Saturday, November 4, 2017


திருமலை தேவஸ்தான இணையத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட் வெளியீடு

திருப்பதி: திருமலை தேவஸ்தான இணையதளத்தில் 52 ஆயிரம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளி யிடப்பட்டுள்ளன. திருமலை தேவஸ்தானம் மாதந்தோறும், முதல் வெள்ளிக்கிழமைகளில், காலை, 10:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டை 
வெளியிட்டு வருகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு, 2018, பிப்., மாதத்திற்கான, 52,190 ஆர்ஜித சேவா டிக் கெட்டுகள் தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 
இந்த டிக்கெட்டுகளை, பக்தர்கள் முன்பதிவு செய்து, ஏழுமலையானை ஆர்ஜித சேவையில்
தரிசிக்கலாம்.இதில், சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள், குலுக்கல் முறையில் வழங்கப்படுகின்றன. இதை பெற விரும்பும் பக்தர்கள், தங்கள் பெயர், ஆதார் எண், டிக்கெட் எண்ணிக்கை, அைலபேசி உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். கிடைக்க பெற்ற விண்ணப்பங்கள், அனைத்தும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பப் படும்.தகவல் கிடைத்த பக்தர்கள், மூன்று நாட்
களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளுக்கு, ஆன்லைனில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு, பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை, விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்கு,குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டை, பக்தர்கள், நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.டிக்கெட் விவரங்கள்குலுக்கல் முறையில் உள்ள டிக்கெட்கள்: சுப்ரபாதம், -7,300, தோமாலை, -120, அர்ச்சனா-, 120, அஷ்டதளபாத பத்மாராதனை, -240, நிஜபாதம்,- 2300.
மற்ற சேவா டிக்கெட்கள்: கல்யாண உற்ஸவம்,-10,500, ஆர்ஜித பிரம்மோற்ஸவம், -5,590, விசேஷ பூஜை, -1,500, வசந்தோற்ஸவம், -10,320, ஊஞ்சல்சேவை, -2800, சகஸ்ர தீபாலங்கார சேவா, -11,400.
தற்போதைய,மழையால்,பாதிப்பில்லை,'அச்சம் வேண்டாம்!

''சென்னை உட்பட தமிழகத்தின் எந்த பகுதிக்கும், தற்போதைய மழையால் வெள்ள அபாயம் இல்லை. அதனால், மக்கள் அச்சப்பட வேண்டாம். இப்போதைக்கு புயலும் இல்லை; சுனாமியும் வர வாய்ப்பில்லை,'' என, 'தமிழ்நாடு வெதர்மேன்' என அழைக்கப்படும், பிரபல தனியார் வானிலை ஆய்வாளர், பிரதீப் ஜான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



சென்னையில், 2015ல், கன மழை பெய்தபோது, நகரின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை, செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் கபளீகரம் செய்தது.அந்த கசப்பான நினைவுகள் அகலாத நிலையில், 2016ல், வட கிழக்கு பருவ மழை, போக்கு காட்டியது. அதனால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. குடிநீர் ஏரிகள் வறண்டதால்,தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதனால் இம்முறை, வட கிழக்கு பருவ மழையை, மக்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். மக்கள் எதிர்பார்த்தபடி, அக்., 31 இரவு முதல், கன மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், 'சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்படும்; செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பெடுத்தது; மீண்டும் சுனாமி தாக்கப் போகிறது' என, பல்வேறு வதந்திகள் பரவ துவங்கி உள்ளன.

கடும் மழையை எதிர்கொண்டுள்ள மக்கள் மத்தியில், இது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்தேகங்களை எல்லாம், பல லட்சம் மக்களால் நம்பப்படும், 'வெதர்மேன்' பிரதீப் ஜான் தெளிவுபடுத்தி உள்ளார்.கடந்த, 2015 வெள்ளத்தின்போது, இவர் தந்த மழை தொடர்பான தகவல்கள், அப்படியே பலித்தன. அதனால், 'பேஸ்புக்' வலைதளத்தில், அவரை

பல லட்சம் பேர் தொடர்கின்றனர். இம் முறையும்,அவர் கணித்தபடியே மழை பெய்கிறது.

நமது நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி:

சென்னையில், நேற்று முன்தினம், மழை மேகங்கள், கடலோரமான இடத்தில் இணைந்ததால், கடற்கரைக்கு சற்று அருகில் உள்ள பகுதிகளில் மழை கொட்டியது. அதனால், எழும்பூரில் துவங்கி கேளம்பாக்கம் வரை, மிக அதிக அளவில் மழை பெய்தது. டி.ஜி.பி., அலுவலகம் அருகில், 28.6 செ.மீ., மழை பதிவானது. ஆனால், வளசரவாக்கம், பெரம்பூர், செங்குன்றம் என, பல பகுதிகளில் மழை குறைவாகவே பெய்தது.

சென்னையில், தற்போது பெய்து வரும் மழை இயல்பானது. அது, மேலும் சில நாட்கள் தொடரும். எனினும், நேற்று பெய்ததை போல், பல மணி நேரம் தொடர்ந்து, கன மழை பெய்யாது.சென்னை நகரில், தாழ்வான சில இடங்களில், மழைநீர் தேங்கியிருப்பது, உண்மை தான். ஆனால், வரலாற்றின் அடிப்படையிலும், சென்னையின் தேவை அடிப்படையிலும், இந்த மழை போதாது.

இது வழக்கமான மழை தான். 2015ல், இதை விட இரு மடங்கு நீர், சென்னை சாலைகளில் ஓடியது. அதை ஒப்பிட்டால், இது ஒன்றும் பெரிது கிடையாது.'வெள்ள அபாயம் ஏற்படும்' என சிலர், தகவல் பரப்புகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில், 15 சதவீதம் தான் தண்ணீர் வந்துள்ளது. அதனால், இப்போதைக்கு வெள்ளம் ஏற்பட வாய்ப்பே இல்லை.

சென்னையில் மழை பெய்தாலும், செங்குன்றம், பூந்தமல்லி போன்ற ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், குறைவான அளவே மழை பெய்துள்ளது. அதனால், வதந்திகளை நம்ப வேண்டாம்.

இதேபோல், 'டிசம்பருக்குள், 11 நாடுகளை, சுனாமி தாக்கும்; தமிழகம், கேரளா அருகே பூகம்பம் உருவாகும்; 2004ம் ஆண்டை விட, பாதிப்பு பன்மடங்கு அதிகமிருக்கும்' என, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன.

அதனாலும், மக்களிடம் கலக்கம் ஏற்பட்டு உள்ளது. உலகில் எந்த மனிதனாலும், பூகம்பத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது. அதற்கான தொழில்நுட்பமும், யாரிடமும் இல்லை.

தற்போது பரவும் தகவலில், எந்த நாளில் அதை, சம்பந்தப்பட்ட விஞ்ஞானி எழுதினார் என்ற, விபரம் இல்லை. அதில், பூகம்பத்தின் மையப் பகுதி, எங்கு உருவாகும் என குறிப்பிட வில்லை. கடவுளால் தான், பூகம்பத்தை கணிக்க முடியும். கண்டிப்பாக, சமூக வலைதளத்தில் பரவும் கடிதத்தை, கடவுள் எழுதியிருக்க முடியாது. எனவே, மக்கள் பயப்படத் தேவையில்லை. பலத்த மழை பெய்யும்போது, வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள்; அது போதும்.இவ்வாறு அவர் கூறினார்.

நான் விஞ்ஞானி அல்ல!பிரதீப் ஜான் கூறியதாவது:

குமரி மாவட்டம், மார்த்தாண்டம், சொந்த ஊர். சென்னை, அண்ணா நகர், எஸ்.பி.ஓ.ஏ.,வில் பள்ளி படிப்பு. தற்போது, 'டுபிசில்' எனும், தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவை கள் நிறுவனத்தில் பணி. சிறு வயது முதல், மழையை பார்த்தால், கவலை மறப்பேன். பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தாலும், வானிலை மீதான காதல் தொடர்ந்தது.

பல்வேறு நாடுகளின், வானிலை ஆய்வு மையங்கள், 25க்கும் மேற்பட்ட வானிலை மாடல்களை ஆய்ந்து, 2003ல் எழுத துவங்கி னேன். 2014ல், 'பேஸ்புக்'கில், மக்கள் எதிர்பார்க் கும் தகவல்களை எழுத துவங்கினேன். 2015 வெள்ளத்தின்போது, நம்பகமான தகவலை பதிவிட்டதால், லட்சக்கணக்கானோர், என்னை தொடர்கின்றனர்.

நான் விஞ்ஞானி அல்ல. ஆனால், மக்களுக்கு என்ன தேவை; மழை, புயல் குறித்து, என்ன தெரிந்து கொள்ள விரும்புவர் என்பதற்கேற்ற தகவல்களை, நம்பகமான விபரங்களுடன், மழைக் காலங்களில், தினசரி, மூன்று முறை பதிவிடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்

- நமது சிறப்பு நிருபர் -

வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிவிகிதம் குறைப்பு :எஸ்.பி.ஐ.,

 வீடு, ,வாகன, கடன், வட்டிவிகிதம், குறைப்பு, எஸ்.பி.ஐ.,
புதுடில்லி:வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிவிகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) குறைத்துள்ளது. வைப்புநிதி மீதான வட்டிவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் மீதான வட்டி விகிதங்கள் 5 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.35 சதவீதத்திலிருந்து 8.30 சதவீதமாக குறைத்துள்ளது. இது வங்கித்துறையிலேயே மிகவும் குறைவானதாகும். இதேபோல், வாகன கடன்களுக்கான வட்டிவீகிதத்தை 8.75 சதவீதத்திலிருந்து 8.70 சதவீதமாக குறைத்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் புதிய வட்டிவிகிதம் அமலுக்கு வந்துள்ளது. 
‛வாட்ஸ்அப்' அப்செட்; சில நிமிடங்களில் சீரானது


spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
உலகம் முழுக்க வாட்ஸ்அப் சேவை திடீர் பாதிப்பு
சென்னை: தற்போது மக்களோடு ஒன்றிப்போன ‛வாட்ஸ் அப்' செயலி சில நிமிடம் செயலற்று போனதால் பயன்பாட்டாளர்கள் உலகம் முழுதும் அதிர்ச்சியுற்றனர்.

சமூக வலைதளமான ‛வாட்ஸ் அப்' செயலியை உலகம் முழுதும் பல கோடிகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்திகள் , புகைப்படங்கள், வீடியோக்களை பகிரவும் இதனை பயன்படுத்தினர். ஆபத்து காலங்களில் இந்த செயலி மக்களுக்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் மதியம் ( 2. 05 மணி முதல் 2.36 வரை ) சில மணி நேரமாக வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியது. 

இதற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியா விட்டாலும், தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என கூறப்பட்டது . வாட்ஸ் அப் செயலிழந்ததால் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஏறக்குறைய 30 நிமிடத்தில் இந்த சேவை மீண்டும் துவங்கியது. காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. திடீர் ஸ்தம்பிப்பால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


முடிச்சூருக்கு பேரிடர் மீட்பு குழு விரைவு

பதிவு செய்த நாள்03நவ
2017
09:51

சென்னை: சென்னையில் விடிய விடிய கனமழை பெய்தது. இதில் முடிச்சூர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
மாநில வருவாய் ஆணையர் சத்யகோபால் நிருபர்களிடம் கூறுகையில்; மின்சாரம் துண்டிக்கப்பட்ட 112 இடங்களில் தண்ணீர் வடிய துவங்கியதை அடுத்து, மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் வழங்கப்படும். முடிச்சூர் பகுதிக்கு மாநில பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. என்றும் தெரிவித்தார்.

14 சுரங்கபாதையில் பாதிப்பு இல்லை:

கெங்கிரெட்டி சுரங்க பாதையை ஆய்வு செய்த பின்னர் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:

சென்னையில் நேற்று பெய்த கனமழையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து தி.நகர் சாலையில் தேங்கியுள்ளது. படம்.சுரேஷ்கண்ணன்.

16 சுரங்க பாதைகளில் 14 சுரங்க பாதைகளில் பாதிப்பு இல்லை. கணேசபுரம் கெங்குரெட்டி சுரங்கபாதையில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு 45 நிமிடங்களில் தண்ணீர் வெளியேற்றப்படும். பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆதம்பாக்கம், பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.தொடர் மழை பெய்வதால் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியாது. நிவாரண முகாம்களில் 200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை: பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசல்


 சென்னை: பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசல்
சென்னை: பல்லாவரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து கடந்த இரு தினங்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Specify Deadline For Aadhaar Linking To Bank A/C & Mobile Number In SMSs To Avoid Panic: SC; Related Pleas Referred To Constitution Bench | Live Law

Specify Deadline For Aadhaar Linking To Bank A/C & Mobile Number In SMSs To Avoid Panic: SC; Related Pleas Referred To Constitution Bench | Live Law: Justice Sikri also quipped  “Initially I did not want to say because the Press is here. But I’m also receiving messages to link bank account and mobile number”. The Supreme Court court today ordered banks and mobile service providers to specify the deadline of December 31, 2017 and February 8, 2018 for linking their bank …

NEWS TODAY 01.07.2026