Wednesday, May 9, 2018

ISC, ICSE results at 3pm on Monday

Mumbai:

The Council for the Indian School Certificate Examinations (CISCE) will announce ISC and ICSE exam results at 3pm on Monday. More than 81,000 candidates took the Class 12 boards, and around 1.84 lakh took the Class 10 boards this year.

The criteria for passing ICSE will be 33% instead of 35% and ISC will be 35% instead of 40% this year. Last year's results were announced on May 29.A council release said results will be available to students at www.cisce.org or www.results.cisce.org.

Schools can access results by logging in to the council’s careers’ portal using the principal’s ID and password.ICSE boards were from February 26 to April 12 and ISC exams from February 7 to April 4. TNN
4% dip, yet Indians cornered 63% of all H-1B visas last year

Lubna.Kably@timesgroup.com 09.05.2018

The number of H-1B visas for ‘initial employment’ issued to Indians dipped by 4% in the 12-month period ending September 30, 2017. In all, 67,815 visas were approved by the US authorities for Indian aspirants as compared to 70,737 in the 2016 fiscal.

According to immigration experts, the 4% drop indicates two ground realities: “extreme vetting” and a higher rejection rate during processing, reflecting the protectionist policies under President Trump; and higher local hiring by large Indian IT players such as TCS, Infosys and Wipro.

Despite the drop, Indians were the largest group of H-1B beneficiaries. They bagged 63% of the total 1.08 lakh visas issued for initial employment in the period. In fiscal 2016, Indian beneficiaries constituted 62% of the 1.14 lakh visas granted. In aggregate, 2.76 lakh beneficiaries of the total 3.65 lakh H-1B applications in 2017 (or 75.6%) were born in India. The data is seen in the US Citizenship and Immigration Services’ (USCIS) recent report, Characteristics of H-1B Specialty Occupation Workers.

“The number of beneficiaries from India approved for initial employment decreased by 4.1% in fiscal 2017, while those approved for continuing employment increased by 12.5% (from 1.85 lakh to 2.08 lakh),” it added. Applications for initial employment are filed for first-time employment in the US under the H-1B route, a popular work visa especially for India’s technology sector. 




‘Drop in new H-1B beneficiaries may be sharper from now on’

Post-September 2017, procedural changes such as greater strictures for those H-1B aspirants who will be working at third party client sites have been issued. The US also plans to tighten the H-1B policy further by changing the definition of “specialisation occupation”, which will narrow job opportunities for Indian aspirants. It also plans to hike the minimum wage rate for H-1B visa holders from $60,000 per year to $90,000 or more, making it more expensive to hire expats. Fiscal 2017 saw a median salary of $85,000.

“This downward trend in the number of visas for new beneficiaries is likely to continue and the drop in numbers may be sharper in fiscal 2018 and beyond,” said an inhouse immigration expert of a technology company.

“I expect a 5-10 times increase in denials. There has also been substantial redistribution in the pattern of filings. American companies are filing a lot more H-1B visas this year in comparison with filing from Indian companies,” pointed out Rajiv S Khanna, managing attorney at Immigration.com.

“The popular sentiment keeps pushing the H-1B visa program down. I am seeing a lot of movement within my clientele towards setting up operations in Canada and professionals moving to Canada. This brain drain from US may not be obvious right away, but will definitely affect its lead in science and technology,” Khanna added.

Annually, only 85,000 visas are issued for initial employment by the US authorities (which includes the US Master’s cap of 20,000). However, applications for an H-1B filed by a sponsoring employer which is a higher education institution or non-profit affiliated with such an institution, or a nonprofit research organisation or government research organisation are exempt from the cap. Applications to extend an H-1B holder’s period of stay (the visa is initially for three years) or to change the current employer also do not count against the annual cap. Overall, the US approved 3.65 lakh H-1B visa applications, of which 1.08 lakh or 29.5% were for initial employment. Apart from being the largest constituents for initial employment, in aggregate, 2.76 lakh beneficiaries of the total 3.65 lakh applicants (or 75.6%) were born in India. More than 80% visas for continued employment of Indian applicants were approved.

The second most prevalent country of birth of H-1B beneficiaries was China, representing 9.4% of all beneficiaries, 15% for initial employment and 8% for continued employment.

“Computer-related occupations” was the largest category, and the number of H-1B applications approved for these workers increased by 6.6% from 2.38 lakh in 2016 to 2.54 lakh in 2017. 



காற்றில் கரையாத நினைவுகள்: கருப்பு வெள்ளைச் சித்திரங்கள்!

Published : 08 May 2018 10:03 IST

வெ.இறையன்பு







புகைப்படம் அன்று அரிய ஆவணம், வாழ்ந்ததற்கும் மறைந்ததற்கும். சுவரில் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் இப்போது அழ வைத்துவிட்டுச் சென்ற மனிதரின் அடையாளம். சுவர்கள் புகைப்படங்களை மாட்டுவதற்காகவே கட்டமைக்கப்பட்டன அன்று. வாழ்க்கைச் சரிதத்தை கல்வெட்டுகளைப் போல முகவெட்டுகளால் அளக்க முயன்ற காலம் அது.

அன்று நிலையம் (போட்டோ ஸ்டுடியோ) சென்றுதான் புகைப்படம் எடுக்க வேண்டும். ஒளியைப் பாய்ச்சும் விளக்குகள், ஓவியத் திரை, அருகில் எப்போதும் வாடாத மலரவும் முடியாத செயற்கைப் பூக்கள். இருக்கையில் அமரும்போது லேசான பதற்றம் எடுக்கும். தயாராகச் சொல்லிவிட்டு புகைப்படக் கலைஞர் கருப்புத் துணிக்குள் புகுந்துகொண்டு சிரிக்கச் சொல்லும்போதுதான் முகம் இறுக்கமடையும். கருவியை இயக்கும்போது வெளிச்ச வெள்ளத்தில் கண்கள் கூசும். தூங்குவதுபோல் படம் பதிவாவதும் உண்டு. எடுத்து முடித்ததும் எதையோ சாதித்த திருப்தி.

புகைப்படம் என்பது அழகின் கனவு. எந்தப் படத்திலாவது அழகாகத் தெரிய மாட்டோமா என்கிற அடிப்படை ஆதங்கத்தின் ஏக்கப் பதிவு. படம் எந்த நாளில் கிடைக்கும் என்று பணத்தைக் கட்டியதும் ஆர்வமாய்க் கேட்போம். சொன்ன நாளில் அது கிடைத்ததே இல்லை. கேட்டால் மூக்கையும், முழியையும் தொட்டுச் சரி செய்ய முயற்சி நடப்பதாய் பதில் வரும். பலமுறை நடந்து படத்தைப் பெற்று பரபரப்பாகப் பார்க்கும்போது ‘நம் முகம்போல இல்லையே’ என்று முதலில் தோன்றும். நம்மினும் அழகாக இருப்பதே நல்ல புகைப்படம்.

ஆண் குழந்தைக்கு முடியிறக்கும் முன்பு படமெடுப்பது மரபு. சீவி சிங்காரித்து கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து நிலையத்துக்குச் சென்று படம் பிடிப்பார்கள். அப்படம் அத்தனை வீட்டிலும் தவறாமல் இருக்கும். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் கூந்தலில் வாழைமடல் வைத்து தைத்து பூவலங்காரம் செய்து புகைப்படம் எடுப்பது உண்டு.

’போட்டா புடிச்சா ஆயுசு கொறையும்’

அதிகப் புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என தவிர்த்த பெரிசுகள் உண்டு. தொண்ணூறு வயதில் குறைவதற்கு ஏது ஆயுள் என்று அவர்களை குறுக்குக் கேள்வி கேட்டதில்லை. எல்லோர் வீட்டிலும் திருமணப் புகைப்படம் இருக்கும். துக்கப்படவும் வெட்கப்படவும். நடுத்தர வயதில் இன்னொரு புகைப்படம். கணவன் அமர மனைவி அருகில் நின்றவாறு தோரணையுடன். தோரணையெல்லாம் புகைப்படத்தில்தான் என்பது இருவருக்கும் தெரியும். என் நண்பர் வீட்டில் அறுபது வயதில் தாத்தாவை மட்டும் புகைப்படம் எடுப்பதற்காக பாட்டி கோபித்துக்கொண்டு இரண்டு நாட்கள் சரியாகச் சாப்பிடவில்லையாம். ஆமாம், அன்று புகைப்படம் எடுப்பது இன்று திரைப்படம் எடுப்பதுபோல.

நிழற்படக் கருவி அன்று அரிய சாதனம். பணக்காரர் வசமே இருக்கும் பண்டம். வளைந்தும் நெளிந்தும், குனிந்தும் அசைந்தும் புகைப்படம் எடுப்பவரை எல்லோரும் பயத்துடன் நேசித்த காலம். மேல்நிலை வகுப்பு படிக்கும்போது தாவரவியல் வகுப்புக் காக ஏற்காடு சென்றிருந்தோம். ஒரே ஒரு மாணவன் புகைப்படக் கருவி யோடு வந்தான். அவனைச் சுற்றியே அத்தனை கூட்டமும்.

முதலில் இருந்தது கருப்பு - வெள்ளை காலம். வண்ணப்படங்கள் சாத்தியம் என்றுகூட யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. எண்பதுகளில் வண்ணப்படங்கள் எடுக்கும் தொழில்நுட்பம் வந்தது. ஆனால், படங்கள் எல்லாம் அழுது வடியும். எடுத்தவுடன் பிரதி கிடைக்கும் புகைப்படக் கருவியை திரைப்படம் ஒன்று தெரியப்படுத்தியது. அதற்குப் பின்னர் சந்தையின் சந்துபொந்துகளில் அது புகுந்துகொண்டது.

திருமணம் என்றால் புகைப்படமே பிரதானம் என்றிருந்த நிலை மாறி, காணொலி அதனுடன் கைகோத்துக் கொண்டது. ஆனாலும் யாரும் அதை அடிக்கடி பார்த்ததாய்த் தெரியவில்லை.

தாஜ்மகாலுக்கு முன்பாக..

கல்லூரியில் நாங்கள் படிக்கும்போது அகில இந்தியச் சுற்றுலாவுக்குப் பயணப்பட்டோம். புகைப்பட ஆல்பங்களைப் போகிற இடங்களிலெல்லாம் மலிவு விலையில் வாங்குவோம். எங்கள் நண்பர் ஒருவர் ’சலங்கை ஒலி’ படத்தில் வருகிற சிறுவன்போல டப்பாக் கருவியொன்றை எடுத்து வந்தார். எங்களிடம் அதுகூட இல்லை. வேறு சில நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து உயர் ரகக் கருவி வாங்கி வந்தனர். எங்கள் கருப்பு - வெள்ளைப் புகைப்படங்கள் புகைமூட்டத்துக்குப் பின்பு நிற்பதைப்போல தெளிவாகப் பதிவாயின. அவர்கள் எடுத்த புகைப்படங்கள் பல வண்ணத்தில் பளிச்சென்று மின்னலிட்டன. தாஜ்மகால் முன்பு அதை அவர்களே கட்டியதைப் போல பெருமையோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். எங்களுக்கோ மும்தாஜ் இறந்த சோகம் மட்டுமே.

இன்று தொழில்நுட்பம் வளர்ந்து புகைப்படக் கலை பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிவிட்டது. படச் சுருளின்றி படமெடுக்கும் மின்னணு வசதி. கருப்பு - வெள்ளை இன்று மருந்துக்கும் இல்லை. வீட்டில் விதவிதமாக புகைப்படம் மாட்டும் பழக்கமும் இல்லை. சுவரில் புகைப்படத்தில் யாரேனும் இருந்தால் உயிருடன் இல்லை என்கிற அளவுக்குக் குறைவான காட்சிப்படுத்துதல். வாடகை வீட்டில் ஆணி அடிக்க ஆயிரம் நிபந்தனை. அடிக்கிற ஆணி யால் சுவரே சாயுமோ என்கிற நடுக்கம்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது முக்கியப் பிரமுகர்களை ஊடகவியலாளர் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து அதிசயம் ஏற்படும். அத்தனை நிகழ்வையும் ஒன்றுவிடாமல் அடுக்கடுக்காக எடுத்துச் செல்கிறார்களே, இதில் எதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்கிற கேள்வியும் தோன்றும். ஒன்றுதானே வெளிவரப் போகிறது, எதற்கு இத்தனை பிரயத்தனம். சிறந்ததை எடுக்கவே அத்தனை முயற்சியும் என்று நண்பர் சொன்னபோது அசந்து போனேன். ஒரு விதை முளைக்கவே மரங்களில் அத்தனை மலர்கள்.

ஓவ்வொருவரும் கேமரா மேன்

இன்று கைபேசியிலேயே கேமரா வசதி. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் படங்கள் எடுக்கும் புகைப்பட போதையோடு ஒரு சிலர் உண்டு. அவரவர் படத்தை அழகாக்கி, வெண்மையூட்டி உலக அழகோடு முகநூலிலும், புலனத்திலும் போடும் வசதி. எதற்கெடுத்தாலும் சுயமி (ஷெல்ஃபி). நின்றாலும் உட்கார்ந்தாலும் சகட்டுமேனிக்கு எடுத்துத் தள்ளும் ஆர்வம். பிரபலமான மனிதரோடு புகைப்படம் எடுத்து உடனடியாக முகநூலில் ஏற்றுவதே மூல நோக்கம். இத்தனை புகைப்படத்தை என்ன செய்வார்கள் என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் தோன்றும்.

எனக்கு புகைப்படங்களில் ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை. அந்த நொடியைத் தவறவிட்டு கருவியில் பதிவு செய்வது இரண்டாம் தர இன்பம் என்றே எண்ணுவேன். கண்களைக் காட்டிலும் சிறந்த கருவியும் இல்லை, மனத்தைக் காட்டிலும் உயர்ந்த படச்சுருளும் இல்லை என்பது என் நம்பிக்கை. நாம் இழந்த அனுபவங்களே இனிய புகைப்படங்கள்.

ஒரு காலத்தில் யாருடன் புகைப்படத்தில் நிற்கிறோம் என்பது பெருமைக்கான சேதி. திரைப்படங்களில் பொம்மைக் கத்தியில் நாயகன் வேறொரு பாத்திரத்தை குத்தியதைப் போல புகைப்படம் எடுத்து, வில்லன் மிரட்டும் காட்சிகள் உண்டு. நீதிமன்றங்களில் அன்று அது முக்கிய ஆவணம். இன்றோ யாருடன் இருப்பதுபோலவும் செயற்கையாய் காட்சியைச் செய்துவிட முடியும். அதிகப் புழக்கத்தில் ஆவணத்தன்மையை புகைப்படம் இழந்தது என்னவோ உண்மை.

சுயமி மோகம்

அதிகப் புகைப்படம் எடுப்பது ஆயுளைக் குறைக்கிறதோ இல்லையோ, அதிக சுயமியால் அற்பாயுளில் போனவர்கள் உண்டு. யானையை படம் எடுத்து துதிக்கையில் சிக்கி, அருவியை எடுக்க அதிலேயே விழுந்து, வாழ்வை முடித்த பேதைகள் உண்டு. ’நாம் என்பது நம் உடலல்ல’ என்பதையும், உடலைத் தாண்டிய நாம் யார் என உணர்வதே வாழ்வின் சாரம் என்பதையும் தெரிந்து கொண்டவர்கள் உண்மை முகம் நமக்குத் தெரிய ஒப்பனை முகத்தை அடுத்தவர்களுக்குக் காட்ட ஆயத்தங்கள் செய்வதில்லை. அவர்கள் தங்கள் மூலமுகம் எது என்பதை உணர அணிந்திருக்கும் முகமூடிகளைக் கழற்றுவதிலேயே மும்முரம் காட்டுவார்கள். அப்போது எந்த முயற்சியும் இல்லாமல் அவர்களுக்கே தெரியாத அழகிய முகம் வெளிப்படும்.

மனிதர்களின் கழுத்தில் மாலை அணிவிக்க எப்போதும் மகிழ்ச்சியுடன் புன்னகைக்கும் நான், கண்ணாடிக்குள் இருக்கும் உருவத்துக்கு மாலைபோட கண்கலங்கிப் போகின்றேன்.

- நினைவுகள் படரும்...
நுழைவுத் தேர்வு அலைக்கழிப்புக்குப் பின்னுள்ள சந்தை

Published : 08 May 2018 09:23 IST
 
ஜி.ஆர்.இரவீந்திரநாத்









நாடு முழுவதற்குமான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் நுழைவுத் தேர்வு’ பெரிய களேபரங்களோடு நடந்து முடிந்திருக்கிறது. இத்தேர்வின் அடிப்படையில்தான் 2018 கல்வி ஆண்டில், 65,000 மருத்துவப் படிப்புகளும் 25,000-க்கும் மேற்பட்ட பல் மருத்துவப் படிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமன்றி, வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில வேண்டுமென்றாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இத்தேர்வை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 31%-க்கும் மேலாக அதிகரிக்க இந்த அறிவிப்பு ஒரு முக்கியமான காரணம்.

எண்ணிக்கை அதிகரிப்பு ஏன்?

இந்தத் தேர்வு தேவையா, இல்லையா; இந்தத் தேர்வுக் கான விதிகள் ஏன் இவ்வளவு கடுமையாக இருக்கின்றன என்கிற விவாதங்களை எல்லாம் தாண்டி, தேர்வை நியாயப்படுத்துபவர்களேகூட நியாயப்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக நிர்வகிக்கப்படுகிறது இத்தேர்வு. தமிழக மாணவர்கள் எதிர்கொண்ட அலைக்கழிப்பை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம்.

தமிழக மாணவர்கள் 1.07 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப இங்கு தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படவில்லை. விளைவாக, தமிழகத்தைச் சேர்ந்த 5,700 மாணவர்களுக்கு கேரளம், ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வேறு மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டது. உரிய நேரத்தில் இதுகுறித்து மாணவர்களுக்கு முன்கூட்டி தகவல் தரப்படவில்லை என்பதும் கடைசி நேர அலைச்சல் எவ்வளவு கடுமையான மன - உடல் உளைச்சல், பணச் செலவை உண்டாக்கும் என்பதும் பொருட்படுத்தப்படவே இல்லை.தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் இது உருவாக்கியது. மொழிப் பிரச்சினையாலும் மாணவர்கள் சிரமங்களுக்கு உள்ளானார்கள். தேர்வுகளை மன அமைதியுடன் எழுதும் வாய்ப்பை இது சீர்குலைத்தது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இதற்கு முக்கியமான காரணம்.

மாணவர்கள் பேருந்து, ரயில் போன்றவற்றுக்கு டிக்கெட் கிடைக்காமல் அல்லலுற்றனர். பல மாணவ - மாணவியர் ரயில் மற்றும் பேருந்துகளில் நின்றுகொண்டே பயணித் தனர். தங்கும் வசதி, கழிப்பறை வசதி போன்றவை இல்லாமல் அவதிக்கு உள்ளாகினர். மாணவர்கள் மட்டும் பாதிப்புக்கு உள்ளாகிவில்லை. அவர்களின் பெற்றோர்களும் அலைக்கழிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் தேர்வு மையங்களே இல்லையா? அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லையா? ஏன் இந்த நிலை? தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், 45-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள், ஏராளமான சிறந்த பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கெல் லாம் தேர்வு எழுதுவதற்கான சிறந்த கூடங்களும் உள்ளன. சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து,பேருந்து வசதிகள், விமானப் போக்குவரத்து வசதிகளும் தமிழகத் தில் மிகச் சிறப்பாகவே உள்ளன.

மேலும், இந்த இளநிலை மருத்துவக் கல்விக்கான ‘நீட் தேர்வு’ இணையத்தின் வழி நடத்தப்படும் தேர்வல்ல. இது ‘ஓஎம்ஆர்’ எனப்படும் கம்யூட்டர் கோடிங் தாளில் நடத்தப்படும் தேர்வுதான். இதை எந்த மையத்தில் வேண்டுமென்றாலும் நடத்த முடியும். ஏராளமான கணினிகள் உட்பட தொழில்நுட்ப வசதிகள் உள்ள கூடங்கள் இத்தேர்வுக்குத் தேவையில்லை. ஒரே நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தேர்வு நடத்தும் வசதிகள் தமிழகத்தில் உள்ளன. இப்படியெல்லாம் இருந்தும் ஏன் தமிழக மாணவர் கள் 2,000 கி.மீ. வரை அலைக்கழிக்கப்படுகின்றனர்?

தேர்வுக்குப் பின்னுள்ள வணிகம்

இதற்கான மிக முக்கியமான பதில்: தேர்வுகள் வணிகமயமாக்கப்பட்டதே ஆகும். நுழைவுத் தேர்வுகளையும், தேர்வு களையும் நடத்துவதன் மூலமே இன்று கல்வி நிறுவனங்கள் பல கோடிகளைக் குவிக்கின்றன. இதற்கு சிபிஎஸ்இ அமைப்பும் விலக்கல்ல. அது நீண்டகாலமாக அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை நடத்திவந்ததன் மூலம், கோடிக்கணக்கான ரூபாயை வருவாயாக ஈட்டிவந்தது. தற்போது நீட் தேர்வின் மூலமும் வருவாய் ஈட்டிவருகிறது. தவிர, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் என்ற பெயரில் நடக்கும் வியாபாரத்துக்கான பெரிய லாபியும் இதன் பின்னணியில் உள்ளது.

விளைவாகவே, நுழைவுத் தேர்வுகளில் மாணவர்களின் வசதி கணக்கில் கொள்ளப்படாமல், நிறுவனங்களின் லாபம் பிரதானமாகக் கொள்ளப்படுகிறது. இதை இப்படிப் பார்க்கலாம்: ‘கூடுதல் மையங்கள் = கூடுதல் செலவு. குறைந்த மையங்கள் = கூடுதல் லாபம்.’

தமிழக மாணவர்கள் வெளியே செல்ல நேர்ந்ததன் விளைவாக இந்த விஷயம் வெளிப்பட்டிருக்கிறது. ஒருவேளை, தமிழகத்துக்குள்ளேயே வெளிமாநிலத்துக் கான மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால், இந்தப் பிரச்சினை வெளியிலேயே வந்திருக்காது. மையங்களில் முடிந்த அளவுக்கு மாணவர்களை அடைப்பதே இன்றைய வழக்கம். ஒவ்வொரு இடத்திலும் அதிகமான ஆட்களை அடைப்பதன் வாயிலாகவே கண்காணிப்பு என்ற பெயரில் அதீதமான கட்டுப்பாடுகளும் உள்ளே நுழைகின்றன.

நுழைவுத் தேர்வுக்குப் பின்னுள்ள வணிகம்

சேவைத் துறையில் வணிக வாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதார நடவடிக்கைகள் கோலோச்சும் நிலையில், இன்று நுழைவுத் தேர்வுகளை நடத்துவது, அதற்கான பயிற்சிகளை வழங்குவது, பயிற்சிகளுக்கான குறிப்பேடுகளை, மென்பொருட்களை உருவாக்குவது போன்றவை சர்வதேச வர்த்தகம் ஆகிவிட்டன. அதன் காரணமாகவே புதுப் புது தேர்வுகள் புகுத்தப்படுகின்றன.

முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் நுழைவுத் தேர்வு’ நடத்தும் பொறுப்பு, ஒரு அமெரிக்க நிறுவனத்திடமும், பல தனியார் நிறுவனங்களிடமும் ஒப்படைக்கப்பட்டிருப்பதை இங்கே சுட்டிக்காட்டலாம். தேர்வுகள் நடத்துவதில் இன்று ஏகபோக அமைப்புகள் உருவாகிவருகின்றன. அரசு நிறுவனங்கள், பல சிறிய தனியார் நிறுவனங்கள் நடத்திவந்த தேர்வுகள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்படுகின்றன.

இந்த நோக்கத்துக்காகவே, மத்திய அரசு தேசியத் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் வழங்க முயல்கிறது. அந்த அமைப்பு செயல்படத் தொடங்கினால், அந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் பேருக்கு வெவ்வேறு படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பும் சிபிஎஸ்இயிடமிருந்து பறிக்கப்படும்.

புயல் வெளிப்படுத்திய லாப வேட்கை

சென்ற ஆண்டு வர்தா புயல் வீசியது. அதற்கு முதல் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தது. ஆனாலும் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகளைத் தள்ளிவைக்க அத்தேர்வுகளை நடத்திய அமெரிக்க நிறுவனம் மறுத்துவிட்டது. காரணம், மீண்டும் மையங்களைப் பிடிப்பதால் அதற்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதே!

ஆனால், புயலால் ஏற்பட்ட மின்வெட்டு, இணைய சேவை துண்டிப்பால் தேர்வை நடத்த முடியாத நிலை அந்நிறுவனத்துக்கு ஏற்பட்டவுடன், நமது மருத்துவர்களுக்கான மையத்தை அது வேறு நகரங்களுக்கு மாற்றியது. ஆக, அந்நிறுவனத்துக்கு இழப்பு இல்லை. ஆனால், தேர்வெழுதச் சென்றவர்கள் போக்குவரத்து - தங்கும் செலவோடு, உடல் மற்றும் உள உளைச்சலையும் எதிர்கொண்டார்கள்.

மாநிலங்களுக்கு வெளியே ஏன்?

அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்கும் தமிழகம் போன்ற மாநிலத்தில் இப்படி ஒரு சிறு தொகுதி மாணவர்களை வெளியே அனுப்புவதன் மூலம், இத்தேர்வு தொடர்பிலான அச்சத்தை உண்டாக்குவது! அதாவது, ‘இத்தேர்வு எப்படியான விரிந்த அளவில் நடக்கிறது; அதற்கு எவ்வளவு பெரிய பயிற்சிகள் எல்லாம் வேண்டும்?’ என்ற உளவியல் மாற்றத்தை ஒட்டுமொத்த மாணவர்களிடமும் உருவாக்குவது. அதாவது, நுழைவுத் தேர்வுக்கான நெருக்கடியை மாணவர்களிடம் உண்டாக்குவது!

நமது தமிழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களுக்கு டி.எம், எம்.சி.ஹெச். படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு அசாமிலும் வேறு சில மாநிலங்களிலும் மையங்கள் கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டதை இங்கே சுட்டிக்காட்டலாம்.

இவையெல்லாம் விவாதிக்கப்படாமல் அரசு நடத்தும் தேர்வு என்ற பெயரில் சகலமும் நியாயப்படுத்தப்படுவது இன்று பெரும் சமூக அவலம். கல்வி என்பது மக்களின் உரிமையாக வேண்டும். அது வணிகத்திலிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டும். அதற்கான அரசியல் அழுத்தங்களை நாம் உருவாக்க வேண்டும்!

ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

பொதுச் செயலாளர்,

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.

தொடர்புக்கு: daseindia2011@gmail.com
கோவை எக்ஸ்பிரசை கோட்டைவிட்ட பயணியர் : ரயில்வே நிர்வாக அலட்சியத்தால் பரிதவிப்பு

Added : மே 09, 2018 01:30 

  பராமரிப்பு பணியால், ரயில்கள் ரத்து செய்யப்படும் விபரத்தை, உரிய கால அவகாசத்தில், ரயில்வே நிர்வாகம், பயணியருக்கு தெரிவிக்காததால், நேற்று, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை, பயணியர் கோட்டை விட்டனர். சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவைக்கு, காலை, 6:10 மணிக்கு இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், மதியம், 1:45 மணிக்கு, கோவை சென்றடையும்.இந்த ரயில், சென்ட்ரலில் புறப்பட்டால், அரக்கோணத்தில் தான் நிற்கும். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தோர், அதிகாலையில், திருவள்ளூரில் இருந்து, அரக்கோணத்திற்கு, மின்சார ரயிலில் சென்று, அங்கிருந்து, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வது, வழக்கமாக உள்ளது.
ரயில்கள் ரத்து : அரக்கோணத்தில், ரயில்வே பணிமனை விரிவாக்கப்பணி நடப்பதால், சென்ட்ரல் - அரக்கோணம் பயணியர் ரயில், நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த தகவலை, ரயில்வே நிர்வாகம், உரிய கால அவகாசத்தில், பயணியருக்கு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க வேண்டியோர், திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்வதற்காக, திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். திருவள்ளூர் நிலையத்திற்கு வந்த பின் தான், ரயில்கள் ரத்து செய்யப்பட்ட விபரம், பயணியருக்கு தெரியவந்தது.

முன்பதிவு : இதனால், நிலைய அதிகாரியை அணுகி, 'நாங்கள், டிக்கெட் முன்பதிவும் செய்திருக்கிறோம். மின்சார ரயில்கள், ரத்து செய்யப்பட்டிருப்பதால், இனிமேல், பஸ் பிடித்து, அரக்கோணம் செல்ல முடியாது. 'எனவே, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை, இன்று மட்டும், நின்று செல்ல ஏற்பாடு செய்து, எங்களுக்கு உதவுங்கள்' என கோரினர்.நிலைய அதிகாரி, 'என்னால், நிறுத்த முடியாது' என, கறாராக கூறினார். இதனால், பயணியர், அவருடன் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில், பயணி ஒருவர் மயங்கி விழுந்ததால், நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்னை அதிகமாக, ரயில்வே பாதுகாப்பு படையினர், அங்கு வந்து, பயணியரை விரட்டினர். இந்த களேபரத்திற்கு இடையே, திருவள்ளூர் நிலையத்தை கடந்து, கோவை எக்ஸ்பிரஸ் சென்றது. ரயிலை கோட்டைவிட்ட பயணியர், பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணியரின் இக்கட்டான நிலையை, திருவள்ளூர் நிலைய அதிகாரி, ரயில் இயக்கப்பிரிவு உயர் அதிகாரிக்கு, முன்கூட்டியே தெரிவித்து, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை, 30 விநாடிகளாவது, நின்று செல்ல ஏற்பாடு செய்திருக்கலாம். இனி, சென்ட்ரல் - அரக்கோணம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் போது, சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், திருவள்ளூரில், நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாஸ்கர், திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணியர் சங்க செயலர்
- நமது நிருபர் -
போலி ரயில் டிக்கெட் மோசடி : பயணிகள் நடுவழியில் தவிப்பு

Added : மே 09, 2018 00:19 | 

வேலுார்: போலி ரயில் டிக்கெட்டுகளால், பயணியர் நடுவழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த, கல்புதுாரைச் சேர்ந்தவர் ஆபிரகாம், 70; நெல்லைக்கு செல்வதற்காக, கடந்த, 2ல், வேலுார் சைதாப்பேட்டையில் உள்ள, இ - டிக்கெட் புக்கிங் சென்டரில், 960 ரூபாய் கொடுத்து, டிக்கெட் முன் பதிவு செய்தார்.பி.என்.ஆர்., நம்பர், முன்பதிவு பெட்டி, இருக்கை எண், ரயில் புறப்படும் நேரம் அடங்கிய விவரங்கள், அவரது, மொபைலுக்கு, எஸ்.எம்.எஸ்., வந்தது. மே, 4ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில், ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, பி.என்.ஆர்., நம்பரை காட்டி விசாரித்த போது, டிக்கெட் போலியானது என தெரியவந்தது.இதுகுறித்து, காட்பாடி ரயில்வே போலீசில் புகார் செய்தார். பின், வேறு வழியின்றி, சாதாரண டிக்கெட் வாங்கி, நெல்லை சென்றார்.கடந்த, சில மாதங்களாக, வேலுாரில், சைதாப்பேட்டை, காந்தி ரோடு, பாபுராவ் ரோடு, தோட்டப்பாளையம், ஆற்காடு ரோடு ஆகிய, பகுதிகளில் நுாற்றுக்கணக்கான, இ - டிக்கெட் புக்கிங் மையங்கள் முளைத்துள்ளன. இதில், பல மையங்களில் வழங்கப்படும், டிக்கெட்டுகள் போலியானதாக இருப்பதால், பயணியர் நடுவழியில் தவிக்கும் நிலையுள்ளது.இதுகுறித்து, காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறியதாவது:இ - டிக்கெட் சேவை மையத்தில், முன் பதிவு செய்த பின், வரும் குறுந்தகவல்களை, ஐ.ஆர்.டி.சி., இணைய தளத்தில் சென்று, சரி பார்க்க வேண்டும். இந்த தளத்தில், பி.என்.ஆர்., நம்பரை பதிவு செய்தாலே, அது ஒரிஜினலா, போலியா என தெரிய வரும். போலியானது என, தெரியவந்தால், எங்களிடம் புகார் செய்ததால், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினர்.
அரசு ஊழியர் பேரணி: போக்குவரத்து நெரிசல்

Added : மே 08, 2018 23:42 

சென்னை: சென்னையில், கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், கைது செய்யப்பட்டனர். போராட்டத்தால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வுக்கான, 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ --ஜியோ சார்பில், சென்னையில், நேற்று கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. அவர்களை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.போராட்டத்தில் பங்கேற்க வந்த பலர், முன்னெச்சரிக்கையாக, இரண்டு நாட்களுக்கு முன்னரே, சென்னைக்கு வரும் வழியிலும் கைது செய்யப்பட்டனர். சென்னையில், நேற்று போராட்டத்துக்கு வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், சில போலீசாருக்கு அடி, உதை விழுந்தது.இதனால், அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அலுவலகங்கள், வணிக நிறுவனங்களுக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டனர். போராட்டத்தை இன்றும் தொடர, ஜாக்டோ - ஜியோ உயர் மட்டக்குழு முடிவு செய்தது.இந்நிலையில் போராட்டம் தற்காலிக மாக வாபஸ் பெறப் படுவதாக, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அடுத்தக்கட்ட போராட்டம் குறித்த அறிவிப்பு 20ல் வெளியாகும் என போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

NEWS TODAY 30.12.2025