Saturday, March 3, 2018

தாய்ப்பால் கொடுக்கும் படம் : 'மாடல்' அழகி மீது வழக்கு

Added : மார் 03, 2018 00:35





கொல்லம்: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு பெண், குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற படத்தை வெளியிட்ட, மாதம் இரு முறை வெளியாகும் மலையாள இதழ் மற்றும், 'மாடல்' நடிகை மீது, வழக்கு தொடரப்பட்டு உள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்து உள்ளது.
விழிப்புணர்வு : கேரளாவில், மாதம் இரு முறை வெளியாகும், மலையாள இதழான, 'கிருகலட்சுமி'யின், சமீபத்திய பதிப்பில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வு கட்டுரைகள் வெளியாகின. இதற்காக, இதழின் அட்டையில், ஒரு பெண், குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற படம் வெளியிடப்பட்டது. இதை கண்டித்து, சமூக தளங்களில் பலர் கருத்து வெளியிட்டுஇருந்தனர்.இதற்கிடையே, அந்த இதழ் மற்றும் படத்தில் உள்ள மாடல் நடிகைக்கு எதிராக, கொல்லம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில், வினோத் மேத்யூ என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அதன் விபரம்: திருமணமாகாத மாடல் அழகி, கிலு ஜோசப் என்பவர், அந்த படத்தில் உள்ளார். இந்த படம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட, மக்களை கவர வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்டு உள்ளது.
நடவடிக்கை : அந்த படம், மிகவும் ஆபாசமாக உள்ளது. உண்மையில், எந்த தாயும், இந்த அளவு மோசமாக, உடல் பாகங்கள் தெரியும்படி, பாலுாட்ட மாட்டார். மக்களை திசை திருப்பும் வகையில் செயல்பட்டுள்ள, அந்த இதழ் மற்றும் நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல்.,க்கு மாறுமா கல்வித்துறை : தனியார் நிறுவனங்கள் ஜரூர்

Added : மார் 03, 2018 04:57

மதுரை: 'கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் 6 ஆயிரம் ஏர்செல் அலைபேசி இணைப்புகளை பி.எஸ்.என்.எல்., க்கு மாற்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கல்வித்துறை செயலாளரின் கீழ் பள்ளி கல்வி, தொடக் கல்வி, மெட்ரிக், ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எஸ்.ஏ., எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை, மாவட்ட, உதவி தொடக்க, கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள், அரசு மேல், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் என 6 ஆயிரம் ஏர்செல் அலைபேசி இணைப்புகள் சி.யு.ஜி., முறையில் நான்கு ஆண்டுகளாக உள்ளன.ஏர்செல் இணைப்புகள் செயலிழந்துள்ள நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தகவல் பரிமாற்றத்தில் அதிகாரிகள், தலைமையாசிரியரிடையே சிரமம் ஏற்பட்டுள்ளது. அலைபேசி இணைப்புக்களை மற்றொரு தனியார் இணைப்புக்கு மாற்ற அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். தனியார் அலைபேசி நிறுவனங்கள் அதிகாரிகளிடம் பேசி வருகின்றன. அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் பி.எஸ்.என்.எல்., இணைப்பிற்கு மாற்ற போர்க்கொடி துாக்கியுள்ளனர்.உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக மாவட்ட செயலர் பாஸ்கரன், "மீண்டும் தனியார் நிறுவனங்களை நம்பி இணைப்பு பெற்று பிரச்னையை சந்திப்பதை விட, பி.எஸ்.என்.எல்.,க்கு மாறினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும்," என்றார்.
எம்.பி.பி.எஸ்., படிப்பு 6ல் சிறப்பு கவுன்சிலிங்

Added : மார் 03, 2018 03:28

சென்னை: தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த, 144 மருத்துவ மாணவர்கள், அரசு கல்லுாரியில் சேர்வதற்கான, சிறப்பு கவுன்சிலிங், 6ம் தேதி நடக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் உள்ள, தனியார் மருத்துவ கல்லுாரியை, தொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால், 2016 -17 கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த, 144 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், 144 எம்.பி.பி.எஸ்., மாணவர்களையும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்த்துக் கொள்ளும்படி, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், 144 மாணவர்களையும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்த்துக் கொள்வதற்கான கவுன்சிலிங், 6ம் தேதி காலை, 11:30 மணிக்கு, கீழ்ப்பாக்கம், மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில் நடக்க உள்ளது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Friday, March 2, 2018


தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் புதிதாக 32 இருக்கைகள்..!

இ.கார்த்திகேயன்  02.03.2018

ஏ.சிதம்பரம்

துாத்துக்குடி மருத்துவக் கல்லுாரியில் வரும் கல்வியாண்டில் இருந்து புதிதாக 32 இருக்கைகளுடன் மருத்துவ மேல்படிப்பு துவங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்” என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.





இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 2000-ம் ஆண்டு 100 எம்.பி.பி.எஸ் இருக்கைகளுடன் துவங்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு 100-ல் இருந்து 150-ஆக இருக்கைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. கடந்த 18 ஆண்டுகளில் இந்தக் கல்லுாரியில் இருந்து 1,400 மருத்துவ மாணவர்கள் மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெற்று வெளியேறி உள்ளனர். இதுவரையில், துாத்துக்குடி அரசு மருத்துவக்கல்லுாரியில் மேற்படிப்பு இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் மருத்துவ மேல்படிப்புக்காக 32 புதிய இருக்கைகள் துவக்கப்பட உள்ளது.



அரசு பொதுமருத்துவத் துறையில் (General medicine) 10 பட்ட மேற்படிப்பு இருக்கைகளும், அறுவைச் சிகிச்சைத் துறையில் (General surgery) 10 பட்ட மேற்படிப்பு இருக்கைகளும், குழந்தை நலத்துறையில்(pediatrics) 6 பட்டமேற்படிப்பு இருக்கைகளும், மகப்பேறு துறையில் (Obstetrics & Gynecology) 6 பட்டமேற்படிப்பு இருக்கைகள் என மொத்தம் 32 பட்டமேற்படிப்ற்கான புதிய இருக்கைகள் துவக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் இந்திய மருத்துவக் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மேலும் சிறந்த சிகிச்சையைப் பெற முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AIRCEL PORTஎளிமையான வழிகள் எண்! மற்ற நிறுவன எண்ணிலிருந்தும் பெறலாம்! 

02.03.2018




☀ஏர்செல் நிறுவன பயனாளராக
உள்ளோர் தங்களின் நடப்பு ஏர்செல் எண்ணை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்வதற்கான இரு வழிகள் இங்கே தரப்பட்டுள்ளன.


☀இவ்விரு வழிகளில் ஏதேனுமொரு வழியில் தங்களின் ஏர்செல் எண்ணிற்கான தனிப்பட்ட முனையக் குறியீட்டு எண்ணைப் (UPC : Unique Port Code) பெறலாம்.



☀இப்படிப் பெறப்படும் முனையக் குறியீட்டு எண் 10 நாள்களுக்குள் காலவதியாகிவிடும்.


☀எனவே, முனையக் குறியீட்டு எண்ணைப் பெற்றவுடன் நீங்கள் மாறவிரும்பும் புதிய அலைபேசி நிறுவன விற்பனை முகவரிடம் உடன் விண்ணப்பித்து விடவும்.


☀அவ்வாறு விண்ணப்பிக்கையில் நடப்பு ஏர்செல் எண்ணிற்கு அளித்திருந்த நபரின் பெயரிலான அடையாளச் சான்றினையே புதிய நிறுவனத்திடமும் அளிக்க வேண்டும்.


☀முனையக் குறியீடு தங்களின் நடப்பு Aircel எண்ணிற்குத் தான் கிடைக்கப்பெறும் என்பதால், முதலில் தங்களின் ஏர்செல் எண்ணிற்குச் சமிக்ஞை (Signal) கிடைக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


☀இல்லை எனில், தங்களில் செல்லிட பேசியில் Network Operator பகுதிக்குச் சென்று Select Manually-யைத் தெரிவு செய்து, தேடிவரும் பட்டியலில் AIRTEL நிறுவனத்தைத் தெரிவு செய்து கொள்ளவும்.


☀AIRCEL சமிக்ஞை கிடைக்காத இடங்களில் வாடிக்கையாளர்களுக்கானத் தற்காலிகச் சேவையை ( குறுஞ்செய்தி அனுப்ப / பெற) Airtel வழங்கி வருகிறது.


☝வழிமுறை : 1


⚡தங்களின் ஏர்செல் எண்ணிலிருந்து PORT மற்றும் இடைவெளிவிட்டு தங்களின் எண்ணை தட்டச்சுசெய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.


(உ-ம்) PORT 9XXXXXXXXX


⚡இம்முறையில் விண்ணப்பிக்க 50 பைசா பிடித்தம் செய்யப்படும்.


✌வழிமுறை : 2


⚡பின்வரும் எண்ணிற்கு எந்தவொரு அலைபேசி நிறுவன எண்ணில் இருந்தும் அழைத்து முனையக் குறியீட்டைப் பெறலாம். முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இச்சேவை வழங்கப்படுகிறது.


👉சென்னை மண்டலம் : 9551299210


👉தமிழ்நாட்டின் பிற பகுதிகள் : 9750999209


⚡நீங்கள் ஏர்செல் எண் வாங்கிய பகுதியைப் பொறுத்து மேற்கண்ட பகுதிக்கான எண்ணை, எந்தவொரு நிறுவன அலைபேசி எண்ணிலிருந்தும் அழைக்கலாம்.


⚡மாநிலம் முழுவதும் பலர் தொடர்பு கொள்வதால் அழைப்பு கிடைப்பது சற்று கடினம். Number Busy / Please Check the Number என்றும் வரும். எனினும் தொடர்ந்து முயற்சிக்கவும்.


⚡அழைப்பு ஏற்கப்படுகையில் தங்களின் நடப்பு ஏர்செல் எண்ணை அவர்களிடம் தெரிவிக்கவும்.


⚡அடுத்த 24 மணி நேரத்திற்குள் தங்களுக்கான முனையக் குறியீட்டெண் (UPC) தங்களின் நடப்பு ஏர்செல் எண்ணிற்கே அனுப்பி வைக்கப்படும்.


⚡நினைவிருக்கட்டும், இவ்வாறு பெறப்படும் முனையக் குறியீட்டெண்ணிற்கான காலக்கெடு 10 நாட்கள் மட்டுமே.


⚡இதேபோன்று 9842012345 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் பெறலாம்.
Rail tickets to get cheaper 

Ajith Athardy, DH News Service, New Delhi, Mar 1 2018, 19:55 IST 



The move will make tickets slightly cheaper for passengers who book a berth at the railway ticketing counters as well as through IRCTC website. DH file photo

Indian Railways on Thursday said Merchant Discount Rate (MDR) charges will not be levied on passengers for booking railway tickets on payment made through debit cards for a transaction value up to Rs 1 lakh, DHNS reports from New Delhi.

The move will make tickets slightly cheaper for passengers who book a berth at the railway ticketing counters as well as through IRCTC website.

Instructions to this effect have been issued to the banks by the Department of Financial Services.

The decision will help in promoting digital and cashless transactions, said a statement from the railways.
Chennai: Express trains diverted, not to touch Centra

DECCAN CHRONICLE.
Published Mar 2, 2018, 2:51 am IST


Southern Railway has announced the 5 express trains via Perambur railway station and not touch Chennai Central. 



In a press release, the zonal railway has said that Shalimar - Thiruvananthapuram bi-weekly (22642).

Chennai: Southern Railway has announced the 5 express trains via Perambur railway station and not touch Chennai Central. In a press release, the zonal railway has said that Shalimar - Thiruvananthapuram bi-weekly (22642), Thiruvananthapuram - Shalimar bi-weekly (22641), Ernakulam - Patna bi-weekly (22643), Patna - Ernakulam bi-weekly (22644), Yesvantpur - Muzaffarpur weekly express (15227), Muzaffarpur - Yesvantpur weekly express (15228), Guwahati - Bengaluru Cantt. tri-weekly express (12510), Bengaluru Cantt. - Guwahati tri-weekly express (12509), Guwahati - Thiruvananthapuram weekly express (12516) and Thiruvananthapuram - Guwahati weekly express (12515) trains will be diverted via Perambur. Also, Rameswaram - Okha - Rameswaram weekly express trains and Chennai Central.

NEWS TODAY 16.09.2026