Monday, November 13, 2017


நர்ஸ்கள் நியமனத்தில் ரூ.25 கோடி வசூல்

 நவ 13, 2017 02:02

மதுரை: ''நர்ஸ்கள் நியமனம், பணியிட மாறுதலுக்கு புரோக்கர்கள் மூலம் 25 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்தது குறித்து விசாரிக்க வேண்டும்,'' என, மதுரை சுகாதார உரிமை சமூக செயற்பாட்டாளர் சி.ஆனந்தராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:'அரசு மருத்துவமனைகளில் நர்ஸ்கள் 779 பேர் நியமிக்கப்படுவர்' என உத்தரவிடப்பட்டது. நியமனத்திற்கு முன், பணியில் உள்ள நர்ஸ்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி ஏப்., 19 முதல் 22 வரை நர்ஸ் பணியிடங்கள், பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங்கை கண்துடைப்பாக நடத்தினர். இதில் பெரும்பாலானோருக்கு விரும்பிய இடம் கிடைக்கவில்லை.இதுகுறித்து மதுரை, கன்னியாகுமரி உட்பட எட்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளில், 2017 ஜனவரியில் இருந்து மே 15 வரை பணியில் சேர்ந்த நர்ஸ்கள் விபரம் வழங்க, தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தேன்.
இதில், ஏப்ரலில் கவுன்சிலிங் நடக்கும் முன்பே 124 பேர்களுக்கு நியமனம், மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது தெரிந்தது. புரோக்கர்கள் மூலம் தலா 7 லட்ச ரூபாய் வீதம் 25 கோடி ரூபாய் வரை வசூல் நடந்துள்ளது.இம்முறைகேடு குறித்து அறிய கவுன்சிலிங்கிற்கு முன்பே மாறுதல், பணிநியமனம் பெற்ற நர்ஸ்களிடம் விசாரிக்க வேண்டும். சென்னையில் நாளை (நவ.,14) நடக்க உள்ள கவுன்சிலிங்கிற்கு வருமாறு, நவ.,10 இரவு தான் உத்தரவிட்டுள்ளனர். இதனால், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. எனவே, நாளை (நவ.,14) கவுன்சிலிங்கை ரத்து செய்துவிட்டு விதிப்படி 10 நாட்கள் கால அவகாசம் தந்து, டிஜிட்டல் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங் நடத்த வேண்டும்.இவ்வாறு கூறினார்.

'ஒயிட்னர்' போதைக்கு வாலிபர் பரிதாப பலி

 நவ 13, 2017 01:56


சிவகங்கை: சிவகங்கை அருகே 'ஒயிட்னர்' போதைபழக்கத்திற்கு அடிமை யான வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிர்இழந்துள்ளார்.சிவகங்கை அருகே காஞ்சிரங்காலை சேர்ந்தவர் 
கோபால்,24. எழுத்துக்களை மறைப்பதற்கு பயன்படுத்தும் 'ஒயிட்னர்',பஞ்சர் ஒட்ட பயன்
படுத்தும் 'சொலுஷன்' போன்றவற்றை முகர்ந்து பார்த்து, அதில் வரும் வாசனை மூலம் ஏற்படும் போதைக்கு அடிமையானார். இவரை இப்பழக்கத்திலிருந்த மீட்கஇவரது தாயார் ஆனந்தவள்ளி, திருநெல்வேலியில் உள்ள போதை மறுவாழ்வு இல்லத்தில் அவரை தங்க வைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கோபால், தாயாரை பார்த்து வருவதாக கூறி விட்டு காஞ்சிரங்கால் 
வந்திருந்தார்.அங்கு 'ஒயிட்னர்', 'சொலுஷன்' கிடைக்காததால், பிளாஸ்டிக் பொருட்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தும் 'பெவிக்கால்' பசையை போதைக்கு பயன்படுத்தியுள்ளார். 

இதனால், உணர்விழந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மாலை அனுமதிக்கப்பட்டார். இரவு 11:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.சிவகங்கை இன்ஸ்பெக்டர் மோகன் விசாரிக்கிறார்.

55 மாணவரை கைவிட்ட அரசு : பள்ளி நடத்தும் கிராம மக்கள்

Added : நவ 13, 2017 02:01


சிவகங்கை: சிவகங்கை அருகே 55 மாணவர்களை அரசு கைவிட்டதால் கிராம மக்களே தங்களது சொந்த நிதியில் பள்ளி நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை ஒன்றியம் மேலப்பூங்குடி ஊராட்சி அலங்கம்பட்டியில் 1986ல் 'அசேபா' தன்னார்வ நிறுவனம் சார்பில் தொடக்கப் பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளியில் அலங்கம்பட்டி, பாப்பாகுடி, சாலுார் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்தனர். தன்னார்வ நிறுவனம், பள்ளியை நடத்த முடியாமல் 2012 ல் கைவிட்டது. இதனால் 100 மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்தனர். அங்கு பணிபுரிந்த ஆசிரியர் சங்கரபாஸ்கர், சொந்த முயற்சியால் ஆறு மாதங்கள் சம்பளம் வாங்காமலேயே பள்ளியை நடத்தினார்.
'பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என கல்வி அமைச்சர், கலெக்டருக்கு கிராமத்தினர் மனு கொடுத்தனர். ஆனால் பள்ளியை ஏற்க அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து கிராமமக்களே தங்களது சொந்த செலவில் பள்ளியை நடத்தி வருகின்றனர். அவர்கள் இரண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகின்றனர். மேலும் பள்ளிக்கு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். சமீபத்தில் கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்துள்ளனர்.
அரசு விதிமுறைப்படி 25 மாணவர்கள் இருந்தாலே தொடக்கப் பள்ளி துவங்கலாம். விதிமுறை இருந்தும் பள்ளியை ஏற்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
கிராமமக்கள் கூறியதாவது: 
2012-13 முதல் 5 ஆண்டுகளாக பள்ளியை நடத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தில் 55 குழந்தைகள் உள்ளனர். பள்ளி தொடர்ந்து நடக்குமா என்ற பயத்தில் சிலர் பாப்பாகுடி, மேட்டுப்பட்டி பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர். 
வசதியில்லாதோரின் குழந்தைகள் தொடர்ந்து இங்கு பயின்று வருகின்றனர். தற்போது 25 குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் கிடைக்கவில்லை.
நாங்கள் தொடர்ந்து மனு கொடுத்ததின் விளைவாக 65 சென்ட் இடம், பள்ளி கட்டடம், தளவாட சாமான்களை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுக்க சொன்னார். 2015 ல் பதிவு செய்து கொடுத்தும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர், என்றனர்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பரமதயாளன் கூறுகையில், ''நான் அக்டோபரில் இருந்து தான் பொறுப்பு அலுவலராக உள்ளேன். அலங்கம்பட்டியில் பள்ளி துவங்குவது குறித்து 
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


பல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை

 நவ 13, 2017 01:45

சென்னை: 'நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக்கூடாது' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுஉள்ளது.

தனியார் கல்லுாரிகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், பல்கலைகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தங்கள் பெயருடன், 'பல்கலை' என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. இதுகுறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததால், உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன் விபரம்:யு.ஜி.சி., விதிகளின் படி, தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், பல்
கலைக்கு இணையான அந்தஸ்து பெற்று, தங்களை பல்கலைகளாக பிரபலப்படுத்துகின்றன. இது, விதிகளுக்கு முரணானது. எதிர்காலத்தில், அரசு நிறுவனங்களை தவிர, வேறு எந்த கல்லுாரியும் பல்கலை என, தங்களை பிரபலப்படுத்தக்கூடாது.

பல்கலை என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும். இதுகுறித்து, டிச., 3க்குள், செயல்
படுத்திய அறிக்கையை, யு.ஜி.சி., தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநில உயர்கல்வித்துறைக்கும், பல்கலைகளுக்கும்,
யு.ஜி.சி., செயலர், பி.கே.தாகூர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் யு.ஜி.சி., விதி  களின்படி, எந்ததனியார் கல்வி நிறுவனமும், தங்கள் பெயருடன் பல்கலை என, கூறக்கூடாது. ஆனால், அடைப்புக்குறிக்குள் 'பல்கலைக்கு இணையாக கருதப்படும்' என்ற, வார்த்தையை பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், எந்த விதமான வார்த்தையை பயன்படுத்தலாம் என, நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,க்கு கருத்து தெரிவிக்கலாம்.அதன்பின், மத்திய மனிதவள மேம்பாட்டு
அமைச்சகம், ஒருமித்த முடிவு எடுத்து, ஒரு வார்த்தையை அறிவிக்கும். தற்போது, பல்கலை என்ற வார்த்தையை நீக்கி, அதற்கான ஆதாரத்துடன், வரும், 26க்குள், யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தயாராகிறது!'மோசடி மன்னன்' விஜய் மல்லையாவுக்கு சிறை...
உள்துறை அமைச்சகம் இன்று அவசர ஆலோசனை


புதுடில்லி: வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தொடர்புடைய விஜய் மல்லையாவை, 61, நாடு கடத்துவதற்கு, அவரது வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சிறைகளில் உள்ள வசதி குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவுக்கு எதிராக, வழக்குகள் தொடரப்பட்டன.

கோரிக்கை

இதையடுத்து, அவர், ஐரோப்பிய நாடான, பிரிட்டனின், லண்டனுக்கு தப்பிச் சென்றார். மல்லையாவை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, பிரிட்டன் அரசுக்கு, மத்திய அரசு கோரிக்கை வைத்தது.அதன்படி, லண்டன் நீதிமன்றத்தில், மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், டிச., 4ல், இறுதி விசாரணை துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முடிவு செய்வதற்காக, 20ம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

கடந்த முறை, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'இந்தியாவில் உள்ள சிறைகளில், போதிய வசதி இல்லை; அங்கு, மல்லையாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது' என, அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதற்கிடையில், வேறு இரு வழக்குகளில், நாடு கடத்தும் மத்திய அரசின் கோரிக்கையை, அந்நாட்டு நீதிமன்றங்கள் நிராகரித்தன.

சிறைகளில் போதிய வசதியில்லை; அங்கு மனித உரிமை மீறல் நடக்கிறது என, அதற்கு காரணம் தெரிவிக்கப் பட்டது.

மிகுந்த கவனம்

அதனால், மல்லையா வழக்கில் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என, மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் உள்ளது. மல்லையாவின் வழக்கறிஞர்கள் வாதம் குறித்து பதிலளிக்கும்படி, உள்துறை அமைச்சகத்தை, வெளியுறவு அமைச்சகம் கேட்டிருந்தது. அதன்படி, சிறைகளில் உள்ள வசதி குறித்து, உள்துறை செயலர், ராஜிவ் கவுபா தலைமையில், ஆலோசனைக் கூட்டம், டில்லியில் இன்று நடக்க உள்ளது.

இது குறித்து, உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:

நம் நாட்டில் உள்ள சிறைகளில், போதிய வசதி இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. பல முதல்வர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என, பல்வேறு தரப்பு மக்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மல்லையாவை நாடு கடத்தி ஒப்படைக்கும் போது, எந்த சிறையில் அடைப்பது என்பது குறித்து, இப்போதைக்கு முடிவு செய்ய முடியாது.

அது தொடர்பாக, நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டு, அது, பிரிட்டன் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும்.பிரிட்டன் நீதிமன்றம் கேள்வி எழுப்பினால், நம் நாட்டு சிறைகளில் உள்ள வசதி குறித்தும், மல்லையாவை எந்த சிறையில் அடைக்கலாம் என்பது குறித்தும், முறையாக
தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கசாப் சிறை,'ரெடி'

சிறைகளில் வசதியில்லை என்ற, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவின் வழக்கறிஞர்கள் வாதத்துக்கு பதிலளிக்கும் வகையில், 'தேவையான வசதிகளுடன் கூடிய சிறை, மும்பையின், ஆர்தர் சாலை சிறை வளாகத்தில் உள்ளது' என, மஹாராஷ்டிர அரசு கூறியுள்ளது .'ஐரோப்பிய தரத்துடன் கூடிய வசதிகள் உடைய

சிறை, இந்தியாவில் இல்லை. நீரிழிவு நோய் உள்ளதால், மல்லையாவுக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்க அனுமதி அளிப்பதுடன், அவருக்கு, ஐரோப்பிய பாணியிலான கழிப்பறை வசதியும் அளிக்கப்பட வேண்டும்' என, மல்லையாவின் வழக்கறிஞர்கள், பிரிட்டன் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மஹா., மாநிலம், மும்பையைச் சேர்ந்த சிறை துறை கூடுதல், டி.ஜி.பி.,- பி.கே. உபாத்யாய், சமீபத்தில், மத்திய அரசுக்கு புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையை அளித்துள்ளார்.

அதன் விபரம்:

மல்லையா தரப்பில் கேட்பது போன்ற வசதிகளுடன் கூடிய சிறை, மும்பை ஆர்தர் சாலை சிறை வளாகத்தில், 12வது பிரிவில், சிறை உள்ளது. அங்கு, 'ஏசி' வசதி மட்டும் கிடையாது. ஐரோப்பிய பாணியிலான, கழிப்பறை வசதி தேவைப்பட்டால், அதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

விசாரணை கைதியாக இருக்கும் வரை, நீதிமன்றம் உத்தரவிட்டால், வீட்டில் இருந்து சமைத்த உணவு அனுமதிக்கப்படும். 2008ல் நடந்த, மும்பை தாக்குதலில் பிடிபட்ட, பாக்., பயங்கரவாதி, அஜ்மல் கசாப்புக்காக, பாதுகாப்பு அம்சங்களுடன், இந்த சிறை பிரிவு அமைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இலவச, 'லேப் - டாப்' வழங்க புது கட்டுப்பாடு
மாணவர் வீடுகளில் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு


அரசின் இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்து உள்ளதால், மாணவர் வீடுகளில் சோதனை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.



தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை நலத் திட்டங்கள், தமிழக அரசால் மேற்கொள்ளப் படுகின்றன.அதில், பிளஸ் 2 முடித்தோருக்கு, 'லேப் - டாப்' வழங்கும் திட்டமும் ஒன்று. 2016 - 17ல், பிளஸ் 2 முடித்தோருக்கு, சில வாரங்களாக,லேப் - டாப் வழங்கப்படுகிறது.

ஆள் மாறாட்டம் நடக்காமல் தடுக்க, நேரடியாக, மாணவர்களிடம் மட்டுமே, லேப் - டாப் வழங்க வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.ஆனால், பல


பள்ளிகளில், அந்தந்த பகுதி அரசியல் பிரபலங்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தினரின் தலையீட்டால், மாணவர்கள் பெயரில், மற்றவர் களிடம், லேப் - டாப் வழங்கப்படுவதாக புகார் எழுந்துஉள்ளது.

இதனால், முறைகேடு நடந்துள்ளதாஎன்பதை கண்டறியவும், மீதமுள்ள, லேப் - டாப்களை வழங்கு வதில், விதிமீறல் இல்லாமல் தடுக்கவும், புதிய விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழியாக,தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்க துறையின் இயக்குனர், கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

* சம்பந்தப்பட்ட மாணவரிடம் மட்டுமே, லேப் - டாப் வழங்க வேண்டும். அதை, பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் வகையில், மாணவர்கள், சம்பந்தப் பட்ட வகுப்பு ஆசிரியரிடமும், கையெழுத்து பெறவேண்டும்

* மாணவரின் பிளஸ் 2 தேர்வு, ஆதார், மொபைல் போன் எண்கள், மாணவர்களின் பெயர் மற்றும் வீட்டு முகவரி போன்றவற்றை, அரசு வழங்கிய ரசீதில் குறிப்பிட வேண்டும்

* மாணவர்கள் இன்றி, அவர்களின் பெயரை கூறி   வரும் யாரிடமும், லேப் - டாப் வழங்க கூடாது. பள்ளிகளில், லேப் - டாப் வினியோகம் துவங்கி, மூன்று வாரங்கள் வரை, மாணவர் வரா விட்டால், அதை, பள்ளிகள், முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்

* பள்ளிகள் தோறும், லேப் - டாப் வழங்கப்பட்ட மாணவர்களில், 10 சதவீதம் பேரை, தோராய மாக தேர்வு செய்து, அவர்களின் வீடுகளில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், நேரடி, திடீர் கள ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்ததற்கு, மாணவர்கள், பெற்றோரிடம் கையெழுத்து பெற்று, விபர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- நமது நிருபர் -
சென்னையில் பரவலாக மழை


சென்னையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

நவம்பர் 13, 2017, 01:30 AM

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. கடந்த மாதம் 31-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. அதன்பின்னர், சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் ஏரிகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்தது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடித்தது. அவ்வப்போது சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

நேற்று மாலை 5.30 மணியளவில் கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர் போன்ற பகுதிகளில் லேசான மழை பெய்தது. இரவு 8 மணிக்கு மேல் எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, மகாகவி பாரதிநகர், கண்ணதாசன் நகர், வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், வில்லிவாக்கம், பாடி, ராமாபுரம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நந்தனம், முகப்பேர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வளசரவாக்கம், ஈக்காட்டுதாங்கல், வடபழனி, ஆதம்பாக்கம், கிண்டி, கொடுங்கையூர் உள்பட சென்னையில் பல இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பல இடங்களில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பூந்தமல்லி, குன்றத்தூர், போரூர், மதுரவாயல், மாங்காடு, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் பகுதிகளில் மழை பெய்தது.

ஆலந்தூர், பரங்கிமலை, மீனம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதியிலும் மழை கொட்டியது. மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல், கீழ்கட்டளை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், மாமல்லபுரம், நெம்மேலி போன்ற இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர், சோழவரம், மணலிபுதுநகர், பழவேற்காடு, ஆரணி, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது.

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை பகுதிகளில் லேசான மழை பெய்தது.

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...