Monday, September 4, 2017


ஒரே இளைஞருக்கு 2 பெண்களுடன் திருமணம் நிறுத்தப்பட்டது: விருதுநகர் அருகே பரபரப்பு - சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் நிர்பந்தம்

Published : 02 Sep 2017 11:51 IST

விருதுநகர்



ராமமூர்த்திக்கு ஒரு பெண்ணை மட்டும் திருணம் செய்து வைப்பதாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்திடம் விளக்கக் கடிதம் அளித்த மணமகன், மணமகள் குடும்பத்தார்.


ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.




ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.

விருதுநகர் அருகே இளைஞர் ஒருவர் இரு பெண்களை திருமணம் செய்ய இருந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.

திருச்சுழி அருகே உள்ள ம.வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(31). இவர் படிக்கவில்லை என்பதால் ஆடு மேய்த்து வருகிறார். இவரது பெற்றோர் இறந்துவிட்டதால் அக்கா கலைச்செல்வி வீட்டிலேயே வளர்ந்துள்ளார்.


இவருக்கு கலைச்செல்வியின் மகள் பி.காம்., பட்டதாரியான ரேணுகாதேவி(21) என்பவரையும், மற்றொரு அக்கா அமுதவள்ளியின் மகள் காயத்திரி(20) என்பவரையும் வரும் 4-ம் தேதி திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கப்பட்டது.

இதற்காக திருமண பத்திரிகை உறவினர்களுக்கும் வழங்கப்பட்டன. இதில், காயத்திரி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், ஒரு இளைஞர் ஒரே மேடையில் இரு பெண்களை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் திருமண பத்திரிகையுடன் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ராமமூர்த்திக்கு ரேணுகாதேவியை மட்டும் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து ராமூர்த்தியின் மாமாவும், மணமகள் ரேணுகாதேவியின் தந்தையுமான அழகர்சாமி மற்றும் உறவினர்கள் மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்தை நேற்று சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது, ராமமூர்த்தித்துக்கு ரேணுகாதேவியைதான் திருமணம் செய்து வைக்க இருந்தோம். ஆனால் அவருக்கு இருதார தோஷம் இருப்பதாக ஜோசியர் கூறியதால் முதலில் மனநலம் பாதித்த காயத்திரிக்கு தாலி கட்டிய பிறகு ரேணுகாதேவிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்த இருந்ததாகவும், தோஷம் கழிப்பதற்காகவே இருவருக்கு தாலி கட்டி திருமணம் செய்ய இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் மட்டும் திருமணம் நடத்துவது என மற்றொரு பத்திரிகையை அச்சடித்து வந்து விளக்கக் கடிதத்துடன் கொடுத்தனர். அதைப் பெற்ற சமூக நலத் துறை அலுவலர் ராஜம், இரு பெண்களை திருமணம் செய்வது ஏற்புடையது அல்ல. இது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.

ராமமூர்த்திக்கு திருமணம் நடைபெறும்போது அங்கு சென்று கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக சமூக நலத் துறை அலுவலர்களும், போலீஸாரும் தெரிவித்தனர்.

இது குறித்து, மத்திய அரசு வழக்கறிஞர் கஜேந்திரன் கூறுகையில், இரு மணப்பெண்களும், குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தாலும் சட்டப்படி இத்திருமணத்தை பதிவு செய்ய முடியாது. இது குறித்து வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்வது கட்டாயம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை மத்ய கைலாஷ் பகுதியில் சோதனை.   -  கோப்புப் படம். | எம்.வேதன்.
வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்வது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இம்மாதம் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை தங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் பொது நல வழக்கு தொடர்ந்தது. கடந்த 1-ம் தேதி நீதிபதி துரைசாமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மோட்டார் வாகனச் சட்டத்திலேயே இம்மாதிரியான கட்டாயம் வலியுறுத்தப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார். மேலும் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் உரிமத்துக்கு ஏதேனும் இழப்பு உண்டானால் யார் பொறுப்பேற்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு காலக்கெடு அளிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 4-ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நீட்டிக்காத சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அசல் உரிமம் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்ற அரசு உத்தரவு மீதான புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை.
மேலும் இது தொடர்பான பொதுநல மனு மற்றும் ரிட் மனு மீதான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
எனவே செப்டம்பர் 6 முதல் வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

neet issue

clip
அனிதாவின் தற்கொலையைக் கோழைத்தனம் என்பவர்களுக்கு ஈரோடு மகேஷ் அளித்துள்ள பதில்!

By பவித்ரா முகுந்தன் | Published on : 04th September 2017 02:25 PM |

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தனது மருத்துவர் கனவு பறிபோனதை எண்ணி தற்கொலை முடிவெடுத்த மாணவி அனிதாவை கோழை என்று விமர்சிப்பவர்களுக்குத் தமிழ் பேச்சாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஈரோடு மகேஷ் அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இன்று காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர் பலரது கேள்விகளுக்கான பதில்களைக் கூறியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;

“அன்பு தங்கை அனிதாவுடைய மரணம் அனைவராலும் தாங்க முடியாத ஒரு மிகப் பெரிய இழப்பு. இதில் பெரிய கொடுமை என்னவென்றால் யார் இந்த மரணத்திற்குக் காரணமோ அவர்களே இதற்கு அழுவதும், புலம்புவதும்தான் பெரிய கொடுமை நமது நாட்டில். ஒரு கட்சி சின்னத்தைக் காப்பாற்ற போராடிய உங்களால், ஒரு கட்சியை காப்பாற்றப் போராடிய உங்களால், எம்எல்ஏ-க்களை காப்பாற்றப் போராடிய உங்களால், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாதா?

தற்கொலை செய்வது கோழைத்தனம் என்று கூறும் அத்தனை பேருக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், என்றாவது வாழ்க்கையுடைய கனவா இருந்த ஒன்று கிடைக்காமல் போன சோகம் உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? மழை அதிகமா பெய்தாலே அந்த வீடு இடிந்து விழுந்துவிடும், அந்தக் குழந்தை அதில் படித்திருக்கா. ஒவ்வொரு பாடத்திற்கும் அத்தனை டியூஷன் வெச்சு படித்த மாணவர்களே 800, 900 மதிப்பெண்களைத் தாண்டுவதில்லை, ஆனால் இந்தக் குழந்தை 1176 மதிப்பெண் எடுத்திருக்கு, எப்படி அந்தக் குழந்தையால் இந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியும்?

ரொம்ப அழகா சொன்னார் டாக்டார்.அப்துல் கலாம் அவர்களுடைய அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்கள், மத்திய அரசு நடத்துற ஏய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு தேவை இல்லையாம், மாநில அரசுக்குத்தான் தேவையாம், ஏனா இங்க மாநில அரசு ஒண்ணுமே இல்லை பாத்திகளா, அதனால் இங்கதான் தேவையாம்.

இங்க பாருங்க நீங்க நீட் தேர்வு வையுங்க நான் வேண்டாம்னே சொல்லலை, ஆனால் எங்கள் குழந்தைகள் எந்தக் கல்வியில் படிக்கிறதோ அந்த அடிப்படையில் வினாத்தாள்கள் தயார் செய்யுங்கள், குழந்தைகள் எழுத போராங்க. தமிழகத்தில் இருந்து நல்ல மருத்துவர்கள் வரக்கூடாது என்பது உங்களது லட்சியம், ஏழைகள் மருத்துவர்கள் ஆகக் கூடாது என்பது உங்களது லட்சியம் அவ்வளவுதான? இதற்கெல்லாம் நாங்கள் சும்மாவே இருக்க மாட்டோம்.

நீங்க அடிப்பதற்கும், அழ வைப்பதற்கும் ஆட்கள் நாங்கள் கிடையாது. கண்டிப்பா ஒரு மிகப் பெரிய போராட்டம் வெடிக்கத்தான் போகிறது. அடுத்த முறை நீட் தேர்வு வராமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் நாம் செய்ய வேண்டும் நண்பர்களே. இது நம் தங்கையினுடைய இழப்பு, இது நம் வீட்டுப் பெண் பிள்ளையினுடைய இழப்பு.


அந்தக் குழந்தை ஒரு வீடியோ பண்ணியிருப்பா, கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் பேசியிருப்பா, அந்த வீடியோவை பாருங்கள், அந்தக் குழந்தையோடு கண்களில் எப்படியாவது மருத்துவ படிப்பை படிப்பதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துவிடும் என்கிற ஒரு ஆசை, இலக்கை அடைந்து விடுவோம் என்கிற நம்பிக்கை தெரியும். வருத்தமா இருக்கு, இப்படியொரு மானங்கெட்ட தேசத்தில் இருக்கோமேனு வருத்தமா இருக்கு.

இப்போது அத்தனை பேரும் அறிவிக்கிறார்கள் இந்த உதவி, அந்த உதவி, இவ்வளவு நஷ்டயீடு அப்படி இப்படினு, ஏன் எத்தனையோ அரசியல்வாதிகளுடைய மருத்துவக் கல்லூரி இங்க இருக்கே, அதுல யாராவது ஒருத்தர் ஒரு சீட் கொடுத்திருக்கலாமே? உங்களுக்குத் தேவை என்றால் சட்டத்தை மாற்ற முடியும் என்றால், எங்களுக்குத் தேவை என்றாலும் நீங்கள் சட்டத்தை மாற்ற வேண்டும். இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்!!”



வானமே இடிந்து விழுந்தாலும் பதிவை நீக்க மாட்டேன்; அடக்கி வாசிக்கச்சொல்லுங்கள்: பால பாரதி

By DIN  |   Published on : 04th September 2017 04:41 PM  |   
balabharathi
Ads by Kiosked

சென்னை: டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு மருத்துவ சீட்டு கிடைத்தது தொடர்பான தனது பதிவை வானமே இடிந்து விழுந்தாலும் நீக்க மாட்டேன் என்று முன்னாள் எம்எல்ஏ பால பாரதி கூறியுள்ளார்.
டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரிலேயே மருத்துவச் சீட்டு கிடைத்ததாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பால பாரதி தனது பேஸ்புக்கில் இன்று காலை பதிவிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. 
இது குறித்து சட்டப்பேரவையில் நடந்த ஒரு உரையாடலை அவர் பதிவிட்டிருந்தார்.
அதில், 
சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.
அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப்பார்த்து வணக்கம்போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள.. டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜையில் அமர்ந்து சிரித்தது.
இப்படி புறவாசல்வழியாக உதவியைப்பெற்றுக்கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருகிறார். தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது குற்றம் சுமத்துகிறார், பாஜக, அதிமுக வேடிக்கை பார்க்கிறார்கள். ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம். கேப்பையில நெய்வடியுதாம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் மேலும் ஒரு பதிவை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டார்.
அதாவது, "டாக்டர் கிருஷ்ணசாமி குறித்த என் பதிவை நான் நீக்கிவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. வானமே இடிந்து விழுந்தாலும் நீக்கமாட்டேன்.
உள்ளே இருக்கும் உளவுத்துறைக்கும் மற்றவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். கிருஷ்ணசாமியை அடக்கி வாசிக்கச்சொல்லுங்கள்..." என்று பதிவிட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தலித் மாணவி, கடும் போராட்டத்துக்குப் பின் தனது மருத்துவர் கனவு கலைந்ததால், மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையால் தமிழகமே அமைதி இழந்தது. ஆனால், அவரது மரணத்துக்குப் பின்னால் சிலர் இருப்பதாக, அரசியல் ரீதியான கருத்துகளைக் கூறியதால், கிருஷ்ணசாமிக்கு எதிராக சமூக தளங்களில் ஏராளமானோர் கடும் விமரிசனத்தை பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில், எளிமைக்கு உதாரணமாகக் கூறப்படும் முன்னாள் எம்எல்ஏ பால பாரதி, குறைந்த மதிப்பெண் எடுத்த  தன் மகளுக்கு முதல்வரின் சிபாரிசின் பேரில் மருத்துவ சீட்டு வாங்கிய கிருஷ்ணசாமி குறித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பது, அவருக்கு எதிராக மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு மருத்துவ சீட்டு கிடைத்தது இப்படித்தானா? சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்

By DIN | Published on : 04th September 2017 01:17 PM |

 

சென்னை: அனிதாவின் தற்கொலை குறித்து எதிர்மறையான கருத்துக் கூறியிருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு, முதல்வரின் பரிந்துரையால்தான் மருத்துவ சீட்டு கிடைத்ததாக ஒரு தகவல் சமூக தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அதாவது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பால பாரதி, இது குறித்து சட்டப்பேரவையில் நடந்த ஒரு உரையாடலை தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாகவும், அதில் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு, முதல்வர் பரிந்துரை செய்தே எம்பிபிஎஸ் இடம் கிடைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.




அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.

அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப்பார்த்து வணக்கம்போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள.. டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜையில் அமர்ந்து சிரித்தது.

இப்படி புறவாசல்வழியாக உதவியைப்பெற்றுக்கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருகிறார். தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது குற்றம் சுமத்துகிறார், பாஜக, அதிமுக வேடிக்கை பார்க்கிறார்கள். ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம். கேப்பையில நெய்வடியுதாம் என்று பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஒரு தலித் மாணவி, கடும் போராட்டத்துக்குப் பின் தனது மருத்துவர் கனவு கலைந்ததால், மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையால் தமிழகமே அமைதி இழந்தது. ஆனால், அவரது மரணத்துக்குப் பின்னால் சிலர் இருப்பதாக, அரசியல் ரீதியான கருத்துகளைக் கூறியதால், கிருஷ்ணசாமிக்கு எதிராக சமூக தளங்களில் ஏராளமானோர் கடும் விமரிசனைத்தை பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில், எளிமைக்கு உதாரணமாகக் கூறப்படும் முன்னாள் எம்எல்ஏ பால பாரதி தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாகக் கூறப்படும் இந்த கருத்து, அவருக்கு எதிராக மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனிதாவின் தியாகம்!

By ஆசிரியர்  |   Published on : 04th September 2017 02:21 AM  |  
'நீட்' தேர்வில் மதிப்பெண் பெறாததால் தனது மருத்துவப் படிப்புக் கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் அனைவரது மனசாட்சியையும் உலுக்கிப்போட்டிருக்கிறது. அவர் இப்படியொரு விபரீதமான முடிவை எடுத்தது ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, நீதித்துறைக்கும் சேர்த்து அவர் அளித்திருக்கும் கடுமையான கண்டனம்.
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு தகுதிகாண் தேர்வு வேண்டுமென்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்ததற்கு அடிப்படை காரணம், தனியார் கல்லூரிகளில் பெரும் பணத்தை நன்கொடையாகச் செலுத்தி, தகுதியில்லாத மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதுதான். தனியார் கல்லூரிகளுக்குத் தரப்படும் நன்கொடைக் கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதுடன் நிற்காமல், நீதித்துறை அதிகாரத்துறையின் செயல்பாடுகளில் தலையிடத் தொடங்கியதின் விளைவுதான் இன்றைய நீட் குழப்பம்.
2011-இல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு பதவியேற்றவுடன் தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கைவிட்டு தேசிய அளவிலான கல்வி முறைக்கு மாறுவது என்கிற முடிவை எடுத்தது. அதன்மூலம் இந்தியாவின் ஏனைய மாநில மாணவர்களுக்கு நிகராக, தேசிய அளவில் உயர்கல்விக்கான தகுதிகாண் தேர்வுக்கு தமிழக மாணவர்களும் தயாராவார்கள் என்பதுதான் தமிழக அரசின் முடிவுக்குக் காரணம்.
2011 ஜூலை 18-இல் சென்னை உயர்நீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்தபோது, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டில் இன்றைய சூழலை தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு சிந்தித்திருக்கிறது என்பது வியப்பை அளிக்கிறது. அந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்ததன் விளைவுதான், இன்று மருத்துவக் கனவு காணும் ஆயிரக்கணக்கான அனிதாக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
ஒருபுறம் உச்சநீதிமன்றம். இன்னொருபுறம் நாளும் பொழுதும் "நீட்' பிரச்னையில் எந்தவிதத் தெளிவான நிலைப்பாடும் எடுக்காமல் கண்ணாமூச்சி விளையாடிய மத்திய அரசு. "நீட்' தேர்வுக்கு மாற்றாக புதியதொரு திட்டம் தரப்படாததும், தனது வாதங்களை வலுவாக எடுத்துரைக்காமல் நீதிமன்றத்தில் கோட்டைவிட்டதும் தமிழக அரசின் குற்றம். மத்திய அரசு காப்பாற்றும் என்கிற நம்பிக்கையில் உச்சநீதிமன்றத்திலான வழக்குக்கு போதிய கவனமும் முக்கியத்துவமும் செலுத்தாமல்விட்டது தமிழக அரசின் மிகப்பெரிய தவறு.
மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை குறித்து சில தவறான புரிதல்கள் நிலவுகின்றன என்பதை அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து புள்ளிவிவரங்களை எல்லாம் கூர்ந்து கவனிக்கும்போது தெரியவருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு "நீட்' தேர்வால்தான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனக் கருதுவது மிகப்பெரிய மாயை.
கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் வெறும் 314 மட்டுமே. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 74. தமிழகத்தில் மொத்தம் 388 பேர் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் படித்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாயை கல்விக்காக அரசு செலவு செய்து விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரை மட்டுமே மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளிகளால் அனுப்ப முடிகிறது என்பது பற்றி யாராவது கவலைப்பட்டிருக்கிறோமா?
அப்படியானால், மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்களா என்று கேட்டால், அதுவும் இல்லை. தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பிராய்லர் கோழிகளைப்போல மதிப்பெண் பெறுவதற்குத் தயாராக்கப்பட்டவர்கள்தான் மருத்துவக் கல்லூரிகளில் அதிக மதிப்பெண் காரணமாக இடம் பிடிப்பவர்கள்.
"நீட்' மதிப்பெண்ணின் அடிப்படையில் இந்தாண்டு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்துமுடிந்துவிட்ட நிலையில், இனி மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது சாத்தியமில்லை. இனிமேல் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழகத்தின் ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டுமே தவிர, இதில் அரசியல் ஆதாயம் தேட முற்படுவது தமிழகத்துக்கும் தமிழக மாணவர்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகமாக இருக்கும்.
"நீட்' என்கிற தகுதிகாண் தேர்வு மட்டுமே மருத்துவப் படிப்புக்கு அடிப்படை என்று சொன்னால் அப்போது பன்னிரெண்டு ஆண்டுகள் ஒரு மாணவன் பள்ளியில் படிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? "நீட்' தேர்வு என்பது பள்ளிகளை முக்கியத்துவம் இல்லாமல் செய்து, தனியார் பயிற்சி மையங்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும்.
பிளஸ் 2 மதிப்பெண், தகுதிகாண் தேர்வில் பெறும் மதிப்பெண் இரண்டையும் சேர்த்து அதனடிப்படையில் மருத்துவத் தேர்ச்சி என்பதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்பதை இதற்கு முன்பே நாம் நமது தலையங்கத்தில் தெளிவுபடுத்தியிருந்தோம். அதேபோல அந்தந்தப் பகுதி மாணவர்களுக்கு அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்கும் ஒதுக்கீட்டை கொண்டு
வரும் அதிகாரத்தைக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் தமிழக அரசுக்கு வழங்கியிருக்கிறது. அதை நடைமுறைப்படுத்தாமல்போனது நமது ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் செய்த தவறு.
இந்தப் பிரச்னைக்கு முடிவு காண்பதற்காகத்தான் அந்த ஏழை மாணவி அனிதா உயிர்த்தியாகம் செய்திருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நியாயமான முடிவு எட்டப்பட்டால் மட்டுமே அனிதாவின் ஆன்மா சாந்தியடையும்!

Changes in varsities Act opposed

Changes in varsities Act opposed The Hindu Bureau MADURAI 13.09.2026 The members of the Madurai Kamaraj, Manonmaniam Sundaranar, Mother Tere...