Thursday, January 18, 2018

பொங்கல் முடிந்தது போனஸ் வருமா?

Added : ஜன 18, 2018 00:45

தமிழக அரசு அறிவித்த, பொங்கல் போனஸ் பணம், பொங்கல் முடிந்த பின்பும், இன்னும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, 14ம் தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அரசு ஊழியர், ஆசிரியர்களில், சி மற்றும் டி பிரிவினருக்கு, 3,000 ரூபாய் போனஸ் வழங்க, அரசு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி, 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில், இன்னும் பணம் வழங்கப்படவில்லை. ஐந்து நாள் பொங்கல் விடுமுறை முடிந்து, நேற்று வேலை நாள் துவங்கிய நிலையில், மாலை வரை பணம் வரவில்லை என, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தெரிவித்துள்ளனர். 'அரசின் நிதித் துறையில் இருந்து பண ஒதுக்கீடு கிடைத்ததும், கருவூலம் மூலமாக, அவரவர் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்' என, அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் அரசு அறிவித்தும் பொங்கல் போனஸ் தொகை இன்னும் கைக்கு வந்து சேராததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

- நமது நிருபர் -
சபரிமலையில் நெய்யபிஷேகம் இன்றுடன் நிறைவு

Added : ஜன 18, 2018 05:17



சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,18) நெய்யபிஷேகமும், நாளை தரிசனமும் நிறைவு பெறுகிறது.

சபரிமலையில் டிச.30-ம் தேதி மாலையில் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. 31-ம் தேதி அதிகாலையில் தொடங்கிய நெய்யபிஷேகம் இன்று (ஜன.,18) காலை 10:30 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் நெய்யபிஷேகம் கிடையாது. தொடர்ந்து தேவசம்போர்டு சார்பில் களபாபிஷேகம் நடைபெறும்.

ஜன.19-ம் தேதிஅதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். இரவு 10:00மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டதும் பக்தர்களுக்கான மகரவிளக்கு கால தரிசனம் நிறைவு பெறும்.

20-ம் தேதி காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படும். அதன் பின் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.,12-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.
புரி கோவிலை தவறாக அச்சிட்டதற்கு மன்னிப்பு கேட்டது ஐ.ஆர்.சி.டி.சி.,

Added : ஜன 18, 2018 01:24


புவனேஸ்வர்: புரி ஜகன்னாதர் கோவில் படத்துக்கு பதில், இஸ்கான் கோவில் படத்தை, போஸ்டரில் அச்சடித்ததற்காக, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மன்னிப்பு கேட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள மிக பிரபலமான கோவில்கள், சுற்றுலா தலங்களை பார்வையிடும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், 'பாரத் தர்ஷன்' என்ற பெயரில், யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை விளம்பரப்படுத்தும் நோக்கில், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

இந்த போஸ்டரில், ஒடிசா மாநிலம், புரியில் உள்ள, ஜகன்னாதர் கோவில் படத்துக்கு பதில், இஸ்கான் கோவிலின் படம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த, புரி கோவில் பூசாரி ஒருவர் அதிர்ச்சி அடைந்து, ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் புகார் செய்தார். இதையடுத்து, இந்த போஸ்டர்களை அகற்ற உத்தரவிட்ட, ஐ.ஆர்.சி.டி.சி., நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

 நாட்டின் தலைநகர் தெரியாத வாரணாசி இளைஞர்கள்

Updated : ஜன 18, 2018

லக்னோ: உ.பி.,யில் உள்ள, வாரணாசியைச் சேர்ந்த, 25 சதவீத இளைஞர்களுக்கு, நாட்டின் தலைநகர் எதுவென்று தெரியவில்லை; 25 சதவீத இளைஞர்களுக்கு, கடிகாரத்தில் நேரம் பார்க்க தெரியவில்லை.
ஏ.எஸ்.இ.ஆர்., எனப்படும், ஆண்டு கல்வி நிலை குறித்த, 2017க்கான அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.அதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ள, உ.பி.,யின், வாரணாசியில் உள்ள, கல்வி வளர்ச்சி குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் லோக்சபா தொகுதியான, வாரணாசியில் உள்ள கல்வியறிவு குறித்து, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

* இந்த அறிக்கையில், 14 --- 18 வயதுள்ள இளைஞர்களின் கல்வியறிவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், 25 சதவீதம் பேருக்கு, நாட்டின் தலைநகர் என்ன என்பது தெரியவில்லை

* 25 சதவீதம் பேருக்கு, கடிகாரத்தில் நேரம் பார்க்கத் தெரியவில்லை

* 74 சதவீதம் பேர், மொபைல் போன் பயன்படுத்தி உள்ளனர். அதே நேரத்தில், 40 சதவீதம் பேருக்கு, சாதாரண கழித்தல் கணக்கு கூட தெரியவில்லை

* 12.7 சதவீதம் பேர், பள்ளிக்கே சென்றதில்லை

* 51.7 சதவீதம் பேர், வேலைக்கு சென்றுள்ளனர்

* 62 சதவீத இளைஞர்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்தியதில்லை. 67.3 சதவீதம் பேர், இன்டர்நெட் பயன்படுத்தியதில்லை

* 20 சதவீதம் பேருக்கு, தங்கள் மாநிலத்தின் பெயர் தெரியவில்லை

* 80 சதவீதம் பேருக்கு, தேசிய வரைபடத்தில் தங்கள் மாநிலம் எங்குள்ளது என்பதை, அடையாளம் காட்டத் தெரியவில்லை

* அதே நேரத்தில், 91 சதவீதம் பேர், இந்திய வரைபடத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, January 17, 2018

கிராமங்களில் களையிழக்கும் ஜல்லிக்கட்டு! - வேதனைதரும் பின்னணித் தகவல்கள் 

பாலஜோதி.ரா

கடந்த வருடம், உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது ஜல்லிக்கட்டுக்கான உரிமைப் போராட்டம். அந்த உரிமையை மீட்டெடுத்த பிறகு, படு உற்சாகமாக தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டு விழா களைகட்டியது. புது ரத்தம் பாய்ச்சியதுபோல தமிழகமே ஆர்த்தெழுந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு நடக்காத ஊர்களிலும் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழகத்திலேயே முதல் ஜல்லிக்கட்டு ராபூசல் என்ற கிராமத்தில் நடந்தது. அதிகமான ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டம் என்ற பெருமையை புதுக்கோட்டை தக்கவைத்துக்கொண்டது.கடந்த வருடம், 67 போட்டிகள் நடந்திருக்கிறது. இந்த வருடமும் தமிழ்நாட்டிலேயே முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் கடந்த 2-ம் தேதியன்று நடத்தி முடித்ததும் புதுக்கோட்டை மாவட்டம் தான். இப்படியான புதுக்கோட்டை, இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்துவதில் தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக போட்டிகள் நடந்துகொண்டிருந்தாலும், அதிக அளவில் ஜல்லிக்கட்டை நடத்தும் மாவட்டம் என்ற பெருமையை இழந்துவிடும் நிலைமையில் இருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம்.

'இந்த மாவட்டம்தான் என்றில்லை, தமிழ்நாடு முழுவதும் இப்போது அதுதான் நிலைமை' என்கிறார்கள், போட்டியைப் பல வருடங்களாக நடத்திவரும் அதன் ஒருங்கிணைப்பாளர்கள். 'ஏன் என்ன பிரச்னை?' என்று நாம் கேட்டதற்கு, அவர்கள் கூறிய விளக்கம் கவலை தரக்கூடியது.
'ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான செலவு அதிகமாகியுள்ளது.குறைந்தபட்சம் 3 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்சம் வரை செலவாகிறது. முன்னாடி எல்லாம் அவ்வளவு செலவுக்கே வேலை இருக்காது. எப்போது அரசு வழிகாட்டுதல் நடைமுறைப்படிதான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதோ, அப்பவே செலவுகள் எகிறிடுச்சு. வாடிவாசல்அமைப்பு, மேடை, பாதுகாப்புத் தடுப்புகள், தேங்காய் நார், மாடு பிடி வீரர்களுக்கான சீருடை, சிறப்பு விருந்தினர்கள், ஊர் முக்கியஸ்தர்களுக்கு மரியாதைசெலுத்த துண்டு, உணவு, மாடுபிடி வீரர்களுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் தரவேண்டிய பரிசுகள் என அதிக பட்சமாக 5 லட்சம் தேவைப்படுகிறது. அவ்வளவு தொகை செலவுசெய்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டுமா? என்ற யோசனை இப்போது எல்லா ஊர்களிலும் பரவிவிட்டது. அரசின் வழிகாட்டு முறைகள் இல்லாதபோது, அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குள் போட்டியை நடத்திவிடமுடியும். தெருவில் நிற்கும் நான்கு மாட்டு வண்டிகளை இழுத்துப்போட்டால் வாடிவாசல் தயாராகிவிடும். இப்போது அப்படி இல்லை' என்கிறார்கள். 'மதுரை பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் இங்கெல்லாம் வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு நடந்திருக்கிறதே?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் விரக்தியாகவே பதில் சொன்னார்கள்.



"அந்த மூன்று ஊர் ஜல்லிக்கட்டுக்கும் ஊடகங்கள் மிகப்பெரிய முக்கியத்துவம் தருகின்றன. முதலமைச்சரே கலந்துகொள்கிறார்.அமைச்சர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யும் ஸ்பான்ஸர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கெல்லாம் அதிகபட்சமாக 5 லட்சம் செலவாகும் என்றால், அவர்களுக்கு 30 லட்சம் வரை செலவாகும். அவ்வளவு செலவுசெய்ய அவர்களால் முடியும். அந்த மூன்றும் நட்சத்திர ஜல்லிக்கட்டு. ஆனால், கிராமப்புறங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு அப்படி இல்லையே. தலைக்கட்டுவரி போட்டும் டொனேஷன் வாங்கியும்தானே ஜல்லிக்கட்டே நடத்துகிறோம். அரசு பணமா தருது. இந்த முரட்டுச் செலவுகள் எங்களை மிரட்டுவதால், ஜல்லிக்கட்டு நடத்தும் ஆர்வமே எங்களுக்குக் குறைந்து விட்டது' என்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் என்னும் சகாப்தம்! - பிறந்தநாள் பகிர்வுகள்

பாலஜோதி.ரா



இன்று, எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள். மக்கள் திலகம் என்று சினிமாவிலும் புரட்சித்தலைவர் என்று அரசியலிலும் சிறப்புப் பெயர்கள் அவருக்கு வழங்கப்பட்டாலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களால் உண்மையான உள்ளன்புடன் சூட்டப்பட்ட 'வாத்தியார்' என்ற பெயர்தான் இன்றுவரை அழியாப் புகழுடன் நிலைத்தும் நீடித்துமிருக்கிறது.இந்தப் பகிர்வு, அவருடைய சினிமா, அரசியல் சாதனைகளைப் புள்ளிவிவரங்களுடன் சொல்வதில்லை. இது ஒவ்வொரு எம்.ஜி.ஆர் தொண்டனின் இதயத்தோடும் நெருக்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது.

தமிழர்களின் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் நிறைவுபெறுகின்றன. இது, பல வருடங்களாகவே தொடர்ந்துவரும் நிகழ்வாக இருக்கிறது. கிராமப் புறங்களில், அதிலும் தென்மாவட்டங்களில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களில், மார்கழி மாதத்தில் தெருவுக்குத் தெரு உள்ள சிறு கோயில்களில் ஸ்பீக்கர் கட்டி அதிகாலையிலும் மாலையிலும் பக்திப் பாடல்கள் போடுவது வழக்கம். மார்கழி மாதம் முடிந்ததும் அதைக் கழற்றிவிடுவார்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் சொல்லிவைத்தது போல் ஒரு மாறுதல் நடந்தது. அதாவது, மார்கழி மாதம் முதல் தேதி அன்று கட்டப்படும் அந்த ஸ்பீக்கர்கள், ஜனவரி 17-ம் தேதி முடிந்ததும்தான் கழற்றப்படும்.

  'திருடாதே பாப்பா திருடாதே' என்று குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பார். 'நான் ஆணையிட்டால்..அது நடந்துவிட்டால்' என்று ஏழை மக்களுக்கு நம்பிக்கை டானிக் ஊற்றிக்கொண்டிருப்பார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று இளைஞர்களுக்கு உற்சாக உரம் போடுவார். கிராமம் முழுக்க அன்றைக்கு எம்.ஜி.ஆரின் குரலாக டி.எம்.சௌந்தர்ராஜன் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். விவரம் அறிந்தவர்களுக்குத்தான் அது டி.எம்.எஸ். குரல். ஆனால்,கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றைக்கும் அது எம்.ஜி.ஆரின் குரல்தான். சினிமா பாடல்கள்மூலம் வாழ்வியலை சாமானியர்களுக்குக் கற்றுத்தந்தவர் எம்ஜிஆர். அதனால்தான், அவரை தங்களது மூச்சுக்காற்றாகக் கருதிய பாமர மக்கள் அவருக்கு, 'வாத்தியார்' என்று செல்லப் பெயர் சூட்டினார்கள்.

எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத மற்றொரு 'சிறப்பு' எம்.ஜி.ஆருக்கு மட்டுமே இருக்கிறது. பொதுவாக, அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாளின்போது, அந்தக் கட்சியினர் ஊரின் முக்கிய இடத்தில் போட்டோ வைத்து மலர்தூவி, புகழ்பாடுவார்கள். எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் ஒவ்வொரு தொண்டரின் வீட்டுக்கு முன்பாகப் புகைப்படம் வைத்து , ஸ்பீக்கர் கட்டி அவரது புகழ் பாடுவார்கள். தவிர, அவரவர் வசதிக்கேற்ப பானகமோ,அன்னதானமோ வழங்குவார்கள். சினிமா, அரசியல் என்ற இரட்டைக் குதிரையில் சவாரிசெய்து உச்சம் தொட்டவர் எம்.ஜி.ஆர். இங்கு குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் இன்றைக்கும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. சென்னையில் அப்படி எல்லாம் நடப்பதில்லை என்பவர்கள், ஒரு ரவுண்டு வடசென்னை பக்கம் போய் பார்த்துவிட்டு வாருங்கள்!

Extension of train hailed


Passengers want Tiruchi-Karur train to be made permanent

Passengers have welcomed the extension of the Tiruchi – Karur – Tiruchi DEMU passenger trains to Salem from Januay 11 to January 17 to clear the rush during the Pongal season.
They have urged the Salem Railway Division to make it a regular service.

The 76833 Tiruchi – Karur passenger departs Tiruchi at 9.35 a.m. and arrives at Karur at 11.35 a.m.

The train will depart Karur at 11.40 a.m., Vangal 11.49 a.m.; Mohanur 11.59 a.m.; Laddivadi 12.13 p.m.; Namakkal 12.24 p.m.; Kalangani 12.37 p.m.; Rasipuram 12.44 p.m.; Puduchattiram 12.54 p.m.; Mallur 1.06 p.m. and will reach Salem at 1.25 p.m., a release here has said.

The 76834 will depart from Salem at 1.30 p.m.; Mallur 1.44 p.m.; Puduchattiram 1.57 p.m.; Rasipuram 2.07 p.m.; Kalangani 2.15 p.m.; Namakkal 2.28 p.m.; Laddivadi 2.37 p.m.; Mohanur 2.49 p.m.; Vangal 3 p.m. and will reach Karur Junction at 3.20 p.m. From Karur the train will depart at 3.30 p.m. and will reach Tiruchi at 5.35 p.m.

Welcoming the decision of the railways to extend the trains up to Salem, K. Murugan, member, Mohanur Rail Commuters Welfare Association, said that the train will immensely benefit the rural people.

He said that passengers of the western and the central districts have been demanding a direct train from Salem to Tiruchi / Thanjavur via Namakkal and Karur.

At present, the Mayiladuthurai – Mysore Express is the only regular train operated in the Tiruchi – Karur – Namakkal – Salem route, which arrives at Namakkal and Salem in the night.
At a time when commuters were asking for more trains in the Salem – Namakkal – Tirchi section, the railways have abruptly cancelled the Salem – Karur passenger train introduced at the behest of M. Thambidurai, Lok Sabha Deputy Speaker.
The absence of a direct train service between the headquarters of two railway divisions – Salem and Tiruchi is posing much hardship to senior citizens, women and the sick, said 80-year-old B. S. Barkathullah, a former bank manager of Suramangalam in the city, who frequents Tiruchi.

The Salem Railway Division should take steps to concede the long pending demand of the people by regularising the extended train, he said.

NEWS TODAY 11.06.2026