Friday, April 13, 2018

REPARATION

Pay 141cr damages in 4 weeks for 2017 oil spill: HC to govt
TIMES NEWS NETWORK  13.04.2018

Chennai: The Madras high court on Thursday directed the Tamil Nadu fisheries department to disburse ₹141 crore compensation to over one lakh fishermen who were affected by the January 2017 oil spill.

On January 28, 2017, cargo ships Dawn Kanchipuram and MT BW Maple collided near Chennai port, resulting in a large oil spill. The high court initiated suo motu proceedings on pleas for compensation from people whose livelihoods were severely hit by the oil spill .

When the plea came up for hearing before a bench of Justices S Manikumar and Bhavani Subbarayan, the department submitted that a six member committee was formed to suggest suitable ways to calculate the compensation for different categories of fishermen affected by spill.

The committee has already submitted its report and the same is presently under scrutiny of the government. Once the process of de-duplication is complete, steps will be taken to disburse the compensation, it said.

Recording the submission, the bench said, “We direct the sscrutiny and approval be granted as expeditiously as possible. Preparation of de-duplication process is completed as expeditiously as possible and disbursement of due compensation to eligible parties will be done within four weeks from today.”
Govt sleeping on 30K court orders like Rip Van Winkle’

TIMES NEWS NETWORK  13.04.2018

Chennai: Pointing out that about 30,840 contempt pleas has been filed in the Madras high court since 2000, seeking action against government authorities who failed to implement various orders of the court, Justice N Kirubakaran has said, “Government officials were sleeping over court orders like Rip Van Winkle.”

On Thursday, it ordered appearance of higher education secretary and member secretary of Teachers Recruitment Board among others in the court on Friday by 2.15pm.

The issue pertains to a plea moved by S Venkatachalam and five others seeking to declare government order dated January 5, 2016 that the B Ed degree course offered by the Vinayaka Missions University, Salem is not equivalent to B Ed of Tamil Nadu Teachers Education University, Chennai from academic year 2015-16 onwsards.

The court on November 30, 2017 held that is not applicable to the degrees obtained from Vinayaka Missions University and the petitioners are entitled to be appointed, whenever the other selected students are appointed, as the petitioners possess valid degrees and they have also qualified in the Teachers Eligibility Test and their names find place in the select list of candidates.

Though the order was passed in November 2017, the petitioners were not given appointments, having been called for certificate verification already. Hence, the matter was mentioned before the court and was called on February 16, 20, 22, March 1, and 14 for compliance and again on March 22, when it was represented that the government took a decision to make appointment of the petitioners. Therefore, based on the representation the plea was adjourned by two weeks.

As the government submitted that it has decided to prefer an appeal over the order after taking so many adjournments, Justice Kirubakaran said, “It is the prerogative of any party to file an appeal, if that party is aggrieved over the order. The order was passed in November, 2017.

Thereafter, the matter was listed many times. Neither the government has taken any steps to file appeal in time nor shown any interest to implement the order.”



FALL ON DEAF EARS

Thursday, April 12, 2018



புதிய சேவை தொடக்கம்: திருச்சி- சென்னை விமானக் கட்டணங்கள் குறைப்பு


By DIN | Published on : 12th April 2018 01:46 AM




திருச்சி - சென்னை இடையே ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்படுவதை முன்னிட்டு, விமானக் கட்டணங்கள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. 

திருச்சி - சென்னை இடையே ஏற்கெனவே காலை 8.40க்கு ஏர் அலையன்ஸ் விமானமும், முற்பகல் 11.15, மாலை 6, இரவு 10.40 மணி ஆகிய 3 நேரங்களில் ஜெட் ஏர்வேஸ் விமானமும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், உள்நாட்டுப் போக்குவரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், இண்டிகோ நிறுவனம் ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய விமான சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விமானப் போக்குவரத்தும் தினமும் 4 முறை இயக்கப்படவுள்ளது.
இந்த புதிய அறிவிப்போடு, இண்டிகோ நிறுவனம் கட்டணச் சலுகையையும் அறிவித்துள்ளது. ஏற்கெனவே குறைந்தபட்ச கட்டணமாக ரூ.3,500 என இருந்தாலும், சில நேரங்களில் ரூ. 12,000 வரையில் திருச்சி-சென்னை இடையிலான விமானக் கட்டணம் இருந்துள்ளது. ஆனால், முன்கூட்டியே பயணச்சீட்டு பதிவு செய்யும் நிலையில், குறைந்தபட்சக் கட்டணமாக ரூ. 2,499 என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்கெனவே களத்தில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் தனது குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 2,572 எனவும், ஏர் அலையன்ஸ் 2,754 ஆகவும் நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த அதிரடி கட்டணக் குறைப்பால், திருச்சி - சென்னை இடையே விமானப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. காரணம் ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் ரூ.1400 என உள்ளது. மேலும் ரயில்களில் எப்போதும் இடம் கிடைப்பதில்லை. பயணிகள் ஆம்னி பேருந்துகள் மற்றும் பேருந்துகளை நாடுகின்றனர். 

ஆம்னி பேருந்துகளில் படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி பேருந்துகள் ரூ. 700 முதல் ,1000 வரை நிர்ணயிக்கப்படுகின்றன. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இது மேலும் அதிகரிக்கின்றன. அந்தளவு செலுத்தி 8 மணி நேரம் பயணிக்கும் நிலையில், ரூ.2,500-க்கு விமானப் பயணம் என்பது மிக மிக குறைவானக் கட்டணமே. 

இன்டிகோ விமான நேரம் : காலை 9.35, பகல் 12.25, 2.25, மாலை 5.30, இரவு 7.10 என தினமும் 5 முறை திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

கடன் படுத்தும் பாடு

By நா. கிருஷ்ணமூர்த்தி | Published on : 12th April 2018 01:14 AM | 

'எங்களுடைய பிள்ளை நன்கு படிக்க வேண்டும்... நல்ல வேலை கிடைக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும். சொந்த வீடு, கார் வசதிகளோடு வாழ வேண்டும்' என்பதுதான் பெற்றோர்களின் தற்போதைய கனவாக உள்ளது. நடைமுறையில் இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.
வேறு சிலர், 'சின்ன வேலையோ, பெரிய வேலையோ, முதலில் வீட்டைக் கடனில் வாங்கிவிட வேண்டும். வாடகை மிச்சமாகிவிடும். வாடகைப் பணத்துடன் கொஞ்சம் சேர்த்து வீட்டுக் கடனின் மாதத் தவணையைக் கட்டிவிடலாம். வீட்டுக் கடன் முடிந்தவுடன் வீடு சொந்தமாகிவிடும்' என்று மனக்கணக்கு போடுகின்றனர்.

வேலைக்குச் சேர்ந்தவுடனேயே பிள்ளையின் தலையில் கடனைச் சுமத்திவிட்டால், அவனுக்கு வீண் செலவு செய்வதற்கு முடியாது என்று வாதம் செய்பவர்களும் இருக்கின்றனர். ஆக, நடுத்தரவார்க்கம் வீடு வாங்கிவிடுவதில் வெகு முனைப்பாக உள்ளது.

முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் பணிபுரிவோர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் பணிபுரிந்த பின் ஆண்டொன்றுக்கு இவ்வளவு நபர்களுக்குத்தான் வீட்டுக் கடன் தருவதென அரசு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி வீட்டுக் கடனைத் தரும்.

ஆனால் அப்படியெல்லாம் இப்போது காத்திருக்க வேண்டியதில்லை. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கும் சம்பளச் சீட்டின் நகல், வங்கிக் கணக்கு விவரம், ஆதார் அட்டை, கையெழுத்திட்ட வங்கிக் காசோலைகள் ஆகியவற்றைக் கொண்டு வீட்டுக் கடன் முதல் வாகனம், வீட்டு உபகரணங்கள் வாங்கக் கடன் அளிக்க முன்வருகிறார்கள்.

இந்திய குடிமகனின் தலையில் கடனைச் சுமத்த அயராது உழைக்கிறார்கள். கையில் வண்ண வண்ண விளம்பரத் துண்டுச் சீட்டுகளுடன் அலுவலகங்கலில், பொருட்காட்சிகளில், சாலைகளில், வங்கியின் வாசல்களில் என எங்கெங்கும் அலைகின்றனர். கைபேசியில் அழைத்து, கனிவுடன் பேசி கடன் வேண்டுமா என்கிறார்கள். எப்போது நேரில் வந்து பேசலாம் என தேதியும், நேரமும் கேட்டுத் தொணப்புகின்றனர். தினசரிகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் தந்து ஆட்களை மயக்குகின்றனர். வலையில் சிக்க வைக்கும் உறுதியோடு செயல்படுகின்றனர்.

முன்பெல்லாம் கடன் வாங்குவதற்கு யோசிப்பார்கள். தயங்குவார்கள். அச்சப்படுவார்கள். இப்போது அப்படியில்லை. தொட்டதற்கெல்லாம் கடன். அத்தியாவசியத்திற்கு கடன் வாங்குவதில் தவறில்லை. அடிப்படைச் செலவுகளுக்கே கடன் வாங்கினால் கரையேறுவது எப்படி?
குழந்தைகள் நல்ல ஆங்கிலப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். அநத்க கடனை ஒருவரிடத்தில் அடைப்பது என்பதே சிரமம். அப்படியே கிடைத்துவிட்டாலும் அடுத்த ஆண்டு படிப்பதற்கு அதைவிட அதிகமான தொகை தேவைப்படும். வகுப்பு ஏற ஏற செலவும் கூடும். கல்லூரி படிப்பு வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். குறைந்தது ஐந்தாறு லட்சங்கள் கடன் வாங்க நேரிடும். ஆக மொத்தம் ஒரு பிள்ளை படித்து முடித்து சம்பாதிக்கும் நிலைக்கு வரும்போது அவன் தலையில் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் கடன் சுமையிருக்கும். நினைத்தபடி வேலை அமையாவிட்டாலும், நல்ல ஊதியம் கிடைக்காவிட்டாலும் பெற்றோர்களுக்கு கடன் பற்றிய கவலை ஆரம்பித்துவிடும்.

கடனோடு சாகக் கூடாது என்பதை நமது முன்னோர்கள் நம்பினார்கள். எனவே கடன் வாங்குவதையே தவிர்த்தார்கள். வரவுக்குள் சிக்கனமாக வாழும் வழியைக் கடைப்பிடித்தனர். 

கடன் வாங்குவது எளிது. அதுவே சிலருக்கு எமனாகிவிடுகிறது. ஒருவன் அளவிற்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டால் அவன் கடன் கொடுத்தவனிடம் அடிமையாகிவிடுகிறான். வாயில்லாப் பூச்சியாகிவிடுகிறான். தைரியசாலியாக இருந்தவன் கோழையாகிவிடுகிறான். பேச வேண்டியதைக் கூட பேசும் திராணியற்றுப் போகிறான். கடனை எப்படியாவது அடைக்க வேண்டும்; எப்படி அடைப்பது என்கிற கவலைகளோடு வாழ வேண்டி வரும். தினமும் அவர்களுடைய எண்ணம் அதிலேயே சுழலும். எதிர்காலம் எனபது அச்சத்தைத் தரும். மன உளைச்சல் பல வித நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கும். ஆரோக்கியமாக இருந்தவர்கள் நோயாளியாகிவிடுவார்கள். கடன் வாங்குவது என்பது நடுத்தர வர்க்கத்திற்கு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதை நினைக்கும்போது வருத்தம் மேலிடுகிறது.
கொஞ்சம் பின்னோக்கி நினைவைத் திருப்பிப் பார்த்தால் புரியும். சுமார் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கடன் வாங்குவதை எல்லோரும் இவ்வளவு சகஜமாக எடுத்துக் கொண்டதில்லை. இப்போது தயக்கமில்லாமல் கடன் வாங்குகிறார்கள். நம் சமூகத்தில் கடன் இவ்வளவு மலிந்துவிட்டதற்குக் காரணம் நவீன பொருளாதாரக் கொள்கையின் ஓர் அம்சம் என்று சில நிதி நிபுணர்கள் சொல்ல முற்படக்கூடும். ஆனால் காரணம் அது மட்டுமல்ல. இந்த மனோபாவத்துக்கு நம்மில் பலர் தள்ளப்பட்டதற்கு முக்கியக் காரணம், நம்மிடம் சரியான வழிகாட்டுதல் இல்லை. ஆசைகளும் பேராசைகளும், போலியான கெளரவங்களும், படாடோபங்களின் மீது அதீதப் பற்றும், பணத்தின் அருமை தெரியாததாலும் நிலை தடுமாறி நிற்கிறார்கள்.
வாழ்க்கையில் கடனில்லாது வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சிகரமான விஷயம்! அதைத் தொலைத்துவிட்டு வாழ்வோர் ஏராளம். இளைய தலைமுறையினருக்கு சகஜமாக கடன் வாங்கக் கற்றுக் கொடுத்ததுதான் நம்முடைய சாதனையாக உள்ளது.

சிக்கனத்திற்கும் சேமிப்பிற்கும் என்றும் முன்னுரிமை தந்தது நம் பாரத தேசம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டபோது, இந்தியா சிறு அதிர்வைக்கூட சந்திக்காது பாதுகாத்தது நம்முடைய முன்னோர்களின் சேமிப்புதான் - சேமிப்புப் பழக்கந்தான்.
நம் பிள்ளைகளுக்குப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் பயன்களைப் பாடமாகச் சொல்லித் தர வேண்டும். நாமும் நம் பிள்ளகளுக்கு வாழ்க்கையில் அகலக் கால் வைக்கக் கூடாது என்பதையும், வருவாய்க்குள் செலவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், சேமிப்பே என்றும் பாதுகாப்பானது என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

போலி சான்றிதழ்: 20 மருத்துவர்கள் பணியிடை நீக்கம்!


மாகராஷ்டிராவில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 20 மருத்துவர்களை மாநில மருத்துவ கவுன்சில் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாநில மருத்துவ கவுன்சிலில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ முதுகலை படிப்பு முடித்த மருத்துவர்கள், மாநிலத்தில் மருத்துவராகப் பணிபுரிவதற்கு மாநில மருத்துவ கவுன்சிலிடம் இருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்கள் கூடுதல் தகுதிக்காக மாநில மருத்துவ கவுன்சிலில் போலி சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளதாக புகார்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புகார்களையடுத்து, மாநில மருத்துவ கவுன்சில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களை ஆய்வு செய்தது.

இந்த விசாரணையில், "மருத்துவ கவுன்சிலில், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக கண்டறியப்பட்ட மருத்துவர்கள் 20 பேர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த மருத்துவர்களும் இதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இனி மருத்துவர்களாகப் பணிபுரிய முடியாது. வேறு சில காரணங்களுக்காக 4 மருத்துவர்களின் உரிமத்தையும் மாநில மருத்துவ கவுன்சில் திரும்ப பெற்றுள்ளது" என்று மாநில மருத்துவ கவுன்சில் தலைவர் மருத்துவர் சிவகுமார் உட்டுரே தெரிவித்துள்ளார்.
நடுவுல கொஞ்சம் உண்மையைக் காணோம்!

Published : 06 Apr 2018 12:11 IST

ராஜலட்சுமி




சமூக ஊடங்களில் இன்று புரளிக்குப் பஞ்சமே இல்லை. அவை உண்மையா என்றுகூட யோசிக்காமல், உடனே அவற்றை மற்றவர்களுக்குப் பகிர் கிறோம். புரளியை உண்மை என நம்பி ஷேர் செய்து பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளவும் செய்கின்றனர். தொழில்நுட்பம் வளர்ச்சி அடையஅடைய புரளிகளும் சமூக ஊடகங்களில் அதிகளவில் சுற்றிவருகின்றன. இதுபோன்ற புரளிகளை ஆராய்ந்து அது உண்மையா, பொய்யா எனச் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது ‘யூ டர்ன்’ (You Turn) என்ற ஃபேஸ்புக் பக்கம்.

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடரும் இந்தப் பக்கத்தை இளைஞர்கள் இருவர் சேர்ந்து நிர்வகித்து வருகிறார்கள். சமூக ஊடகங்களில் புரளிகளை அம்பலப்படுத்தும் இந்த ஐடியா எப்படி உதித்தது என்று ‘யூ டர்ன்’ பக்கத்தை நிர்வகிப்பவர்களில் ஒருவரான ஐயன் கார்த்திகேயனிடம் கேட்டோம்.


“நன்கு படித்தவர்கள்கூடப் புரளிகளை ஆராயாமல் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னுடைய நண்பர் விக்னேஷ் காளிதாசனுடன் சேர்ந்து சமூக ஊடகங்களில் உலவும் புரளிகளை அம்பலப்படுத்த விரும்பினேன்.

அதன் ஒரு பகுதியாகத்தான் யூ டர்ன் பக்கத்தைத் தொடங்கினோம். ஃபேஸ்புக்கில் மீம்ஸ் மூலம் பெரும்பாலும் புரளிகள் வலம் வருவதால், மீம்களைக் கொண்டு உண்மையை ஆதாரத்துடன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுகிறோம்.

பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் ட்ரெண்டிங்கில் உள்ள விஷயங்களைத் திசை திருப்பவும், அதில் தொடர்புடையவர்களைப் பற்றிய தவறான செய்திகளை மீம்ஸ் மூலம் பரப்பவும், பிரச்சினை பற்றிய தவறான கண்ணோட்டத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கவுமே மீம்களை உலவவிட்டு நம்ப வைக்கின்றனர்” என்கிறார் ஐயன் கார்த்திகேயன்.  

பெரும்பாலும் அரசியல் கட்சிகளுடைய தொழில்நுட்ப அணியே அவதூறான செய்திகளைப் பரப்புகின்றன.  இதேபோல் வியாபார ரீதியாகத் தவறான செய்திகளை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்புவர்களும் இருக்கின்றனர்.

ஃபேஸ்புக் மட்டுல்லாமல் ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களிலும் தவறான செய்திகளை ஆராய்ந்து ஆதாரத்துடன் இவர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதால் உங்களுக்கு என்ன நன்மை என்ற கேள்வியை முன்வைத்தோம்.


கார்த்திகேயன்

“சமூகம் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்கிறது. அதில், எது பொய் எது உண்மை எனத் தெரியாமல் பயணம் செய்கிறது. இப்படியே சென்றால், எதிர்காலத்தில் ஒரு அறிவுள்ள சமூகம் அமையாது.

சட்டம், மருத்துவம் படித்தவர்கள்கூடத் தவறான செய்திகளை நம்புகின்றனர். ஆக, உண்மைச் செய்தியை எடுத்துரைத்து, புரளிகளை அம்பலப்படுத்துவதே எங்களின் குறிக்கோள்.

தவறான செய்திகளை ‘யூ டர்ன்’ மூலம் தடுப்பது திருப்தியைத் தருகிறது. பலருக்கும் எதிர்நிலையை நாங்கள் கொண்டிருப்பதால், எங்கள் பக்கத்தை முடக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.

இங்கு உண்மைக்கு அத்தனை எதிர்ப்பு” என்கிறார் ஐயன் கார்த்திகேயன்.

மக்களிடம் உண்மைகளைக் கொண்டுசேர்க்கும் வகையில் http://youturn.in/ என்ற இணையதளத்தையும் இவர்கள் தொடங்கியுள்ளனர்.
றெக்க கட்டி பறக்குது!

Published : 06 Apr 2018 12:18 IST

மிது கார்த்தி



என்னதான் விதவிதமாக பைக்குகளும் கார்களும் விற்பனைக்கு வந்தாலும், எப்போதுமே சைக்கிளுக்கான கெத்து தனிதான். நடுவில் சைக்கிள் மீதிருந்த மோகம் குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதன் மீது ஈர்ப்பு அதிகரித்திருக்கிறது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சைக்கிள் மீதான மோகம் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. எப்போதுமே சைக்கிள் ‘இளைஞர்களின் அடையாள’மாக இருந்துவருகிறது. சைக்கிள் மீது எப்போதும் இளைஞர்களுக்கு ஈர்ப்பு இருக்க என்ன காரணம்?

முதல் வாகனம்

பெரியவர்களாகி கார், பைக் என எதை ஓட்டினாலும், வாகனம் ஓட்டுவதற்குப் பிள்ளையார்சுழி போடுவது சைக்கிள்தான். முதன்முதலில் கீழே விழுந்து, முட்டியில் சிராய்ப்பு வாங்கி, பேலன்ஸ் செய்து ஓட்டும் முதல் வாகனமும் சைக்கிள்தான். சைக்கிள் சீட்டைப் பிடித்துக்கொண்டு ஓட்டக் கற்றுக்கொடுக்கும் அப்பாவின் கைகள் விடுபடும்போது சுதந்திரமாக சைக்கிள் ஓட்டும் இன்பம் ஒரு தனி சுகம். கரையைத் தொட ஓடி வரும் கடல் அலையைப் போல மனதில் சுதந்திரக் காற்று வீசும். மனதில் தைரியத்தையும் ஏற்படுத்தும்.

பெற்றோர் துணையில்லாமல் பள்ளிக்குச் செல்லவும் வெளியே நண்பர்களுடன் ஊர்சுற்றவும் சைக்கிளும் உற்றத் தோழனாக இருந்தது. பதின் பருவத்தில் ஒரு நண்பனைப் போல மனதுக்கு நெருக்கமான வாகனமாக சைக்கிள் எல்லோருக்குமே இருந்திருக்கும். ஆனால், காலப்போக்கில் சைக்கிள் மீதான ஈர்ப்பு சற்றுக் குறைந்தது. சைக்கிளை காயலான் கடைப் பொருளைப் போல பார்க்கும் நிலையும் வந்தது. ஆனால், அந்தப் போக்கு இன்று மாறிவருகிறது. சைக்கிளை ஒதுக்கி வைத்தவர்கள், அதைத் தேடி வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வீட்டில் பைக், கார் இருந்தாலும் சைக்கிளையும் வாங்கி வைக்கும் போக்குக் கூடியிருக்கிறது. அந்த வகையில்தான் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் சைக்கிள் பயன்பாடு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.



நலம் வாழ

சைக்கிள் ஓட்டிகளின் ரசனைக்கு ஏற்ப இன்று சைக்கிள் மாடல்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான சைக்கிள்கள் சந்தையில் வந்தவண்ணம் உள்ளன. பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் ஓட்டுவதற்கு எளிமையாக இருக்கும்படி அவை வருகின்றன. இளைஞர்களைத் தாண்டி நடுத்தர வயதினருக்கு சைக்கிள் மீது திடீரென ஈர்ப்பு கூடுவதற்கு ஆரோக்கியம் ஒரு காரணம். இந்தக் காலத்தில் உடற்பயிற்சியே செய்யாமல், உடல் நலனைப் பேண ஃபிட்னெஸ் வகுப்புகளுக்கும் ஜிம்முக்கும் இளைஞர்கள் நடையாய் நடக்கிறார்கள். ஆனால், ‘சைக்கிளிங்’ செய்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும் என்பதால், சைக்கிள் மீதும் அவர்களின் பார்வை திரும்பியிருக்கிறது.

“சைக்கிளில் கல்லூரிக்குச் சென்றால், ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தனியாக ஃபிட்னெஸ் வகுப்புகளுக்கோ, ஜிம்முக்கோ போக வேண்டிய அவசியம் இருக்காது. நான் பைக்தான் ஓட்டிவந்தேன். ஆனால், என் சகோதரர் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்து, எனக்கும் சைக்கிள் மீது ஆசை வந்தது. தினமும் சைக்கிள் ஓட்டுவது, நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்துவிடுகிறது. இப்போது சைக்கிளில்தான் கல்லூரிக்குப் போகிறேன்” என்கிறார் கோவையைச் சேர்ந்த தினேஷ்.



டிராபிக் பிரச்சினை இல்லை

உடல்நலம் சார்ந்து மட்டுமல்ல, தனிப்பட்ட விருப்பம், ஆரோக்கியம், போக்குவரத்து நெரிசல் என எல்லாவற்றையும் தாண்டி, சூழலை மாசுபடுத்தக் கூடாது என்று நினைக்கும் இளைஞர்களின் தேர்வாகவும் சைக்கிள் மாறிவருகிறது. கல்லூரிக்கோ அலுவலகத்துக்கோ பைக்கில் சென்றுவந்த பலரும், இன்று சைக்கிளில் சென்றுவரும் போக்கு கூடியிருக்கிறது.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்பருமனைக் குறைக்க சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். தினமும் காலை சூளைமேட்டில் உள்ள வீட்டிலிருந்து மெரினாவரை சைக்கிளில் சென்று வர ஆரம்பித்தேன். பிறகுதான் அலுவலகத்துக்கும் சைக்கிளில் சென்று வரலாமே என்று தோன்றியது. இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்கும் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கும் சைக்கிளில் செல்ல ஆரம்பித்தேன். டிராபிக்கில் வண்டிகள் அணிவகுத்து நின்றால்கூடச் சிறிய சந்துபொந்தில் புகுந்து நான் சென்றுவிடுவேன். இதனால் எனக்கு நேரம் மிச்சமாகிறது. சூழலைக் காக்க என்னால் ஆன ஒரு சிறு உதவி” என்கிறார் சென்னையைச் சேர்ந்த தங்கபிரகாஷ்.



தனி டிராக்

சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் கணிசமானோர் சைக்கிளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதற்குக் காரணம், அங்கே சைக்கிள் ஓட்டுபவர்களுக்கெனத் தனித் தடம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் அந்த நிலை இன்னும் வரவில்லை. சில இடங்களில் அதற்கு முயன்று பார்த்தாலும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை சைக்கிளுக்கான தனித் தடம் என்பது என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது. இந்த நிலை மாறும்போது இந்தியாவில் சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...