், பண பரிவர்த்தனைகள் மறைமுகத் தன்மை கொண்டுள்ளன; அவையெல்லாம் இனி, வெளிப்படை தன்மையுடன் தான் நடந்தாக வேண்டும். சீர்திருத்த நடவடிக்கைகளால், நீண்ட கால அடிப்படையில், பல நன்மைகள் கிடைக்கும்.

அரசுக்கு வரி வருவாய் அதிகரித்து, மக்களுக்கு பயனளிக்கும் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை உருவாக்க, வழி பிறக்கும். சிலர், பான் கார்டு, ஆதார் இணைப்பை எதிர்க்கின்றனர்; இதற்கு அவசியமே இல்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. தவறு செய்வோர் தான் பயப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.
- நமது நிருபர் -

Saturday, July 8, 2017

ரூ.120 டிக்கெட் கட்டணம் 153 ரூபாயாக உயர்வு; தியேட்டர்களில் புதிய கட்டண விவரம்



சினிமா டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்து உள்ளது.

ஜூலை 07, 2017, 03:19 AM சென்னை,

100 ரூபாய்க்கு குறைவான கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் 100 ரூபாய்க்கு அதிகமான கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்த வரி விதிப்பு முறை அமுலுக்கு வந்துவிட்டது.

ஆனாலும் உள்ளாட்சி கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி வரி என்று இரட்டை வரிகளை செலுத்த முடியாது என்று தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் 3-ந்தேதியில் இருந்து தியேட்டர்களை மூடி போராட்டத்தில் குதித்ததாலும் புதிய சினிமா டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட இருந்த கேளிக்கை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், இன்று முதல் பழைய டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியை மட்டும் சேர்த்து புதிய டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஏற்கனவே ரூ.120, ரூ.100, ரூ.10 கட்டணத்தில் டிக்கெட் விலைகள் இருந்தன. இன்று முதல் ரூ.120 டிக்கெட் கட்டணம் 153 ரூபாய் 60 காசு என்றும் ரூ.100 டிக்கெட் கட்டணம் ரூ.128 என்றும் ரூ.10 டிக்கெட் கட்டணம் 11 ரூபாய் 80 காசு என்றும் உயர்த்தப்பட்டு உள்ளது.

சாதாரண குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ரூ.50 டிக்கெட் கட்டணம் ரூ.59 என்றும் ரூ.10 டிக்கெட் கட்டணம் ரூ.11.80 என்றும் உயர்த்தப்பட்டு உள்ளது.

குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ரூ.30 டிக்கெட் கட்டணம் 35 ரூபாய் 40 காசு என்றும் ரூ.5 டிக்கெட் கட்டணம் 5 ரூபாய் 90 காசு என்றும் மாற்றி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Govt doctors to face dismissal if they prescribe drugs from private pharmacies

By Express News Service  |   Published: 07th July 2017 11:50 PM  |  


Image used for representational purpose.

BENGALURU: Government hospital doctors will get their salary this month only if they sign a declaration stating that they won't prescribe medicines from private pharmacies is submitted. A Health Department circular to this effect was issued on Thursday.

“If this declaration is violated, the department is contemplating dismissal of doctors,” said Principal Health Secretary Shalini Rajneesh.

“If drugs aren't available in government pharmacies, it can be procured from Drug Logistics Society through an online indent. It can also be directly obtained from Jan Aushadi stores where generic drugs are available. If drug logistics fails to supply any drug indented by doctors the hospital can use Arogya Raksha Samiti funds to procure the drug locally,” she said.

She stressed that only 80 per cent funds have been utilised by hospitals in the past year and that they should be used to procure drugs.

K S Manjunath, medical superintendent, Bowring and Lady Curzon Hospital said, “Except in rare cases where we require drugs for ICU, almost everything is available in the hospital. Doctors have to make it a habit to prescribe brands available in the hospital that are procured by the government through tenders. Also, what brand is best for the patient is a very subjective thing.”

C N Manjunath, director, Jayadeva Institute of Cardiovascular Sciences, said, “Though this circular isn't applicable to super specialty hospitals like ours, I think this is an impulsive decision. Supply from Drug Logistics Society is erratic. We need to look at bioavailability, potency, efficacy and impurity content in every drug. In India, there is no continuous quality assessment of drugs. If one batch is of good quality, another is not. Also, it should be at the patient’s discretion if he/she wants to be treated with generic drugs. Personally, I wouldn't go for generic drugs.”

Manjunath said that local purchases may take time and patients shouldn't be kept waiting for the want of drugs.

மாத்திரை மாற்றி கொடுத்ததால் ஒருவர் உயிரிழப்பு

By DIN  |   Published on : 08th July 2017 03:35 AM  |   
சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு மருந்துக் கடையில் ரத்த அழுத்தத்துக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரைக்குப் பதிலாக வேறு மாத்திரை கொடுத்ததால் ராமன் (59) என்பவர் உயிரிழந்தார்.
திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் குப்பத்தைச் சேர்ந்தவர் ராமன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த இவர், உயர் ரத்த அழுத்த நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 20 - ஆம் தேதி ராமனுக்கு மருத்துவர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரையை எழுதிக் கொடுத்துள்ளார். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தேரடி பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் மருந்து சீட்டைக் கொடுத்து ராமன் மருந்து வாங்கியுள்ளார். ஆனால், மருந்துக் கடைக்காரர் மாத்திரையை மாற்றி, புற்றுநோய்க்கான மாத்திரையை கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதை அறியாத ராமன் 6 நாட்களாக மாத்திரையை உட்கொண்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
தந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த ராமனின் மகன் சக்திவேல், மாத்திரை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தியதில் தவறான மாத்திரையால் தான் ராமன் உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேல் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் மருந்து கடை உரிமையாளர் பலவேசம், ஊழியர் சுரேஷ் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

NEWS TODAY 20.08.2026