Sunday, December 3, 2017

'கம்பராமாயணம் தந்த சேக்கிழார்' முதல்வரை வறுத்தெடுக்கும், 'நெட்டிசன்கள்'

 Added : டிச 03, 2017 
கம்பராமாயணம் தந்த சேக்கிழார்' என, முதல்வர் பழனிசாமி பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை, சமூக வலைதளங்களில், 'நெட்டிசன்கள்' கலாய்த்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில், முதல்வர் பழனி சாமி பேசுகையில், தஞ்சாவூர் பெருமைகளை பட்டியலிட்டார். அங்கு பிறந்து, புகழ் பெற்றவர்களை குறிப்பிடும்போது,
'கம்பராமாயணம் தந்த சேக்கிழார்' என்றார்.'டுவிட்டர்'கம்ப ராமாயணத்தை எழுதியவர், கம்பர்
என்பதை மறந்து,சேக்கிழார் என குறிப்பிட்டதை, அரசியல் தலைவர்கள், நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், 'டுவிட்டர்' பதிவில், 'கம்பராமாயணம் தந்த சேக்கிழார் வாழ்ந்த பூமி - எடப்பாடிக்கு, தமிழகத்தை ஆளுவதில் தான் தோல்வி என்றால், மூன்றாம் வகுப்பு கேள்விக்கான பதிலை சொல்வதிலுமா' என, கேட்டுள்ளார்.'டுவிட்டர்' எம்.ஜி.ஆர்., என்பவர், 'அம்மா இந்நேரம் இருந்திருந்தா,கம்பராமாயணம் எழுதுனதே, எங்கம்மா தான்னு சொல்லிருப்பாங்க' என, தெரிவித்துஉள்ளார்.நாதஸ் என்பவர், 'அடுத்த பொதுக்கூட்டத்தை, தேனி மாவட்டம், கம்பத்தில் போடுங்க. ராமாயணத்தை, இந்த ஊரில் உட்கார்ந்து, சேக்கிழார் எழுதியதால் தான், கம்பராமாயணம் எனப் பெயர் பெற்றது என, அடிச்சி விட்டுருங்க' என, குறிப்பிட்டுள்ளார்.ராஜவேலு ராஜாஎன்பவர், 'டுவிட்டர்' பதிவில், 'அடடா... அடடா... கம்பர் மட்டும் உசுரோட இருந்திருந்தால், காதுல பாலிடால் ஊத்திக்கிட்டு தற்கொலை செய்திருப்பார்' என கூறியுள்ளார்.

'காலக் கொடுமை'மாதவன் என்பவர், 'சொன்ன இவரையே இந்த பாடுபடுத்துகிறோமோ இதையும் எழுதி கொடுத்து, வாசிக்கவைக்கிறவன் சிக்குனா என்னாகும்...'அப்ப, அவன் எப்படிப்பட்ட அறிவாளியா இருப்பான்' என, கேள்வி எழுப்பி உள்ளார்.விப்பேடு வீரா என்பவர், 'நீரை சேமிக்க, தெர்மாகோல் அமைச்சர்; சுதந்திர தினம், குடியரசு தினம் மறந்த எதிர்க்கட்சி தலைவர்; மக்களுக்கு தான் மறதி வியாதி... தலைவர்களுக்குமா' என, கேட்டு
உள்ளார்.சமீபத்தில் வருமான வரி சோதனையில் சிக்கிய, சசி உறவினர் இளவரசியின் மகள், கிருஷ்ணபிரியாவும், தன் பங்கிற்கு, முதல்வர் பேச்சு வீடியோவை, தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, 'காலக் கொடுமை' என, விமர்சித்துள்ளார்.அதேபோல், நெல்லையில் ஸ்டாலின் பேசுகையில், குடியரசு தின தேதியை மாற்றி கூறினார்.


அதை குறிப்பிடும் வகையில், 'குடியரசு,சுதந்திர தினத்திற்குவேறுபாடு தெரியாத, தளபதி ஸ்டாலின்;இவர் தான் எதிர்க்கட்சி தலைவர்' என, கிருஷ்ணபிரியா கிண்டலடித்துள்ளார். - நமது நிருபர் -
அதிகரிப்பு!  பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை...
ஐ.டி., வங்கித்துறையில் நிலைமை மிகவும் மோசம்




நாட்டின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்கள் பணியிடங்களில், பாலியல் தொல்லைக்கு ஆளாவது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் பலர், பாலியல் தொல்லையால் அதிகம் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.




நாட்டின் நகர்ப்புறங்களில், பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்து வரும் நிலையில், பெண்கள், தங்கள் பணியிடங்களில், சக பணியாளர்கள், உயர் அதிகாரிகள், நண்பர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாவது, கடந்த ஆண்டுகளை விட, தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.

ஐ.டி., வங்கித்துறை, நிதி நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் துறை, மார்க்கெட்டிங், உற்பத்தி மற்றும் சேவை துறைகளில், பெண்கள் அதிக அளவில் பணி புரிகின்றனர்.
இந்த நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில், பாலியல் தொல்லைக்கு ஆளாவோர் குறித்து, தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது:இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் பலர், தங்கள் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். படித்த பெண்களில் பலர்,
இந்த தொல்லைக்கு ஆளாகும் நிலை அதிகரித்துள்ளது. பிரபல, ஐ.டி.,நிறுவனங்கள், வங்கிகள், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களைச் சேர்ந்த பெண் ஊழியர்கள், சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.

எனினும், இவர்களில் பலர், தங்களுக்கு நிகழும் கொடுமை குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். அவர்களில் வெகு சிலரே, தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமாக புகார் அளிக்கின்றனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், பாலியல் தொல்லைக்கு ஆளாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகரித்துள்ளது.

கடந்த, 2013 முதல், 2017 வரை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில், நிறுவனங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து உள்ளன. கடந்த, 2013ல், ஒரு லட்சம்பேரில், 76 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளான நிலையில், இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 2017ல், 445 என்ற எண்ணிக்கையை அடைந்து உள்ளது.
இது குறித்து, அமெரிக்காவின் பிரவுன் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர், கிரிஜாபோர்க்கர் கூறியதாவது:இந்தியாவில், பணிக்கு செல்லும் பெண்கள், பாலியல் தொல்லைக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. இதனால், நன்கு படித்த பெண்கள் பலர், பணிக்கு செல்ல தயக்கம் காட்ட துவங்கியுள்ளனர்.

இந்த நிலை தொடர்ந்தால், காலப்போக்கில், இந்தியாவில், பெண் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, உற்பத்தி மற்றும் சேவை துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.இது, பொருளாதார ரீதியில் நாட்டிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. பணியிடங்கள் தவிர, சாலைகள், பேருந்து, ரயில் பயணங்களிலும், பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். கல்லுாரிகள், பல்கலைகளிலும் இந்த கொடுமைகள் அதிகரித்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

“அதிரடி ஆஃபர்களுக்கு இன்னொரு முகம் இருக்கு...”


தினம் காலை எழுந்து வாக்கிங் போய், பத்தாததற்கு உடற்பயிற்சி செய்கிறீர்கள். உப்பு, காரம், எண்ணெய் முதலியவற்றை குறைத்து மில்லட், பச்சை காய்கறிகள் மட்டும் சாப்பிடுகிறீர்கள். காபி, டீயை அறவே ஒதுக்குகிறீர்கள். சிகரெட், ஜர்தா, சரக்கு போன்ற லாகிரி வஸ்துக்களை தொடுவதில்லை. ஹெல்தி லைஃப்ஸ்டைல், சிக்ஸ் பேக் உடம்பு என்று சிக்கென்று இருக்கிறீர்கள். இத்தனை செய்துவிட்டு ஏன் தினம் ஸ்லோ பாய்சன் குடிக்கிறீர்கள்? ஆரோக்கியமாக அல்பாயுசில் போக அத்தனை ஆசையா?

பிறகென்ன சார். கைகாசு போட்டு கடன் வாங்கி தொழில் துவங்கி, ஆபீஸ், ஸ்டாஃப் என்று விரிவுபடுத்தி, பார்த்து பார்த்து புதிய பிராண்டை அறிமுகப்படுத்தி அதை விற்க லட்சக்கணக்கில் விளம்பரப்படுத்தி இத்தனை செய்துவிட்டு பிராண்ட் வளர்க்கிறேன் என்று சேதாரம், செய்கூலி இல்லை, விலை குறைப்பு, ஆஃபர், ஃப்ரீ, கிஃப்ட் என்று பிராண்டை அணுஅணுவாக அழிக்கிறீர்கள். குடிப்பது ஸ்லோ பாய்சன் என்று தெரியாமலேயே குடிக்கிறீர்கள்!

விற்பனையை வளர்க்கவேண்டியதுதான். அதற்கு வழி பிராண்ட் பயன்களை வளர்த்து அதை வாடிக்கையாளர்களுக்கு விளக்குவது தானே தவிர வாடிக்கையாளரிடம் ‘ஐயா தர்மபிரபு, என் பிராண்டை வாங்குய்யா, விலையில தள்ளுபடி பண்றேன்யா, கிஃப்ட் தரேன்யா’ என்று காலில் விழுந்து கெஞ்சுவதல்ல. அடிக்கடி இப்படி செய்வதால்தான் மக்கள் மனதில் பிராண்ட் சீப்பாகி சீக்கு பிடித்து சின்னாபின்னமாகி சீரழிகிறது.

ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் தொழிலதிபர் கூறும் பதில்: மாத டார்கெட் முடிக்க ஆஃபர் அளித்தோம். போட்டியாளர் ஃப்ரீ தராங்கன்னு நாங்களும் தந்தோம். கடைக்காரங்க இலவசம் கேட்டாங்க, கொடுத்தோம். ஆடி மாச ஆஃபர் இல்லேன்னா எப்படின்னு சேல்ஸ்மேன் கேட்டாங்க, தந்தோம். வாடிக்கையாளர்கள் விரும்பிக் கேட்டாங்க, வழங்கினோம். ஆக அனைவரும் கேட்டார்கள். நீங்களும் ஆசையாக ஸ்லோ பாய்சன் குடிக்கிறீர்களாக்கும்.

ஆஃபர், இலவசம், கிஃப்ட் போன்றவை தித்திக்கும் ஸ்லோ பாய்சன். ஆசையாய் தரப்படுவது போல் தெரியும். அந்த நேரம் தித்திப்பாய் இருக்கும். போகப் போகத்தான் புரியும் அது ஆஃபர் அல்ல, ஆலகால விஷம் என்று. தள்ளுபடி அல்ல. மென்னியைபிடி என்று. அது தெரியும்போது பிராண்ட் பரலோக பாதையில் பாதியைக் கடந்துவிடும். ஆட்டம் போடவேண்டிய பிராண்ட் போஸ்ட் மார்ட்டம் பண்ணும் நிலையை அடையும். விஷம் முற்றி பிராண்டிற்கே முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வருவதற்குள் ஆஃபர், கிஃப்ட், இலவசம் போன்றவற்றின் மறுபக்கத்தை, அதன் ஒரிஜினல் முகத்தை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். ஆஃபர், விலைக் குறைப்பு போன்றவைகளுக்கு வாய் இருந்தால் தன் பங்கிற்கு இப்படி பன்ச் டயலாக் கூறும்: ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு, அதை பார்க்காதே. நொந்து போயிடுவே’! வாருங்கள், அந்த முகத்தையும் பார்த்துவிடுவோம்.

பிராண்ட் விலையைக் குறைத்துத் தருகிறேன் என்று கூறும்போது வாடிக்கையாளரிடம் உண்மையில் என்ன கூறுகிறீர்கள்? என் பிராண்ட் மீது எனக்கு நம்பிக்கையில்லை. உள்ளபடி அந்த விலையில் விற்கமுடியாது என்று குறைத்து விற்கிறேன் என்று நீங்களே மக்கள் மனதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். இப்படி சொன்ன பிறகு யாருக்கு உங்கள் பிராண்ட் மீது நம்பிக்கை வரும்? தப்பித் தவறி ஒரு முறை வாங்கினால் கூட அடுத்த முறை போட்டி பிராண்டிற்குத் தான் மாறுவார்கள்.

குறைவான விலை என்றால் குறைவான தரம் என்று நீங்கள் நினைப்பது போல் தானே மற்றவர்களும் நினைப்பார்கள். எல்லா மினரல் வாட்டர் பாட்டில்களும் ஒன்று போல் இருந்தாலும் ‘அக்வா ஃபீனா’ பெட்டர் என்று நினைக்கிறோம். அதனால் அதை பெயர் சொல்லி கேட்டு வாங்குகிறோம். ஏன்? அக்வா ஃபீனா மற்றதை விட விலை அதிகம் என்பதால் அதுவே பெட்டர் என்று நினைக்கிறோம். அப்படியென்றால் உங்கள் பிராண்ட் விலையைக் குறைத்து விற்க முயலும்போது அது மற்றவைகளைப் போல் தரமில்லாதது என்றுதானே அர்த்தமாகிறது. அப்புறம் அதை வாடிக்கையாளருக்கு எப்படி வாங்கத் தோன்றும்? ஒன்றும் வேண்டாம், ‘அம்மா’ மினரல் வாட்டர் வெறும் பத்து ரூபாய் தான். அதை ஒரு முறையாவது வாங்கியிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் பிராண்ட் விலையைக் குறைத்தால் மட்டும் மக்கள் நம்பி வாங்கவேண்டுமாக்கும்!

ருசி கண்ட பூனை என்பார்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்றும் சொல்வார்கள். இரண்டையும் கூட்டிப் பாருங்கள். ஆஃபரின் ஆபத்து இன்னும் அமோகமாய் தெரியும். ஒரு முறை டிஸ்கவுண்ட், இலவசம், ஃப்ரீ, கிஃப்ட் என்று கொடுத்தால் அவ்வளவுதான். அதிலிருந்து விடுபட்டு வெளியே வரவே முடியாது. உங்கள் குறைந்த விலைக்கும், இலவசத்திற்கும் வாடிக்கையாளர் முதல் முறை வாங்குவார். அடுத்து எப்பொழுது மீண்டும் அப்படி தருவீர்கள் என்று காத்துக் கிடப்பாரே ஒழிய அது இல்லையென்றால் ‘நீயுமாச்சு உன் பிராண்டுமாச்சு’ என்று ஆஃபர் தரும் அடுத்த பிராண்டிற்கு தாவுவார். நீங்களும் வேறு வழியில்லாமல் புலி வால் பிடித்த கதையாக ஆடி தள்ளுபடி என்று ஆரம்பித்து ஆவணி, புரட்டாசி, ஐப்பசி என்று பங்குனி வரை தள்ளுபடி தரவேண்டிதுதான். ஒரு முறை பொய் சொன்னால் அதை மறைக்க மேலும் மேலும் பொய் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதைப் போல!

வாடிக்கையாளருக்கு பிராண்டை விளக்கி அதன் விலை கூறி ‘இது தான் இறுதி விலை, இனியும் குறைப்பதற்கில்லை’ என்று கூறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இருந்தும் அவர் வாங்குவாரோ என்ற சந்தேகம் வருகிறது. என்ன செய்வீர்கள்? வேறென்ன, பலர் செய்யும் அதே பரிதாபம்தான். மேலும் விலையை குறைக்கிறீர்கள். இப்பொழுது வாடிக்கையாளருக்கு சந்தேகம் வருமா வராதா? ‘இது தான் இறுதி விலை, இனி குறைப்பதற்கில்லை என்றாரே. அப்படியென்றால் அவர் முதலில் கூறிய விலை பொய்யோ? விலை பற்றி பொய் சொன்னவர் பிராண்டை பற்றியும் பொய் சொல்லியிருக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்’ என்று நினைப்பாரா மாட்டாரா? தோன்றாத கேள்விகளை, தோன்றக்கூடாத சந்தேகங்களை நீங்களே கிளப்பி வேலியில் வெட்டியாக ஓடும் ஓணானை ஏதோ வேண்டுதல் போல் எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்டு ‘கடிக்குதே வலிக்குதே’ என்று புலம்புவீர்கள்!

விலைக் குறைப்பு, ஆஃபர் போன்றவை இன்னொரு விதத்திலும் ஓணான்களே. விளக்குகிறேன். ஒரு பிராண்டை வாடிக்கையாளருக்கு பிடித்த பின் அதன் விலையைக் கூட பார்த்து அவர் வாங்குவதில்லை. நன்றாக இருக்கிறது, பிடித்திருக்கிறது என்று வாங்குகிறார். ‘தி இந்து’ பேப்பரின் விலை என்ன என்று தெரியுமா உங்களுக்கு? ‘க்ளோஸ் அப்’ விலை? ‘விக்ஸ்’ விலையாவது தெரியுமா?

அடிக்கடி வாங்கும் பொருளின் விலை நமக்குத் தெரிவதில்லை. பிடித்திருக்கிறது என்று விலை பாராமல் தொடர்ந்து வாங்குகிறோம். ஆனால் பிராண்டின் விலையை கூறி அதிலிருந்து கழிவு, ஆஃபர், தள்ளுபடி என்று கூறும்போதுதான் அதன் விலையே வாடிக்கையாளருக்குத் தெரிகிறது. ஒழுங்கு மரியாதையாய் உங்கள் பிராண்டை கேட்டு வாங்கிக்கொண்டிருந்தவர் பிறகு அதன் விலையைப் பார்த்து தெரிந்துகொண்டு அடுத்த முறை குறையும் போது வாங்கலாம் என்று காத்திருக்க துவங்குகிறார். அதன் விலை போட்டி பிராண்டை விட அதிகமாயிருப்பதே அப்பொழுதுதான் அவருக்குத் தெரிகிறது. பிறகு அவருக்கு விலை மட்டுமே தான் பிரதானமாய் படுகிறது. நீங்கள் அளித்த ஆஃபர் உங்களுக்கே ஆப்பு வைக்கிறது. ஏற்கனவே வேட்டியில் விட்ட முதல் ஓணான் உங்களை கடித்துக்கொண்டிருக்க வேலியில் ஓடும் இரண்டாவது ஓணானையும் அதற்கு கம்பெனி கொடுக்க வேட்டிக்குள் விடுகிறீர்கள்!

விலைக் குறைப்பு வைபவங்களின் இன்னொரு பிராப்ளம் அது உங்கள் மற்ற பிராண்டுகளை பாதிக்கும் விதம். நீங்கள் பல பிராண்டுகள் விற்கும்போது ஒரு பிராண்ட் விலையைக் குறைப்பது, இலவசம் அளிப்பது என்று துவங்கினால் கடைக்காரர் முதல் உங்கள் கம்பெனி சேல்ஸ்மென் வரை அதே சலுகையை மற்ற பிராண்டுகளுக்கும் தரச் சொல்லி படுத்துவார்கள். நீங்களும் வேறு வழியில்லாமல் அடுத்த பிராண்டுக்கும் ஆஃபர் தரவேண்டியிருக்கும். பாதத்தில் ஏற்பட்ட அரிப்பு பாதாதிகேசமும் பரவும். பிறகென்ன, சதா சர்வ காலமும் வரிந்து கட்டிக்கொண்டு சொரிந்து கொண்டிருக்கவேண்டியதுதான்.

பிராண்டையும் அதன் தன்மைகளையும் அவை வாடிக்கையாளருக்கு அளிக்கும் பயன்களையும் பற்றி பேசவேண்டிய நீங்கள் விலையைக் கட்டிக்கொண்டு அழாதீர்கள். பேச வேறு விஷயம் இல்லையென்றால் நீங்கள் விற்பது பிராண்ட் அல்ல, கமாடிட்டி என்றாகிவிடும். பிறகு வைக்கோல், வறட்டி போல் தான் பிராண்டை விற்கவேண்டும். இனியும் அந்த தப்பை செய்யாதீர்கள். தள்ளுபடிகளை தள்ளுபடி செய்து, ஆஃபரை சைஃப்பராக்கி, இலவசம் இல்லா பரவச நிலையை அடையுங்கள்.

பார்த்து பார்த்து வளர்க்கப்படவேண்டிய குழந்தை உங்கள் பிராண்ட். பட்டுத் துணி உடுத்தி, பாலூட்டி பராமரிக்க வேண்டியதை பாழும் கிணற்றில் தள்ளாதீர்கள்!

satheeshkrishnamurthy@gmail.com

பான், வங்கி கணக்கு, ஆதார் எண் இணைத்து வீட்டீர்களா?- நெருங்குகிறது அவகாசம்

பல்வேறு திட்டங்கள், சலுகைகள், வங்கி கணக்குகள், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என மத்திய அரசு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் நடந்து வரும் நிலையில் இறுதி தீர்ப்பு இன்னமும் வெளியாக வில்லை. மேலும் சில திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்புக்கு கால அவகாசம் வழங்க தயார் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும் தற்போதைய நிலையில், வங்கி கணக்கு, மொபைல்போன் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைக்க கடைசி நாள் நெருங்கி வருகிறது. அதன் விவரம் வருமாறு:
* பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள். ஆதார் எண் இணைக்காவிட்டால், வருமான வரி தாக்கல் செய்ய இயலாமல் போகும்.
* வங்கிக்கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேத இறுதி நாள். அதன் பின் வங்கிகணக்குகள் செயல்படாமல் முடக்கி வைக்கப்படும்.
* பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்க டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள். அதன் பின் அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்படும்.
* இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாள் டிசம்பர் 31ம் தேதி. அதன் பின் பாலிசி முடங்கி விடும்.
* தபால் நிலைய திட்டங்கள், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, பத்திரங்கள் அனைத்திற்கும் டிசம்பர் 31ம் தேதி இறுதி நாள். அதன் பின் அவை அனைத்து கணக்குள் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.
* தொலைபேசி எண்கள், மொபைல் போன் எண்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கு 2018 பிப்ரவரி 6ம் தேதி கடைசி நாள். அதன் பின் தொலைபேசி எண் செயல்படாது.
* சமையல் எரிவாயு, ரேஷன் உள்ளிட்ட மானியங்கள் பெற ஆதார் எண் இணைப்பதற்கு இறுதி நாள் 2018 மார்ச் 31ம் தேதி இறுதி நாள். அதன் பின் மானியம் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் போகக்கூடும்.
ஆதார் எண் இதுவரை பெறாதவர்களுக்கு ஆதார் எண் வழங்கும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கு பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண் இணைக்க 2018 மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
நிர்பயாவுக்கு பின்னும் திருந்தாத டெல்லி - கொலைநகரமாகும் தலைநகரம் 



தீவிர காற்று மாசுபாட்டினால் உலகின் சுவாசிக்க தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் அண்மையில் இடம்பிடித்தது தலைநகர் டெல்லி. இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு பட்டியலில் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் குற்றங்கள் நடக்கும் மெட்ரோ நகரங்களில் முதலிடத்தில் உள்ளது டெல்லி. முக்கியமாக நிர்பயா வழக்குக்கு பிறகும் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் இந்திய நகரமாக டெல்லி உள்ளது. பின்வரும் புள்ளிவிவரங்கள் தலைநகரத்தின் நிலையை அதிர்ச்சியோடு சொல்கின்றன.

டெல்லி..சில மோசமான புள்ளிவிவரங்கள்:

1. இந்தியாவில் அதிக வன்முறைக் குற்றங்கள் நடைபெறும் மெட்ரோ நகரம் டெல்லிதான். மொத்த மெட்ரோ குற்றங்களில் 48.3 சதவிகிதம் டெல்லியில் நடக்கிறது.

2. மொத்த மெட்ரோ நகர கொலைகளில் 21.8 சதவிகித கொலைகள் டெல்லியில் நடக்கிறது.

3. பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகம் நடைபெறும் நகரம் டெல்லிதான். மொத்த மெட்ரோ நகர பெண்களுக்கு எதிரான வன்முறையில் 21.8 சதவிகிதம் டெல்லியில் நடக்கிறது.

4. இந்திய மெட்ரோக்களில் 19.3 சதவிகித பொருளாதார குற்றங்கள் டெல்லியில் நடக்கிறது.

5. சொத்துகள் தொடர்பான குற்றங்கள் அதிகம் டெல்லியில் நடைபெறுகிறது. 2016ம் ஆண்டு மட்டும் இதுதொடர்பாக 1,30,928 வழக்குகள் பதிவாகியுள்ளன.

6. இந்தியாவில் 38.3 சதவிகித மெட்ரோ குற்றங்களுக்கு டெல்லி தான் காரணம்.

7. சிறப்புப் பிரிவு குற்றங்களில் மட்டும் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. மற்ற விஷயங்களில் டெல்லி தான் டாப்.

இந்த புள்ளிவிவரங்கள் மூலம் டெல்லி குற்றங்கள் நிறைந்த இந்திய நகரமாகத் தெரியவருகிறது. நாட்டின் தலைநகரே இந்த நிலையில் இருக்கிறது. கொலைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? மத்திய அரசுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அந்த மாநில அரசு இந்த குற்றப்பட்டியலையும் கொஞ்சம் கவனிக்குமா?

Dailyhunt
செல்போனின் வைஃபை சிக்னல் கிளப்பிய பீதி.. பயந்து கொண்டு பாதியில் தரையிறக்கப்பட்ட விமானம்



இஸ்தான்புல்: செல்போன் வைஃபை சிக்னல் ஒன்றின் காரணமாக துருக்கி விமானம் ஒன்று பாதியில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது. அந்த வைஃபை சிக்னலின் பெயர் மூலம் விமானத்திற்கு குண்டு வெடிப்பு மிரட்டல் விடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அந்த விமானம் பாதியில் இறக்கப்பட்டு அனைவரும் சோதனை செய்யப்பட்டனர். ஒவ்வொருவரின் மொபைல் போனும் சோதனை செய்யப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பு மிரட்டல் அங்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. தற்போது இந்த செய்தி இணையம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.பாதியில் நிறுத்தப்பட்ட விமானம்
வெடிகுண்டு மிரட்டல் .

துருக்கியில் இருக்கும் நைரேலியில் இருந்து இஸ்தான்புல் நோக்கி அந்த விமானம் சென்று கொண்டு இருந்தது. திடீர் என்று பயணிகள் அனைவரும் விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்று கத்த தொடங்கி இருக்கின்றனர். இதையடுத்து விமானியும் உரிய அனுமதியுடன் விமானத்தை பாதி வழியில் இறக்கினார். விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
எப்படி நடந்தது
நடந்தது என்ன

இந்த நிலையில் அனைத்து பயணிகளும் இது குறித்து விமான அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதன்படி அந்த விமானத்தில் எதோ ஒரு நபரின் வைஃபை சிக்னலின் பெயர் ''விமானத்தில் பாம் இருக்கிறது'' என்று ஆங்கிலத்தில் இருந்துள்ளது. இதை பார்த்த பின்பே பயணிகள் வெடிகுண்டு என கத்தியிருக்கிறார்கள். மேலும் விமான பணி பெண்களும் அப்போது பயந்து கூச்சலிட்டுள்ளனர்.
சோதனை
அனைவரிடமும் சோதனை

இந்த நிலையில் இதுகுறித்து அனைத்து பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு பயணியின் செல்போனாக வாங்கி சோதனை செய்யப்பட்டது. மேலும் விமானம் முழுக்க வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டது. பின் விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின் மீண்டும் விமானம் இஸ்தான்புல் நோக்கி புறப்பட்டது.
யார் செய்தது
யார் செய்த காரியம்

அந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் சோதனை செய்யப்பட்ட போதே யார் இந்த செயலை செய்தது என்று அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நபரை அதிகாரிகள் மன்னித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். அந்த மர்ம நபர் யார் என்று பயணிகள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

source: oneindia.com
Dailyhunt
திருவாரூரில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு





திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக மழை பெய்தது. பின்னர் சில வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கடந்த 5 தினங்களுக்கு முன்பு மழை தொடங்கியது. இரு தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை சனிக்கிழமை காலை வரை சீராக பெய்தபடி இருந்தது. பின்னர், சனிக்கிழமை பகல் முழுவதும் மழை தொடர்ந்தது. 

குளிர்ந்த வானிலை நிலவியதுடன் பகல் முழுவதும் சற்று குறைவான வெளிச்சத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பகல் நேரத்திலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். சீரான மழை என்பதால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. எனினும் நீர்நிலைகள், விளைநிலங்கள் ஆகியவற்றில் நீரின் அளவு உயர்ந்து வருகிறது.

திருக்கார்த்திகை என்பதால் மழை பெய்தபோதிலும் கடைகள் திறந்திருந்தன. கடைவீதிகளில் குடைகளுடனும், மழைகோட் அணிந்தபடியும் மக்கள் சென்றனர். சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி குடவாசலில் 93.2 மி.மீ மழை பெய்துள்ளது.

பிற இடங்களில் மழை அளவு விவரம்: திருவாரூர் 79.6 மி.மீ, வலங்கைமான் 79.6 மி.மீ, நீடாமங்கலம் 69.4 மி.மீ, நன்னிலம் 62.8 மி.மீ, பாண்டவையார் தலைப்பு 55.8 மி.மீ, மன்னார்குடி 48 மி.மீ, என திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 536.8 மி.மீட்டர் மழையும், சராசரியாக 59.64 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
சாலைகள் பாதிப்பு...
மயிலாடுதுறை சாலையிலிருந்து கொடிக்கால்பாளையம் வழியாக திருவாரூர் வரும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதேபோல், அம்மையப்பனிலிருந்து திருக்கண்ணமங்கை வரும் சாலை, திருவாரூர் அரசு மருத்துவமனையிலிருந்து தஞ்சை சாலைக்கு வரும் இணைப்பு சாலை உள்ளிட்டவையும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
Dailyhunt

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...