Monday, November 13, 2017


UGC asks 123 deemed-to-be varsities to drop ‘university’ from names

TNN | Nov 13, 2017, 00:51 IST


HIGHLIGHTS

UGC secretary has directed the heads of these institutes that they should “restrain from using the word ‘university'.

Instead, the institution may mention the word ‘deemed to be university’ within parenthesis.
Failure to do so will invite necessary action against the deemed to be university in accordance with the UGC Regulations, 2016.



DEHRADUN: As many as 123 institutions of higher education which are deemed to be universities have been directed by the University Grants Commission (UGC) to refrain from using the word 'university' in their names.

In a circular issued on November 10, a copy of which is with TOI, UGC secretary PK Thakur citing a Supreme Court order dated November 3, has directed the heads of these institutes that they should "restrain from using the word 'university' within one month from today." "Instead, the institution may mention the word 'deemed to be university' within parenthesis.

Failure to do so will invite necessary action against the deemed to be university in accordance with the UGC (lnstitutions Deemed to be Universities) Regulations, 2016," the circular says.

Among the list of institutions which have been sent the directive are the Delhi-based Indian Agricultural Research Institute (Pusa), Indian Institute of Foreign Trade, Institute of Liver and Biliary Sciences and Jamia Hamdard.

Other institutions on the list include the National Dairy Research Institute, Karnal, Forest Research Institute, Dehradun, BIT Mesra (Ranchi), Christ University, Bengaluru, Narsee Monjee Institute of Management Studies, Mumbai, Symbiosis International University, Pune, BITS Pilani, Indian Veterinary Research Institute, Izzatnagar (UP), Graphic Era University, Dehradun and Gurukul Kangri Vishwavidyalaya, Haridwar among others.

Through the circular, the institutions have also been told that "in those cases where the government's notification is with the word 'university', the deemed to be university may submit a proposal with an alternative name (without using the word 'university') to the UGC/ministry of HRD so that necessary amendment can be made by MHRD." The institutions have been asked to ensure compliance "within 15 days from receipt of the letter."

Reacting to the circular, the representatives of most of the institutions approached by TOI claimed that they were already using "deemed to be university" in their names.

R K Singh, director of Indian Veterinary Research Institute (IVRI) situated in Izatnagar, Bareilly, said, "UGC's order will have no impact on IVRI as we do not use the word 'university' in our name since the beginning because our research institute is more important than the varsity.

For academic-related work, we mention IVRI and use the phrase 'deemed to be university' in brackets."

(With inputs from Haridwar & Bareilly)

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இனி "பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது: யுஜிசி உத்தரவு


By  சென்னை,  |   Published on : 13th November 2017 03:21 AM  | 
ugc

"பல்கலைக் கழகம்' என்ற பெயரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் இனி பயன்படுத்தக் கூடாது. உடனடியாக நீக்கிவிட வேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
 உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை யுஜிசி எடுத்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை நாடு முழுவதும் உள்ள 123 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 28 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றுள்ளன. அந்தச் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
 உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், நாடு முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் பெயர்களில் "பல்கலைக் கழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றன. இது யுஜிசி சட்டப் பிரிவு 23-க்கு எதிரானதாகும். எனவே, இதுதொடர்பாக யுஜிசி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
 இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக யுஜிசி சட்டப் பிரிவு 23-இன் கீழ் ஒரு மாதத்துக்குள்ளாக உரிய நடவடிக்கை எடுக்க யுஜிசி-யை அறிவுறுத்தியுள்ளது.
 அதன்படி, நாடு முழுவதும் உள்ள 123 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அவற்றின் பெயரில் "பல்கலைக் கழகம்' என்பதைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. தங்களது கல்வி நிறுவனங்களின் பெயரோடு பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நீக்கத் தவறும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது யுஜிசி வழிகாட்டுதல் 2016-இன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பல்கலைக்கழகம் என்ற பெயருக்குப் பதிலாக, எந்தவிதமான மாற்று வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்பது குறித்த பரிந்துரையை யுஜிசி-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சமர்ப்பிக்கலாம்.
 அடுத்த 15 நாள்களுக்குள் இந்தப் பரிந்துரையைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் தேவையானத் திருத்தத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவரும் என சுற்றறிக்கையில் யுஜிசி தெரிவித்துள்ளது.
 
 
 

தினகரன் குடும்ப ஜோதிடர் நவ.20-இல் ஆஜராக வருமான வரித்துறை சம்மன்


By DIN  |   Published on : 12th November 2017 10:02 PM  |
கடலுார்: கடலுாரில் தினகரன் குடும்ப ஜோதிடர் சந்திரசேகருக்கு நவம்பர் 20-ஆம் தேதி புதுச்சேரியில் விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடலூரில் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டில் நேற்று சனிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அளித்துள்ளது.
 

இனி 5G யுகம்


By DIN  |   Published on : 13th November 2017 12:00 AM 
5g

தொலைத் தொடர்பு சேவையில் இது 4ஜி யுகம். 2ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான தொலைத் தொடர்பு சேவையிலிருந்து முன்னேறி 3ஜி-க்கு மாறுவதற்கு நீண்ட காலமானது. அதிலிருந்து 4ஜி-க்கு மேம்படுவதற்கும் நீண்ட காலம் பிடித்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் 4ஜி மொபைல் இணைய சேவை அறிமுகமாகி, தற்போதுதான் பலருக்கும் 4ஜி சேவை பற்றித் தெரிய வந்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் சுமார் 25 கோடி வாடிக்கையாளர்களிடம் 4 ஜி சேவை சென்று சேர்ந்திருக்கிறது. அதற்குள், கடந்த சில மாதங்களாக 5ஜி சேவை பற்றி பேச்சுக்கள் எழத் தொடங்கிவிட்டது. 
மொபைல் இணைய உலகின் அடுத்த கட்ட புரட்சியான 5ஜி, அடுத்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ அறிமுகமாகும் என்று கணிக்கப்படுகிறது.
மருத்துவத் துறை, பிற தொழில் துறையினர் என்று பல்வேறு தரப்பினர் இப்போதே 5ஜி தொழில் நுட்பத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர். 
இணைய வசதியை பரவலாகவும் சாமானிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் மொபைல் இணைய சேவைக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், தரைவழி மூலமாக பதிக்கப்படும் பிராட்பேண்ட் சேவைக்கு நிகரான வேகத்திலும் தரத்திலும் மொபைல் இணைய சேவை இயங்கவில்லை என்ற குறை வாடிக்கையாளர்களுக்கு உண்டு. அதேபோல, ஒரே இடத்தில் பல வாடிக்கையாளர்கள் மொபைல் இணைய சேவையைப் பயன்படுத்தும் பட்சத்தில் வேகம் மட்டுப்படவும் வாய்ப்புண்டு. 5ஜி சேவை இந்தக் குறைகளைப் போக்கும் விதமாக அமையும்; அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகள், தகவல்களை செல்லிடப்பேசி வழியாகவே மிக வேகமாக அனுப்ப முடியும் என்று மின்னணுவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில் வங்கி சேவை, நமது அன்றாட அலுவல் தொடர்பான ஏராளமான சேவைகள், தகவல்கள் விரல் நுனியில் கிடைக்கின்றன.
பெருநிறுவனங்களின் இயக்குநர் கூட்டங்களைக் கூட காணொலி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலமாக நடத்த முடிகிறது. கடைகளில் பொருள்களை வாங்குவதற்கும் பெட்ரோல் நிரப்புவதற்கும் கூட ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. கணினி பயன்பாடும், டிஜிட்டல் மயமாதலும் மேலும் பரவலாகப் போகிறது. அதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பும் மேம்படுத்தப்பட வேண்டும். 
இந்த நிலையில்தான், 5ஜி தொழில்நுட்பம் வருகிறது.
5ஜி சேவையில் மின்னணுப் போக்குவரத்து சீரானதாகவும், மிகவும் திறன் வாய்ந்ததாகவும் இருக்கும். தற்போதைய சேவைகளை விட மிகவும் இது நுட்பமானது. இதனால், இணைய சேவைகளில் ஏற்படும் தாமதம் வெகுவாகக் குறையும். அதிக நம்பத்தன்மை கொண்டதாகவும் அதிக பாதுகாப்பு கொண்டதாகவும் இயங்கும். இணைய சேவையை இன்னும் பரவலாகவும், அதே நேரத்தில் ஆழமாகவும் விரிவுப்படுத்தும். தரைவழி பிராட்பேண்ட் சேவைக்கு நிகரான சேவையாக மொபைல் இணைய சேவையும் உருவெடுக்கும். 
மேலும், 5ஜி செல்லிடப்பேசிகள், பல தரப்பட்ட இணைய சேவைகளையும் பயன்படுத்துவதற்கான பாலமாக அமையும். அதைப் பற்றி பின்னர் பார்க்கலாம்.
5ஜி சேவை ஒரு விநாடிக்கு 20 ஜிபிபிஎஸ் வேகத்தில் தகவல் போக்குவரத்தைக் கையாளும் திறன் உள்ளது. தற்போதைய இணையதள சேவை வேகத்துடன் ஒப்பிடுகையில் 5ஜி 100 மடங்கு வேகத்துடன் இயங்கக் கூடியது. ஒரு விநாடிக்கு குறைந்தபட்சம் 100 எம்.பி.க்கு மேல் தகவல்களைப் பதிவிறக்கம் முடியும்.இதன் மூலம், தடையற்ற இணைய வசதி சாத்தியமாகும். 
ஆனால் வெறும் செல்லிடப்பேசி அரட்டை, கேளிக்கைகளுக்கு மட்டும் இந்தத் தொழில்நுட்பத்தை உபயோகிக்காமல் வேறு பல பயனுள்ள வேலைகளிலும் ஈடுபடுத்தலாம்.
இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐ.ஓ.டி.) என்னும் வீட்டு சாதனங்கள், அலுவலக சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி செல்லிடப்பேசி மூலம், ரிமோட் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது என்கிற தொழில்நுட்ப யுகம் தொடங்கியுள்ளது.
வீடுகளில், மின் விசிறி, மின் விளக்கு, ஏசி, ஃபிரிட்ஜ், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, அலுவலகப் பணி என எல்லாவற்றையும் இணைத்துப் பயன் பெறலாம்.
ஐ.ஓ.டி. செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் அதி நவீன ஏசி. ஃபிரிட்ஜ், மின் விசிறி போன்ற வீட்டு உபயோக சாதனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர்.
இதனை சாத்தியமாக்குவதில் 5ஜி முக்கியப் பங்காற்றப் போகிறது.
மருத்துவம், கல்வி, தானியங்கி வாகனங்கள், ரோபோட்டுகள், தொழிற்சாலை இயந்திரங்கள், போக்குவரத்து என பல்வேறு துறையினருக்கும் 5ஜி சேவை மிகவும் பயனளிப்பதாக இருக்கும். அதேபோல, பொலிவுறு நகரங்கள், பொலிவுறு இல்லங்கள், அளவு மதிப்பீட்டு சாதனங்கள், ரிமோர்ட் மூலம் இயங்கும் இயந்திரங்கள், வாகனங்களை இயக்குதல் என பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களுக்கு 5ஜி அடிப்படையாகத் திகழப் போகிறது.
5ஜி திறனை எதிலெல்லாம் புகுத்தி, எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரையில், 5ஜி சேவை 2019-ஆம் ஆண்டில் அறிமுகமாகும் என்று கூறலாம். உடனடியாக நம் கையில் உள்ள செல்லிடப்பேசிக்கு அது வருகிறதோ இல்லையோ, தொழில்துறையில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. அந்த வகையில் நாமும் அதன் பயனைப் பெறலாம்.
இந்த தொழில்நுட்பத்துக்கான சோதனைகளை பிஎஸ்.என்.எல். நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மேற்கொண்டுள்ளது. ஏர்டெல், ரிலையன்ஸ், டொகோமோ போன்ற தனியார் நிறுவனங்களும் அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளன. அடுத்த ஆண்டில் 5ஜி சேவைக்கான ஏலத்தை மத்திய அரசு நடத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.
5ஜி சேவையின் அறிமுகம் பொருளாதாரத்துக்கு நிச்சயமாக உதவும். இப்போதே தொலைத் தொடர்பு என்பது அன்றாட மனித வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் தொட்டிருக்கிறது.
பல்வேறு வீட்டுப் பொருள்கள் வரை அந்தத் தொழில்நுட்பம் பரவும்போது அதன் தேவை, உற்பத்தி அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
உலக அளவில் புதிய தொழில்நுட்பத்தில் அமைந்த சாதனங்கள் துறையில் 12 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5ஜி சாதனங்கள் உற்பத்தி, கட்டுமானம், பொறியியல் மேம்பாடு ஆகிய பிரிவுகளில் முதலீடு நடைபெறும்.
இத் தொழில்நுட்பம் 2.2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்கிறது ஓர் ஆய்வு. செல்லிடப்பேசி துறையில் மட்டும் 1.2 கோடி வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகும்; அந்தத் துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும்.
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மட்டும் 85 சதவீத வாடிக்கையாளர்களுக்கு 4ஜி வசதி இருக்கும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இது, அடுத்த கட்டமான 5ஜி சேவைக்கு இயல்பாகவே நகரும் என்று கணிக்கப்படுகிறது.
-சந்திர. பிரவீண்குமார், டி.எஸ்.ஆர்.
சென்னையில் பணத்திமிரால் அநியாயமாக பறிக்கப்படும் உயிர்கள்- நிர்கதியாகும் ஏழைகளின் குடும்பங்கள்!

 Posted By: Lakshmi Priya Published: Sunday, November 12, 2017, 16:21 [IST] 

சென்னை : குடித்து விட்டு வாகனம் ஓட்டும் பண முதலைகளின் வாரிசுகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதோடு பாதிக்க்கப்படும் ஏழைகளின் குடும்பத்தினர் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இளங்கன்று பயமறியாது என்பது பழமொழி. அதற்கேற்ப இளைஞர்கள் சிறிதும் பயமின்றி சகட்டுமேனிக்கு இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் சாலை விபத்துகள் ஏற்படுவதோடு, அவர்கள் எப்படி வருகிறார்கள் என்பதை யூகிக்க முடியாமல் தானாகவும் விபத்து சிக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. 

தீவிபத்தில் தாயை இழந்தார் திருத்தணியை அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு மயிஷா (7), ரஞ்சனா (5) என்ற மகள்கள். கடந்த ஆண்டு மே மாதம் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி புஷ்பாவும் இளைய மகள் ரஞ்சனாவும் உயிரிழந்தனர். இதனால் மயிஷா தனது பாட்டியின் பராமரிப்பில் உள்ளார். மயிலாப்பூரில் விபத்து சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஆறுமுகமும் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு படுத்துள்ளார். அப்போது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஜய்ஆனந்த் என்பவரின் மகன் விகாஸ் தனது நண்பருடன் மதுபோதையில் கார் ஓட்டி வந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 ஆட்டோக்கள் மீதும் பயங்கரமாக மோதினார். 

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகம் உயிரிழந்தார். தாயை இழந்த சிறுமி மயிஷா தந்தையையும் இழந்துவிட்டாள். அதே மயிலாப்பூரில் மற்றொரு விபத்து தற்போது மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மயிலாப்பூரில் ஆட்டோக்களை நிறுத்தி விட்டு ஓட்டுநர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டிய லயோலா கல்லூரி மாணவர்கள் ஆட்டோ மீது கடுமையாக மோதினர். இதில் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் உயிரிழந்துவிட்டார். 5 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். 

அபராதம் வசூலும், வழக்குப் பதிவும் இதுபோன்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தும் குற்றங்களுக்கு வெறும் அபராதம் விதிப்பது, வழக்குப் பதிவு செய்வது, இழப்பீடு வாங்கித் தருவது ஆகியவற்றை செய்துவிட்டால் போதுமா. அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பம் நடத்துவதே மிகவும் சோதனையாகும். ஆனால் அந்த குடும்பத்தின் தலைவன் இதுபோன்ற பணத்திமிரால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்க நேரிட்டால் அவரது குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றன. தண்டனைகள் தீவிரம் மக்களுக்காக போராடுவோரை குண்டர் சட்டத்தில் பிடித்து போடும் அரசு உயிரிழப்புகளை ஏற்படுத்துவோருக்கு ஜாமீன் கொடுக்காமல் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் கடுமையான தண்டனையால் வாகனம் ஓட்டும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இளைஞர்களும் குடித்துவிட்டு தான் அழிவதோடு இதுபோன்று ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடாமல் சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்ட வேண்டும்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/what-was-the-solution-stop-accidents-caused-rich-people/articlecontent-pf273338-301551.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.121.156.30&utm_campaign=client-rss

கனமழை தொடருமா? - என்ன சொல்கிறார் பாலசந்திரன்...

கனமழை தொடருமா?  என்ன சொல்கிறார் பாலசந்திரன்...
மிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. பருவமழையின் தொடக்கத்தில் சென்னையில் சில நாள்கள்  தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாயின.  
தாழ்வான பகுதிகளில் இன்னும் கூட தண்ணீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக சென்னையில் மேக மூட்டமாக இருக்கிறது. ஆனால், மழை பெய்யவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை (நவம்பர் 12) திடீரென மழை பெய்தது. சில நிமிடங்கள் மட்டும் பெய்த நிலையில் நின்றுவிட்டது. பின்னர் இரவு 8.45-க்கு மீண்டும் மழை தொடங்கியது. நகரின் பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வளசரவாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர், பாலசந்திரனிடம் கேட்டோம். “தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இது தமிழகத்தை நோக்கி நகருமா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது. எனினும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது பரந்த அளவில் பரவியிருக்கிறது. இதன் தாக்கத்தால்தான் இப்போது சென்னையில் மழை பெய்கிறது. கடலோர மாவட்டங்களிலும் மழை தொடரும்” என்றார்.

சென்னையில் ஆட்டோ ஸ்டாண்டுக்குள் புகுந்த சொகுசு கார் : * நட்சத்திர ஓட்டலில் 'வீக் எண்ட்' கும்மாளம் * போதையில் 5 மாணவர்கள் அட்டகாசம் * 5 வாகனங்கள் சேதம்; ஒருவர் பலி

 நவ 13, 2017 02:09

சென்னை : நட்சத்திர ஓட்டலில், 'வீக் எண்ட்' கும்மாளத்தில், அளவுக்கதிகமாய் மது குடித்த, ஐந்து கல்லுாரி மாணவர்கள், போதையில் சொகுசு காரை ஓட்டிச் சென்று, விபத்தை ஏற்படுத்தினர். இதில், ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த, ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன; ஓட்டுனர் ஒருவர் பலியானார்.சென்னை, மயிலாப்பூர் கத்தீட்ரல் சாலையில், அகர்வால் கண் மருத்துவமனை அருகே, ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்கு நள்ளிரவு நேரங்களிலும், சவாரி வரும் என்பதால், 10க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், இங்கேயே ஆட்டோக்களை நிறுத்திவிட்டு, உள்ளே துாங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும், ஐந்து ஓட்டுனர்கள், ஆட்டோவில் உறங்கி கொண்டிருந்தனர். 

இந்நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், மெரினாவிலிருந்து, அண்ணா மேம்பாலம் நோக்கி அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ ஸ்டாண்டிற்குள் புகுந்தது. இதில், ஐந்து ஆட்டோக்கள், சினிமா சண்டைக்காட்சி போல், பறந்து விழுந்து நொறுங்கியது. மேலும், ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த ஓட்டுனர்கள், சாலையில் துாக்கி வீசப்பட்டனர். சிலர், வாகனங்களின் இடிபாடுகளில் சிக்கினர். அதேசமயம், சொகுசு காரில் உள்ள அவசரகால பாதுகாப்பு பலுான் என்ற, ஏர் பேக் விரிந்ததால், அதில் இருந்த ஐந்து பேர், சிறு காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர், பேசக்கூட முடியாத அளவுக்கு, 'குடி' போதையில் இருந்துள்ளார்.

சம்பவம் அறிந்துவந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள், ராஜேஷ், 35, திருமலை, 38, மோகன், 31, பாபு, 42, பாலன், 50 ஆகிய ஐந்து பேரையும், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர்.போதையில் இருந்த கார் ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அண்ணாநகரைச் சேர்ந்த, டீ துாள் வியாபாரி காஷிமுகமது மகன் நவீத் அகமது, 20, எம்.ஆர்.சி.நகரில் உள்ள, லீலா பேலஸ் என்ற தனியார் நட்சத்திர ஓட்டலில், தன் கல்லுாரி நண்பர்கள் நான்கு பேருடவ், 'வீக் எண்ட்' என்ற, மது விருந்தில் பங்கேற்றார்.

போதையில் தடுமாறிய அவர்கள், நுங்கம்பாக்கம் தாஜ் நட்சத்திர ஓட்டலில், மது அருந்தி கொண்டிருந்த மற்றொரு நண்பரை அழைப்பதற்காக, 'செவ்ரோலேட்' என்ற சொகுசு காரில், அதிவேகமாக சென்று விபத்தைஏற்படுத்தி உள்ளார்.ஓட்டுனர் உட்பட அனைவரிடமும், மது பரிசோதனை செய்யப்பட்டன. இதில் ஓட்டுனர் நவீத் அகமது, 65 சதவீதம் அளவுக்கு மது அருந்தி இருந்தது தெரியவந்தது.தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார், ஐந்து கல்லுாரி மாணவர்
களையும் கைதுசெய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் பலி : இந்நிலையில், விபத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ், அங்கு உயிரிழந்தார்.மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.கடந்த, 2015ல், இதே ஆட்டோ ஸ்டாண்டிற்குள், நீதிபதியின் மகன் ஒருவர், மது போதையில் சொகுசு கார் ஓட்டிச் சென்று, விபத்து ஏற்படுத்தினார். இதில், 12 ஆட்டோக்கள் நொறுங்கின.

போதை கும்பல் அட்டகாசம் : சென்னையில் தினசரி இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகன ஓட்டுபவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், 11:00 மணி வரை மட்டுமே வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். நட்சத்திர ஓட்டலில் மது அருந்தும்
நபர்கள் இரவு 12:00 மணிக்கு மேல் தான் வெளியே வருவர். அளவுக்கதிகமான போதையில் கார் ஓட்டும் அவர்கள் தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர்.






State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...