Sunday, November 12, 2017

வருமான வரித்துறை வலையில் சிக்கிஇருக்கும், சசிகலா கும்பல் மீதான பிடி, இறுகி வருகிறது.

 சசி, கும்பல், மீதான, பிடி,இறுகுகிறது!

வருமான வரித்துறை வலையில் சிக்கிஇருக்கும், சசிகலா கும்பல் மீதான பிடி, இறுகி வருகிறது. சோதனைக்குச் சென்ற இடங்களிலெல்லாம், நகைக் குவியல்களும், சொத்துக்கள் வாங்கி குவித்ததற்கான ஆவணங்களும், எக்கச்சக்கமாக அள்ளப்படு கின்றன. சங்கிலி தொடர் போல அடுத்தடுத்து தோண்ட வேண்டியிருப்பதால், நான்காவது நாளாக, இன்றும், 120 இடங்களில் சோதனை தொடரவுள்ளது. வங்கிப் பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாலும், போலி நிறுவனங்கள் பெயரில், வெளிநாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாலும்,
மத்திய அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும், விசாரணைக்கு ஆயத்தமாகி வருகின்றன.





சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்க மானவர்கள், தமிழகத்தில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு மற்றும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதனால், அவர்கள் நிழல் பட்டவர்கள் கூட, கடவுளின் வரம் பெற்றவர் போல, திடீர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். சொத்துக்களின் அளவும், மதிப்பும் உயர உயர, சசிகலா குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என, அனைவரும், தொழிலதிபர் களாக வலம் வரத் துவங்கினர்.

சாம்ராஜ்யம்

அதற்கு ஒரே ஒரு உதாரணமாக, சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன், விவேக்; 25
வயதிற்குள், 1,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள, 11 திரையரங்குகள் உடைய, 'ஜாஸ் சினிமாஸ்' சாம்ராஜ்ஜியத்திற்கு மன்னனாக திகழ்கிறார்.இக்குடும்பத்தினர், கால் வைக்காத துறைகளே இல்லை; தொலைக் காட்சி, நாளிதழ், ரியல் எஸ்டேட், மதுபான ஆலை, காபி தோட்டங்கள், தேயிலை எஸ்டேட்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு, ஏற்றுமதி தொழில், சினிமா என எல்லாவற்றிலும், கோடிகளை அள்ளிக் கொட்டி கோலோச்சுகின்றனர்.

இந்நிலையில், மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி, அமைச்சர் விஜய பாஸ்கரை தொடர்ந்து, சசி கும்பல் குறித்த விபரங்களை, வருமான வரித்துறை திரட்டியது. தகுந்த ஆதாரங்கள் சிக்கியதும், 9ம் தேதி காலை, சென்னை, மன்னார்குடி, தஞ்சை, திருச்சி, ஈரோடு, கோவை, நெல்லை, ஈரோடு, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டில்லி என, 200க்கும் மேற்பட்ட இடங்களில், அதிரடி சோதனையை துவங்கியது.

சென்னையில், தினகரன் வீடு, அவரது தம்பி பாஸ்கரனின், நீலாங்கரை வீடு, மகாலிங்கபுரத்தில், ஜெயா, 'டிவி' மேலாண் இயக்குனர் மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிர்வாகி, விவேக் வீடு, தி.நகரில் உள்ள அவரது சகோதரி, கிருஷ்ணபிரியா வீடு...அண்ணா நகரில் உள்ள விவேக் மாமனார், பாஸ்கர் வீடு, பெசன்ட் நகரில் உள்ள நடாஜன் வீடு, மயிலாப்பூரில் உள்ள அவரது சகோதரர்,
ராமச்சந்திரன் வீடு மற்றும் ஜெயா, 'டிவி' அலுவலகத்திலும், விரிவான சோதனைகள் துவங்கின.

போலி

மேலும், மன்னார்குடியில், திவாகரன் வீடு, தஞ்சையில் உள்ள சசிகலா அண்ணன் மகன், மகாதேவன் வீடு, நடராஜனின் உறவினர், ராஜேந்திரன் வீடு, கந்தர்வகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான கல்லுாரி, கடலுார் ஜோதிடர், சந்திரசேகர் வீடு...நாமக்கல்லில், சசி வக்கீல் செந்தில், கோவை தொழில் அதிபர், ஆறுமுக சாமி, நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட், புதுச்சேரியில் உள்ள தினகரனின் பண்ணைத் தோட்டம் என, முதல் நாள் சோதனை நீண்டது.

இரண்டாவது நாள் சோதனையில், சசி குடும்பத்தினர், 10க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரில் மேற்கொண்ட, பல முறைகேடான பரிவர்த்தனைகள், பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்த சொத்துக்கள் என, 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமான ஆவணங்கள் சிக்கின. அவை தொடர்பாக, 3 வது நாளாக, நேற்றும், விவேக், கிருஷ்ணபிரியா, திவாகரன் வீடுகள், கோவை, மன்னார்குடி, தஞ்சை என, 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்தது. இதில், மேலும் பல நுாறு கோடி ரூபாய்க்கான ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

நகை குவியல்

இச்சோதனையின், மூன்றாவது நாள் முடிவில், நேற்று பல வங்கிகளில் நடந்த முறைகேடான
பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தஞ்சை, சென்னை வங்கிகளின், 'லாக்கர்'களில் இருந்தும், பாஸ்கரன் வீட்டில் இருந்தும், தங்க நகை குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, இவர்களின் குடும்பத்தினர் செய்த, அதிக பரிவர்த்தனைகள் காரணமாக, 30க்கும்

மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.

ஆளை விழுங்கிய சுறா

ஜாஸ் ஆங்கில திரைப்படத்தில் சுறா மீன், அப்படியே ஆளை விழுங்குவதைப் போல், ஒரு பிரபல நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்து, ஜாஸ் திரையரங்க வளாகத்தை கையகப் படுத்திய தகவல், 2015ல் வெளியானது. இந்த பரிவர்த்தனை தொடர்பாகவும், வேறு சில திரையரங்குகள் வாங்கியது தொடர்பாகவும், வரித்துறையினரிடம் ஆவணங்கள் சிக்கியுள்ளன. அது குறித்து, விவேக்கிடம், வருமான வரி கூடுதல் ஆணையர், ஜெயராகவன் தலைமையிலான அதிகாரிகள், துருவி துருவி விசாரித்து வருகின்றனர். மேலும், சோதனை நடந்த வீடுகள், அவர்களது வங்கி லாக்கர்களில், கிலோ கணக்கில் தங்கம், வைர நகைகள் சிக்கியுள்ளன.

அவற்றுக்கெல்லாம் ஆவணங்களையும், வருமான ஆதாரத்தையும் கேட்டு, வரித் துறையினர் பிடியை இறுக்கி வருகின்றனர். சொத்து ஆவணங்கள், நகை முறைகேடுகள் அதிகரிப்பதால், சோதனையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

120 இடங்களில் சோதனை

இது குறித்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:சோதனையை ஓரிரு நாளில் முடித்து விடலாம் என, நினைத்து தான், ஆயிரம் அதிகாரிகளுடன் களத்தில் இறங்கி னோம். ஆனால், ஒரு இடத்தில் சோதனை செய்ய சென்றால், அங்கு கிடைக்கும் ஆதாரத்தை வைத்து, அடுத்த இடத்தை தோண்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால், மேலும் பல இடங்களில் சோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது சென்னையில், 60 இடங்கள் உட்பட 120 இடங்களில் சோதனை நடக்கிறது.எனவே, நாங்கள் ஏற்கனவே திட்டமிட்ட இடங்களுடன், புதுப்புது இடங்களிலும் சோதனை தொடர்கிறது. சோதனை குறித்த விபரங்களை, தினசரி மாலையில், மத்திய நேரடி வரி வாரியத்திற்கு அனுப்புகிறோம். இந்த சோதனை, நான்காவது நாளாக, நாளையும் தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்தடுத்து, 'ஷாக்'

இதற்கிடையில், வருமான வரித்துறை சோதனையில், சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், பினாமி பெயர்களில், பல கோடி ரூபாய்க்கு, சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தெரிய வந்துள்ளதால், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையும் களமிறங்க தயாராகி வருகிறது.சசிகலா குடும்பத்தினர், பினாமி பெயர்களில், வௌிநாடுகளிலும் சொத்து வாங்கி குவித்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்காக, சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், வருமான வரித்துறையினருடன், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையும் கைகோர்க்க உள்ளன.

இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வரி ஏய்ப்பு செய்தவர், சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பணம் பதுக்கல், லஞ்சப் பணத்தில் வாங்கிய சொத்துகள் குறித்து, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். அந்த வகையில், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட, சினிமா பட அதிபர், மதன், அரசு மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி உள்ளிட்டோரை, அமலாக்கத்துறை மற்றும், சி.பி.ஐ., கைது செய்தது. அந்த வகையில், சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடு மற்றும் அலுவலங்களில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், வௌிநாட்டு முதலீடுகள் குறித்தும் விசாரிக்க உள்ளோம். குற்றம் செய்தது தெரிய வந்தால், கைது செய்வோம். அவர்களின் சொத்துக்களையும் முடக்குவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜோதிடர் வீட்டில்பத்திரங்கள் சிக்கின

கடலுார், திருப்பாதிரிப்புலியூர், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர், பிரபல ஜோதிடர் சந்திரசேகர். இவரின் வீடு மற்றும் அலுவலகம், அருகருகில் அமைந்து உள்ளன. இவர், பங்குச் சந்தை வணிகம், ஜோதிடம், நில வணிகம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளுக்கு மட்டும், சந்திரசேகர் ஜோதிடம் பார்ப்பார். அமைச்சர் ஒருவரின் வாயிலாக, தினகரனின் அறிமுகம் கிடைத்தது. அவர் கூறிய பல விஷயங்கள், தினகரனுக்கு பலித்ததால், ஆஸ்தான ஜோதிடராக மாறினார்.

இருவருக்கும் இடையில், பண பரிவர்த்தனைகள் இருந்தன. ஜோதிடரின் வீடு மற்றும் அலுவலகத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று மூன்றாவது நாளாக, சோதனை நடத்தினர். அப்போது, பங்குச் சந்தையில் முதலீடு செய்த, பல பத்திரங்கள் மற்றும், 'சிடி'க்களை, அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.அதில், பிரபல நகை கடை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் சிக்குவர் என தெரிகிறது.

மனைவிக்கு பிறந்தநாள்:

விவேக்

மனைவி கீர்த்தனாவிற்கு, நேற்று பிறந்த நாள். ஆனால், அதை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. அவரை, வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. அவரது பெற்றோர் வீட்டில் சோதனை முடிந்ததால், மகளை வாழ்த்த, பெற்றோர் வந்தனர். ஆனால், கீர்த்த னாவை பார்க்க, அவர்களை அனுமதிக்க வில்லை.

பைக்கில் போய் சோதனை:

வருமான வரித்துறை அதிகாரிகள், முதல் இரு தினங்களில், கார்களில் சோதனைக்குச் சென்றனர். பின், சென்னை, தலைமையகத் திற்கும், சோதனை நடந்த இடத்திற்கும், அடிக்கடி செல்ல வேண்டி இருந்ததாலும், கால விரயத்தை தவிர்ப்பதற்காகவும், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

'சிடி' சிக்கியதா:

சென்னை, அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக, 'சிடி' சிக்கியதாக தகவல் வெளியானது. அதற்காக தான் சோதனை நடந்தது என்றும் தகவல் பரவியது. அதை, வரித்துறையினர் மறுத்தனர்.

புகழேந்திக்கு, 'சம்மன்:

'கர்நாடக மாநில, அ.தி.மு.க., பிரமுகரான புகழேந்திக்கு, நாளை ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அதேபோல், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோருக்கும், சம்மன் அனுப்ப, வரித்துறை முடிவெடுத்துள்ளது.

நகைக்காக நாடகமா:

சென்னை, அண்ணா நகரில், விவேக்கின் மாமனார், பாஸ்கர் வீடு உள்ளது. அங்கு, ஏராளமான நகைகளை, வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர். அவை, தன் உறவினர்களுடைய நகைகள் என, பாஸ்கர் தரப்பு விளக்கம் அளித்தது. அதற்கேற்ப, வீட்டு வாசலில், அவரது உறவுக்கார பெண்கள் கூடி, வரித்துறையினரிடம், நகைகளை தரும்படி கேட்டு, தகராறு செய்துள்ளனர். நகைக்காக, அவர்கள் நாடகம் ஆடுவதை உணர்ந்த வரித்துறையினர், அதை காதில் வாங்க மறுத்து விட்டனர்.

அறையை பூட்டி'சீல்' வைப்பு

நாமக்கல்லில், சசிகலா வழக்கறிஞர் உட்பட, ஐந்து பேரின் வீடு, அலுவலகங்களில், மூன்றாம் நாளாக, நேற்றும் சோதனை நடத்தினர்.ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில், அவரது ஜூனியர், பாண்டியன், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர், பாலுசாமி, நண்பர் பிரகாசம், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த தொழிலதிபர், சுப்ரமணியம் ஆகியோர் வீடுகளில், மூன்றாவது நாளாக, நேற்றும் வருமான வரித்துறையினர் சோதனையை தொடர்ந்தனர்.அதில், செந்தில் வீட்டில் ஒரு அறை பூட்டப்பட்டிருந்தாகவும், அதற்கு, வருமான வரித்துறையினர், 'சீல்' வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவை, நீலகிரியில் ரகசிய ஆவணங்கள்

கோவையில், சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான, மணல் குவாரி கான்ட்ராக்டர், ஆறுமுகசாமி, மர வியாபாரி, சஜீவன் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரி அதிகாரிகள், மூன்றாவது நாளாக, நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம், கோடநாடு பங்களாவில், மரச்சாமான் வேலை களை செய்த, மர வியாபாரி, சஜீவனுக்கு சொந்தமான, போத்தனுார், லாயர்ஸ் காலனி வீடு மற்றும் கடை; ஆர்.எஸ்.புரத்திலுள்ள கடை மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

போத்தனுார் வீட்டில் மட்டும், மூன்றாவது நாளாக, நேற்றும் சோதனை தொடர்ந்தது. கோடநாடு பங்களாவின் கட்டுமான பணிகளை செய்த ஆறுமுகசாமிக்கு, ரேஸ் கோர்சில் உள்ள வீடு, ராம்நகர் கட்டுமான அலுவலகம், அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்திலும், வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். வீடு, கட்டுமான அலுவலகத்தில், இரண்டு நாட்களாக நடந்த சோதனை முடிந்த நிலையில், அவினாசி சாலை, 'செந்தில் டவர்சில்' மட்டும், மூன்றாவது நாளாக, நேற்றும் சோதனை நீடித்தது. சோதனையில், ரகசிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

50 போலி கம்பெனிகள்5,000 ஆவணங்கள்

வருமான வரித் துறையினர் கூறியதாவது:

சசிகலா கும்பலுக்கு சொந்தமான, 50 போலி கம்பெனிகள் மூலமாக, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரிலும், ஏராளமான சொத்து ஆவணங்கள் கிடைத்துள்ளன. நிலம், கட்டடம், சினிமா என, எல்லா துறைகளிலும், போலி கம்பெனிகள் பெயரில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, 5,௦௦௦த்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஆவண குவியலை பார்த்தால், மலைப்பாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -
அரசியல்வாதின்னா  கோவணத்தோட அலையணுமா

சென்னை, ''நான், காந்தியின் பேரன் அல்ல. ஆனால், எங்களை குற்றம் சொல்பவர்கள், காந்தியின் பேரன், பேத்திகளா?'' என,தினகரன் கேள்வி எழுப்பினார்.



சென்னையில், அவர் அளித்த பேட்டி:

வருமான வரி சோதனையை, நாங்கள் எதிர்க்க வில்லை; வரவேற்கிறோம். புதுச்சேரியில், என் பண்ணை வீட்டில், பாதாள அறை உள்ளதாக செய்தி வெளியானது;அப்படி எதுவும் கிடை யாது. என் வீட்டிற்கு வந்த, வருமான வரி துறை அதிகாரிகள், அவர்களுடைய கடமையை செய்தனர்; தவறான தகவல் எதையும் பரப்ப வில்லை. ஆனால், 184 இடங்களில் சோதனை
என்பதை தான், உள்நோக்கம் உடையது என, கூறுகிறேன். எதையோ எதிர்பார்த்து வந்துள்ளனர்.

நான், காந்தியின் பேரன் போல் பேசவில்லை; சாதாரண மனிதன் தான்.ஆனால், எங்களை குற்றம் சொல்பவர்கள், காந்தியின் பேரன், பேத்திகளா? என்பதையும் பார்க்க வேண்டும். நாங்கள் பெரிய கட்சி என, எங்கும் கூறவில்லை.ஜெ., மறைவுக்கு பின், சசிகலா தலைமையில் இயங்கும் சிறிய குழு. எங்களை அழித்துவிட்டு, யாரும் வளர நினைத்தால் முடியாது.கடந்த,1996ல்,எங்கள் வீடுகளில்சோதனை நடந்தது; 20 ஆண்டுகளுக்கு பின்,தற்போது சோதனை நடந்துள்ளது. சட்டத்தை மதிப்பவர்கள், நாங்கள்.சோதனை முடிந்த பின், உண்மை தெரிய வரும்.

வருமான வரித்துறைஅதிகாரிகள், 350 கார்களை வாடகைக்கு, 'பாஸ்ட் டிராக்' நிறுவனத்தில் எடுத்து உள்ளனர்.வேறு நிறுவனம்இல்லையா; சேகர் ரெட்டி நண்பராக இருந்தவர்கள்;அவரை பெரிய ஒப்பந்த தாரராக உருவாக்கியவர்கள்;அவரது டைரியில் பெயர்இருந்ததாக கூறப்படுவோர், வீடுகளில் சோதனைக்கு செல்லவில்லை.

அமைச்சர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு, எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் தான் உள் நோக்கம் உள்ளது என, கூறுகிறேன்.. 'தினகரன்,'பென்ஷன்' தொகையில்வசிக்கிறார். அவருக்கு, இவ்வளவு பெரிய வீடு எப்படி?' என, சிலர் கேட்கின்றனர். அரசியல்வாதி என்றால், கோவணத்துடன் தான் அலைய வேண்டும் என, ஆசைப்படுகின்றனரா;

நான், 1989ல் இருந்து தொழில் செய்கிறேன். அரசியலுக்கு வந்த பின், என் கம்பெனிகளை, என் மனைவி கவனிக்கிறார்.பழனிசாமி, பன்னீர் செல்வம் தூண்டுதலில், சோதனை நடந்து உள்ளது. எங்கள் குடும்பம் மட்டும்தான், உங்களுக்கு குறிக்கோளா; ஓராண்டாக, இப்படி செய்கிறீர்களே ஏன்?இவ்வாறு தினகரன் கூறினார்.
விவேக் பெயரில் உள்ள சொத்துகள் என்னென்ன? அதிகாரிகள் பட்டியலிட்டு ஆய்வு



விவேக் பெயரில் உள்ள சொத்துகள் என்னென்ன? என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் பட்டியலிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

நவம்பர் 12, 2017, 04:30 AM
சென்னை,

ஜெயா டி.வி.யின் தலைமை நிர்வாக அதிகாரியும், சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக் வீடு சென்னை கோடம்பாக்கம், ராமநாதன் தெருவில் உள்ளது. விவேக் வீட்டில் நேற்று 3-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது, ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் நகைகள் தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் 2 பேர் அங்கேயே தங்கினர். நேற்று காலையில் மீண்டும் வழக்கம் போல் சோதனை நடைபெற்றது. அப்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமாஸ்’ திரையரங்கம் வாங்கியதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது? பல்வேறு நிறுவனங்கள் பெயரில் நடைபெற்ற வங்கி மற்றும் பண பரிவர்த்தனைகள், அதற்கான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு உயர் அதிகாரி நேரடியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.

மேலும் அவருடைய பெயரில் உள்ள சொத்துகள் என்னென்ன? என்பதை பட்டியலிட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விவேக்கின் நேர்முக உதவியாளரான ராஜூவை, விவேக் இல்லத்தில் இருந்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் அவருடைய காரில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு தலைமை அலுவலகம், சென்னை போயஸ் கார்டனில் செயல்பட்டு வந்த ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகம், அடையாறு கற்பகம் சாலையில் உள்ள டி.டி.வி.தினகரனின் அலுவலகத்துக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது ஏற்கனவே விவேக்கிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் ஒன்றாக இருக்கிறதா? அல்லது முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதா? என்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை சுமார் 2½ மணி நேரம் வரை நீடித்தது. அதற்கு பின்னர், வருமான வரித்துறை உயர் அதிகாரி அவருடைய காரிலேயே ராஜூவையும் அழைத்துக்கொண்டு மீண்டும் விவேக் வீட்டிற்கு வந்தார்.

விவேக் வீட்டில் இருந்து, தங்கம், வைர நகைகளும், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அது குறித்தும் விவேக்கிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே சென்னை அண்ணாநகரில் உள்ள, கீர்த்தனாவின் தந்தை பாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவிலேயே முடிவடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
டெல்லியில் காற்று மாசு காரணமாக டெல்லி- நியூயார்க் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து



டெல்லியில் காற்று மாசு காரணமாக டெல்லி-நியூயார்க் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 11, 2017, 07:13 PM

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி அதன் பகுதிகளில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. காற்றில் நுண்துகள்களின் (பி.எம்.2.5 மற்றும் பி.எம்.10) அளவு வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நச்சுக்காற்றால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவும் அதிகம் இருப்பதால் தலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகலிலும் மேகமூட்டம் போல காணப்படுகிறது. காற்றில் மாசு புகை மூட்டம் போல் காணப்பட்டதால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக விமானம் ரத்து செய்யட்டுள்ளதாக யுனைனெட் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என நிர்வாகம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெரிசலில் சிக்கி காயமடைந்த மாணவன் வீட்டில் இருந்து தேர்வு எழுதலாம் மும்பை பல்கலைக்கழகம் அனுமதி



எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலைய நடைமேம்பால நெரிசலில் சிக்கி காயமடைந்த மாணவன் வீட்டில் இருந்து தேர்வு எழுத மும்பை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது.

நவம்பர் 12, 2017, 04:00 AM

மும்பை,

எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலைய நடைமேம்பால நெரிசலில் சிக்கி காயமடைந்த மாணவன் வீட்டில் இருந்து தேர்வு எழுத மும்பை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது.விபத்தில் காயம்

மும்பை எல்பின்ஸ்டன்ரோடு ரெயில்நிலையத்தில் செப்டம்பர் 29–ந் தேதி கூட்ட நெரிசலால் நடந்த விபத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இதில் 23 பயணிகள் கூட்டநெரிசலில் சிக்கி பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். அதில் ஒருவர் தான் விக்ரோலியை சேர்ந்த ஆகாஷ் (19). அன்றைய தினம் விபத்தில் சிக்கி ஆகாசுக்கு கால் முறிந்தது. இதற்காக அவர் வீட்டில் இருந்து கே.இ.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.வீட்டில் இருந்து எழுத அனுமதி

இந்தநிலையில் மும்பை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு விரைவில் தொடங்க உள்ளது. காயமடைந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதால் பி.காம். மாணவரான ஆகாஷ் தனது தேர்வை எழுத முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் அவர் தனது நிலை குறித்து மும்பை பல்கலைக்கழகத்திடம் முறையிட்டார். இதையடுத்து மும்பை பல்கலைக்கழகம் மாணவர் ஆகாஷ் வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுத அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து மும்பை பல்கலைக்கழக தேர்வு துறை இயக்குனர் அர்ஜூன் காதுலே கூறும்போது:– அரிதிலும், அரிதாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு அன்று மாணவரின் வீட்டிற்கு பல்கலைக்கழக ஊழியர் ஒருவரும், அவர் வீட்டருகே உள்ள கல்லூரியை சேர்ந்த ஒருவரும் செல்வார்கள். அவர்கள் மாணவரை தேர்வு எழுத வைத்து விடைத்தாளை பெற்று வருவார்கள். மாணவன் ஆகாசுக்கு தேர்வு எழுத கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவன் ஆகாசின் தம்பி ரோகித் (11) எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலைய விபத்தில் சிக்கி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
742 பேர் வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை



நவம்பர் 12, 2017, 01:15 AMதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 742 பேரை வக்கீல் தொழிலில் இருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை,

சட்ட படிப்பை முடித்துவிட்டு வக்கீலாக பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக தேசிய அளவில் நடைபெறும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று அகில இந்திய பார் கவுன்சில் 2010-ம் ஆண்டு புதிய விதிமுறையை கொண்டுவந்தது. வக்கீலாக பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அப்படி இல்லாவிடில் அவர்கள் வக்கீல் தொழிலில் இருந்து நீக்கப்படுவார்கள்.

கடந்த 2014-15-ம் ஆண்டுகளில் வக்கீலாக பதிவு செய்தவர்களில் 1,025 பேர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து அவர்களை வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து கடந்த 8-ந்தேதி தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக பி.ஏ., எம்.ஏ. போன்ற பட்டங்களை பெற்று சட்டப்படிப்பை முடித்தவர்களும் வக்கீலாக பதிவு செய்துள்ளனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் வக்கீலாக பதிவு செய்யமுடியாது என்று கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்து வக்கீலாக பதிவு செய்தவர்களின் பெயர் விவரங்களை சேகரித்தது. அதில் முதற்கட்டமாக 742 பேரை வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த 742 பேரின் பெயர்களையும் நிரந்தரமாக வக்கீல் தொழிலில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்று விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

Saturday, November 11, 2017

B.Pharm. student attempts suicide

The suicide attempt by a first year B.Pharm. student, Haron Yousuf, at Pushpagiri Medicity in Thiruvalla has created tense moments for about half-an-hour on Friday.
According to the police, Yousuf reportedly cut his vein in the wrist in the forenoon, accusing the college authorities of reducing internal marks for a few senior students.
The student was given first aid at Pushpagiri Medical College Hospital and his condition was stable, the police said.
Meanwhile, a group of students staged protests on the campus, raising slogans against the management. Two of them climbed the rooftop and threatened to commit suicide, alleging harassment by the college authorities. However, they were placated by the college Principal and the police.
Pushpagiri clarifies
Meanwhile, Pushpagiri chief executive officer (CEO) Fr. Shaji Vazhayil said there was every reason to suspect a conspiracy by certain vested interests to malign the image of the college.
In a statement here on Friday, Fr. Vazhayil said Yousuf had joined the college through lateral entry only two months ago. He was yet to write any university examination and hence his charges against the college authorities regarding internal marks were absolutely baseless. The management had entrusted a five-member committee to inquire into the incident.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...