Saturday, May 5, 2018

முதல்வரின் ரூ 1,000 உதவித்தொகை; தனியார் பள்ளி மாணவர்கள் விரக்தி

Added : மே 04, 2018 20:14 |



  திருநெல்வேலி : முதல்வர் அறிவித்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடையாது என்ற அறிவிப்பால், மாணவ, மாணவிகள் மனமுடைந்து திரும்பிச்சென்றனர்.

மருத்துவ நுழைவு நீட் தேர்வு வரும் 6ம் தேதி நடக்கிறது. நெல்லை உள்பட தென்மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலருக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அங்கு செல்வதில் சிரமம் குறித்து அறிந்த நெல்லை கலெக்டர், அந்த மாணவர்களுக்காக தனியாக அரசு பஸ் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கேரளாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வாங்கிச்செல்லலாம் என அறிவிப்பு செய்தார். இன்று மாலையில் தகவல் அறிந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் வந்தனர்.

ஆனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அத்தகைய உதவித்தொகை கிடையாது எனவும், அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை ஆயிரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த மாணவ, மாணவிகள் மனமுடைந்து கிளம்பிச்சென்றனர்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...