Saturday, January 13, 2018

பாஸ்போர்ட்டை இனி முகவரி ஆதாரம் கிடையாது: மத்திய வெளியுறவு அமைச்சகம்

2018-01-12@ 16:44:26

 பாஸ்போர்ட்டை இனி முகவரி ஆதாரமாக காண்பிக்க முடியாது என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. பெயர், முகவரி, பெற்றோர் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட கடைசிப்பக்கம் இனி அச்சிடப்பாடாது. இனிமேல் அச்சிடப்படும் பாஸ்போர்ட்டுகளில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. காலாவதியாகாத பாஸ்போர்டுகளில் கடைசிப் பக்கத்தில் உள்ள முகவரியை ஆதாரமாக காண்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு

2018-01-13@ 07:16:43

சென்னை: பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணி முதல் சென்னையில் விமானம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் கிளம்பவில்லை. சென்னையில் இறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன.
Airtel is offering one year of free Amazon Prime membership to users

THE ASIAN AGE.
Published : Jan 12, 2018, 7:24 pm IST

The Infinity Postpaid, V-Fiber broadband users can now avail this offer.


Infinity plan priced Rs 499 or above will get one year of Amazon Prime membership which costs Rs 999.

Airtel postpaid users have a reason to rejoice. The ones who use the Infinity postpaid plan, which is priced Rs 499 or above will get one year of Amazon Prime membership. The same offer is also valid for Airtel V-Fiber broadband customers, who will also upgrade to a plan for availing the offer.

Airtel has teamed up with Amazon to provide their customers with this lucrative offer. Airtel Postpaid customers with an Infinity plan priced Rs 499 or above will get one year of Amazon Prime membership which costs Rs 999.

The users need to activate the offer exclusively via their Airtel TV app after which they will be able to access Amazon Prime Video via the app on supported devices. They also need to sign-up for Amazon Prime by registering a phone number and password. Even though the offer is free, the Prime subscription will be automatically renewed for Android users after the first year and they will be charged Rs 999 via postpaid or broadband billing, depending on the bill plan eligible for the offer. The membership of iOS customers won’t be auto-renewed. Both Android and iOS users will be notified via SMS at the time of activation of the offer.

Vijay Subramaniam, Director of Content at Amazon Prime Video India commented on the offer and said, “We are delighted to associate with Airtel to bring Prime membership to Airtel’s consumers. At Amazon Prime Video, we are focused on bringing the latest and exclusive content to India. This exclusive offer enables us to reach Airtel’s significant customer base across the country, providing entertainment - anytime, anywhere on a reliable service, with great playback quality and low data usage.”
முதல் நண்பன் – 16: அங்கீகாரம் பெறுமா நாட்டு நாய்கள்?

Published : 06 Jan 2018 11:27 IST

இரா.சிவசித்து




இன்றளவும் தமிழகத்து நாய் இனங்களுக்கான சந்தையில் மவுசு குறையாத நாட்டு நாய் இனம், ராஜபாளைய நாய்கள்தான். ராஜபாளையத்தைச் சார்ந்து இயங்கும் 50-க்கும் மேற்பட்ட நாய்ப் பண்ணைகளே அதற்குச் சாட்சி!

இன்று சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில்கூட புலம்பெயர்ந்த தமிழர்கள் ராஜபாளைய நாய்களை வளர்க்கின்றனர். அவ்வளவு இருந்தும் இவற்றிற்கான உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளதா என்றால், இல்லை என்பதே பதில்.

தேசிய அங்கீகாரம்

அப்படியான அங்கீகாரம் பெற்ற இனம் இந்தியாவில் ‘கேரவன் ஹவுண்ட்’ மட்டும்தான். இவ்வாறான அங்கீகாரத்தை யார் வழங்குவது? இந்திய அளவில் ‘கென்னல் கிளப் ஆஃப் இந்தியா’ வழங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அமைப்பு ராஜபாளைய நாய்களை அங்கீகரித்து விட்டது. சரி, உலக அளவிலான அங்கீகாரம்?

‘வேர்ல்ட் கனைன் ஆர்கனைசேஷன்’ என்ற அமைப்புதான் உலக அளவிலான அங்கீகாரத்தை வழங்குகிறது. நாய்களின் நலனுக்காகப் பணியாற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் இதில் உறுப்பினராக உள்ளன. அதில் இந்தியாவின் கென்னல் கிளப்பும் ஒன்று! அதுபோல், இந்திய கென்னல் கிளப்பில், இந்தியாவைச் சேர்ந்த பல அமைப்புகள் உறுப்பினராக உள்ளன. அதில், ‘மதுரை கென்னல் கிளப்’பும் ஒன்று.

அங்கீகாரத்தில் சிக்கல்

மதுரை கென்னல் கிளப்பின் செயலர் எஸ்.ராமநாதனிடம் பேசிய போது ராஜபாளைய நாய்களுக்கு உலக அளவிலான அங்கீகாரத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல் புரியத் தொடங்கியது.

அவர் கூறும்போது “ உலக அளவில் எல்லா வகை நாய்களுக்குமான கண்காட்சி நடக்கும் போது, ஒரே இனத்தைச் சேர்ந்த 100 நாய்கள் அதில் கலந்து கொண்டால், அந்த இனம் அதிக அளவில் கவனம் பெறுகிறது. அது அங்கீகரிக்கவும்படுகிறது.

இந்தியாவில், அவ்வாறு நடத்தப்படும் கண்காட்சியில் ஒரே இனத்தைச் சேர்ந்த 100 நாய்கள் கலந்துகொள்ள முடியுமா என்றால், அதுதான் இல்லை. காரணம், இந்திய கென்னல் கிளப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட இனங்களில் எவை ‘மைக்ரோசிப்’ பொருத்தப்பட்டுள்ளனவோ, அந்த நாய்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஒரே இனம் ராஜபாளைய இனம் மட்டும்தான். ஆனால், அந்த இனத்தில் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட 100 நாய்கள், என்பது மிகவும் பெரிய இலக்கு. அது சாத்தியமாகும்போது, ராஜபாளைய நாய் இனத்துக்கு உலக அங்கீகாரம் கிடைக்கும்” என்றார்.

* உலக அளவில் அங்கீகாரம் பெற்ற இனம் இந்தியாவில் ‘கேரவன் ஹவுண்ட்’ மட்டும்தான்

* ‘வேர்ல்ட் கனைன் ஆர்கனைசேஷன்’ என்ற அமைப்புதான் நாய் இனங்களுக்கான உலக அங்கீகாரத்தை வழங்குகிறது

* ராஜபாளைய நாய் இனங்களுக்கு ‘கென்னல் கிளப் ஆஃப் இந்தியா’ அமைப்பு தேசிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது
உலகை விழுங்கும் அமேசான் படைகள்!

Published : 10 Jan 2018 16:11 IST


சி.கோபிநாத் | தமிழில் ஆர்.முத்துக்குமார்.



ஹைதராபாத், தெலுங்கானா. அமேசானின் மிகப்பெரிய வேர்ஹவுஸ் வசதி. - கோப்புப் படம். | கே.வி.எஸ். கிரி.

சில காலங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகையே விலைக்கு வாங்கி விட்டதாக அனைவரும் பயந்தனர். பொறுப்பாண்மை அதிகாரிகள் இது குறித்து நீதிமன்றம் வரை சென்றனர். ஒருநாள் நாம் அனைவருமே மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்காகவே ஏதோ ஒரு விதத்தில் பணி புரிவோம் என்று நினைத்தோம். இன்று அதே உலகை விழுங்கும் வர்த்தகமாக, சக்தியாக அமேசான் ஆன்லைன் வர்த்தகம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

1995-ம் ஆண்டு ஆன்லைன் புத்தக விற்பனை நிலையமாக கால்பதித்தது அமேசான். ஆனால் தற்போது ஊசி முதல் யானை வரை, அனைத்தும் அமேசான் வர்த்தக மையமாகியுள்ளது. எல்லாவற்றுக்குமான சந்தையாக அமேசான் வளர்ச்சியடைந்துள்ளது. அதன் சியாட்டில் தலைமைச் செயலகத்தில் சுமார் 40,000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர், உலகம் முழுதும் சுமார் 450,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது அமேசான்.

மிக முக்கியமான செய்தித்தாளான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அமேசானுக்குச் சொந்தமானது. முக்கிய விவகாரங்களில் வலுவான சுதந்திர நிலைப்பாடுகளை எடுத்த பத்திரிகையாகும் வாஷிங்டன் போஸ்ட். அதே போல் ஆரோக்கிய உணவு, இயற்கை, ஆர்கானிக் உணவுப்பொருட்களைக் கொண்ட மிகப்பெரிய ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட் என்ற மிகப்பெரிய மளிகை வர்த்தகமும் அமேசானுக்குச் சொந்தமானதே. கிளவுட் சர்வீசஸ், பப்ளிஷிங், ஏன் திரைப்பட தயாரிப்பு வரை அனைத்திலும் அமேசான் தன் கையை பதித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் 20 பில்லியன் டாலர்கள் செலவில், அதாவது ரூ.1,30,000 கோடி செலவில் தனக்கு 2-வது தலைமைச் செயலகத்தை அமைக்க அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டது. சுமார் 20 ஆண்டுகால திட்டமாகும் இது. சில முன் நிபந்தனைகளை திருப்தி செய்யும் வகையில் இந்தத் திட்டத்துக்குத் தயாராக இருக்கும் நகரங்களிலிருந்து ஒப்பந்தப் புள்ளிகளை இத்திட்டத்துக்காகக் கோரியது அமேசான். அதாவது அந்நகரம் குறைந்தது சுமார் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெருநகரமாக இருப்பது அவசியம். மேலும் மென்பொருள் மற்றும் பிற தொழில்நுட்பத் திறன்கள் கிடைக்கும் நகரமாக இருக்க வேண்டும், நல்ல போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகள், இன்னபிற நிபந்தனைகளுடன் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியது அமேசான்.

இதற்கு 238 நகரங்கள், பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்தும், பிறகு கனடா, மெக்சிகோ ஆகியவையும் இந்த ஒப்பந்தப் புள்ளிகளில் ஆர்வம் காட்டியது. இத்தகைய திட்டத்தைத் தீட்டவும், நடைமுறைப்படுத்தவும் மிகப்பெரிய தீவிர முயற்சியும் உணர்வும் அறிவுக்கூர்மையும் தேவைப்படும். சுமார் 50,000 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்பதே இந்த திட்டத்தில் அனைவரும் ஆர்வம் காட்ட காரணமாக உள்ளது.

நெவார்க் நகரம் 10 ஆண்டுகளில் இத்திட்டத்துக்காக 7 பில்லியன் டாலர்கள் செலவிட முன்வந்தது. ஃபாக்ஸ்கான் டெக்னாலஜியை ஈர்ப்பதற்காக தய்வான் மின்னணுப் பொருள் அசெம்ப்ளர் நிறுவனம் விஸ்கான்சினில் ஆலை ஒன்றை அமைக்க அம்மாகாணம் 3 பில்லியன் டாலர்கள் தொகையை உறுதியளித்தது.

ஆன்லைன் கொள்முதலை விரிவுபடுத்தியுள்ள அமேசான் நிறுவன வர்த்தக உத்திகளினால் மிகப்பெரிய வர்த்தக முதலைகள் ஆட்டம் கண்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் ஆன்லைன் செலவிடுதலில் 40% அமேசானில் மட்டுமே நடைபெறுகிறது. இதனையடுத்து மிகப்பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரான சியர்ஸ் திவால் ஆகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்களில் வர்த்தகம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. அசுர நிறுவனமான வால்மார்ட் கூட அமேசான் அதிர்ச்சியிலிருந்து தற்போதுதான் மீண்டுள்ளது. சமீபத்தில் அமேசான் மருந்து விநியோகச் சேவையையும் பரிசீலித்து வருகிறது. அமேசானின் வர்த்தக மாதிரியான குறைந்த வரி செலுத்துதல், டிவிடெண்ட் இன்மை, பணத்தை தக்கவைத்துக் கொள்ளுதல் போன்றவை வேறு ஒரு சுவாரசியமான கதையாகும்.

அடுத்ததாக பல சி.இ.ஓ.க்களை விழிக்கச் செய்யும் திட்டத்துக்கு அமேசான் தயாராகி வருகிறது. பல்வேறு தொழில்துறைகளில் இருக்கும் பல நிறுவனங்கள் அமேசான் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப நிறுவனங்களின் உத்திகளை கவனித்து வருவதோடு, தங்கள் நிறுவனங்களை அமேசான் விழுங்காமல் பாதுகாக்க எதிர் உத்திகளை வகுத்து வருகின்றனர். அமேசான் நிறுவனம் மருந்து விநியோகத்தில் குதிக்கும் முடிவினால் சங்கிலித் தொடர் மருந்து நிறுவனமான சிவிஎஸ், ஹெல்த் காப்பீட்டு நிறுவனமான ஏட்னாவை வாங்க முயன்று வருகிறது. அதேபோல் நெட்பிளிக்ஸ் வளர்ச்சி, விரிவாக்கத்துக்கு எதிராக டிஸ்னி நிறுவனம் ஃபாக்ஸ் நிறுவனத்தின் முக்கியச் சொத்துகளை வாங்கியுள்ளது. ஏடி&டி நிறுவனம் டைம் வார்னரை வாங்கியுள்ளது.

உலகின் 4 மிகப்பெரிய தொழில்நுட்ப அசுரர்களான அமேசான், பேஸ்புக், ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகியவை மரபான நிர்வாக மேலாண்மைக் கோட்பாடுகளை உடைத்தெறிந்து புதிய வாடிக்கையாளர்களின் தேவைகள் என்னவென்பதை கண்டுணர்ந்து சேவை செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மானுடச் செயல்பாடுகளின் பல்வேறு புலங்களில் இந்த நிறுவனங்கள் ஊடுருவியுள்ளது. ஒரு நேரத்தில் ஸ்டார்ட் அப் தொழில் நுட்ப நிறுவனங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் தாங்கள் வாங்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் வெற்றிக்காகப் போராடினர். இப்போது அமேசான் நிறுவனம் அந்த இடத்தை ஆக்ரமித்துள்ளது.

எழுத்தாளர், பாஸ்டனில் உள்ள சஃபோல்க் பல்கலைக் கழக பேராசிரியர்.

மூலம் : தி இந்து பிசினஸ்லைன்
உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை: 4 நீதிபதிகள் கூட்டாக பேட்டி- இந்திய வரலாற்றில் முதன்முறை

Published : 12 Jan 2018 12:37 IST


இணையதள செய்திப் பிரிவு புதுடெல்லி



உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என மூத்த நீதிபதிகள் 4 பேர் இன்று கூட்டாக பேட்டியளித்துள்ளது பெரும் பரரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நான்கு பேர் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

"இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கவலையை மக்களுக்கு கூற விரும்பியதால் செய்தியாளர்களை சந்தித்தோம்.

உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை சில காலத்திற்கு முன்னதாக நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இதுதொடர்பாக கடிதம் எழுதினோம். ஆனால் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நாட்டு மக்களுக்கு சில விவரங்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட்டுமின்றி நாடே பாதிக்கப்படும்" எனக்கூறினார்.

இதன் பின், தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நீதிபதிகள ‘‘இதை நாட்டின் முடிவுக்கு விட்டு விடுகிறோம்’’ எனக்கூறினர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை வெளியிடுவதாகவும் அவர்கள் கூறினர். அந்த கடிதம் வெளியான பிறகே, நீதிபதிகளின் பேட்டியின் விவரங்கள் முழுமையாக வெளியாகும் என தெரிகிறது.
Soon, new look passport without parents' name 

Prakash Kumar, DH News Service, New Delhi, Jan 13 2018, 1:18 IST


The Indian Security Press, Nasik, will design the new passport in two different colours. File photo

The Centre has decided to do away with the printing of the names of a passport holder's parents, address and other details.

The Ministry of External Affairs (MEA) has decided to stop printing the last page of the passports which contains information like name of the father, mother, spouse, address, emigration check required (ECR) and old passport number with date and place of issue.

The Indian Security Press, Nasik, will design the new passport in two different colours.

Citizens with ECR status would be issued an orange passport while those with a non-ECR status would continue to get a blue passport.

"Till such time the new passport booklets are designed, manufactured and made available to the ministry, the passports and other travel documents would continue to be printed with the last page," an official said.

NEWS TODAY 10.06.2026