Friday, March 30, 2018

Tutors, DU students among 2 dozen quizzed on CBSE leaks
WhatsApp Trails Being Traced; 10 Places Raided

TIMES NEWS NETWORK 30.03.2018

New Delhi: The special investigation team probing the CBSE paper leaks has detained around a dozen people including coaching centre owners and tutors for interrogation, police said on Thursday. While the police have some suspects, a breakthrough has eluded them so far.

Sources said the crime branch is trying to reversetrace the chain of WhatsApp messages containing the questions in an attempt to reach the source of the leaks. Some invigilators and CBSE insiders are also under the scanner. The cyber cell is likely to be roped in to crack the Whatsapp chain, a senior police official said. Seven DU students were also among those questioned.

“The crime branch has conducted raids in more than 10 places across Delhi and NCR,” special commissioner (crime) R P Upadhyay said on Thursday.

FACE OF AGONY: CBSE students protest over the alleged paper leak at Jantar Mantar in New Delhi on Thursday

Dates for retest may be announced today


H RD minister Prakash Javadekar on Thursday said he had not slept the night after the leak of Class X maths and XII economics board question papers came to light and re-tests ordered as he was a parent too. Meanwhile, it is understood that the fresh dates may be announced on Friday. P13

No arrests made in CBSE paper leak so far

“So far we have questioned a few people including some owners of coaching centres and college students. A total of 18 students and five tutors have been questioned. The two SITs are also questioning some administrators of two WhatsApp groups. No arrests have been made so far,” he added.

Seven Delhi University students were among those questioned. The probe has revealed that at least 24 students from different schools in outer and northeast Delhi had received the Class X maths paper through a WhatsApp group, while the Class XII economics paper was circulated among 10 students. These students will also be examined.

Among other angles, police are probing if the papers were leaked from the centre where they were kept before being distributed. Papers are usually sent to the exam centre around an hour before the exam.

The students have claimed that these papers were readily available on encrypted social media apps. Though officially crime branch denied coming across a money trail, but the probe had indicated that the papers were being sold for as little as ₹10,000 to ₹15,000. Once money exchanged hands, exam papers were forwarded to students via WhatsApp. It became viral because students then forwarded it to others.
காற்றில் கரையாத நினைவுகள் 06: கடிதாசி!

Published : 28 Mar 2018 18:57 IST


வெ.இறையன்பு   THE HINDU TAMIL





ஓவியம்: இளஞ்செழியன்

கடிதம் என்பது சிறகு முளைத்த பந்து; இறகு முளைத்த இதயம். அப்பாவிடம் இருந்து வந்தால் பற்று, விருப்பமானவரிடம் இருந்து வந்தால் கிளுகிளுப்பு, நண்பனிடம் இருந்து வந்தால் எதிர்பார்ப்பு, அதிகாரியிடம் இருந்து வந்தால் பதற்றம் என்று உறையைப் பார்த்ததும் உடம்பு முழுவதும் உணர்ச்சி கொந்தளிக்கும்.

கடிதத்தால் வாழ்க்கை மாறிப்போனதாக காவியங்களும், திரைப்படங்களும் வெளிவந்த காலம் உண்டு. தாமதமான வேலைவாய்ப்புக் கடிதத்தால் நிலைகுலைந்த இளைஞன், தவறிப் போன காதல் கடிதத்தால் தலைகுனிந்த காதலர்கள், அநாமதேயமாக வந்த புகார்க் கடிதத்தால் அவமானப்பட்ட அபலைகள் என புனைவு இலக்கியத்தில் பல நிகழ்வுகளுக்குக் கடிதம் காரணமாக கற்பிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு.

முகவரி மாறியதால் வாழ்வே திசை திரும்பியதாக படைக்கப்பட்ட புதினங்களும் உண்டு. கடித இலக்கியம் என்கிற புனைவும் இருந்தது.

கடிதத்தில் முகம் தெரியும்

கடிதங்களாலே அதில் மொத்தக் கதையும் நகரும். தம்பிக்கும், தந்தைக் கும் கடிதம் எழுதுவதுபோல நாட்டு நடப்பை எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைமுறையும் இருந்தது.

அறிவுரைகளை மாணவர்களுக்குத் தோளில் கைபோட்டு தோழமையுடன் கடிதமாக எழுதும் வழக்கமும் இருந்தது.

கடிதம் என்பது காகிதமல்ல; வாழ் வின் பகுதி. அந்தக் காலத்தில் கடிதத்தை வாசிக்கும்போது எழுதியவர் முகம் அதில் தெரிவதைப் போலவும், அவரே பேசுவதைப் போலவும் திரைப்படங்களில் காண்பிப்பார்கள். வாழ்க்கையின் ஒருகட்டத்தில் எல்லோருமே அன்று ஒரு கடிதத்துக்காகக் காத்திருந்தார்கள்.

வேலைவாய்ப்புக்கான ஆணை கிடைக்காதா என்றும், பெண் வீடு பார்த் துச் சென்றவர்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டார்களா என்றும், எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வராதா என்றும், விரும்பிய படிப்புக்கு அழைப்பு வராதா என்றும் வாழ்நாள் முழுவதும் அன்று நல்ல சேதிக்காக தபால்காரரை எதிர்பார்த்து மக்கள் தவமிருந்தார்கள்.

அன்று ஒரு கடிதம் வந்தால் இல்லத் தில் யார் வேண்டுமானாலும் பிரித்துப் படிக்கலாம் என்ற சுதந்திரம் இருந்தது. கடிதம் வீட்டுக்கானது. முகவரி மட்டுமே குடும்பத் தலைவரின் பெயரில் இருக்கும்.

வீட்டில் நீளக் கம்பி குடைக் கைப் பிடியைப் போன்ற தோற்றத்துடன் தொங்கிக்கொண்டிருக்கும். படித்து முடித்த கடிதங்கள் அதில் பத்திர மாகச் சொருகப்படும். எந்தக் கடிதத்தையும் தூக்கி எறியும் வழக்கமில்லை.

மஞ்சள் குளித்த அஞ்சல்

எப்போதாவது நுனிகளில் கருப்பு மை தடவிக்கொண்டு மரண அஞ்சல் அட்டை வந்து சேரும். உடனே, அது கண்டந்துண்டமாகக் கிழிக்கப்பட்டு குப்பையில் வீசி எறியப்படும். மங்கள நிகழ்வுகள் மூலைகளில் மஞ்சள் பூசிக்கொண்டு வருவதும் அவற்றை நிகழ்வு முடிந்த பிறகும் கோத்து வைப்பதும் உண்டு.

கடிதங்களெல்லாம் ஆவணங்களாகக் கருதப்பட்ட காலம் அது. ஆண்டு முடிந்த பிறகு அனைத்துக் கடிதங்களும் ஆராயப்படும். போகிப் பண்டிகை அன்று தேவையற்றவை நெருப்புக்குக் கொடுக்கப்படும்.

சொந்தங்களை அன்று கடிதக் கயிறுகள் இறுக்கிக் கட்டின. தொய்வு விழும்போதெல்லாம் ஆறுதலாகக் கடிதம் வந்தால் அத்தனை வருத்தமும் ஆவியாகும். எல்லாவற்றையும் கடிதத்தில் சொல்லி நிம்மதி அடையும் உறவும் நட்பும் இருந்தன. எல்லோரும் நலம் என்று தொடங்கும் கடிதத்தில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அம்மை வந்த சேதி விலாவாரியாக விளக்கப்படும்.

காலில் புண் ஏற்பட்டது முதல் வீட்டு முருங்கை மரத்தில் கம்பளிப்பூச்சி வந்தது வரை அனைத்தையும் தெரி விக்கும் வழக்கம் இருந்தது. ஒரு செய்தியில் இருந்து இன்னொரு செய்திக்கு கடித வரிகள் தாவும்போது ‘நிற்க’ என்று எழுதும் மரபும் இருந்தது.

ஒரே கடிதம் பல முறை படிக்கப் படும். அப்பா படித்து முடித்த பிறகு அம்மா அதை சாவகாசமாகப் படிப்பார். பலர் எழுத்துக்கூட்டிப் படிக்கக் கற்றது கடிதம் என்னும் காவியத்தால்தான். வெற்றி பெற்றதற்குப் பாராட்டுக் கடிதமும், தோல்வியுற்றதற்கு ஆறுதல் சொல்லியும் சாயும் தோளாய் நீளும் கடிதங்கள் நிறைய இருந்தன.

நலம், நலமறிய அவா

கடிதம் போடாவிட்டால் கோபித்துக்கொள்வார்கள். அதற்காகவே எதையேனும் எழுதி அஞ்சலில் சேர்க்கும் வழக்கம்கூட இருந்தது. திடீரென எழுதுபவர்கள் கடிதம் போட்டுவிட்டு உடனே மறுமடல் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

அழகான கையெழுத்தால் கடிதத்தை அலங்கரிப்பார்கள் சிலர். அந்த முத்துமுத்தான கையெழுத்தைப் பார்க்கும்போதே பரவசம் ஏற்படும். அவர் கள் நம் அருகில் வந்து காதுகளின் ஓரம் கிசுகிசுப்பதைப் போல நெருக்கம் தோன்றும். நமக்காக மெனக்கெட்டு எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படும். அஞ்சலட்டையில் அந்தரங்கங்களை எழுதும் கஞ்சர்களும் இருப்பார்கள். எந்தப் பகுதியையும் வீணாக்காமல் வளைத்து வளைத்து எழுதிச் சிக்கனம் காட்டும் சிலரும் உண்டு.

அஞ்சல் கொண்டு வருகிறவர் அன்று முக்கியப் பிரமுகர். தபாலில் இருப்பதற்கு அவரே பொறுப்பு என்பதைப் போன்ற எண்ணம் அன்று எல்லோருக்கும் இருந்தது.

தேர்வில் வெற்றி பெற்றதும் அவ ரைக் கட்டிப்பிடித்த மாணவர்கள் உண்டு. இல்லத்தின் அங்கமாக ஆன தபால்காரர்களும் இருந்தார்கள். அவர் கள் அந்தப் பகுதியில் அனைவருக்கும் அறிமுகமான பிரபலம்.

இப்படிக்கு தங்கள் அன்புள்ள

திருமணங்களுக்கும் அழைக்கப்படுவார். இன்று கடிதத்தைக் கொண்டு வருகிறவர் பெயர்கூட தெரியாத நிலை. அதைக் கடமையாக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை. அன்று அஞ்சல்காரரை மட்டுமா மதித்தோம். சிவப் புத் தபால் பெட்டியையும் பார்த்தால் சிலிர்த்துப் போவோம். அதன் வழியாக எத்தனை தகவல்கள் வந்து சேர்ந்தன என்று பூரிப்பு அடைவோம். எத்தனை கோந்து இருந்தாலும் எச்சிலால் ஒட் டிய கடிதங்களே அதிகம்.

அஞ்சலகம் அடிக்கடி செல்வதை செயலாகக் கொண்டவர்களும் இருந்தார்கள். பணவிடை அனுப்பவும், பதிவு அஞ்சல் அனுப்பவும் வரிசையில் காத்திருப்போம். படித்து முடித்த பிறகு பணிக்காக எதிர்பார்க்கும் அவசரத்தில் வீட்டுக்கு அஞ்சல் வரும் வரை காத்திருக்காமல் அஞ்சல் நிலையத்துக்கே சென்றுவிடுவோம்.

கடிதம் என்றால் களிப்பும், தந்தி என்றால் பயமும் ஏற்பட்ட காலம் அது. மாணவர்களாக இருந்தபோது விடுதிக்குச் சென்றதும் முதலில் விலாவாரியாகக் கடிதம் எழுதுவோம்.

பேராசிரியர் பெயர் முதல் காலை யில் உண்ட சிற்றுண்டி வரை அனைத்தையும் எழுதி ஆர்வமாகப் பகிர்வோம். மூன்று மாதங்கள் முடிந்த பிறகு பணம் கேட்பதற்கு மட்டும் கடிதம் செல்லும். சடங்காக நான்கு விசாரிப்புகளை அங்கங்கே தூவுவோம்.

தொடக்கத்தில் வீட்டுச் சிந்தனையைவிட்டு வெளிவர முடியாத பழக்கதோஷம். அப்போது அப்பாவின் கடிதத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து அறைக்குச் செல்வோம். பிறகு பழக்கமே தோஷமானதால் கடிதம் மீது நாட்டம் குறையும்.

மற்றவை நேரில்

அன்று பேனா நண்பர்கள் என்ற நட்பு வட்டம் உண்டு. தெரியாதவர்களை நட்பாக நினைத்து கடிதத்தின் மூலம் சிநேகம் செய்யும் நடைமுறை அது. இன்று அதுவே முகநூலாக ஆகிப்போனது. முகம் தெரியாதவர்களும், முகவரி தெரியாதவர்களுமே முகநூல் நண்பர்கள்.


காலம் எதையும் நீடிக்க விடுவது இல்லை. இன்று கடிதம் என்பது மொழிப் பாடத்துக்கான ஒரு பயிற்சி. மின்னணுச் சாதனத்தில் உடனே அழைத்துப் பேசலாம், குறுந்தகவல் தரலாம், மின்னஞ்சல் செய்யலாம்.

எந்த வீட்டிலும் கடிதங்களை கோக் கும் கம்பியும் இல்லை; அப்படியான பழக்கமும் இல்லை. கடிதம் எழுதும் பொறுமையும் யாருக்கும் இல்லை. கைப்பட எழுதும் பழக்கம் இளைய தலைமுறையிடம் அறவே இல்லை. கடிதம் என்பது மறைமுகமான சமூகத் தணிக்கை.

அரசு அலுவலகங்களால் மட்டுமே இன்று கடிதப் போக்குவரத்து உயிர்த்திருக்கிறது. மொட்டைக் கடிதங்களை யும் சேர்த்து.

தந்தியைப் போல தபாலும் காலாவதியாகும் காலம் ஒன்று வரலாம். கடிதம் மறைந்தால் அத்துடன் பல கனவுகள் அழியும். கடிதங்களை காலத் தின் இதயத்தில் வைத்து காப்பாற்ற வேண்டாமா!

- நினைவுகள் படரும்...
ஆடு மேய்ப்பவருக்கு வரித்துறை, 'நோட்டீஸ்'

Added : மார் 29, 2018 20:30

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், ஆடு மேய்ப்பவருக்கு, வருமான வரி தாக்கல் செய்யும்படி, வருமான வரித் துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர், ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வருமான வரி செலுத்தாத வர்த்தகர்களுக்கு, வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இந்நிலையில், ராய்ப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் அவத்ராமுக்கு, வருமான வரி செலுத்தும்படி, நோட்டீஸ் வந்துள்ளது.இதுகுறித்து அவத்ராம் கூறியதாவது:விவசாய வேலை செய்தும், ஆடு மேய்த்தும், குடும்பத்தை நடத்தி வருகிறேன். இந்நிலையில், வருமான வரியை தாக்கல் செய்யும்படி, எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதற்கு முன், வருமான வரி செலுத்தியதில்லை. இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசில், 'நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் வருமானம் உள்ள அனைவரும், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறப்பட்டிருந்தது.
ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை

Added : மார் 30, 2018 02:52



புதுடில்லி : ரயில்வே ஊழியர்களுக்கு முதல் முறையாக, எல்.டி.சி., என அழைக்கப்படும், விடுப்புடன் கூடிய பயணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பணியாளர், பொதுமக்கள் புகார்கள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விதிமுறைகளின்படி, ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது துணைக்கு, இலவச பாஸ் வழங்கப்படுவதால், எல்.டி.சி., வசதியை பெற உரிமை இல்லை.

ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, தற்போது, இவர்களுக்கும், எல்.டி.சி., வசதி பெற வகை செய்யப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் ஆலோசனைப்படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ரயில்வே ஊழியர்களுக்கு இந்த வசதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்கள், எல்.டி.சி., வசதியை பெறும்போது, அந்த ஆண்டுக்கான இலவச பாஸ் அல்லது சலுகை கட்டணம் வசதியை பயன்படுத்த முடியாது. சொந்த ஊருக்கு செல்வதற்கும், எல்.டி.சி.,யை பயன்படுத்த முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி முதல் அமலாகிறது

30.03.2018




வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 30, 2018, 04:45 AM

சேலம்,

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

2018-19-ம் ஆண்டுக்கு இருசக்கர வாகனம் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை, இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கடுமையாக உயர்த்தி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, 151 சி.சி. முதல் 350 சி.சி. இழுவைத்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.985 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.98 அதிகம் ஆகும். அதாவது 11 சதவீத உயர்வு.

350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1,304 அதிகம் ஆகும். அதாவது 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

7,500 முதல் 12 ஆயிரம் கிலோ எடை வரை உள்ள சிறிய சரக்கு லாரிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 ஆயிரத்து 523 அதிகம். அதாவது 23 சதவீத உயர்வு ஆகும்.

12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடையுள்ள(6 சக்கர லாரி) வாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் 367 நிர்ணயம். இது கடந்த ஆண்டை விட ரூ.3,468 அதிகம். அதாவது 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை எடையுள்ள (10, 12, 14 சக்கரம்) வாகனங்களுக்கு ரூ.39 ஆயிரத்து 849 ஆகும். கடந்த ஆண்டை விட ரூ.8 ஆயிரத்து 223 அதிகம் ஆகும். இது 26 சதவீத உயர்வு ஆகும். 40 ஆயிரத்திற்கு மேல் எடையுள்ள வாகனங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 308 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.5,284 அதிகம். அதாவது 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோல பயணிகள் சவாரி ஆட்டோ, 17 பயணிகள் செல்லக்கூடிய வாகனம் ஆகியவற்றுக்கும் 17 சதவீதம் வரை இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்காடு மலைப்பாதை தடுப்பு சுவரில் விரிசல் உடனே சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை 
30.03.2018




ஏற்காடு மலைப்பாதை தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை உடனே சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மார்ச் 30, 2018, 03:34 AM

ஏற்காடு,

சேலம் மாவட்டம் ஏற்காடு, தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு கொண்டப்பநாய்க்கன்பட்டி, குப்பனூர் ஆகிய ஊர்கள் வழியாக செல்லலாம். இதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பாதையாகவும், சேலம் நகரத்தில் இருந்து குறைந்த பயண தூரம் (30 கிலோ மீட்டர்) கொண்ட பாதையாகவும் கொண்டப்பநாய்க்கன்பட்டி வழி மலைப்பாதை உள்ளது.


இந்த மலைப்பாதையானது கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி இரவு பெய்த பெரும் மழையால் பாதிக்கப்பட்டது. மலைப்பாதையின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவுகளை தற்காலிகமாக சரிசெய்ய ஒரு வாரம் காலம் ஆனது. அதுவரை ஏற்காடு மக்கள் மின்சாரம், உணவு, காய்கறி, பால் உள்ளிட்டவை பெற முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த மண்சரிவு ஏற்பட்டு 2 ஆண்டுக்கு மேலாக இந்த கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல், கடந்த 2017-ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கப்பட்டு ஒரு வருட காலத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.

தடுப்பு சுவரில் விரிசல்

மலைப்பாதையின் 3-வது கொண்டை ஊசி வளைவு அருகில் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு சற்று சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் சாலையிலும் விரிசல் ஏற்பட்டிருப்பது தெரிகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு 12-வது கொண்டை ஊசி வளைவு அருகில், கார் மோதி, சாலையோர தடுப்புசுவர் இடிந்ததை சரிசெய்யாமல் விட்டிருந்தனர். அப்போது ஏற்காட்டில் பெய்த மழை அந்த தடுப்பு உடைந்த பகுதி வழியே பெரும் ஊற்று போல் ஓடியதால் மலைப்பாதையின் பெரும் பகுதிகள் பாதிப்புக்குள்ளானது முக்கிய காரணமாகும். தற்போது இந்த விரிசல் ஏற்பட்டுள்ள தடுப்பு சுவர் சரி செய்யப்படாமல் விட்டால், மீண்டும் பெரும் மழை பெய்யும்போது பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அரசு அதிகாரிகள் ஏற்காடு மலைப்பாதையில் கட்டப்பட்டு வரும் இந்த தடுப்பு சுவர் பணிகளை நல்ல தரமான முறையில் கட்டப்படுகிறதா? என்பது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்,என்றும் தடுப்பு சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை உடனே சரிசெய்ய வேண்டும், என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Thursday, March 29, 2018

விராலிமலையில் அலங்காநல்லூர் - விஜயபாஸ்கரின் அரசியல் ஜல்லிக்கட்டு 

பாலஜோதி.ரா   VIKATAN 29.03.2018

தனது சொந்தத் தொகுதியான விராலிமலையில், இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்தும் மெகா ஜல்லிக்கட்டு, அவரின் செல்வாக்கை நிரூபிப்பதற்காக நடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான அரசியல் நகர்வுதான், சற்றுமுன் தொடங்கியிருக்கும் ஜல்லிக்கட்டு.




புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், இன்று காலை 7.20 மணிக்கே தொடங்கியிருக்கும் பிரமாண்டமான ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கென்றே தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவராக மேடையில் வந்து அமர ஆரம்பித்துவிட்டார்கள். 'தமிழர்களின் பாரம்பர்ய போட்டிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்' என்று விஜயபாஸ்கரே பேசி, அவை எஃப்எம்-களில் நேற்று முழுக்க ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. தனியார் சேனல்களிலும் லோக்கல் டி.வி-க்களிலும் விளம்பரங்களும் கொடுத்திருந்தார். நியூட்ரினோ, ஸ்டெர்லைட், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தலைபோகிற தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்கு நடுவே, தனது தனிப்பட்ட அரசியல் பலத்தைக் காட்டுவதற்கென்றே விஜயபாஸ்கர் நடத்தும் இந்த ஜல்லிக்கட்டு, அவர் மீதான கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறது. அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு இணையாக நடத்துவதில் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிரம்காட்டிவருவதாகக் கூறப்படுகிறது



இந்தப் போட்டியில், மாடுபிடி வீரர்களோ, பார்வையாளர்களோ மாடு முட்டி இறந்துவிடக் கூடாது. அதனால் தனது பெயர் கெட்டுவிக் கூடாது'என்ற டென்ஷனுடன் சக அமைச்சர்களுடன் மேடையில் அமர்ந்திருக்கிறார். நேரடி ஒளிபரப்பு செய்ய பெரும்பாலான தனியார் சேனல்கள் வந்துவிட்டன. இதில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், எஸ்.பி., திருச்சி மாநகர ஐ.ஜி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அத்தனைபேரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைசிறந்த சுமார் 2000-காளைகள், பக்கத்து மாவட்டங்களிலிருந்து வந்து இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றன. அவற்றுக்கான 'புறவாடி' , சகல கெடுபிடிகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.




500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள். பரிசுப் பொருள்கள் மலைபோல குவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் காளையின் உரிமையாளருக்கு மாருதி காரும், சிறந்த மாடுபிடி வீரர்களாகத் தேர்வுசெய்யப்படுகிறவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கும், ஐந்து ஹீரோ ஹோண்டா பைக்குகளும் தனி மேடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, ஜிம்மிஜிப்,ஹெலிகேமரா போன்றவைகளும் இந்தப் போட்டியைப் படம்பிடிக்க சுற்றிச் சுழல்கின்றன. விராலிமலைத் தொகுதியில், சற்று சரிந்திருக்கும் தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்த விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டுப் போட்டியை கையில் எடுத்திருக்கிறார் என்று வியக்கிறார்கள். " மக்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதன்மூலம் தனக்கு எதிராகச் செயல்படுகிறவர்களையும் எதிர்க்கட்சிப் பிரமுகர்களையும் வாயடைக்கவைத்துவிட்டார். அத்துடன், அ.தி.மு.க-விலும் தனக்கான இடத்தை நிரந்தரமாக்கிக்கொள்ள இந்த ஜல்லிக்கட்டு பெரிதும் உதவும் " என்கிறார்கள்.

NEWS TODAY 18.12.2025