Monday, November 13, 2017


'ஒயிட்னர்' போதைக்கு வாலிபர் பரிதாப பலி

 நவ 13, 2017 01:56


சிவகங்கை: சிவகங்கை அருகே 'ஒயிட்னர்' போதைபழக்கத்திற்கு அடிமை யான வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிர்இழந்துள்ளார்.சிவகங்கை அருகே காஞ்சிரங்காலை சேர்ந்தவர் 
கோபால்,24. எழுத்துக்களை மறைப்பதற்கு பயன்படுத்தும் 'ஒயிட்னர்',பஞ்சர் ஒட்ட பயன்
படுத்தும் 'சொலுஷன்' போன்றவற்றை முகர்ந்து பார்த்து, அதில் வரும் வாசனை மூலம் ஏற்படும் போதைக்கு அடிமையானார். இவரை இப்பழக்கத்திலிருந்த மீட்கஇவரது தாயார் ஆனந்தவள்ளி, திருநெல்வேலியில் உள்ள போதை மறுவாழ்வு இல்லத்தில் அவரை தங்க வைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கோபால், தாயாரை பார்த்து வருவதாக கூறி விட்டு காஞ்சிரங்கால் 
வந்திருந்தார்.அங்கு 'ஒயிட்னர்', 'சொலுஷன்' கிடைக்காததால், பிளாஸ்டிக் பொருட்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தும் 'பெவிக்கால்' பசையை போதைக்கு பயன்படுத்தியுள்ளார். 

இதனால், உணர்விழந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மாலை அனுமதிக்கப்பட்டார். இரவு 11:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.சிவகங்கை இன்ஸ்பெக்டர் மோகன் விசாரிக்கிறார்.

No comments:

Post a Comment

HC urges cash limit for govt servants

HC urges cash limit for govt servants  K.Kaushik@timesofindia.com 30.08.2026 Madurai: Madras high court has sought a response from the state...