Sunday, November 12, 2017


நீதிபதியிடம் வாக்குவாதம் டிரைவருக்கு, 'ஜெயில்'

 நவ 11, 2017 21:06

சென்னை, சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த போது, நீதிபதியை எதிர்த்து பேசியவர், உடனடியாக கைது செய்யப்பட்டார்.சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்தவர், ஆல்ப்ரட், 60; அரசு போக்குவரத்து கழகத்தில், ஓட்டுனராக பணியாற்றி உள்ளார். இவர், 2007ல், பிரபல தனியார் நிறுவனத்தில், தவணை முறையில் கார் வாங்கி உள்ளார். அதற்குரிய பணத்தை செலுத்தவில்லை என, கூறப்படுகிறது. இதனால், அந்நிறுவனம், காரை பறிமுதல் செய்து விட்டது.இதை எதிர்த்து, அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நேற்று முன்தினம், நீதிபதி, எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு, ௧௦ ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவதாக கூறிய ஆல்ப்ரட், நீதிபதிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.இதையடுத்து, அவரை, நீதிமன்ற அவதிப்பு வழக்கில் கைது செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற போலீசார், ஆல்ப்ரட்டை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்த விமானம்

 நவ 12, 2017 00:37

பாட்னா, டில்லியில் இருந்து, பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்டு சென்ற விமானம், மீண்டும் டில்லிக்கே திரும்பியதால், பயணியர் ஆத்திரம்அடைந்தனர்.

பீஹார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில்,
டில்லியில் இருந்து, பயணியருடன், ஜெட் ஏர்வேஸ் விமானம், பாட்னாவுக்கு புறப்பட்டது. பாட்னா விமான நிலையத்தில் தரையிறங்க இடம் இல்லாததால், வாரணாசிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அங்கும் தரையிறங்க முடியாததால், வேறு வழியின்றி, விமானம், டில்லி விமான நிலையத்திற்கே திரும்பியது. தாங்கள் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்ததை அறிந்து, பயணியர் ஆத்திரமடைந்தனர்; பின், அனைவரும் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

400 இடங்களில் வாடகை சைக்கிள் சவாரி திட்டம் புதிய முயற்சி  5,000 சைக்கிள்களுடன் களமிறங்குது மாநகராட்சி
Added : நவ 11, 2017 20:08




சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, 400 இடங்களில், 5,000 சைக்கிள்களுடன், வாடகை சைக்கிள் சவாரி திட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இது, சுற்றுச்சூழல் பிரச்னைக்கு தீர்வாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின், 'ஸ்மார்ட் சிட்டி'களிலும், இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.சென்னை மாநகரில், நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து மேம்பாடு, சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பை தடுப்பது என, ஒவ்வொரு நாளும் பல்வேறு சவால்களை, மாநகராட்சியும், போக்குவரத்து போலீசாரும் சந்தித்து வருகின்றனர்.
இதற்கு தீர்வு காண, சர்வதேச அளவில், பல நாடுகளில் கடைபிடிக்கப்படும் வழிகளை, சென்னை மாநகராட்சியும் பின்பற்ற முடிவு செய்துள்ளது.

'ஸ்மார்ட் கார்டு'

முதற்கட்டமாக, இருசக்கர வாகன போக்குவரத்தை குறைக்க, சைக்கிள் பயண திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, பொதுமக்களிடம் சைக்கிள் ஓட்டுவது குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், வாடகை சைக்கிள் சவாரி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.சென்னை நகரில், சில முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில், 400 இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.இவற்றில், பொதுமக்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வகையில், 5,000 சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில், சைக் கிளை எடுக்க விரும்பும் பயணியர், ஆதார் எண்ணுடன், தங்கள் விபரங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும். அதன்பின், சைக்கிள் பயணத்திற்கான, 'ஸ்மார்ட் கார்டு' பயணியருக்கு வழங்கப்படும்.இந்த கார்டை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நபர், தனக்கு விருப்பமான நிலையங்களில் இருந்து, வாடகைக்கு சைக்கிள் பெற்று, அதை, மீண்டும் ஒப்படைக்க வேண்டும். முதற்கட்டமாக, இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதல் அரை மணி நேரத்திற்கு, இலவசமாக சைக்கிள் வழங்கப்படும். பின், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், வாடகை வசூலிக்கப்படும்.

இத்திட்டத்திற்கு, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு முந்தைய ஆய்வு கூட்டத்தை, தனியார் நிறுவனங்களுடன், நவ., 9ல், சென்னை மாநகராட்சி நடத்தி உள்ளது. விரைவில், டெண்டர் விடப்பட்டு, விதிகளின் படி, தனியார் சைக்கிள் போக்குவரத்து நிறுவனம் தேர்வு செய்யப்படும் என, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனி பாதை

சென்னையின் முக்கிய சாலைகளில், சைக்கிள் திட்டத்துக்காக, ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட தனி பாதைகள் பயன்படுத்தப்பட உள்ளன. சைக்கிள் பாதைகளில் மற்ற வாகனங்கள் சென்றால், அபராதம் விதிக்கவும், போலீசாருடன், சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. அதே போல், அனைத்து சாலைகளிலும் சைக்கிள் பயணம் செய்வதற்கான, சிறிய தடுப்புச்சுவர் கொண்ட தனிபாதை அமைக்கவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையின் இந்த முன்னோடி திட்டத்திற்கு, மக்களிடம் பெருத்த வரவேற்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட, மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தப்படும்நகரங்களில், வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.- நமது நிருபர் -

'டெட்' முடிக்காத பட்டதாரிகளுக்கு, 'ஜாக்பாட்'
 நவ 11, 2017 19:32


பள்ளிக்கல்வித்துறையில், 2010க்கு முந்தைய விளம்பரத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வு தேவையில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2011, நவ.,15ல், தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தேர்வு கட்டாயம் என உத்தரவிடப்பட்டது.இந்த அறிவிப்பு வந்த பின், 2011, டிசம்பரில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால், பட்டதாரி ஆசிரியர்கள் 
நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு தரப்பினருக்கு, டெட் அறிவிப்புக்கு முன்பே, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்ததால், டெட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால், அதே பணி நியமனத்தில், டெட் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு டெட் கட்டாயம் ஆனது. பணியில் நியமிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள், இந்த ஆசிரியர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.அதனால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, தகுதி காண் பருவம் முடித்த பின்னும், பணிவரன்முறை உத்தரவு வழங்கப்படவில்லை. 
இது குறித்து, ஆசிரியர்கள் தரப்பில் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து, பள்ளிக்கல்வி இயக்ககம் புதிய
உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன் விபரம்:

தேசிய கல்வி கவுன்சிலின் உத்தரவு, 2010ல், வெளியாவதற்கு முன், பணி நியமனத்துக்கான விளம்பரம் வெளியிடப்பட்டு, அதில் நியமிக்கப்பட்ட 
ஆசிரியர்களுக்கு, டெட் தேர்ச்சி கட்டாயம் இல்லை. இந்த விளம்பரத்தின் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவோருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தாமதமாக நடந்தாலும், அவர்களுக்கு டெட் தேர்வு தேவையில்லை.அவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், பணிவரன்முறை உத்தரவு வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. -நமது நிருபர் -


ஓட்டுரிமை!  வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு...
சட்ட திருத்தம் இயற்ற மத்திய அரசு முடிவு


புதுடில்லி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல்களில் ஓட்டளிக்கும் வகையில், சட்ட திருத்தம் இயற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பிரதிநிதி அல்லது மின்னணு ஓட்டுச்சீட்டு முறை மூலம், அவர்கள் ஓட்டளிக்கலாம் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ள யோசனையையும், மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.



அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, உட்பட பல நாடுகளில், இந்தியர்கள் பலர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, இந்தியாவில் நடக்கும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், ஓட்டளிக்கும் உரிமையில்லை. தங்களுக்கு ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தொடர்ந்து கோரி வருகின்றனர்.

பொது நல மனு

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், வெளிநாடு வாழ் இந்தியரான, ஷம்ஷீர் என்பவர் தாக்கல் செய்த, பொது நல மனுவில் கூறியிருந்த தாவது: பல்வேறு நாடுகளில், ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். ஆனால், இந்திய தேர்தல்களில் ஓட்டளிக்கும் உரிமை, இவர்களுக்குவழங்கப்படவில்லை.

வெளி நாடுகளில் வசிக்கும் தங்கள் நாட்டின ருக்கு, 114 நாடுகள், ஓட்டுரிமை வழங்கி உள்ளன. இதில், ஆசியாவைச் சேர்ந்த, 20 நாடுகள் அடங்கும். இந்தியாவின் வளர்ச்சியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பெரும் பங்கு உள்ளது. வெளிநாடுகளில் வசித்தாலும், இந்திய அரசியலில் தான், அவர்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ளது. அதனால், வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கு,ஓட்டுரிமை வழங்கபட வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை செய்ய, தேர்தல் கமிஷனுக்கும்,மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்து வருகிறது.

பிரதிநிதித்துவ சட்டம்விசாரணையின் போது, தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:வெளிநாடு வாழ் இந்தி யர்களுக்கு, ஓட்டுரிமை வழங்குவதில், தேர்தல் கமிஷன் ஆர்வமாக உள்ளது. இதற்கு, முதலில், மக்கள் பிரதிநிதித்துவசட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய தேர்தல்களில் ஓட்டளிக்க இரண்டு முறைகளை செயல்படுத்தலாம்.

இந்தியாவில் வசிக்கும் ஒருவரை, தங்களின் பிரதிநிதியாக நியமித்து, ஓட்டளிக்க வைக்கலாம். இல்லாவிடில், மின்னணு தபால் ஓட்டுச்சீட்டு மூலம் ஓட்டளிக்கலாம்.வெளிநாடுகளில் உள்ள துாதரகங்கள் மூலமோ, இணையதளம் வழியாகவோ, ஓட்டளிக்கும் முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால், மின்னணு தபால் ஓட்டுச்சீட்டு முறையில், முறைகேடுகள் நடக்க சிறிதும் வாய்ப்பில்லை.

சோதனை அடிப்படையில், முதலில், ஒரு மாநில சட்டசபை தேர்தலில், ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில், இந்த முறையை செயல்படுத்தி பார்க்கலாம்.அதன்பின், அதிக சட்ட சபை தொகுதிகளில் செயல்படுத்தலாம். பின், லோக்சபா தேர்தலிலும் செயல்படுத்தலாம்.இவ்வாறு தேர்தல் கமிஷனின் வழக்கறிஞர் கூறினார்.மத்திய அரசு சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் கூறியதாவது:

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என்பதில்,அரசு ஆர்வமாக உள்ளது. இதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து, பார்லிமென்ட் குளிர் கால கூட்டத் தொடரில், மசோதா தாக்கல் செய்யப் பட்டு, நிறைவேற்றப்படும்.

நடவடிக்கை

வெளி நாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க,தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ள இரண்டு யோசனைகளும்

சிறப்பானவை. இதை அரசும் ஏற்றுக் கொள்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அரசு ஆதரவு தரும்.இவ்வாறு அவர் கூறினார்.

மின்னணு ஓட்டுச்சீட்டு

மின்னணு ஓட்டுச்சீட்டு குறித்து, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளதாவது:பார்லிமென்ட் மற்றும் எந்த மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதோ, அந்த மாநில சட்டசபை தேர்தலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்கலாம்.ஓட்டளிக்க விரும்புபவர்கள், சபையின் காலம் முடிவதற்கு ஆறு மாதத்துக்கு முன், மின்னணு மூல மாகவோ, தபால் மூலமாகவோ, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு, மனு அனுப்ப வேண்டும். இந்த மனுவை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்வார்.

மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள விபரங்கள் திருப்தியளித்தால், சம்பந்தப்பட்ட தொகுதியின், தபால் ஓட்டுச்சீட்டை, மின்னணு வழியாக, மனுதாரருக்கு, தேர்தல் அதிகாரி அனுப்பி வைப்பார்.இந்த ஓட்டுச்சீட்டை, பதிவிறக்கம் செய்ய, மனுதாரருக்கு, 'பாஸ்வேர்ட்' ஒன்று வழங்கப்படும். அதை பயன்படுத்தி, ஓட்டுச்சீட்டை பதிவிறக்கம் செய்து ஓட்டளிக்கலாம். பின், அதை, தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கலாம். இதில், வேறு யாரும் ஓட்டளிக்க முடியாது. முறைகேடு நடக்கவும் வாய்ப்பில்லை. இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை வலையில் சிக்கிஇருக்கும், சசிகலா கும்பல் மீதான பிடி, இறுகி வருகிறது.

 சசி, கும்பல், மீதான, பிடி,இறுகுகிறது!

வருமான வரித்துறை வலையில் சிக்கிஇருக்கும், சசிகலா கும்பல் மீதான பிடி, இறுகி வருகிறது. சோதனைக்குச் சென்ற இடங்களிலெல்லாம், நகைக் குவியல்களும், சொத்துக்கள் வாங்கி குவித்ததற்கான ஆவணங்களும், எக்கச்சக்கமாக அள்ளப்படு கின்றன. சங்கிலி தொடர் போல அடுத்தடுத்து தோண்ட வேண்டியிருப்பதால், நான்காவது நாளாக, இன்றும், 120 இடங்களில் சோதனை தொடரவுள்ளது. வங்கிப் பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாலும், போலி நிறுவனங்கள் பெயரில், வெளிநாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாலும்,
மத்திய அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும், விசாரணைக்கு ஆயத்தமாகி வருகின்றன.





சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்க மானவர்கள், தமிழகத்தில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு மற்றும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதனால், அவர்கள் நிழல் பட்டவர்கள் கூட, கடவுளின் வரம் பெற்றவர் போல, திடீர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். சொத்துக்களின் அளவும், மதிப்பும் உயர உயர, சசிகலா குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என, அனைவரும், தொழிலதிபர் களாக வலம் வரத் துவங்கினர்.

சாம்ராஜ்யம்

அதற்கு ஒரே ஒரு உதாரணமாக, சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன், விவேக்; 25
வயதிற்குள், 1,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள, 11 திரையரங்குகள் உடைய, 'ஜாஸ் சினிமாஸ்' சாம்ராஜ்ஜியத்திற்கு மன்னனாக திகழ்கிறார்.இக்குடும்பத்தினர், கால் வைக்காத துறைகளே இல்லை; தொலைக் காட்சி, நாளிதழ், ரியல் எஸ்டேட், மதுபான ஆலை, காபி தோட்டங்கள், தேயிலை எஸ்டேட்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு, ஏற்றுமதி தொழில், சினிமா என எல்லாவற்றிலும், கோடிகளை அள்ளிக் கொட்டி கோலோச்சுகின்றனர்.

இந்நிலையில், மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி, அமைச்சர் விஜய பாஸ்கரை தொடர்ந்து, சசி கும்பல் குறித்த விபரங்களை, வருமான வரித்துறை திரட்டியது. தகுந்த ஆதாரங்கள் சிக்கியதும், 9ம் தேதி காலை, சென்னை, மன்னார்குடி, தஞ்சை, திருச்சி, ஈரோடு, கோவை, நெல்லை, ஈரோடு, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டில்லி என, 200க்கும் மேற்பட்ட இடங்களில், அதிரடி சோதனையை துவங்கியது.

சென்னையில், தினகரன் வீடு, அவரது தம்பி பாஸ்கரனின், நீலாங்கரை வீடு, மகாலிங்கபுரத்தில், ஜெயா, 'டிவி' மேலாண் இயக்குனர் மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிர்வாகி, விவேக் வீடு, தி.நகரில் உள்ள அவரது சகோதரி, கிருஷ்ணபிரியா வீடு...அண்ணா நகரில் உள்ள விவேக் மாமனார், பாஸ்கர் வீடு, பெசன்ட் நகரில் உள்ள நடாஜன் வீடு, மயிலாப்பூரில் உள்ள அவரது சகோதரர்,
ராமச்சந்திரன் வீடு மற்றும் ஜெயா, 'டிவி' அலுவலகத்திலும், விரிவான சோதனைகள் துவங்கின.

போலி

மேலும், மன்னார்குடியில், திவாகரன் வீடு, தஞ்சையில் உள்ள சசிகலா அண்ணன் மகன், மகாதேவன் வீடு, நடராஜனின் உறவினர், ராஜேந்திரன் வீடு, கந்தர்வகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான கல்லுாரி, கடலுார் ஜோதிடர், சந்திரசேகர் வீடு...நாமக்கல்லில், சசி வக்கீல் செந்தில், கோவை தொழில் அதிபர், ஆறுமுக சாமி, நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட், புதுச்சேரியில் உள்ள தினகரனின் பண்ணைத் தோட்டம் என, முதல் நாள் சோதனை நீண்டது.

இரண்டாவது நாள் சோதனையில், சசி குடும்பத்தினர், 10க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரில் மேற்கொண்ட, பல முறைகேடான பரிவர்த்தனைகள், பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்த சொத்துக்கள் என, 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமான ஆவணங்கள் சிக்கின. அவை தொடர்பாக, 3 வது நாளாக, நேற்றும், விவேக், கிருஷ்ணபிரியா, திவாகரன் வீடுகள், கோவை, மன்னார்குடி, தஞ்சை என, 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்தது. இதில், மேலும் பல நுாறு கோடி ரூபாய்க்கான ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

நகை குவியல்

இச்சோதனையின், மூன்றாவது நாள் முடிவில், நேற்று பல வங்கிகளில் நடந்த முறைகேடான
பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தஞ்சை, சென்னை வங்கிகளின், 'லாக்கர்'களில் இருந்தும், பாஸ்கரன் வீட்டில் இருந்தும், தங்க நகை குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, இவர்களின் குடும்பத்தினர் செய்த, அதிக பரிவர்த்தனைகள் காரணமாக, 30க்கும்

மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.

ஆளை விழுங்கிய சுறா

ஜாஸ் ஆங்கில திரைப்படத்தில் சுறா மீன், அப்படியே ஆளை விழுங்குவதைப் போல், ஒரு பிரபல நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்து, ஜாஸ் திரையரங்க வளாகத்தை கையகப் படுத்திய தகவல், 2015ல் வெளியானது. இந்த பரிவர்த்தனை தொடர்பாகவும், வேறு சில திரையரங்குகள் வாங்கியது தொடர்பாகவும், வரித்துறையினரிடம் ஆவணங்கள் சிக்கியுள்ளன. அது குறித்து, விவேக்கிடம், வருமான வரி கூடுதல் ஆணையர், ஜெயராகவன் தலைமையிலான அதிகாரிகள், துருவி துருவி விசாரித்து வருகின்றனர். மேலும், சோதனை நடந்த வீடுகள், அவர்களது வங்கி லாக்கர்களில், கிலோ கணக்கில் தங்கம், வைர நகைகள் சிக்கியுள்ளன.

அவற்றுக்கெல்லாம் ஆவணங்களையும், வருமான ஆதாரத்தையும் கேட்டு, வரித் துறையினர் பிடியை இறுக்கி வருகின்றனர். சொத்து ஆவணங்கள், நகை முறைகேடுகள் அதிகரிப்பதால், சோதனையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

120 இடங்களில் சோதனை

இது குறித்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:சோதனையை ஓரிரு நாளில் முடித்து விடலாம் என, நினைத்து தான், ஆயிரம் அதிகாரிகளுடன் களத்தில் இறங்கி னோம். ஆனால், ஒரு இடத்தில் சோதனை செய்ய சென்றால், அங்கு கிடைக்கும் ஆதாரத்தை வைத்து, அடுத்த இடத்தை தோண்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால், மேலும் பல இடங்களில் சோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது சென்னையில், 60 இடங்கள் உட்பட 120 இடங்களில் சோதனை நடக்கிறது.எனவே, நாங்கள் ஏற்கனவே திட்டமிட்ட இடங்களுடன், புதுப்புது இடங்களிலும் சோதனை தொடர்கிறது. சோதனை குறித்த விபரங்களை, தினசரி மாலையில், மத்திய நேரடி வரி வாரியத்திற்கு அனுப்புகிறோம். இந்த சோதனை, நான்காவது நாளாக, நாளையும் தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்தடுத்து, 'ஷாக்'

இதற்கிடையில், வருமான வரித்துறை சோதனையில், சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், பினாமி பெயர்களில், பல கோடி ரூபாய்க்கு, சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தெரிய வந்துள்ளதால், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையும் களமிறங்க தயாராகி வருகிறது.சசிகலா குடும்பத்தினர், பினாமி பெயர்களில், வௌிநாடுகளிலும் சொத்து வாங்கி குவித்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்காக, சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், வருமான வரித்துறையினருடன், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையும் கைகோர்க்க உள்ளன.

இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வரி ஏய்ப்பு செய்தவர், சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பணம் பதுக்கல், லஞ்சப் பணத்தில் வாங்கிய சொத்துகள் குறித்து, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். அந்த வகையில், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட, சினிமா பட அதிபர், மதன், அரசு மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி உள்ளிட்டோரை, அமலாக்கத்துறை மற்றும், சி.பி.ஐ., கைது செய்தது. அந்த வகையில், சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடு மற்றும் அலுவலங்களில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், வௌிநாட்டு முதலீடுகள் குறித்தும் விசாரிக்க உள்ளோம். குற்றம் செய்தது தெரிய வந்தால், கைது செய்வோம். அவர்களின் சொத்துக்களையும் முடக்குவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜோதிடர் வீட்டில்பத்திரங்கள் சிக்கின

கடலுார், திருப்பாதிரிப்புலியூர், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர், பிரபல ஜோதிடர் சந்திரசேகர். இவரின் வீடு மற்றும் அலுவலகம், அருகருகில் அமைந்து உள்ளன. இவர், பங்குச் சந்தை வணிகம், ஜோதிடம், நில வணிகம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளுக்கு மட்டும், சந்திரசேகர் ஜோதிடம் பார்ப்பார். அமைச்சர் ஒருவரின் வாயிலாக, தினகரனின் அறிமுகம் கிடைத்தது. அவர் கூறிய பல விஷயங்கள், தினகரனுக்கு பலித்ததால், ஆஸ்தான ஜோதிடராக மாறினார்.

இருவருக்கும் இடையில், பண பரிவர்த்தனைகள் இருந்தன. ஜோதிடரின் வீடு மற்றும் அலுவலகத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று மூன்றாவது நாளாக, சோதனை நடத்தினர். அப்போது, பங்குச் சந்தையில் முதலீடு செய்த, பல பத்திரங்கள் மற்றும், 'சிடி'க்களை, அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.அதில், பிரபல நகை கடை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் சிக்குவர் என தெரிகிறது.

மனைவிக்கு பிறந்தநாள்:

விவேக்

மனைவி கீர்த்தனாவிற்கு, நேற்று பிறந்த நாள். ஆனால், அதை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. அவரை, வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. அவரது பெற்றோர் வீட்டில் சோதனை முடிந்ததால், மகளை வாழ்த்த, பெற்றோர் வந்தனர். ஆனால், கீர்த்த னாவை பார்க்க, அவர்களை அனுமதிக்க வில்லை.

பைக்கில் போய் சோதனை:

வருமான வரித்துறை அதிகாரிகள், முதல் இரு தினங்களில், கார்களில் சோதனைக்குச் சென்றனர். பின், சென்னை, தலைமையகத் திற்கும், சோதனை நடந்த இடத்திற்கும், அடிக்கடி செல்ல வேண்டி இருந்ததாலும், கால விரயத்தை தவிர்ப்பதற்காகவும், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

'சிடி' சிக்கியதா:

சென்னை, அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக, 'சிடி' சிக்கியதாக தகவல் வெளியானது. அதற்காக தான் சோதனை நடந்தது என்றும் தகவல் பரவியது. அதை, வரித்துறையினர் மறுத்தனர்.

புகழேந்திக்கு, 'சம்மன்:

'கர்நாடக மாநில, அ.தி.மு.க., பிரமுகரான புகழேந்திக்கு, நாளை ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அதேபோல், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோருக்கும், சம்மன் அனுப்ப, வரித்துறை முடிவெடுத்துள்ளது.

நகைக்காக நாடகமா:

சென்னை, அண்ணா நகரில், விவேக்கின் மாமனார், பாஸ்கர் வீடு உள்ளது. அங்கு, ஏராளமான நகைகளை, வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர். அவை, தன் உறவினர்களுடைய நகைகள் என, பாஸ்கர் தரப்பு விளக்கம் அளித்தது. அதற்கேற்ப, வீட்டு வாசலில், அவரது உறவுக்கார பெண்கள் கூடி, வரித்துறையினரிடம், நகைகளை தரும்படி கேட்டு, தகராறு செய்துள்ளனர். நகைக்காக, அவர்கள் நாடகம் ஆடுவதை உணர்ந்த வரித்துறையினர், அதை காதில் வாங்க மறுத்து விட்டனர்.

அறையை பூட்டி'சீல்' வைப்பு

நாமக்கல்லில், சசிகலா வழக்கறிஞர் உட்பட, ஐந்து பேரின் வீடு, அலுவலகங்களில், மூன்றாம் நாளாக, நேற்றும் சோதனை நடத்தினர்.ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில், அவரது ஜூனியர், பாண்டியன், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர், பாலுசாமி, நண்பர் பிரகாசம், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த தொழிலதிபர், சுப்ரமணியம் ஆகியோர் வீடுகளில், மூன்றாவது நாளாக, நேற்றும் வருமான வரித்துறையினர் சோதனையை தொடர்ந்தனர்.அதில், செந்தில் வீட்டில் ஒரு அறை பூட்டப்பட்டிருந்தாகவும், அதற்கு, வருமான வரித்துறையினர், 'சீல்' வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவை, நீலகிரியில் ரகசிய ஆவணங்கள்

கோவையில், சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான, மணல் குவாரி கான்ட்ராக்டர், ஆறுமுகசாமி, மர வியாபாரி, சஜீவன் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரி அதிகாரிகள், மூன்றாவது நாளாக, நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம், கோடநாடு பங்களாவில், மரச்சாமான் வேலை களை செய்த, மர வியாபாரி, சஜீவனுக்கு சொந்தமான, போத்தனுார், லாயர்ஸ் காலனி வீடு மற்றும் கடை; ஆர்.எஸ்.புரத்திலுள்ள கடை மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

போத்தனுார் வீட்டில் மட்டும், மூன்றாவது நாளாக, நேற்றும் சோதனை தொடர்ந்தது. கோடநாடு பங்களாவின் கட்டுமான பணிகளை செய்த ஆறுமுகசாமிக்கு, ரேஸ் கோர்சில் உள்ள வீடு, ராம்நகர் கட்டுமான அலுவலகம், அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்திலும், வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். வீடு, கட்டுமான அலுவலகத்தில், இரண்டு நாட்களாக நடந்த சோதனை முடிந்த நிலையில், அவினாசி சாலை, 'செந்தில் டவர்சில்' மட்டும், மூன்றாவது நாளாக, நேற்றும் சோதனை நீடித்தது. சோதனையில், ரகசிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

50 போலி கம்பெனிகள்5,000 ஆவணங்கள்

வருமான வரித் துறையினர் கூறியதாவது:

சசிகலா கும்பலுக்கு சொந்தமான, 50 போலி கம்பெனிகள் மூலமாக, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரிலும், ஏராளமான சொத்து ஆவணங்கள் கிடைத்துள்ளன. நிலம், கட்டடம், சினிமா என, எல்லா துறைகளிலும், போலி கம்பெனிகள் பெயரில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, 5,௦௦௦த்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஆவண குவியலை பார்த்தால், மலைப்பாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -
அரசியல்வாதின்னா  கோவணத்தோட அலையணுமா

சென்னை, ''நான், காந்தியின் பேரன் அல்ல. ஆனால், எங்களை குற்றம் சொல்பவர்கள், காந்தியின் பேரன், பேத்திகளா?'' என,தினகரன் கேள்வி எழுப்பினார்.



சென்னையில், அவர் அளித்த பேட்டி:

வருமான வரி சோதனையை, நாங்கள் எதிர்க்க வில்லை; வரவேற்கிறோம். புதுச்சேரியில், என் பண்ணை வீட்டில், பாதாள அறை உள்ளதாக செய்தி வெளியானது;அப்படி எதுவும் கிடை யாது. என் வீட்டிற்கு வந்த, வருமான வரி துறை அதிகாரிகள், அவர்களுடைய கடமையை செய்தனர்; தவறான தகவல் எதையும் பரப்ப வில்லை. ஆனால், 184 இடங்களில் சோதனை
என்பதை தான், உள்நோக்கம் உடையது என, கூறுகிறேன். எதையோ எதிர்பார்த்து வந்துள்ளனர்.

நான், காந்தியின் பேரன் போல் பேசவில்லை; சாதாரண மனிதன் தான்.ஆனால், எங்களை குற்றம் சொல்பவர்கள், காந்தியின் பேரன், பேத்திகளா? என்பதையும் பார்க்க வேண்டும். நாங்கள் பெரிய கட்சி என, எங்கும் கூறவில்லை.ஜெ., மறைவுக்கு பின், சசிகலா தலைமையில் இயங்கும் சிறிய குழு. எங்களை அழித்துவிட்டு, யாரும் வளர நினைத்தால் முடியாது.கடந்த,1996ல்,எங்கள் வீடுகளில்சோதனை நடந்தது; 20 ஆண்டுகளுக்கு பின்,தற்போது சோதனை நடந்துள்ளது. சட்டத்தை மதிப்பவர்கள், நாங்கள்.சோதனை முடிந்த பின், உண்மை தெரிய வரும்.

வருமான வரித்துறைஅதிகாரிகள், 350 கார்களை வாடகைக்கு, 'பாஸ்ட் டிராக்' நிறுவனத்தில் எடுத்து உள்ளனர்.வேறு நிறுவனம்இல்லையா; சேகர் ரெட்டி நண்பராக இருந்தவர்கள்;அவரை பெரிய ஒப்பந்த தாரராக உருவாக்கியவர்கள்;அவரது டைரியில் பெயர்இருந்ததாக கூறப்படுவோர், வீடுகளில் சோதனைக்கு செல்லவில்லை.

அமைச்சர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு, எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் தான் உள் நோக்கம் உள்ளது என, கூறுகிறேன்.. 'தினகரன்,'பென்ஷன்' தொகையில்வசிக்கிறார். அவருக்கு, இவ்வளவு பெரிய வீடு எப்படி?' என, சிலர் கேட்கின்றனர். அரசியல்வாதி என்றால், கோவணத்துடன் தான் அலைய வேண்டும் என, ஆசைப்படுகின்றனரா;

நான், 1989ல் இருந்து தொழில் செய்கிறேன். அரசியலுக்கு வந்த பின், என் கம்பெனிகளை, என் மனைவி கவனிக்கிறார்.பழனிசாமி, பன்னீர் செல்வம் தூண்டுதலில், சோதனை நடந்து உள்ளது. எங்கள் குடும்பம் மட்டும்தான், உங்களுக்கு குறிக்கோளா; ஓராண்டாக, இப்படி செய்கிறீர்களே ஏன்?இவ்வாறு தினகரன் கூறினார்.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...