Sunday, November 12, 2017


சென்னை, கடலோர மாவட்டங்களில் 2-வது சுற்று பருவமழை இன்றிரவு தொடங்குகிறது; கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்

Published : 11 Nov 2017 16:17 IST



வடக்கு கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் இரண்டாவது சுற்று இன்றிரவு முதல் தொடங்குகிறது என வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/tamilnaduweatherman/) கூறியிருப்பதாவது:

வடக்கு கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் இரண்டாவது சுற்று இன்றிரவு முதல் தொடங்குகிறது. வழக்கமாகவே, வடகிழக்கு பருவமழையானது காற்றழுத்த தாழ்வு நிலைகள் சார்ந்தது. ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்போது 3 முதல் 4 நாட்களுக்குத் தொடர்ந்து மழை பெய்யும். ஆனால், கடந்த முறை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து 9 நாட்களுக்கு மழை தந்தது. அதன்பின்னர், கடந்த மூன்று நாட்களுக்கு நமக்கு பெரிய அளவில் மழை இல்லை. தற்போது, 2-வது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன்மூலம், நாகப்பட்டினம் முதல் சென்னைவரையிலான வடக்கு கடலோர மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

எங்கே நிலைகொண்டுள்ளது? எப்படி இருக்கிறது?

இந்த 2-வது காற்றழுத்த தாழ்வுநிலையானது வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதேவேளையில் இது ஒரு பரந்த தாழ்வுநிலையாக இருக்கிறது. அதாவது, மிகப் பெரிய பரப்பளவில் மேகக்கூட்டங்கள் உள்ளன. மேகக்கூட்டங்கள் நெருக்கமாக இல்லை. தென்மேற்கு பகுதியில் எப்போதெல்லாம் காற்றழுத்த தாழ்வு, நிலை கொள்கிறதோ அப்போதெல்லாம் வடக்கு கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நல்ல மழை பெயும். மற்ற பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யும்.

இந்த காற்றழுத்த தாழ்வானது ஆந்திரா நோக்கி நகரும் என பிபிசி கணித்தூள்ளது. ஆனால், சென்னைக்கு மழை வாய்ப்பு குறித்து எதுவும் கூறவில்லை. சென்னையில் எப்படி மழை வெளுத்துவாங்கப்போகிறது என்பதை நீங்கள் பாருங்கள்.

இன்று இரவு முதல் மழை..

சென்னையில் இன்றிரவு மழை தொடங்கும். புதன்கிழமை வரை விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் கனமழையும், சில நேரங்களில் மிககனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிககனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

வேலூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம் ரத்து சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க நீதிபதி அறிவுரை

 நவ 12, 2017 00:42

சென்னை, மருத்துவமனைக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், 'டெங்கு' ஒழிப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மனு தாக்கல்
சேலத்தைச் சேர்ந்த, 'சண்முகா மருத்துவமனை' மற்றும், 'சேலம் கேன்சர் இன்ஸ்டிடியூட்' நிறுவன நிர்வாக இயக்குனர், டாக்டர் பன்னீர்செல்வம் மற்றும் சுந்தரேசன் தாக்கல் செய்த மனுக்கள்:

சேலம் மாநகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீசில், மருத்துவமனைக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதமும், சுந்தரேசன் என்பவருக்கு, 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனை மற்றும்  தனியார் இடத்தில், சுகாதாரமற்ற சூழ்நிலை இருப்பதால், இந்த அபராதம் விதிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் இடத்தை ஆய்வு செய்யாமல், எங்களிடம் விளக்கம் பெறாமல், நேரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளன.

இம்மனுக்களை, நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார்.

சேலம் மாநகராட்சி தரப்பில் ஆஜரான, சிறப்பு பிளீடர், திவாகர், ''தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள், தங்கள் வளாகத்தை சுத்தமாக வைத்திருக்கவில்லை. அதனால், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

அபராதம் விதிப்பதற்கு முன், அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என்பதால், மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில், மனுதாரர்கள், நிவாரண நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

பாதிப்பு
மனுதாரர்களும், தங்கள் தரப்பு விளக்கத்தை, உடனடியாக அளிக்க வேண்டும்; அளிக்கவில்லை என்றால், அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்து, புகைப்படங்கள், வீடியோ எடுத்து, தங்கள் தரப்பு நிலையை, மாநகராட்சி உறுதி செய்து கொள்ளலாம்.

ஆரோக்கியமற்ற சூழ்நிலை நிலவினால், நோயாளிகள் மட்டுமல்லாமல், மருத்துவமனை உதவியாளர்கள், பணியாளர்கள் என, அனைவரும் பாதிக்கப்படுவர்.
எனவே, மருத்துவமனையில் இருக்கும் உள்நோயாளிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, மருத்துவமனைக்கு உடனடியாக, தண்ணீர் வினியோகம் வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு, அரசு மற்றும் அதிகாரிகள் கூறிய அறிவுரைகளை, இந்த நீதிமன்றமும் பரிந்துரைக்கிறது.

 கொசுக்கள் உற்பத்தியாகும் முட்டைகளை தின்னும், 'மின்னுாஸ்' மீன்களை வளர்க்க வேண்டும்
 தண்ணீர் தேங்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
 மேல்நிலை தண்ணீர் தொட்டி, தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும்
இவை உள்ளிட்ட பரிந்துரைகளை கடைபிடிக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர்., நடித்த, திருடாதே என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரம் எழுதிய பாடலான, 'திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்ற பாடல், திருட்டுக்கு மட்டும் அல்ல, சுற்றுச்சூழலை மீறுபவர்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பொருந்தும். 

ஏனென்றால், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய தார்மீக பொறுப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது.

இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

நீதிபதியிடம் வாக்குவாதம் டிரைவருக்கு, 'ஜெயில்'

 நவ 11, 2017 21:06

சென்னை, சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த போது, நீதிபதியை எதிர்த்து பேசியவர், உடனடியாக கைது செய்யப்பட்டார்.சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்தவர், ஆல்ப்ரட், 60; அரசு போக்குவரத்து கழகத்தில், ஓட்டுனராக பணியாற்றி உள்ளார். இவர், 2007ல், பிரபல தனியார் நிறுவனத்தில், தவணை முறையில் கார் வாங்கி உள்ளார். அதற்குரிய பணத்தை செலுத்தவில்லை என, கூறப்படுகிறது. இதனால், அந்நிறுவனம், காரை பறிமுதல் செய்து விட்டது.இதை எதிர்த்து, அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நேற்று முன்தினம், நீதிபதி, எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு, ௧௦ ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவதாக கூறிய ஆல்ப்ரட், நீதிபதிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.இதையடுத்து, அவரை, நீதிமன்ற அவதிப்பு வழக்கில் கைது செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற போலீசார், ஆல்ப்ரட்டை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்த விமானம்

 நவ 12, 2017 00:37

பாட்னா, டில்லியில் இருந்து, பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்டு சென்ற விமானம், மீண்டும் டில்லிக்கே திரும்பியதால், பயணியர் ஆத்திரம்அடைந்தனர்.

பீஹார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில்,
டில்லியில் இருந்து, பயணியருடன், ஜெட் ஏர்வேஸ் விமானம், பாட்னாவுக்கு புறப்பட்டது. பாட்னா விமான நிலையத்தில் தரையிறங்க இடம் இல்லாததால், வாரணாசிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அங்கும் தரையிறங்க முடியாததால், வேறு வழியின்றி, விமானம், டில்லி விமான நிலையத்திற்கே திரும்பியது. தாங்கள் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்ததை அறிந்து, பயணியர் ஆத்திரமடைந்தனர்; பின், அனைவரும் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

400 இடங்களில் வாடகை சைக்கிள் சவாரி திட்டம் புதிய முயற்சி  5,000 சைக்கிள்களுடன் களமிறங்குது மாநகராட்சி
Added : நவ 11, 2017 20:08




சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, 400 இடங்களில், 5,000 சைக்கிள்களுடன், வாடகை சைக்கிள் சவாரி திட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இது, சுற்றுச்சூழல் பிரச்னைக்கு தீர்வாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின், 'ஸ்மார்ட் சிட்டி'களிலும், இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.சென்னை மாநகரில், நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து மேம்பாடு, சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பை தடுப்பது என, ஒவ்வொரு நாளும் பல்வேறு சவால்களை, மாநகராட்சியும், போக்குவரத்து போலீசாரும் சந்தித்து வருகின்றனர்.
இதற்கு தீர்வு காண, சர்வதேச அளவில், பல நாடுகளில் கடைபிடிக்கப்படும் வழிகளை, சென்னை மாநகராட்சியும் பின்பற்ற முடிவு செய்துள்ளது.

'ஸ்மார்ட் கார்டு'

முதற்கட்டமாக, இருசக்கர வாகன போக்குவரத்தை குறைக்க, சைக்கிள் பயண திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, பொதுமக்களிடம் சைக்கிள் ஓட்டுவது குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், வாடகை சைக்கிள் சவாரி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.சென்னை நகரில், சில முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில், 400 இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.இவற்றில், பொதுமக்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வகையில், 5,000 சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில், சைக் கிளை எடுக்க விரும்பும் பயணியர், ஆதார் எண்ணுடன், தங்கள் விபரங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும். அதன்பின், சைக்கிள் பயணத்திற்கான, 'ஸ்மார்ட் கார்டு' பயணியருக்கு வழங்கப்படும்.இந்த கார்டை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நபர், தனக்கு விருப்பமான நிலையங்களில் இருந்து, வாடகைக்கு சைக்கிள் பெற்று, அதை, மீண்டும் ஒப்படைக்க வேண்டும். முதற்கட்டமாக, இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதல் அரை மணி நேரத்திற்கு, இலவசமாக சைக்கிள் வழங்கப்படும். பின், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், வாடகை வசூலிக்கப்படும்.

இத்திட்டத்திற்கு, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு முந்தைய ஆய்வு கூட்டத்தை, தனியார் நிறுவனங்களுடன், நவ., 9ல், சென்னை மாநகராட்சி நடத்தி உள்ளது. விரைவில், டெண்டர் விடப்பட்டு, விதிகளின் படி, தனியார் சைக்கிள் போக்குவரத்து நிறுவனம் தேர்வு செய்யப்படும் என, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனி பாதை

சென்னையின் முக்கிய சாலைகளில், சைக்கிள் திட்டத்துக்காக, ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட தனி பாதைகள் பயன்படுத்தப்பட உள்ளன. சைக்கிள் பாதைகளில் மற்ற வாகனங்கள் சென்றால், அபராதம் விதிக்கவும், போலீசாருடன், சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. அதே போல், அனைத்து சாலைகளிலும் சைக்கிள் பயணம் செய்வதற்கான, சிறிய தடுப்புச்சுவர் கொண்ட தனிபாதை அமைக்கவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையின் இந்த முன்னோடி திட்டத்திற்கு, மக்களிடம் பெருத்த வரவேற்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட, மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தப்படும்நகரங்களில், வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.- நமது நிருபர் -

'டெட்' முடிக்காத பட்டதாரிகளுக்கு, 'ஜாக்பாட்'
 நவ 11, 2017 19:32


பள்ளிக்கல்வித்துறையில், 2010க்கு முந்தைய விளம்பரத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வு தேவையில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2011, நவ.,15ல், தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தேர்வு கட்டாயம் என உத்தரவிடப்பட்டது.இந்த அறிவிப்பு வந்த பின், 2011, டிசம்பரில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால், பட்டதாரி ஆசிரியர்கள் 
நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு தரப்பினருக்கு, டெட் அறிவிப்புக்கு முன்பே, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்ததால், டெட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால், அதே பணி நியமனத்தில், டெட் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு டெட் கட்டாயம் ஆனது. பணியில் நியமிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள், இந்த ஆசிரியர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.அதனால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, தகுதி காண் பருவம் முடித்த பின்னும், பணிவரன்முறை உத்தரவு வழங்கப்படவில்லை. 
இது குறித்து, ஆசிரியர்கள் தரப்பில் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து, பள்ளிக்கல்வி இயக்ககம் புதிய
உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன் விபரம்:

தேசிய கல்வி கவுன்சிலின் உத்தரவு, 2010ல், வெளியாவதற்கு முன், பணி நியமனத்துக்கான விளம்பரம் வெளியிடப்பட்டு, அதில் நியமிக்கப்பட்ட 
ஆசிரியர்களுக்கு, டெட் தேர்ச்சி கட்டாயம் இல்லை. இந்த விளம்பரத்தின் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவோருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தாமதமாக நடந்தாலும், அவர்களுக்கு டெட் தேர்வு தேவையில்லை.அவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், பணிவரன்முறை உத்தரவு வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. -நமது நிருபர் -


ஓட்டுரிமை!  வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு...
சட்ட திருத்தம் இயற்ற மத்திய அரசு முடிவு


புதுடில்லி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல்களில் ஓட்டளிக்கும் வகையில், சட்ட திருத்தம் இயற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பிரதிநிதி அல்லது மின்னணு ஓட்டுச்சீட்டு முறை மூலம், அவர்கள் ஓட்டளிக்கலாம் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ள யோசனையையும், மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.



அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, உட்பட பல நாடுகளில், இந்தியர்கள் பலர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, இந்தியாவில் நடக்கும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், ஓட்டளிக்கும் உரிமையில்லை. தங்களுக்கு ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தொடர்ந்து கோரி வருகின்றனர்.

பொது நல மனு

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், வெளிநாடு வாழ் இந்தியரான, ஷம்ஷீர் என்பவர் தாக்கல் செய்த, பொது நல மனுவில் கூறியிருந்த தாவது: பல்வேறு நாடுகளில், ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். ஆனால், இந்திய தேர்தல்களில் ஓட்டளிக்கும் உரிமை, இவர்களுக்குவழங்கப்படவில்லை.

வெளி நாடுகளில் வசிக்கும் தங்கள் நாட்டின ருக்கு, 114 நாடுகள், ஓட்டுரிமை வழங்கி உள்ளன. இதில், ஆசியாவைச் சேர்ந்த, 20 நாடுகள் அடங்கும். இந்தியாவின் வளர்ச்சியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பெரும் பங்கு உள்ளது. வெளிநாடுகளில் வசித்தாலும், இந்திய அரசியலில் தான், அவர்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ளது. அதனால், வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கு,ஓட்டுரிமை வழங்கபட வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை செய்ய, தேர்தல் கமிஷனுக்கும்,மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்து வருகிறது.

பிரதிநிதித்துவ சட்டம்விசாரணையின் போது, தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:வெளிநாடு வாழ் இந்தி யர்களுக்கு, ஓட்டுரிமை வழங்குவதில், தேர்தல் கமிஷன் ஆர்வமாக உள்ளது. இதற்கு, முதலில், மக்கள் பிரதிநிதித்துவசட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய தேர்தல்களில் ஓட்டளிக்க இரண்டு முறைகளை செயல்படுத்தலாம்.

இந்தியாவில் வசிக்கும் ஒருவரை, தங்களின் பிரதிநிதியாக நியமித்து, ஓட்டளிக்க வைக்கலாம். இல்லாவிடில், மின்னணு தபால் ஓட்டுச்சீட்டு மூலம் ஓட்டளிக்கலாம்.வெளிநாடுகளில் உள்ள துாதரகங்கள் மூலமோ, இணையதளம் வழியாகவோ, ஓட்டளிக்கும் முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால், மின்னணு தபால் ஓட்டுச்சீட்டு முறையில், முறைகேடுகள் நடக்க சிறிதும் வாய்ப்பில்லை.

சோதனை அடிப்படையில், முதலில், ஒரு மாநில சட்டசபை தேர்தலில், ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில், இந்த முறையை செயல்படுத்தி பார்க்கலாம்.அதன்பின், அதிக சட்ட சபை தொகுதிகளில் செயல்படுத்தலாம். பின், லோக்சபா தேர்தலிலும் செயல்படுத்தலாம்.இவ்வாறு தேர்தல் கமிஷனின் வழக்கறிஞர் கூறினார்.மத்திய அரசு சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் கூறியதாவது:

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என்பதில்,அரசு ஆர்வமாக உள்ளது. இதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து, பார்லிமென்ட் குளிர் கால கூட்டத் தொடரில், மசோதா தாக்கல் செய்யப் பட்டு, நிறைவேற்றப்படும்.

நடவடிக்கை

வெளி நாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க,தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ள இரண்டு யோசனைகளும்

சிறப்பானவை. இதை அரசும் ஏற்றுக் கொள்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அரசு ஆதரவு தரும்.இவ்வாறு அவர் கூறினார்.

மின்னணு ஓட்டுச்சீட்டு

மின்னணு ஓட்டுச்சீட்டு குறித்து, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளதாவது:பார்லிமென்ட் மற்றும் எந்த மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதோ, அந்த மாநில சட்டசபை தேர்தலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்கலாம்.ஓட்டளிக்க விரும்புபவர்கள், சபையின் காலம் முடிவதற்கு ஆறு மாதத்துக்கு முன், மின்னணு மூல மாகவோ, தபால் மூலமாகவோ, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு, மனு அனுப்ப வேண்டும். இந்த மனுவை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்வார்.

மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள விபரங்கள் திருப்தியளித்தால், சம்பந்தப்பட்ட தொகுதியின், தபால் ஓட்டுச்சீட்டை, மின்னணு வழியாக, மனுதாரருக்கு, தேர்தல் அதிகாரி அனுப்பி வைப்பார்.இந்த ஓட்டுச்சீட்டை, பதிவிறக்கம் செய்ய, மனுதாரருக்கு, 'பாஸ்வேர்ட்' ஒன்று வழங்கப்படும். அதை பயன்படுத்தி, ஓட்டுச்சீட்டை பதிவிறக்கம் செய்து ஓட்டளிக்கலாம். பின், அதை, தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கலாம். இதில், வேறு யாரும் ஓட்டளிக்க முடியாது. முறைகேடு நடக்கவும் வாய்ப்பில்லை. இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...