Saturday, May 5, 2018

முதல்வரின் ரூ 1,000 உதவித்தொகை; தனியார் பள்ளி மாணவர்கள் விரக்தி

Added : மே 04, 2018 20:14 |



  திருநெல்வேலி : முதல்வர் அறிவித்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடையாது என்ற அறிவிப்பால், மாணவ, மாணவிகள் மனமுடைந்து திரும்பிச்சென்றனர்.

மருத்துவ நுழைவு நீட் தேர்வு வரும் 6ம் தேதி நடக்கிறது. நெல்லை உள்பட தென்மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலருக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அங்கு செல்வதில் சிரமம் குறித்து அறிந்த நெல்லை கலெக்டர், அந்த மாணவர்களுக்காக தனியாக அரசு பஸ் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கேரளாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வாங்கிச்செல்லலாம் என அறிவிப்பு செய்தார். இன்று மாலையில் தகவல் அறிந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் வந்தனர்.

ஆனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அத்தகைய உதவித்தொகை கிடையாது எனவும், அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை ஆயிரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த மாணவ, மாணவிகள் மனமுடைந்து கிளம்பிச்சென்றனர்.
நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்பவர்களுக்கு பயண கட்டணத்துடன் ரூ.1,000 தமிழக அரசு உதவி



‘நீட்’ தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பயண கட்டணத்துடன் ரூ.1,000 வழங்கப்படும். உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக சமூக வலைத் தளங்களில் பலர் அறிவித்து உள்ளனர்.

மே 05, 2018, 05:45 AM

சென்னை,

இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர் களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) நடத்தும் இந்த தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டிலும் ஏராளமான பேர் எழுதுகிறார்கள். இதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, நாமக்கல், சேலம், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக இதுபோன்ற நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, விண்ணப்பத்தில் அவர்கள் குறிப்பிடும் தேர்வு மையங்களே ஒதுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு கேரளா, மராட்டியம், ஆந்திரா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதை அறிந்ததும் அந்த மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ததோடு, தமிழக மாணவர்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள வெளிமாநில மையங்களில்தான் நீட் தேர்வை எழுத வேண்டும் என்றும், தேர்வு மையங்களை மாற்ற முடியாது என்றும் தீர்ப்பு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தேர்வு தேதி நெருங்கி விட்டதால் வெளி மாநிலங்களுக்கு எப்படி செல்வது? எங்கு தங்குவது? பணத்தேவையை எப்படி சமாளிப்பது? என்ற தவிப்புக்கு ஆளானார்கள்.

இதைத்தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு முன்வந்தது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

எதிர்வரும் நீட் தேர்வுக்காக ஒரு சில தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிரமங்களுக்கு உள்ளாவதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. இதன் அடிப்படையில், இந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக கீழ்க்கண்டவாறு நான் ஆணையிட்டு உள்ளேன்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து வெளி மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப்படியாக இரண்டாம் வகுப்பு ரெயில் கட்டணமும், (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு ரெயில் கட்டணத்திற்கு மிகாமலும்), இதர செலவினங்களுக்காக மாணவர் ஒருவருக்கு தலா 1,000 ரூபாய் வீதமும் வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.

இதை அவர்கள் கல்வி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து முன்பணமாகவே பெற்றுக்கொள்ளலாம் அல்லது தேர்வு எழுதி திரும்பிய பிறகு பயணம் மேற்கொண்டதற்கான உரிய ரசீதுகளை கொடுத்து மேற்படி தொகையை பெற்றுக்கொள்ளலாம். முன்பணம் பெற்றவர்கள் தேர்வு எழுதி திரும்பிய பின், உரிய ரசீதுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

நீட் போட்டித் தேர்வு நுழைவுச் சீட்டின் நகல் மற்றும் படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதில் ஏதேனும் சிரமம் ஏற்படின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல்- ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளை பெறலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

இதேபோல் சமூக ஆர்வலர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர் கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவ முன்வந்து இருக்கிறார்கள். சேவை மனப்பான்மை கொண்ட ஏராளமான பேர் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து உள்ளனர்.

நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் 20 மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் தானும், தனது நண்பரும் தயாரிப்பாளருமான டில்லிபாபுவும் ஏற்றுக்கொள்வதாக நடிகர் அருள்நிதி அறிவித்து உள்ளார். இதேபோல் நடிகர் பிரசன்னா 2 மாணவர்கள் வெளி மாநிலத்துக்கு விமானத்தில் சென்று வர தேவையான செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக கூறி இருக்கிறார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ.யுமான தமிமுன் அன்சாரி, வெளி மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தனது தொகுதியைச் சேர்ந்த 4 ஏழை மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார். கூடுதல் செலவு ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களிடம் உறுதி அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவர்கள் நேற்று பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்றனர். சிலர் கார்களில் புறப்பட்டு சென்றனர். இதேபோல் தஞ்சையில் இருந்து சுமார் 50 மாணவ- மாணவிகள் பஸ், ரெயில், கார், வேன்கள் மூலம் எர்ணாகுளம் புறப்பட்டு சென்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத தங்கள் ஊருக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு அங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் தேவையான உதவிகளை செய்ய முன்வந்து இருக்கின்றன. அந்த நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் சிலரும், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவ தயாராக இருப்பதாக கூறி உள்ளனர்.

நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக் கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.
இதேபோல், தமிழக மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக, கோட்டயம் இந்து நாடார் உறவின்முறை செயலாளர் வெ.கலைச்செல்வன் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து இருக்கிறார்.


Friday, May 4, 2018

நலம் தரும் நான்கெழுத்து 19: சேகரிப்பா? குப்பையா?

நலம் தரும் நான்கெழுத்து 19: சேகரிப்பா? குப்பையா?

Published : 27 Jan 2018 10:14 IST
 
டாக்டர் ஜி. ராமானுஜம்

“ஒவ்வொரு நாளையும் உன் வாழ்நாளின் கடைசி நாள்போல் அனுபவித்து வாழ். என்றாவது ஒருநாள் அது உண்மையாகக் கூடும்”

– ஸ்டீவ் ஜாப்ஸ்

ஒரு துறவியிடம் ‘மனிதர்களின் வாழ்வில் நீங்கள் பெரிதும் அதிசயிக்கும் பண்பு எது?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அந்தத் துறவி அளித்த பதில் “இவ்வுலகில் பிறக்கும் எல்லா உயிரினமும் ஒரு நாள் கட்டாயம் இறக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை என்றபோதும் மனிதர்கள் பெரும்பாலும் என்னவோ என்றென்றைக்கும் சாகாமல் வாழ்ந்துகொண்டே இருப்பவர்கள்போல் வாழ்வதுதான் நான் மிகவும் அதிசயிக்கும் பண்பு” என்றார்.

‘என்றென்றைக்கும்’ வாழப்போவதாக நினைத்துக்கொள்ளும் இந்தப் பண்பால்தான் சேர்த்து வைக்கும் பழக்கம் தொடங்குகிறது. உயிரினங்களில் சிலவற்றில் எதிர்காலத்துக்கான உணவுத் தேவைக்காகச் சேர்த்து வைக்கும் பண்பு உள்ளது. ஆனால், சிந்தனைத்திறன் பெருகத் தொடங்கிய மனித இனம்தான் முக்காலத்தையும் ஆராயும் பெரும் திறன் பெற்ற இனம். அதுவே கடந்தகால அனுபவங்களை ஆராய்ந்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இன்னல்களுக்காக நிகழ்காலத்தில் திட்டமிட்டு சேர்ப்பது என்ற பண்பைத் திறமையாகக் கைக்கொள்கிறது. பரிணாம இயல், உயிரியல் ரீதியில் இந்த சேமிக்கும் பண்பு அத்தியாவசமான ஒன்றாக ஆகிறது.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” என வருமுன் காக்காமல் இருப்பவன் வாழ்க்கை தீ மூண்ட வைக்கோல்போர் போல் அழியும் என்கிறது குறள்.

அளவுக்கு மீறினால்…

பல்லாயிரம் ஆண்டுகளாகப் பஞ்சங்களுக்குப் பழகிய நம்முடைய உடல்கூட எதிர்காலத்துக்குத் தேவைப்படும் என நினைத்தே நாம் உண்ணும் உணவின் மிச்ச கலோரிகளைக் கொழுப்பாகச் சேர்த்து வைத்துக்கொள்கிறது. ஆனால், தேவைக்கு அதிகமாகும்போது கொழுப்பே எமனாகவும் ஆகிறதல்லவா?

எதிர்காலத்துக்குத் தேவைப்படுமே என்ற அச்சம் அளவை மீறும்போது நிகழ்காலத்தைத் தொலைத்துவிடுகிறோம். விளைவு தம்மிடம் உள்ளது போதாதோ என நினைத்து இருப்பதைச் செலவழிக்க அஞ்சத் தொடங்குகிறோம். அது மட்டுமல்ல பொருட்களை மேலும் மேலும் வாங்கிக் குவித்துவிட்டு, அதை அனுபவிக்காமல் இன்னும் இன்னும் என ஓடும் மனப்பான்மையும் இது போன்றதே.

எப்படி அளவுக்கு மீறிய நுகர்வு எனும் பெரும்வெறியில் செலவழிக்கும் மனப்பான்மை பாதகமாகிறதோ, அதுபோன்றே அளவுக்கு மிஞ்சிய சிக்கனமும் கஞ்சத்தனமாகிப் பிரச்சினைகளை உண்டாக்குகிறது. சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்டால் நகைச்சுவையாகச் சொல்வார்கள் “மழை பெய்யும்போது அதிலே குளித்துத் தண்ணீரை மிச்சம் பிடித்தால் சிக்கனம். கோடைக் காலத்திலும் மழை வரட்டும் எனக் காத்திருந்து குளிக்காமல் கப்படித்தால் அது கஞ்சத்தனம்” என.

இன்னும் சிலரைக் கஞ்சன் என அழைத்தால் கடும் கோபம் கொள்வார்கள். தங்களைத் தவறாகச் சொல்லிவிட்டதற்காக அல்ல. கருமி என்ற மூன்றெழுத்துச் சொல் இருக்கையில் கஞ்சன் என நான்கெழுத்துச் சொல்லைப் பயன்படுத்தி ஒரு எழுத்தை வீணாக்கியதற்காக.

 கண் கெட்ட பின்

நம்மில் பலரும் மகிழ்ச்சியாக இருப்பதற்குச் சில வரையறைகள் வைக்கிறோம். முதுநிலைப் படிப்பு , ஆறு இலக்கச் சம்பளம், எட்டு இலக்கச் சேமிப்பு, அயல்நாட்டுக் குடியுரிமை எனப் பலவாகவும் இது இருக்கலாம். இவையெல்லாம் அடைந்தபிறகுதான் நான் வாழ்க்கையில் சிரிப்பேன் என நமக்கு நாமே நிபந்தனைகள் விதித்துக்கொண்டு, நிர்ப்பந்தப்படுத்திக்கொள்கிறோம். உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் எதுவும் பெரிதாகத் தேவையில்லை.

ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அதி பயங்கரக் கஞ்சன் .. மன்னிக்கவும் கருமி ஒருவர் வாழ்ந்து வந்தாராம். அவர் ஒருமுறை மொட்டை மாடிக்குச் சென்றிருந்தபோது தவறிக் கீழே விழுந்து விட்டாராம். விழும்போது அவரது வீட்டு பால்கனியைத் தாண்டும்போது அங்கு நின்றிருந்த மனைவியைப் பார்த்து “எனக்குக் காலை உணவு தேவைப்படாது. வீணாக்காதே” எனக் கத்திக்கொண்டே கீழே விழுந்து இறந்தாராம்.

இதுபோல் இறுதி மூச்சுவரையும் கஞ்சர்களாக இருப்பவர்கள் இருந்தாலும் மரணப் படுக்கையின்போது யாருமே இன்னும் கொஞ்சம் பணமோ பொருளோ ஈட்டியிருக்கலாம் என வருந்துவதில்லை. இன்னும் நன்றாக வாழ்க்கையை அனுபவித்திருக்கலாம். இன்னும் கூடுதலாகக் குடும்பத்தோடு நேரம் ஒதுக்கி இருந்திருக்கலாம் என்றே வருத்தப்படுவார்கள்.

குப்பை சேகரிப்பு நோய்

சிலர் தேவையற்ற முக்கியமற்ற பொருட்களைக் கூடத் தூர எறியாமல் சேர்த்து வைப்பார்கள். இவ்வாறு அளவுக்கு மீறிச் சேர்த்து வைப்பதும் ஒரு மனநல பாதிப்பாக அறியப்படுகிறது. பழைய செய்தித்தாள்கள், முக்கியமற்ற தபால்கள், முடிந்துபோன நாட்காட்டிகள், எப்போதோ ஏதோ பொருட்கள் வாங்கிய ரசீதுகள் என எதையுமே வெளியே எறியாமல் குவிண்டால் கணக்கில் குவித்து வைத்திருப்பார்கள். இதை ஆங்கிலத்தில் ‘ஹோர்டிங் டிஸ்ஆர்டர்’ என அழைக்கிறார்கள். உயிரினங்கள் எதிர்காலத்துக்காகச் சேர்த்து வைக்கும் பண்பு அதீதமாவதால் இந்நோய் வருவதாகக் கூறப்படுகிறது. மனித மூளையில் சில பகுதிகளில் ஏற்படும் பாதிப்பினாலும் சிலர் இவ்வாறு குப்பை குவிப்புப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

‘தேவைக்கு அதிகமாகச் சேர்ப்பவன் திருடன்’ என்று சொல்வார்கள். அவ்வாறு பிறருக்குக் கிடைக்காமல் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் வெறும் குப்பையே. அதீத நுகர்வுக்கும் அதீத சேமிப்புக்கும் இடையில் உள்ள சமநிலையே நமக்கெல்லாம் நலம்தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

Panel formed to probe sexual harassment complaints against doctors in Chennai hospital

Pushpa Narayan | TNN | Updated: May 1, 2018, 21:00 IST


100


CHENNAI: A three-member committee headed by Rajiv Gandhi Government General Hospital dean Dr R Jayanthi has been appointed to inquire into sexual harassment complaints against a few doctors in Kasturba General Hospital at Triplicane here.

The inquiry has been ordered based on anonymous written complaints received by the Directorate of Medical Education and CM’s cell, officials said.

In February, the Directorate of Medical Education received two anonymous letters about harassment in the Kasturba General Hospital. The letter alleged that a senior professor in the department of obstetrics and gynaecology had ordered her postgraduate students to dish out sexual favours to a male junior faculty member in the department of anaesthetics.

“Although it was anonymous, we did not want to ignore the letter. We conducted two independent inquiries. Both inquiries were discrete and were done face to face with every student. The inquiry officers spoke to all women and concluded that the complaints were baseless,” said director of medical education A Edwin Joe.

However, when the CM’s cell received a similar letter, the directorate has constituted a committee to conduct a formal inquiry. “We have decided to make another round of inquiry just to ensure we haven’t missed anything in the first two,” he said.
  Free Press Journal

Indore: Chief Medical and Health Officer probes complaint made against him 

— By Staff Reporter | May 03, 2018 09:06 am

Indore: Though allegations of corruption against medical education and health department have become common, something worse has surfaced. A complaint was lodged with the collector during public hearing against chief medical and health officer (CMHO), Indore, in January this year. The collectorate forwarded this complaint to CMHO to investigate into the allegation made against the latter.

As per case, a complaint was filed by Vikas Singh against the license and registration renewal of KND Hospital, which he started with Dr Nilesh Dehariya in Simrol. He told officials at public hearing that he started KND Hospital in Simrol in 2014 in partnership with Dr Nilesh Dehariya for which he provided land and infrastructure. The hospital was registered in name of Dr Dehariya.

“After a year, I learnt about financial irregularities after which I requested the CMHO not to renew the license of hospital as he had withdrawn the partnership and the management of hospital was under dispute,” Vikas Singh told mediapersons. He alleged that even after lodging compliant, CMHO Dr HN Nayak renewed the hospital’s registration in name of Dr Dehariya’s wife Rashmi Dehariya after which he approached the collector.

“The complaint against CMHO and the hospital was forwarded to CMHO for investigation. Now, the matter is pending with him and the hospital is functioning despite the disputes,” Singh said. Vikas moved another complaint at public hearing in similar connection recently.

Meanwhile, CMHO Dr Nayak said hospital’s registration was suspended in February after getting the complaint. Dr Dehariya said that the registration was renewed in April and there is no dispute over the partnership of the hospital.
After son’s suicide, man vows to give up liquor 

Special Correspondent 

 
TIRUNELVELI, May 04, 2018 00:00 IST

Madasamy performs last rites of Dinesh


Will his son’s suicide reform Madasamy? Dinesh Nallasivan killed himself by hanging from a rail overbridge on Wednesday, and in his suicide note, had cited his father Madasamy’s alcoholism as the reason for his tragic decision. The police also recovered a hall ticket for National Eligibility-cum-Entrance Test (NEET) from Dinesh’s body.

Dinesh, his younger brother and sister, had almost been abandoned by his alcoholic father. Now, the repentant father is said to have “promised” to give up drinking.

Though Dinesh had left instructions asking his father not to perform the last rites for him, Mr. Madasamy defied it. “Since my father has promised to give up liquor, he performed the last rites and tonsured his head. He made this promise to us,” informed Balachandran, Dinesh’s younger brother. Mr. Madasamy did not answer calls.

Meanwhile, a group of Congress functionaries submitted a petition in the Collector’s office here on Thursday seeking compensation to the kin of Dinesh.

In the petition, the Congress functionaries said with the death of Dinesh, the children had lost their only support.
SRM counselling on May 7 

Special Correspondent 

 
CHENNAI, May 04, 2018 00:00 IST

Counselling for admission to group institutions to begin on May 7

There were 10 toppers from seven States in the SRM group of institutions’ joint entrance examinations this year. The counselling for the courses offered by SRM group of institutions will begin on May 7.

The results of the deemed university’s joint entrance examination for admission to B. Tech degree programmes were announced on Tuesday. B. Tech seats are offered on the campuses at Kattankulathur, Sonepat in Haryana and Amaravati in Andhra Pradesh.

The counselling schedule is available on the university’s website, according to a release. Scholarships worth around Rs. 30 crore are available and the Founder’s scholarships will be awarded based on the SRMJEEE 2018 merit list on the first day of counselling. Of the 1.72 lakh candidates who had registered for the entrance exam, 76,000 have been called for counselling. Among the top 10,000 ranks, 66% students were from CBSE. Students would benefit from interdisciplinary experiential active learning, said SRM president P. Sathyanarayana.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...